- வணக்க மாதம்
- உத்தரிக்கிற ஆத்துமாக்கள்
- நாள் 21-25
இருபத்து ஓராம் நாள்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
இந்நாள் மட்டும் செய்த தியானங்களினாலே எல்லோரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்கவேணுமென்றும், அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண வேணுமென்றும் தீர்மானித்திருப்பீர்களென்பதற்குச் சந்தேகமில்லை. இப்போது அந்த உதவி சகாயம் ஆத்துமாக்களுக்குப் பலிக்கும்படியாகவும். உங்களுக்குப் பேறு பலனுள்ளதாகும்படியாகவும், அதை எப்படிச் செய்யலாமென்று காண்பிக்கவேண்டுமல்லவா? அதேதென்றால், அநேகம்பேர்கள் அந்த உதவி சகாயத்தைத் தக்க விதமாய்ப் பண்ணாதிருக்கிறதினால் அவர்கள் செய்கிறதெல்லாம் ஆத்துமாக்களுக்குப் பிரயேசனமில்லாமற் போகிறதாமே.
அதனாலே இப்பேர்ப்பட்ட முக்கியமான காரியத்தில் நீங்கள் மோசம் போகாதபடிக்கு நாம் சொல்லப்போகிறதைக் கவனமாய்க் கேளுங்கள். முதலில் கிறிஸ்துவனான ஒருவன் இறந்தபிற்பாடு அவனுடைய பிரேதத்தையும் அவனுடைய ஆத்துமத்தையும் நினைக்க வேணும். கிறிஸ்துவர்களுடைய சரீரமானது ஞானஸ்நானத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டு, உறுதிப் பூசுதலில் இஸ்பிரித்துசாந்துவின் முத்திரை அடைந்து, திவ்விய நற்கருணையினால் அர்ச்சிக்கப்பட்டு, ஆத்துமாவோடு ஒன்றித்து என்றென்றைக்கும் மோட்சத்திலே வாழ நியமிக்கப்பட்டிருக்கிறதினாலே ,அந்த சரீரத்துக்கு வேண்டிய வணக்க மரியாதை பண்ணி ,அதைத் தகுந்த ஆரவார மரியாதையோடு அடக்கம் செய்ய வேணுமென்பது திருச்சபையின் கட்டளையாம்.
ஆயினும் ஆத்துமம் பிரிந்து போகிறபோதாவது, பிரேதத்தைக் குளிப்பாட்டுகிற போதாவது, குழியிலே வைக்கப்போகிறபோதாவது, புறமதத்தார் செய்யும் சடங்குகள் ஒன்றையும் செய்யக் கூடாதென்றும் உங்களுக்கு நன்றாகக் தெரியுமே. கிறிஸ்துவர்கள், விசேஷமாய்க் கிறிஸ்துவப் பெண் பிள்ளைகள், தகுமான அடக்கவொடுக்கத்துக்கு விரோதமாய் ஒன்றையும் அநுசரிக்க வேண்டாம். அதல்லாமலும் அந்தச் சமயத்தில் வேண்டிய சிறப்பும் வேண்டிய ஆரவாரமும் பண்ணுகிறது நல்லதாயினும், அதெல்லாவற்றையும் திருச்சபை வழக்கத்தின்படியே ஒவ்வொருவருடைய அந்தஸ்துக்குத்தக்கது நடத்த வேணுமல்லாமல், அதற்கு மிதந்தப்பிச் செய்தால் வெறும் ஆடம்பரமென்றும், வீணான பெருமையென்றும் சொல்லவேண்டியது. மேலும், கிறிஸ்துவனுடைய அடக்கமானது தேவசடங்காகையால் கூடுமான இடங்களிலே திருச்சபையில் வழங்குகிற சுகிர்த முறைமைகளை அநுசரிக்கவேண்டியது சரிதான்.
மரித்தவருடைய சரீரத்தை அடக்கம்பண்ண கடமைப்பட்டிருப்பதுபோல், அவருடைய ஆத்துமத்தை விசாரிக்க விசேஷ கடமையுண்டு. கிறிஸ்துவனுக்கு உண்டான பிரதான கடமைகளில் தங்களுடையவர்களின் ஆத்துமாக்களை விசாரிக்கிறது ஒரு விசேஷ கடமையென்பது நிச்சயமாம். அதாவது இறந்தவருடைய ஆத்துமத்துக்கு வேண்டிய உதவி சகாயம் தாமதமின்றியும் குறைச்சலின் றியும் பண்ணவேணும்.
சில நல்ல கிறிஸ்துவர்கள் ஆத்துமம் பிரிந்துபோனவுடனே தாங்களும் அந்த ஆத்துமத்துக்காக வேண்டிக் கொண்டு உபதேசிமார்கள் கோவில்பிள்ளைகள் பிச்சைக்காரர் முதலானவர்களையும் வேண்டிக்கொள்ளப் பண்ணுகிறதுமல்லாமல், வெகு தூரமென்கிலும் நடந்து குருப்பிரசாதிகளிடத்துக்குப் போய் உடனே திவ்விய பூசை நடக்கும்படிக்குச் செய்வார்கள் .அப்படியே எல்லோரும் செய்வார்களேயானால், அது பெரிய புண்ணியமாயிருக்கிறதுந்தவிர ஆத்துமாக்களுக்கும் பெரும் சகாயமாகும்.
அநேகம் கிறிஸ்துவர்கள் ஒரு முகாந்திரமில்லாமல் தாமதித்துப் பத்து நாளைக்குப் பிற்பாடு அல்லது ஒரு மாதத்துக்குப் பிற்பாடு அல்லது ஒரு வருஷத்துக்குப் பிற்பாடு மாத்திரமே இறந்தவர்களுடைய ஆத்துமத்துக்காக கையில் மோட்ச விளக்கு எடுப்பார்கள் . அது பொறுக்கத்
தகாத அசட்டைத்தனமும், ஆத்துமாக்களின் மட்டில் ஓர் பெரிய கொடுமையுமாம். அதனாலே உங்களுடையவர்களின் ஆத்துமாக்களுக்குக் கூடுமான மட்டும் சீக்கிரத்தில் வேண்டிய உதவி சகாயம் பண்ணவேனும்.
இந்த உதவிசகாயம் ஏதென்று கேட்டால் ஜெப வேண்டுதலும், பிச்சை தர்மமும், தவக்கிரியையும் ,திருச்சபையின் பலன்களும் , உன்னதமான திவ்விய பூசையும் ஆகிய இவ்வைந்து விசேஷ உதவிகளே. இவை எல்லாம் பற்றும்பற்றாய் அந்தந்த தியானங்களில் விவரிக்குமுன்னே இவைகள் நினைத்த பலனைக் கொடுக்கும்படிக்கு ஒரு பரம சத்தியத்தை நன்றாய் ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும். அந்தோ, இந்த சத்தியத்தை அறியாததினாலும் அதை அநுசரிக்காததினாலும் அவர்கள் ஆத்துமாக்களுக்காகச் செய்கிறதெல்லாம் ஆத்துமாக்களுக்கு உபயோகமில்லாமற் போவதுந்தவிர, செய்பவர்களுக்கு முதலாய் பலனில்லாமல் போகிறதென்பது நிச்சயம்.
அப்படியும் ஆத்துமாக்களுக்காக நாம் அதிகமாய்ச் செய்தோமென்றிருக்கையில், அந்த ஆத்துமாக்கள் நாம் செய்தவைகளினால் யாதோர் பரியோசனமும் பெறாமல், உத்தரிக்கிற ஸ்தலத்திலே இரட்சிப்பின்றி வருத்தப்பட்டுக் கிடப்பார்கள்.நற்கிரியை யாவும் பலனுள்ளதாய் இருக்கும்படிக்கு இஷ்டப்பிரசாதத்தோடு செய்திருக்கவேணுமென்பது வேத சத்தியம். அதெப்படியென்றால், சரீரத்துக்கு உயிர் ஆத்துமந்தான்;ஆத்துமத்துக்கு உயிர் இஷ்டப்பிரசாதந்தான் என்று அர்ச் அகுஸ்தீன் எழுதிவைத்தார் .
ஆத்துமம் பிரிந்துபோன பிற்பாடு சரீரம் ஏதாகிலும் செய்யக்கூடுமோ ? இல்லை. அப்படி சாவான பாவத்தினால் இஷ்டப்பிரசாதம் ஆத்துமத்திலிருந்து போன பிற்பாடு ஆத்துமம் செத்த பிணம்போல பலனுள்ள நற்கிரியை ஒன்றையும் செய்யக்கூடாது. அப்பேர்ப்பட்ட நற்கிரியையினாலே ஒன்றையும் பெறமாட்டாது, ஒன்றையும் அடைய மாட்டாது. அந்த நற்கிரியை செய்தும் செய்யாததுபோல வீணாய்ப்போகும். அதனாலே பாவிகளுடைய நற்கிரியைகளைச் சர்வேசுரன் கிருபையாய்ப் பார்க்கிறதுமில்லை, ஏற்றுக் கொள்கிறதுமில்லை என்று வேத புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறதாமே. அப்படியிருக்க, சாவான பாவத்தோடே செய்த நற்கிரியை யாவும் பலனற்றிருப்பதினாலும், சர்வேசுரனாலும் அங்கீகரிக்கப்படாதென்கிறதினாலும், இந்த நற்கிரியைகளால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு யாதோர் பிரயோசனம் வரப்போகிறதுமில்லை, அவர்களுடைய வேதனை குறையப்போகிறதுமில்லை, முடியப்போகிறதுமில்லை என்பது நிச்சயம்.
மேலும், இராஜ துரோகியான ஒருவன் இராஜாவுக்கு ஒரு விண்ணப்பம் செய்துகொண்டால் அந்த விண்ணப்பத்தை இராஜா அங்கீகரிப்பானோ என்ன சொல்லுங்கள். அப்படி பரம இராஜாவாகிய சர்வேசுரனுக்கு சாவான பாவத்தால் நாம் விரோதிகளாய் இருக்கும்போது ஜெபிக்கும் ஜெபங்களை அவர் ஒப்புக் கொள்வாரோ? நாம் ஆத்துமாக்களைக் குறித்து செய்யும் ஜெபத்துக்கு காது கொடுப்பாரோ? இது மிகவும் சந்தேகமாயிருக்கிறது. இப்பேர்ப்பட்ட வேண்டுதலினாலே அந்த ஆத்துமாக்களுடைய பயங்கரக்கடன் சற்றாகிலும் தீரமாட்டாது. அது இப்படியிருப்பதினால், ஆத்துமாக்களைக் குறித்து நாம் ஏதாகிலும் செய்யப்போகிறபோது நம்முடைய ஆத்துமத்தில் யாதோர் சாவான பாவமுண்டோ இல்லையோ என்று நன்றாய் சிந்தித்து, சாவான பாவமிருந்தால் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ண சமயமில்லாவிட்டாலும் உத்தம மனஸ்தாபமாவது படவேண்டியது. அப்போது நாம் செய்யும் நற்கிரியை பலனுள்ளதாகி நினைத்த காரியத்துக்கு உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.
இப்போது சொன்னதெல்லாம் மற்ற நற்கிரியைகளுக்கு அவசரமானாலும், திவ்விய பூசைக்கு அவசரமில்லை. ஏனென்றால் திவ்விய பூசையினுடைய பலனானது சேசு கிறிஸ்துநாதரால் வருகிறதேயல்லாமல், திவ்விய பூசையைப் பண்ணுகிற குருவினாலாவது, திவ்விய பூசையைப் பன்னுவிக்கிற கிறிஸ்தவனாலாவது அந்தப் பலன் வருகிறதில்லை. அதனாலே திவ்விய பூசை எப்போதும் அளவறுக்கப்படாத பலனுள்ளதாய் இருக்கிறதென்பது தப்பாது. ஆயினும் ஒருபாவியானவன் ஓர் ஆத்துமத்துக்காக திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்யும்போது அதனுடைய பலனை அவன் நினைத்த ஆத்துமத்துக்கு சர்வேசுரன் கொடுப்பாரோ இல்லையோ என்பது சந்தேகம் என்று வேத சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள் .
ஏனெனில் அவன் சர்வேசுரனுக்கு விரோதியாய் இருப்பதால்,சர்வேசுரன் அவனுடைய கருத்தை நிறைவேற்றினால், அது அவருடைய விசேஷ தயவினாலே நிறைவேறியதொழிய மற்றப்படியல்ல.
கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன தெல்லாம் நிச்சயமாகையால் நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஏதாகிலும் செய்யும்போது சாவான பாவமில்லாத மனதோடு அதைச் செலுத்தவேனும்.
கடைசியிலே உங்களுடைய நற்கிரியையெல்லாம் ஆத்துமாக்களுக்கு நிச்சயமாய் உதவும்பொருட்டு நீங்கள் நினைத்த ஆத்துமாக்களை நன்றாய்க் குறிக்கவேண்டியது மல்லாமல், அந்தந்த நற்கிரியைகளுக்கும் ஜெபங்களுக்கும் உண்டான திருச்சபையினுடைய பலன்களையும் பெறவேணுமென்கிற கருத்தோடிருக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக \.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
கிருபையுடைத்தான சர்வேசுரா (இந்தவூர்) அல்லது (இந்தப் பட்டனத்து) கல்லறையிலே அடக்கம் செய்யப் பட்டிருக்கிற ஸ்திரி பூமான்களான சகல கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களைக் கிருபையாய்ப் பார்த்து அவர்களுடைய பாவங்களை மன்னித்து உத்தரிக்கிற சிறைச்சாலையிலிருந்து அவர்களை மீட்டு என்றென்றைக்கும் உம்மிடத்திலே வாழும்படியாய்ச் சேர்த்துக் கொள்ள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தோராம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கோவிலுக்கு மெழுகுத்திரி வாங்கி வைக்கிறது.
புதுமை
சாஸ்திரிகளுக்குத் தலைமையுமாய், திருச்சபைக்கு அலங்காரமுமாய் அர்ச் சாமிநாதருண்டுபண்னின சபைக்கு மகிமையுமாயிருக்கிற அர்: தோமாசென்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியாயிருந்ததுமல்லாமல் இடைவிடாத முயற்சியுடன் தமது தவக்கிரியைகளினாலும் திவ்விய பூசைகளினாலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவார். அவர் பாரீஸ் பட்டணத்தில் தெய்வீக சாஸ்திரத்தை எல்லாரும் அதிசயப்படுமாறு போதிக்கும் போது, சிலநாளுக்கு முந்தி இறந்த தம்முடைய சகோதரியின் ஆத்துமத்தைக் கண்டார். இந்த சகோதரியானவள் கன்னியாஸ்திரிகளுடைய ஒரு மடத்துக்குச் சிரேஷ்டம்மாளாயிருந்து அநேகம் சுகிர்த புண்ணியங்களைப் பண்ணியிருந்தாலும், இறந்தபிற்பாடு உத்தரிக்கிற ஸ்தலத்திலே தள்ளப்பட்டு அதிலே அகோர வேதனைகளை அநுபவித்துக்கொண்டிருந்தாள்.
அதனாலே சர்வேசுரனுடைய உத்தாரப்படியே தன் சகோதரனான தோமாசென்பவருக்குத் தரிசனையாகி நான் இந்த நெருப்பிலே அகோரமாய் வருத்தப்படுகிறேனே என்பேரில் இரக்கமாயிருந்து எனக்கு உதவி சகாயம் பண்ணவேணுமென்று மன்றாடுகின்றேன் என்றாள். இந்தப் பிரகாரமாய் அர்ச். தோமாசென்பவர் அந்த ஆத்துமத்தை மீட்கச் ஜெபம் பண்ணி, ஒரு சந்தியாயிருந்து தவக்கிரியைகளைச் செய்து, திவ்விய பூசையைப் பண்ணினார்.
அநேகநாள் கடந்தபிற்பாடு இந்த அர்ச்சியசிஷ்டவர் உரோமபுரியிலே இருக்கும்போது, தம்முடைய சகோதரி யானவள் மறுபடியும் அவருக்குத் தோன்றி என்னுடைய உத்தரிப்பு முடிந்தது. உம்முடைய பிரயாசையால் என் கடனெல்லாம் தீர்ந்தது. என்றென்றைக்கும் சர்வேசுரனிடத்தில் இளைப்பாறப்போகிறேன் என்றாள். அப்போது அர்ச் தோமாசென்பவர் அவளை நோக்கி நம்முடைய இரு சகோதரர்கள் இறந்திருக்கிறார்களே. மறுலோகத்தில் அவர்களுடைய நிலைமை எப்படி என்று அறிவாயோ? என்றார்.
அதற்கு அவள் அவர்களிலொருவரான அற்நால்தூசென்பவர் அர்ச்.பாப்பானவரையும் அர்ச். திருச்சபையையும் அநியாயமாய் விரோதித்த பிரத்தெரிக்கூஸ் என்ற அரசனோடு போர்ச்சண்டை செய்திருத்ததினாலும் அதனிமித்தம் வெகு வருத்தப்பட்டிருந்ததினாலும் அவருடைய ஆத்துமம் மோட்சத்திலே உன்னதமான மகிமையை அடைந்திருக்கிறது. வேறொருவரான லந்தோல்பூஸ் என்கிறவர் இன்னும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறாரென்கிறதினாலே நீர் அவருக்கு உதவிசெய்யவேணும். நீரோவென்றால், என் பிரியமுள்ள சகோதரனே! நீர் ஆண்டவருக்குத் தோத்திரமாக உண்டாக்கத் துவக்கின சுகிர்த புஸ்தகங்களைக் சீக்கிரமாய் முடித்துக் கொள்ளும் என்னத்தினாலே என்றால் எங்களோடு கூட என்றென்றைக்கும் சொல்லிலும் நினைவிலும் அடங்காத செல்வ பாக்கியங்களை சுகிக்கத்தக்கதாகச் சில வருஷத்துக்குள்ளே மோட்சத்துக்கு வரவழைக்கப்படுவீர் என்று சொல்லி மறைந்து போனாள்.
இவைகளைக் கேட்டு அர்ச். தோமாசென்பவர் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து முன்னிலும் அதிகமாய்த் தேவ ஊழியத்தில் உழைத்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வருந்தி, சம்மனசுகளுக்கு ஒப்பவொழுகி, சம்மனசென்னும் மகிமையான பெயரையடைந்து கடைசியிலே மரித்தார்.
கிறிஸ்துவர்களே ! இந்தப் பெரிய சாஸ்திரியானவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பிரயாசைப்பட்டாற் போல நீங்களும் பிரயாசைப்பட்டால் அந்த ஆத்துமாக்களாலே உங்களுக்கு அநேக பிரயோசனம் வருமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
இந்நாள் மட்டும் செய்த தியானங்களினாலே எல்லோரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்கவேணுமென்றும், அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண வேணுமென்றும் தீர்மானித்திருப்பீர்களென்பதற்குச் சந்தேகமில்லை. இப்போது அந்த உதவி சகாயம் ஆத்துமாக்களுக்குப் பலிக்கும்படியாகவும். உங்களுக்குப் பேறு பலனுள்ளதாகும்படியாகவும், அதை எப்படிச் செய்யலாமென்று காண்பிக்கவேண்டுமல்லவா? அதேதென்றால், அநேகம்பேர்கள் அந்த உதவி சகாயத்தைத் தக்க விதமாய்ப் பண்ணாதிருக்கிறதினால் அவர்கள் செய்கிறதெல்லாம் ஆத்துமாக்களுக்குப் பிரயேசனமில்லாமற் போகிறதாமே.
அதனாலே இப்பேர்ப்பட்ட முக்கியமான காரியத்தில் நீங்கள் மோசம் போகாதபடிக்கு நாம் சொல்லப்போகிறதைக் கவனமாய்க் கேளுங்கள். முதலில் கிறிஸ்துவனான ஒருவன் இறந்தபிற்பாடு அவனுடைய பிரேதத்தையும் அவனுடைய ஆத்துமத்தையும் நினைக்க வேணும். கிறிஸ்துவர்களுடைய சரீரமானது ஞானஸ்நானத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டு, உறுதிப் பூசுதலில் இஸ்பிரித்துசாந்துவின் முத்திரை அடைந்து, திவ்விய நற்கருணையினால் அர்ச்சிக்கப்பட்டு, ஆத்துமாவோடு ஒன்றித்து என்றென்றைக்கும் மோட்சத்திலே வாழ நியமிக்கப்பட்டிருக்கிறதினாலே ,அந்த சரீரத்துக்கு வேண்டிய வணக்க மரியாதை பண்ணி ,அதைத் தகுந்த ஆரவார மரியாதையோடு அடக்கம் செய்ய வேணுமென்பது திருச்சபையின் கட்டளையாம்.
ஆயினும் ஆத்துமம் பிரிந்து போகிறபோதாவது, பிரேதத்தைக் குளிப்பாட்டுகிற போதாவது, குழியிலே வைக்கப்போகிறபோதாவது, புறமதத்தார் செய்யும் சடங்குகள் ஒன்றையும் செய்யக் கூடாதென்றும் உங்களுக்கு நன்றாகக் தெரியுமே. கிறிஸ்துவர்கள், விசேஷமாய்க் கிறிஸ்துவப் பெண் பிள்ளைகள், தகுமான அடக்கவொடுக்கத்துக்கு விரோதமாய் ஒன்றையும் அநுசரிக்க வேண்டாம். அதல்லாமலும் அந்தச் சமயத்தில் வேண்டிய சிறப்பும் வேண்டிய ஆரவாரமும் பண்ணுகிறது நல்லதாயினும், அதெல்லாவற்றையும் திருச்சபை வழக்கத்தின்படியே ஒவ்வொருவருடைய அந்தஸ்துக்குத்தக்கது நடத்த வேணுமல்லாமல், அதற்கு மிதந்தப்பிச் செய்தால் வெறும் ஆடம்பரமென்றும், வீணான பெருமையென்றும் சொல்லவேண்டியது. மேலும், கிறிஸ்துவனுடைய அடக்கமானது தேவசடங்காகையால் கூடுமான இடங்களிலே திருச்சபையில் வழங்குகிற சுகிர்த முறைமைகளை அநுசரிக்கவேண்டியது சரிதான்.
மரித்தவருடைய சரீரத்தை அடக்கம்பண்ண கடமைப்பட்டிருப்பதுபோல், அவருடைய ஆத்துமத்தை விசாரிக்க விசேஷ கடமையுண்டு. கிறிஸ்துவனுக்கு உண்டான பிரதான கடமைகளில் தங்களுடையவர்களின் ஆத்துமாக்களை விசாரிக்கிறது ஒரு விசேஷ கடமையென்பது நிச்சயமாம். அதாவது இறந்தவருடைய ஆத்துமத்துக்கு வேண்டிய உதவி சகாயம் தாமதமின்றியும் குறைச்சலின் றியும் பண்ணவேணும்.
சில நல்ல கிறிஸ்துவர்கள் ஆத்துமம் பிரிந்துபோனவுடனே தாங்களும் அந்த ஆத்துமத்துக்காக வேண்டிக் கொண்டு உபதேசிமார்கள் கோவில்பிள்ளைகள் பிச்சைக்காரர் முதலானவர்களையும் வேண்டிக்கொள்ளப் பண்ணுகிறதுமல்லாமல், வெகு தூரமென்கிலும் நடந்து குருப்பிரசாதிகளிடத்துக்குப் போய் உடனே திவ்விய பூசை நடக்கும்படிக்குச் செய்வார்கள் .அப்படியே எல்லோரும் செய்வார்களேயானால், அது பெரிய புண்ணியமாயிருக்கிறதுந்தவிர ஆத்துமாக்களுக்கும் பெரும் சகாயமாகும்.
அநேகம் கிறிஸ்துவர்கள் ஒரு முகாந்திரமில்லாமல் தாமதித்துப் பத்து நாளைக்குப் பிற்பாடு அல்லது ஒரு மாதத்துக்குப் பிற்பாடு அல்லது ஒரு வருஷத்துக்குப் பிற்பாடு மாத்திரமே இறந்தவர்களுடைய ஆத்துமத்துக்காக கையில் மோட்ச விளக்கு எடுப்பார்கள் . அது பொறுக்கத்
தகாத அசட்டைத்தனமும், ஆத்துமாக்களின் மட்டில் ஓர் பெரிய கொடுமையுமாம். அதனாலே உங்களுடையவர்களின் ஆத்துமாக்களுக்குக் கூடுமான மட்டும் சீக்கிரத்தில் வேண்டிய உதவி சகாயம் பண்ணவேனும்.
இந்த உதவிசகாயம் ஏதென்று கேட்டால் ஜெப வேண்டுதலும், பிச்சை தர்மமும், தவக்கிரியையும் ,திருச்சபையின் பலன்களும் , உன்னதமான திவ்விய பூசையும் ஆகிய இவ்வைந்து விசேஷ உதவிகளே. இவை எல்லாம் பற்றும்பற்றாய் அந்தந்த தியானங்களில் விவரிக்குமுன்னே இவைகள் நினைத்த பலனைக் கொடுக்கும்படிக்கு ஒரு பரம சத்தியத்தை நன்றாய் ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும். அந்தோ, இந்த சத்தியத்தை அறியாததினாலும் அதை அநுசரிக்காததினாலும் அவர்கள் ஆத்துமாக்களுக்காகச் செய்கிறதெல்லாம் ஆத்துமாக்களுக்கு உபயோகமில்லாமற் போவதுந்தவிர, செய்பவர்களுக்கு முதலாய் பலனில்லாமல் போகிறதென்பது நிச்சயம்.
அப்படியும் ஆத்துமாக்களுக்காக நாம் அதிகமாய்ச் செய்தோமென்றிருக்கையில், அந்த ஆத்துமாக்கள் நாம் செய்தவைகளினால் யாதோர் பரியோசனமும் பெறாமல், உத்தரிக்கிற ஸ்தலத்திலே இரட்சிப்பின்றி வருத்தப்பட்டுக் கிடப்பார்கள்.நற்கிரியை யாவும் பலனுள்ளதாய் இருக்கும்படிக்கு இஷ்டப்பிரசாதத்தோடு செய்திருக்கவேணுமென்பது வேத சத்தியம். அதெப்படியென்றால், சரீரத்துக்கு உயிர் ஆத்துமந்தான்;ஆத்துமத்துக்கு உயிர் இஷ்டப்பிரசாதந்தான் என்று அர்ச் அகுஸ்தீன் எழுதிவைத்தார் .
ஆத்துமம் பிரிந்துபோன பிற்பாடு சரீரம் ஏதாகிலும் செய்யக்கூடுமோ ? இல்லை. அப்படி சாவான பாவத்தினால் இஷ்டப்பிரசாதம் ஆத்துமத்திலிருந்து போன பிற்பாடு ஆத்துமம் செத்த பிணம்போல பலனுள்ள நற்கிரியை ஒன்றையும் செய்யக்கூடாது. அப்பேர்ப்பட்ட நற்கிரியையினாலே ஒன்றையும் பெறமாட்டாது, ஒன்றையும் அடைய மாட்டாது. அந்த நற்கிரியை செய்தும் செய்யாததுபோல வீணாய்ப்போகும். அதனாலே பாவிகளுடைய நற்கிரியைகளைச் சர்வேசுரன் கிருபையாய்ப் பார்க்கிறதுமில்லை, ஏற்றுக் கொள்கிறதுமில்லை என்று வேத புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறதாமே. அப்படியிருக்க, சாவான பாவத்தோடே செய்த நற்கிரியை யாவும் பலனற்றிருப்பதினாலும், சர்வேசுரனாலும் அங்கீகரிக்கப்படாதென்கிறதினாலும், இந்த நற்கிரியைகளால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு யாதோர் பிரயோசனம் வரப்போகிறதுமில்லை, அவர்களுடைய வேதனை குறையப்போகிறதுமில்லை, முடியப்போகிறதுமில்லை என்பது நிச்சயம்.
மேலும், இராஜ துரோகியான ஒருவன் இராஜாவுக்கு ஒரு விண்ணப்பம் செய்துகொண்டால் அந்த விண்ணப்பத்தை இராஜா அங்கீகரிப்பானோ என்ன சொல்லுங்கள். அப்படி பரம இராஜாவாகிய சர்வேசுரனுக்கு சாவான பாவத்தால் நாம் விரோதிகளாய் இருக்கும்போது ஜெபிக்கும் ஜெபங்களை அவர் ஒப்புக் கொள்வாரோ? நாம் ஆத்துமாக்களைக் குறித்து செய்யும் ஜெபத்துக்கு காது கொடுப்பாரோ? இது மிகவும் சந்தேகமாயிருக்கிறது. இப்பேர்ப்பட்ட வேண்டுதலினாலே அந்த ஆத்துமாக்களுடைய பயங்கரக்கடன் சற்றாகிலும் தீரமாட்டாது. அது இப்படியிருப்பதினால், ஆத்துமாக்களைக் குறித்து நாம் ஏதாகிலும் செய்யப்போகிறபோது நம்முடைய ஆத்துமத்தில் யாதோர் சாவான பாவமுண்டோ இல்லையோ என்று நன்றாய் சிந்தித்து, சாவான பாவமிருந்தால் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ண சமயமில்லாவிட்டாலும் உத்தம மனஸ்தாபமாவது படவேண்டியது. அப்போது நாம் செய்யும் நற்கிரியை பலனுள்ளதாகி நினைத்த காரியத்துக்கு உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.
இப்போது சொன்னதெல்லாம் மற்ற நற்கிரியைகளுக்கு அவசரமானாலும், திவ்விய பூசைக்கு அவசரமில்லை. ஏனென்றால் திவ்விய பூசையினுடைய பலனானது சேசு கிறிஸ்துநாதரால் வருகிறதேயல்லாமல், திவ்விய பூசையைப் பண்ணுகிற குருவினாலாவது, திவ்விய பூசையைப் பன்னுவிக்கிற கிறிஸ்தவனாலாவது அந்தப் பலன் வருகிறதில்லை. அதனாலே திவ்விய பூசை எப்போதும் அளவறுக்கப்படாத பலனுள்ளதாய் இருக்கிறதென்பது தப்பாது. ஆயினும் ஒருபாவியானவன் ஓர் ஆத்துமத்துக்காக திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்யும்போது அதனுடைய பலனை அவன் நினைத்த ஆத்துமத்துக்கு சர்வேசுரன் கொடுப்பாரோ இல்லையோ என்பது சந்தேகம் என்று வேத சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள் .
ஏனெனில் அவன் சர்வேசுரனுக்கு விரோதியாய் இருப்பதால்,சர்வேசுரன் அவனுடைய கருத்தை நிறைவேற்றினால், அது அவருடைய விசேஷ தயவினாலே நிறைவேறியதொழிய மற்றப்படியல்ல.
கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன தெல்லாம் நிச்சயமாகையால் நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஏதாகிலும் செய்யும்போது சாவான பாவமில்லாத மனதோடு அதைச் செலுத்தவேனும்.
கடைசியிலே உங்களுடைய நற்கிரியையெல்லாம் ஆத்துமாக்களுக்கு நிச்சயமாய் உதவும்பொருட்டு நீங்கள் நினைத்த ஆத்துமாக்களை நன்றாய்க் குறிக்கவேண்டியது மல்லாமல், அந்தந்த நற்கிரியைகளுக்கும் ஜெபங்களுக்கும் உண்டான திருச்சபையினுடைய பலன்களையும் பெறவேணுமென்கிற கருத்தோடிருக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக \.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
கிருபையுடைத்தான சர்வேசுரா (இந்தவூர்) அல்லது (இந்தப் பட்டனத்து) கல்லறையிலே அடக்கம் செய்யப் பட்டிருக்கிற ஸ்திரி பூமான்களான சகல கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களைக் கிருபையாய்ப் பார்த்து அவர்களுடைய பாவங்களை மன்னித்து உத்தரிக்கிற சிறைச்சாலையிலிருந்து அவர்களை மீட்டு என்றென்றைக்கும் உம்மிடத்திலே வாழும்படியாய்ச் சேர்த்துக் கொள்ள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தோராம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கோவிலுக்கு மெழுகுத்திரி வாங்கி வைக்கிறது.
புதுமை
சாஸ்திரிகளுக்குத் தலைமையுமாய், திருச்சபைக்கு அலங்காரமுமாய் அர்ச் சாமிநாதருண்டுபண்னின சபைக்கு மகிமையுமாயிருக்கிற அர்: தோமாசென்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியாயிருந்ததுமல்லாமல் இடைவிடாத முயற்சியுடன் தமது தவக்கிரியைகளினாலும் திவ்விய பூசைகளினாலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவார். அவர் பாரீஸ் பட்டணத்தில் தெய்வீக சாஸ்திரத்தை எல்லாரும் அதிசயப்படுமாறு போதிக்கும் போது, சிலநாளுக்கு முந்தி இறந்த தம்முடைய சகோதரியின் ஆத்துமத்தைக் கண்டார். இந்த சகோதரியானவள் கன்னியாஸ்திரிகளுடைய ஒரு மடத்துக்குச் சிரேஷ்டம்மாளாயிருந்து அநேகம் சுகிர்த புண்ணியங்களைப் பண்ணியிருந்தாலும், இறந்தபிற்பாடு உத்தரிக்கிற ஸ்தலத்திலே தள்ளப்பட்டு அதிலே அகோர வேதனைகளை அநுபவித்துக்கொண்டிருந்தாள்.
அதனாலே சர்வேசுரனுடைய உத்தாரப்படியே தன் சகோதரனான தோமாசென்பவருக்குத் தரிசனையாகி நான் இந்த நெருப்பிலே அகோரமாய் வருத்தப்படுகிறேனே என்பேரில் இரக்கமாயிருந்து எனக்கு உதவி சகாயம் பண்ணவேணுமென்று மன்றாடுகின்றேன் என்றாள். இந்தப் பிரகாரமாய் அர்ச். தோமாசென்பவர் அந்த ஆத்துமத்தை மீட்கச் ஜெபம் பண்ணி, ஒரு சந்தியாயிருந்து தவக்கிரியைகளைச் செய்து, திவ்விய பூசையைப் பண்ணினார்.
அநேகநாள் கடந்தபிற்பாடு இந்த அர்ச்சியசிஷ்டவர் உரோமபுரியிலே இருக்கும்போது, தம்முடைய சகோதரி யானவள் மறுபடியும் அவருக்குத் தோன்றி என்னுடைய உத்தரிப்பு முடிந்தது. உம்முடைய பிரயாசையால் என் கடனெல்லாம் தீர்ந்தது. என்றென்றைக்கும் சர்வேசுரனிடத்தில் இளைப்பாறப்போகிறேன் என்றாள். அப்போது அர்ச் தோமாசென்பவர் அவளை நோக்கி நம்முடைய இரு சகோதரர்கள் இறந்திருக்கிறார்களே. மறுலோகத்தில் அவர்களுடைய நிலைமை எப்படி என்று அறிவாயோ? என்றார்.
அதற்கு அவள் அவர்களிலொருவரான அற்நால்தூசென்பவர் அர்ச்.பாப்பானவரையும் அர்ச். திருச்சபையையும் அநியாயமாய் விரோதித்த பிரத்தெரிக்கூஸ் என்ற அரசனோடு போர்ச்சண்டை செய்திருத்ததினாலும் அதனிமித்தம் வெகு வருத்தப்பட்டிருந்ததினாலும் அவருடைய ஆத்துமம் மோட்சத்திலே உன்னதமான மகிமையை அடைந்திருக்கிறது. வேறொருவரான லந்தோல்பூஸ் என்கிறவர் இன்னும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறாரென்கிறதினாலே நீர் அவருக்கு உதவிசெய்யவேணும். நீரோவென்றால், என் பிரியமுள்ள சகோதரனே! நீர் ஆண்டவருக்குத் தோத்திரமாக உண்டாக்கத் துவக்கின சுகிர்த புஸ்தகங்களைக் சீக்கிரமாய் முடித்துக் கொள்ளும் என்னத்தினாலே என்றால் எங்களோடு கூட என்றென்றைக்கும் சொல்லிலும் நினைவிலும் அடங்காத செல்வ பாக்கியங்களை சுகிக்கத்தக்கதாகச் சில வருஷத்துக்குள்ளே மோட்சத்துக்கு வரவழைக்கப்படுவீர் என்று சொல்லி மறைந்து போனாள்.
இவைகளைக் கேட்டு அர்ச். தோமாசென்பவர் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து முன்னிலும் அதிகமாய்த் தேவ ஊழியத்தில் உழைத்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வருந்தி, சம்மனசுகளுக்கு ஒப்பவொழுகி, சம்மனசென்னும் மகிமையான பெயரையடைந்து கடைசியிலே மரித்தார்.
கிறிஸ்துவர்களே ! இந்தப் பெரிய சாஸ்திரியானவர் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பிரயாசைப்பட்டாற் போல நீங்களும் பிரயாசைப்பட்டால் அந்த ஆத்துமாக்களாலே உங்களுக்கு அநேக பிரயோசனம் வருமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபத்து இரண்டாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற முதல் வழி செபமாம் .
தக்கபிரகாரமாய்ச் செய்கிற ஜெபமானது, சர்வ வல்லபமுள்ளதாகையால் , அதனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணலாமென்கிறதற்குச் சந்தேகமில்லை . ஜெபத்தினுடைய மட்டற்ற வல்லமையைத் சற்றுநேரம் யோசித்துப் பார்ப்போமாக. தேவையான நன்மையெல்லாம் அடைய விரும்புகிறவர்கள் என் பிதாவைக் கேளுங்களென்றும், அப்படிக் கேட்கிறவன் தான் கேட்டதை அடைவானென்றும், சேசுகிறிஸ்துநாதர் தாமே பலமுறை சுவிசேஷத்திலே திருவுளம்பற்றியிருக்கிறார். அதைப் பற்றி நிரந்த கர்த்தாக்களும் வேத சாஸ்திரிகளும் ஏகோபித்து மகா தாழ்ச்சியோடும் தளராத நம்பிக்கை விசுவாசத்தோடும் மாறாத நிலைமையோடும் செய்கிற வேண்டுதல் ஆண்டவருடைய சந்நிதியில் சர்வ வல்லமையுள்ளதென்று எழுதிவைத்தார்கள்.
தன் வேண்டுதலினாலேயல்லவோ யோசுவாவென்பவர் சூரியனை நில்லெனக் கூறி நிறுத்தினார். தன்
வேண்டுதலினாலேயல்லவோ மோயிசனென்பவர் தன் பகைவருடைய சேனைகளைச் சங்கரித்தார். தன் வேண்டுதலினாலேயல்லவோ எலியாசென்பவர் மழை பெய்யாதபடிக்குத் தடுத்து, பின்பு பொழியப்பண்ணினார். தங்கள் வேண்டுதலினாலேயல்லவோ அர்ச்சிஷ்டவர்கள் மரித்தோர்களை எழுப்பி, வியாதிஸ்தரை குணப்படுத்தி, குருடருக்குப் பார்வையும், செவிடருக்குச் செவியும், முடவருக்கு நடையும் கட்டளையிட்டு, மட்டில்லாத ஆச்சரியத்துக்குரிய அற்புதங்களைச் செய்தார்கள். மேலும் ஜெபத்தினால் மலைகள் அசையவும் ,கற்கள் பணிந்து பழகவும் பண்ணினார்கள் என்று அறிவோம் .
ஆனதால் சுயஞ்சீவியரான சர்வேசுரன் தன் சுபாவத்தால் சர்வத்துக்கும் வல்லவராய் இருக்கிறார்போலே ,தன் வேண்டுதலால் மனுஷனானவன் சர்வ வல்லவனாயிருக்கிறான் எனத் தகும். ஆகையால் மனுஷனானவன் தன் ஜெப வேண்டுதலினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவியும் ஆறுதலும் வருவிக்கக்கூடுமென்பது தப்பாத சத்தியமாம்.
முன் காண்பித்தவண்ணமே, வரி வேதத்திலும் அருள் வேதத்திலும் எப்போதும் எங்கும் மரித்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிற சுகிர்த சகாயம் வராதிருந்தால், அப்படிச் செய்வது வீணான காரியமும் அபத்தமான வழக்கமுமாயிருக்குமே. இப்படிச் சொல்வது அபத்தமென்பதினாலே, நம்முடைய ஜெபங்களினாலும் வேண்டுதலினாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதலையும் உதவிகளையும் வருவிக்கக் கூடுமென்பது பரம சத்தியமாம்.
இதிலே அறியவேண்டிய விசேஷமாவது : ஜெபத்திலே இரண்டு வகை உண்டு. அதாவது ஒவ்வொருவன் தனித்தனியே செய்கிற ஜெபமும், அநேகர் கூடி பொதுவிலே செய்கிற ஜெபமுமாம். தனித்தனியே செய்கிற செபம் நல்லதென்றால், பொதுவிலே செய்கிற ஜெபத்துக்கு அதிக பலனுண்டு. ஆனதால் பக்தியுள்ள ஆத்துமாக்கள் தனித்தனியே ஜெபித்துக்கொண்டாலும், செய்யப்படுகிற ஜெப வேண்டுதலுக்கும் ஒருமித்திருக்க விரும்புவார்கள். இப்போது சொன்ன வண்ணமே ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக தனித்தனியே பல ஜெபங்களைப் பண்ணுகிறதுமல்லாமல், இந்த கருத்தோடு அடிக்கடி பல மனவல்லய ஜெபங்களையும் சொல்லுவார்கள்.
பொதுவிலே செய்யப்படுகிற ஜெப வேண்டுதலானது தனி ஜெபத்துக்கும் மேற்பட்டதாயிருக்கும். அதெப்படி யென்றால், கோவிலிலேயாவது வீட்டிலேயாவது, மூன்று பேர் அல்லது பல பேர் கூடி எதை அடையப் பிரார்த்தித்துக் கொள்ளுவார்களோ, அதை அடைவார்கள் என்று நமது திவ்விய இரட்சகரான சேசுகிறிஸ்துநாதர் திருவுளம் பற்றினார். ஆகையால் பொதுவிலே செய்யப்படுகிற ஜெபமானது மெய்யாகவே சர்வ வல்லபமுள்ளதாய் இருக்கிறதென்பது குன்றாத சத்தியமாம்.
பொதுவிலே செய்யப்படுகிற ஜெபமானது மூன்று வகையாய்க் செய்யப்படும். முதல்வகை ஏதென்றால், அநேகர் கூடிச் செய்கிற ஜெபமாம். இரண்டாம் வகையாவது யாதொரு சபையைச் சேர்ந்தவர்கள் அச்சபையில் வழங்குகிற செபங்களைத் தனித்தனியே செபித்தாலும் ,அவைகள் சபையின் பொதுவான செபங்களாகையால் அநேகர் கூடி செபிக்கிற ஜெபத்துக்கிணையாகும். அதனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களை விசேஷமாய் விசாரிக்கிற நன்மரணச் சபையிலே நீங்கள் சேர்ந்தால் உத்தமந்தான். மூன்றாம் வகையாவது யாதோர் சபையில் சேராமலும் பொதுவிலே ஜெபம் பண்ணாமலும் இருக்கிறவன், சாதாரண சத்திய திருச்சபையில் எங்கும் செய்யப்படுகிற ஜெபங்களையும், தர்ம புண்ணியங்களையும் நினைவினால் கருதி, இதெல்லாவற்றையும் மெய்யான ஆசையுடன் தான் விரும்புகிற காயத்தை அடையத்தக்கதாகச் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கிறதேயாம்.(உதாரணம்: உலகெங்கிலும் நடைபெறும் திருப்பலியை ஒப்புக் கொடுத்தல் )
உத்தரிக்கிற ஆத்துமாக்களை உண்மையான பட்சத்தோடு நேசித்து அவர்கள்பேரில் பக்தியாயிருக்கிறவர்கள் இம்மூன்றுவகை ஜெபங்களைக் கொண்டு அவர்களுக்கு உதவி சகாயம் பண்ண விரும்புவார்களாம். மேலும் அப்படி ஜெப வேண்டுதலினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவது எவராலும் கூடுமான காரியந்தான். சாஸ்திரம் அறியாத நிர்மூடரும், அரைக்காசு ஜவேசில்லா தரித்திரரும், இருந்தயிடத்தைவிட்டு அசையக் கூடாத வியாதிஸ்தரும், முதியோர்களும், கைம்பெண்களும் முதலாய் இந்தக் காரியத்தை
நிறைவேற்றுவது அரிதல்லவே.
இதற்காக வெகு பணம் செலவு செய்யவும், சாஸ்திரங்களை அறியவும் வேணுமோ? உன் வீட்டை விட்டுப் புறப்படாமலும், உன் தொழிலைக் கொஞ்சமும் குறைக்காமலும், உன் பொருளை இழந்து வருந்தாமலும் செய்யத்தகுங் காரியம் இதல்லவோ? இதுகூட செய்யாது போனால் ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்குப் பக்தி நேசமும் தயவு இரக்கமும் பரிச்சேதம் இல்லையென்று காணப்படுமே. -
இன்னும் இவ்விஷயத்தில் சில காரியங்களைக் கவனித்து அறியவேனும்:
1-வது சகலமான உத்தரிக்கிற ஆத்துமாக்களைக்
குறித்துச் செப வேண்டுதல் பண்ணுவது நல்லதாயினும், மனுஷனானவன் தன்னுடையவர்களின் ஆத்துமாக்களை முதலில் நினைத்து அவர்களுக்காகச் செய்ய வேண்டியதைச் செலுத்தவேணுமென்கிறது நியாயமும் கடனுமாம்.
2-வது நல்ல கருத்தோடும் நல்ல பக்தியோடும் செய்த ஜெபம் நல்லதாயிருந்தாலும், பிரயோஜனமுள்ளதாயிருந்தாலும், திருச்சபையானது பலன்களைக் கொடுத்திருக்கிற ஜெபங்களைச் செபிக்கிறதே அதிக மேன்மையும் ஆத்துமாக்களுக்கு அதிக பலனுமுள்ளதென்று அறியவும்.
3-வது கூடிய திருச்சபையிலே செய்யப்படுஞ் செபம் தனிஜெபத்துக்கு மேற்பட்டதாகையால் உங்களுடைய மரித்தவர்களைக் குறித்துக் கோவிலிலே ஜனங்கள் கூடுகிறபோது அடிக்கடி வேண்டுதல் நடத்த வேணும்.
4-வது குருக்களும் சந்நியாசிகளும் கன்னியாஸ்திரிகளும் பிச்சைக்காரரும் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்பட்டவர்களாய் இருக்கிறபடியினாலே, அவர்களுடைய ஜெபங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்ளுக்கு அதிகமாய் உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனால் உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களுக்காக அவர்களுடைய ஜெபங்களை விசேஷமாய் ஒப்புக்கொடுக்கச் செய்ய வேணும்.
5-வது உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் சர்வேசுரன் சந்நிதியிலே நீங்கள் நேராய்ப் பொழிந்த ஜெபங்களையெல்லாம், அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணும்படிக்கு அர்ச். தேவமாதாவையும், அர்ச். சூசையப்பரையும் மற்ற மோட்சவாசிகளையும் வேண்டிக் கொள்ளுகிறது சுகிர்த வழக்கமாம்.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்கு ஆதரவாயிரும்
செபம்
சுயஞ்சீவியமான சர்வேசுரா! இன்றுதானே மரித்தவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்துத் தேவரீருடைய கிருபையை வேண்டிக்கொள்ளுகிறோம். அந்த ஆத்துமாக்கள் பூமியிலே இருக்கும்போது செய்த குற்றங்களையெல்லாம் தேவரீர் மன்னித்து, அவர்களை நித்திய நரகத்துக்குத் தள்ளாமலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலே நிறுத்தாமலும், தேவரீருடைய பிரதாபமுள்ள சமூகத்துக்கு அழைத்துக்கொள்ளவேணுமென்று தேவரீருடைய மட்டற்ற தயாளத்தைப் பார்த்து தேவாரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்
இருபத்திரண்டாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
இன்று மரித்தவர்களுடைய ஆத்துமாக்களுக்காகக் சேசு கிறிஸ்துநாதருடைய ஐந்து காய மந்திரம் வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
பிரெஞ்சு இராச்சியத்தின் கர்பாந்திராசென்ற பட்டணத்தில் முத்திப்பேறுபெற்ற எஸ்பிரித்தம்மாள் வாழ்ந்து வந்தாள். அவள் சகல புண்ணியமும் நிறைந்தவளாயிருந்தாலும், அவளிடத்தில் விசேஷமாய் மனத்தாழ்ச்சியும் சாந்தகுணமும் துலங்கிக் கொண்டிருந்ததாம். அதனாலே அவளுடைய ஜெபவேண்டுதல் சர்வேசுரனுக்கு அதிக பிரியப்பட்டு கேட்டதெல்லாம் பெறுவிக்கும்.
அவளுடைய உதவியைக் கேட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்கள் அநேக முறை அவளுக்குத் தரிசனையானதுமல்லாமல், அவளுடைய வேண்டுதலினாலே திரளான ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போனதாக அவளுடைய சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அப்பட்டணத்தில் கலியாணம் பண்ணாத மர்கரித்தம்மாளென்ற ஒரு பக்தியுள்ள பெண்மணி இருந்தாள். இவளும் எஸ்பிரித்தம்மாளும் ஒருவருக்கொருவர் வெகு பட்சமாயிருந்து புண்ணியத்தில் வளரத்தக்கதாக அந்நியோன்னியமாய்த் தங்களை ஏவிக்கொண்டு நானாவித புண்ணியங்களையும் தர்மங்களையும் செய்துகொண்டு வந்தார்கள். இவர்கள் இப்படி செய்துகொண்டு வருகையில் கொஞ்ச வயதுள்ளவயாயிருந்த மர்கரித்தம்மாள் இறந்தாள். அவள் அத்தனை புண்ணியங்களையும் தர்மங்களையும் செய்திருந்தாலும், சில சொற்பக்குற்றங்களைப் பற்றியும் நீதியுள்ள சர்வேசுரனால் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு போகத் தீர்வையிடப்பட்டாள்.
அவளுடைய ஆத்துமத்துக்காக முத்திப்பேறு பெற்ற எஸ்பிரித்தம்மாள் செபத்தியானம் பண்ணும் போது, புலம்பல் சத்தங்களும் அழுகைக் கூக்குரலும் கேட்கப்பட்டு ஐயையோ வேகிறேன். எனக்குப் பிரியமுள்ள எஸ்பிரித்தம்மாளே! எனக்காக ஆண்டவரிடத்திலே வேண்டிக்கொள்ளும் என்ற வார்த்தையானது இவள் காதிலே விழுந்தது. இவையெல்லாம் கேட்டுத் திகிலடைந்த எஸ்பிரித்தம்மாள், போ எனக்கு பயம் வருவிக்காதே என்று உரத்தச் சத்தமாய் சொன்னாள் .
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அந்த ஆத்துமம் திரும்ப வந்து புலம்பி அழுகிறதை எஸ்பிரித்தம்மாள் கேட்டு மனந்தேறி, நீ யார், உன்னை எனக்கு காண்பி , உனக்கு என்ன செய்ய வேணும் சொல் " என்று கேட்டதற்கு மார்கரீத்தம்மாளுடைய ஆத்துமம் நெருப்பினால் சூழப்பட்டு பொறுக்கப்படாத வேதனை அனுபவிக்கிற பிரகாரமாய் அவளுக்குத் தன்னைக் காண்பித்து 'என்னை அறியீரோ ? மார்கரீத்தம்மாள் நான் தானே , உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு வேதனை அனுபவிக்கிறேனே , என்னை அவ்விடத்திலிருந்து மீட்டிரட்சிக்க உம்முடைய செபங்களை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க மன்றாடுகிறேன் " என்று சொல்லி மறைந்து போனது .
எஸ்பிரித்தம்மாளோவென்றால் இந்த ஆத்துமத்துக்காக சில நாள் மகா பக்தியோடு தாம் செய்கிற செபங்களையும் பண்ணுகிற தவங்களையும் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்த பிற்பாடு மார்கரீத்தம்மாள் மோட்சத்துக்குப் போனதாக நிச்சயமாய் அறிந்தாள்.
வேறொரு சமயத்தில் முப்பது வருஷத்துக்கு முன் இறந்த ஒரு பெரிய படைத்தலைவனுடைய ஆத்துமம் அவளுக்குக் காணப்பட்டு இவ்வளவு வருஷம் நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறேனே, எனக்காக ஆண்டவரிடத்திலே வேண்டிக்கொள்ளவேணும்எென்று மன்றாடினதாம். இந்தப் படைத் தலைவனுடைய ஆத்துமத்தைக் குறித்து அநேக குருக்கள் பூசை பண்ணியிருந்தாலும், அவனுடைய பந்துஜனம் அநேக தர்மங்களச் செய்திருந்தாலும், முப்பதுவருஷத்திற்குப் பிற்பாடு அவனுடைய ஆத்துமம் இன்னும் உத்தரிக்கிற ஸ்தலத்திலேயே இருந்தது.
எஸ்பிரித்தம்மாள் இந்த நிர்ப்பாக்கியத்துக்கு இரங்கி அதிகபத்தி விசுவாசத்தோடு வேண்டிக்கொள்ளத் துவங்கினாள். இவளுடைய ஜெபங்களை சர்வேசுரன் கிருபாகடாகூடிமாய் ஏற்றுக்கொண்டு இந்தப் படைத் தலைவனுடைய ஆத்துமத்தை மோட்ச பேரின்பத்துக்குச் சேர்த்துக் கொண்டாராம். கிறிஸ்துவர்களே! பக்தி விசுவாசத்தோடு செய்த ஜெபமானது அவ்வளவு வல்லமையுள்ளதென்றறிந்து இடைவிடாமல் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ள வேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபத்துமூன்றாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற இரண்டாம் வழி தர்மமாம்
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் வருவிக்கதக்கதாக தர்மம் செய்தல், எளிதான வழியும், உத்தமமான வகையும், தப்பாத உபாயமுமாம். தர்மஞ் செய்வது செய்தவனுக்கும் உதவும், செய்யப்பட்டவனுக்கும் உதவும். யாருக்காகச் செய்யப்படுமோ அவனுக்கும் உதவும்: தர்மஞ் செய்கிறவன் தான் கொடுத்த பிச்சையினால் பாவப் பொறுத்தலுக்கு வேண்டிய தேவ அநுக்கிரக்கத்தையும், தேவ கிருபையையும், மோட்ச பேரின்பத்தையும் அடைவான். பிச்சை வாங்குகிறவன் பிச்சையினாலே ஆறுதல் அடைந்து பிழைப்பான், சந்தோஷப்பட்டுச் சர்வேசுரனைத் தோத்தரிப்பான், நன்றியறிந்து வேண்டுவான். யாருக்காகச் செய்யப்படுமோ அவன் அதனாலே வருகிற ஆதாயத்தால் தன் கடனைச் செலுத்துவான், தேவ நீதிக்குப் பரிகரிப்பான். மோட்ச பாக்கியத்தை அடைவான் .
இது இப்படி இருக்க , வெகு ஆஸ்திகளைச் சம்பாதிப்பதிலும், தங்கள் காசைக் குவியலாகச் சேகரிக்கிறதிலும், பிச்சை இடுவது மெத்த நல்லது ஏனெனில் பிச்சையானது சாவிலிருந்து மீட்கும் .பாவங்களைத் தடுக்கும், தேவகிருபையை அடையப்பண்ணும். நித்திய ஜீவியத்தை வருவிக்கும் என்று அதிதூதரான அர்ச் இரபாயேல் இரு தோபியாசுக்கும் அறிவித்தார்.
மேலும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்து நாதர்சுவாமி, தரித்திரப்பட்டவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் தர்மத்தை செய்யவேணுமென்றும் தர்மத்தினால் எவ்வளவு பிரயோசனம் உண்டாகுமென்றும், தர்மஞ்செய்கிறவர்களுக்கு மோட்ச பாக்கியம் கொடுக்கப்படுமென்றும் , அநேகமுறை சுவிசேஷத்தில் நிச்சயமாய்ச்சொன்னாரென்று முன் விபரமாய்க் காண்பிக்கப்பட்டுள்ளது .ஆனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களைப் போல உதவி சகாயம் தேவை உள்ளவர்கள் ஒருவரும் இல்லை .
அதனாலே அவர்களைக் குறித்து பிச்சை தருமம் செய்வது எல்லா தர்மங்களிலும் நல்ல தர்மமாய் இருக்கிறதுமல்லாமல், தண்ணீர் நெருப்பை அவிக்குமாப்போலே இந்தத் தர்மத்தால் அவர்களுடைய வேதனை தணிந்து அவர்கள் தேவநீதிக்குச் செலுத்தவேண்டிய கடன் தீருமென்பது நிச்சயம். அது எப்படியாகுமென்றால் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் செலுத்தவேண்டிய பரிகாரக்கடன் ஒரு கடன்தான். நாம் பிச்சை கொடுக்கும்போது, சேசுகிறிஸ்துநாதர் அதைத் தமக்கே கடனாகக் கொடுத்தாற்போல ஏற்றுக்கொள்ளு கிறாரென்கிறதினாலே, அவர் மறுபடி நமக்குத் தீர்க்க வேண்டிய ஒரு கைம்மாறாயிருக்கும்.
இப்போது சுவாமி நமக்குக் கொடுக்க வேண்டிய இந்தக் கடனை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கைம்மாறாக நாம் ஒப்புக்கொடுப்போமேயானால், அம்மாத்திரத்துக்கு அந்த ஆத்துமாக்களுடய கடன் குறையுமென்று சொல்லவேண்டும். முன் காண்பித்த வண்ணமே எந்தப் புண்ணியத்திலும் எந்தத் தர்மத்திலும் மூன்று பலன் உண்டாயிருக்கிறது. அதாவது பேறுபலனும், மன்றாட்டுப் பலனும், பரிகாரப் பலனுமாம். பேறுபலனை யாருக்கும் கொடுக்கக்கூடாதென்றிருந்தாலும், மன்றாட்டுப்பலனையும் பரிகாரப் பலனையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கொடுக்கலாமென்பது நிச்சயமாகையால், தர்மம் செய்கிறவர்கள் இவ்விரண்டு பலனை அந்த ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் வருமென்றும், அவர்களுடைய வேதனை எவ்வளவு அமருமென்றும், அவர்களுடைய வருத்தங்கள் எவ்வளவு குறையுமென்றும் நன்றாய் நினைத்துக் கொள்ள வேணும்.
இது இப்படியிருக்க, நீங்கள் தர்மம் செய்கிறபோதெல்லாம் அந்தத் தர்மம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படும்படியாகவும் உங்களுக்கு அதிகமாய்ப் பிரயோசனப்படும்படியாகவும், அந்தத் தர்மங்களை உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யவேண்டியது தான். இப்போது அந்தப் பிச்சை தர்மம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதிகமதிகமாய் உதவும்பொருட்டு அவைகளைத் தகுந்தவிதமாய்ச் செய்யவேணும்.
முதலாவது முன் காண்பித்தவண்ணமே பிச்சை தர்மமும் மற்ற நற்கிரியைகளும் பலித்து நினைத்த பலனை அடைவதற்கு, இஷ்டப்பிரசாதத்தோடு அவைகளைச் செய்திருக்க வேணும். மனுஷனானவன் சாவான பாவத்தோடு செய்த தர்மத்துக்குப் பலன் இல்லாததினாலே , அந்த தர்மம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவ மாட்டாது . எத்தனையோபேர்கள் இந்தப் பரம சத்தியத்தை அறியாமல் தாங்கள் செய்யும் தர்மத்துக்கு யாதொரு பலனைத் தாங்கள் அடையாமல் போவதும் தவிர குறித்த உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவாமல் போகிறது .அதனாலே நீங்கள் யாதோர் தருமத்தைச் செய்ய நினைக்கும்போது செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டாவது செய்ய வேணும் .
இரண்டாவது :பிச்சை தர்மம் செய்கிற போதெல்லாம் வீண் ஆடம்பரத்தையும் வீண் பெருமையையும் தேடாமல் , சர்வேசுரனைக் குறித்து மாத்திரமே செய்யவேணும். அதேதென்றால்: "நீங்கள் மனிதர் காணும் பொருட்டு அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நற்கிரியைகளைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அல்லாவிட்டால் பரமண்டலங்களிலேயிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் அதற்குரிய வெகுமதியை அடையமாட்டீர்கள்.
ஆகையால் தர்மஞ் செய்கிறபோது கள்ள ஞானிகள் மனிதரால் புகழப்படுவதற்குத் தேவாலயங்களிலும் விதிகளிலும் செய்கிறது போல், உமக்கு முன்னே எக்காளம் ஊதுவிக்க வேண்டாம். அவர்கள் தங்கள் பிரதி பலனை அடைந்தாயிற்றென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோவெனில் தர்மஞ் செய்கையில் உன் தர்மம் மறைவாயிருக்கத்தக்கதாக, உன் வலது கை செய்வதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது. அப்போது மறைவிலே காண்கிற உன் பிதா உனக்கு வெகுமதி அளிப்பார்" என்று சேசு கிறிஸ்து நாதர் தமது திரு வாய் மலர்ந்து அருளிச்செய்தார்.
மூன்றாவது : ஒவ்வொருவன் தன்னுடைய அந்தஸ்துக்கும் ஸ்திதிக்கும் தக்கபடி தர்மஞ் செய்ய வேண்டியதுதான். இவ்விஷயத்திலே பெரிய தோபியாசென்கிறவர் தமது மகனுக்கு சொல்லுகிற சுகிர்த புத்திமதிகளைக் கேளுங்கள் " என் மகனே! உன்னாலே கூடுமான மட்டும் தர்மம் செய்வாயாக உனக்கு ஆஸ்தி மெத்த இருந்தால் அதிகமாகக் கொடுப்பாயாக; கொஞ்சம் ஆஸ்தியிருந்தால் கொஞ்சமாவது கொடுப்பாய், ஆனால் இந்தக் கொஞ்சத்தையும் சந்தோஷமாய்க் கொடுப்பாயாக "என்றார்.
நீங்களும் கிறிஸ்துவர்களே !ஆத்துமாக்களைக் குறித்து தர்மம் கொடுக்கும்போது அப்படித்தான் செய்யவேணும். உங்களுக்கு சர்வேசுரன் திரண்ட ஆஸ்திகளை கொடுத்திருப்பாரானால் அதிகமாய்க் கொடுக்கக் கடவீர்கள். ஆஸ்தி கொஞ்ச மாத்திரம் இருக்குமேயானால் நல்ல மனதோடே கொஞ்சமாவது கொடுக்க வேண்டியது. ஏழைகள் நல்ல மனதோடே கொடுக்கிற கொஞ்ச தர்மமானது ஆஸ்தியுள்ளவர்கள் கொடுக்கிற பெருந்தொகையைப் பார்க்கிலும் சர்வேசுரன் சந்நிதியிலே அதிகப் பிரியப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை.
நாலாவது : பிச்சைக்காரருக்கும், இல்லாதவருக்கும் செய்யப்பட்ட தர்மமுமல்லாமல், உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துக் கோவிலுக்கு எண்ணெய், மெழுகுத்திரி, சாம்பிராணி , காணிக்கை முதலானவை கொடுக்கிறது திருச்சபையில் வழங்கின வழக்கமும் ஆத்துமாக்களுக்குப் பிரயோசனமுள்ள நற்கிரியையுமாம்.
ஐந்தாவது: அநேகம் கிறிஸ்துவர்கள் பெண்பிள்ளைகளாவது ஆண்பிள்ளைகளாவது சாகுமுன்னே மரண சாசனத்தைச் செய்தானாலும், வாய்மொழியாய்த் தங்களுடைய சித்தத்தைக் காண்பித்தென்கிலும், தங்களுக்காக சில பூசைகளைப் பண்ணுவிக்கவும் அல்லது சில தர்மங்களைச் செய்யவும் தங்கள் சொந்த ஆஸ்திகளிலிருந்து இன்ன சொத்தை அல்லது இன்ன உடமையை அல்லது இன்ன காரியத்தை செய்யச் சொல்லுவார்களாம். மரித்தவர்களுடைய இந்த கருத்துகளை மகா எச்சரிக்கையோடு நிறைவேற்றவேணுமென்று தேவ கட்டளை உண்டு .
திருச்சபைக் கற்பனை உண்டு . இராஜாங்கத்தாருடைய சட்டமுமுண்டு, சர்வ நியாயமுமுண்டு. இந்த கருத்துக்களை நிறைவேற்றாதவர்கள் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பொருந்தாத பாவங்களைக் கட்டிக்கொள்ளுகிறதுமன்றியே, தங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் மட்டில் மகா கொடுமையைக் காண்பிக்கிறார்கள் என்பதாகும். அதெப்படியெனில், அப்படிச் செய்கிறவர்கள் மேற்சொன்ன பூசைகளினாலும் தர்மங்களினாலும் அந்த ஆத்துமாக்களுக்கு வரவேண்டிய உதவி சகாயத்தை நிறுத்துகிறார்களல்லவோ?
மீண்டும் இப்பேர்ப்பட்டவர்கள் இறந்தவர்களுடைய கருத்துக்கு விரோதமாய் பூசை தர்மங்களைச் செய்யாமற்போவதால் தங்களுக்குப் பிரயோசனமிருக்குமென்று நினைக்கவேண்டாம். அதனாலே அவர்களுக்கு பொல்லாப்பு, குறைவு, துன்பம் முதலான அநேக ஆக்கினைகள் வருகிறதென்று நிரூபிக்க பல திருஷ்டாந்தங்களும் சரித்திரங்களும் இருக்கின்றன. இது இப்படியிருக்க , நீங்கள் இறந்தவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா ! தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு எப்போதும் இரங்குவீரென்கிறதினாலே, எங்களுடைய தாழ்மையான மன்றாட்டுகளைக் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். உம்முடைய ஊழியரான எங்களுடைய பந்துஜனங்கள் உயிரோடிருக்கும்போது உம்மை விசுவசித்து நம்பி மரித்தார்களென்று நினைத்து அவர்கள் கட்டிக் கொண்ட குற்றமெல்லாம் பொறுத்து உமது பரம இராச்சியத்தில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
இருபத்து மூன்றாம் தேதி செய்ய வேண்டிய நற்கிரியையாவது
ஆத்துமாக்களைக் குறித்து பிச்சை கொடுக்கிறது
புதுமை
ஜெர்மானிய தேசத்தில் உள்ள வூல்தான்ற மடத்துக்கு ராபான்மோருஸ் என்கிறவர் அதிசிரேஷ்டராய் இருந்தார். அதற்கப்பால் மாயாஞ்சி பட்டணத்துக்கு அதிமேற்றிராணியார் ஆனார் . அவர் மடத்துக்கு சிரேஷ்டராய் இருக்கும்போது பிச்சைக்காரருக்கு ஏராளமாய் தர்மம் செய்ய வேணுமென்று மடத்து விசாரணைக் காரியக்காரனுக்கு கட்டளையிட்டிருந்தார். ஏதேலாரென்ற இந்த விசாரணைக்காரன் கஞ்சத்தனத்தினாலே கொடுக்க வேண்டிய தர்மங்களைக் குறைப்பான் .
மேலும், சிரேஷ்டரானவர் மடத்துச் சந்நியாசிகளில் யாதாமொருவர் சாகிறபோது முப்பது நாளளவும் செத்துப் போனவர் வழக்கமாய்ச் சாப்பிடும் சாப்பாடுகளைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்க கட்டளையிட்டிருந்தார். அதையும் விசாரணைக்காரன் நிறுத்துவான். 830-ம் ஆண்டில் ஒரு சந்நியாசியார் இறந்து போகவே சிரேஷ்டரானவர் அவருடைய ஆத்துமத்தைக் குறித்து வழக்கத்தின்படியே முப்பதுநாள் அவருடைய சாப்பாட்டைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்கவேணுமென்று கண்டிப்பாய் விசாரனைக்காரனுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படிச் சிரேஷ்டர் கற்பித்திருந்தாலும் கஞ்சத்தனமுள்ள காரியஸ்தன் ஒன்றும் செய்யவில்லை. இப்படி அவன் பிச்சைக்காரருக்குக் கொடுக்கவேண்டிய தர்மத்தையும், அந்த தர்மத்தால் ஆத்துமாக்களுக்கு வரவேண்டிய சகாயத்தையும் அநியாயமாய் நிறுத்திக்கொண்டிருந்தான்.
ஒரு இராத்திரி இந்த விசாரிப்புக்காரன் சந்நியாசிகள் கூடுகிற ஒரு பெரிய அறையிலே ஒரு லாந்தர் வெளிச்சத்தைக் கையிலே பிடித்துப்போகையில் அந்த அறையிலேயே புதிதாய் இறந்த சந்நியாசியாரும் அவருக்கு முன்னமே இறந்த வேறு சில சந்நியாசிமாரும் கூடி உட்கார்ந்து ஆலோசனை பண்ணிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். அதைக் கண்டு பயந்து வெருண்டு தலைமயிர் சிலுசிலுத்து யாதொன்றையும் பேசக்கூடாமல் நிற்கும்போது காணப்பட்ட சந்நியாசிகளில் சிலர் அவனருகே வந்து அவனுடைய மேல்வஸ்திரங்களைக் கழற்றி அவனைச் சாட்டைகளால் அகோரமாய் அடித்து, " கெட்டவனே, உன்னுடைய கஞ்சத்தனத்துக்கு இதுவே பரிசு. மூன்று நாள் கழித்து நீயும் செத்துப்போய் இதுக்கதிகமாய் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவாய். எங்களுக்கு வரவேண்டிய உதவி சகாயங்களை உன்னுடைய கஞ்சத்தனத்தினாலே நிறுத்தினாயே, உன்னுடைய ஆத்துமத்துக்கும் அப்படியே செய்யப்படும்" என்று சொல்லி காணப்பட்டவர்கள் மறைந்துபோனார்கள். விசாரணைக்காரனோவென்றால் பட்ட அடியினாலே கனகாயப்பட்டு, சர்வாங்கமும் நொந்து, மூர்ச்சையாய் விழுந்து கிடந்தான்
நடுச்சாமத்திலே , மற்ற சந்நியாசிமார்கள் தேவ சங்கீதங்கள் பாட அந்த அறையிலே தான் கூடுகிறபோது விசாரிப்புக்காரன் பிரேதம் போலக் கிடக்கிறது கண்டு மிகவும் அதிசயப்பட்டார்கள் . கொஞ்ச நேரத்துக்குப் பிற்பாடு அவனுக்கு புத்தி தெளிந்து பேச்சு திரும்பி வந்து சொன்னதாவது :" என் சரீர வேதனைக்கு பரிகாரம் வேண்டாம் என் ஆத்துமத்துக்குத்தான் பரிகாரம் வேணும். அதிசிரேஷ்டரைச் சீக்கிரமாய் வரப்பண்ணுங்கள் " என்றான். அதிசிரேஷ்டர் வந்தவுடனே காரியஸ்தனானவன் தான் கஞ்சத்தனத்தினாலே செய்த பாவம் எவ்வளவென்றும், தான் அடிப்பட்டது எப்படியென்றும், தான் மூன்று நாளுக்குள்ளாகச் சாகப்போகிறதையும் விவரித்த பிற்பாடு தனக்குப் பாவசங்கீர்த்தனமும், அவஸ்தைப்பூசுதலும் அவஸ்தை நன்மையும் தரவேணுமென்று கேட்டான். இவையெல்லாம் பெற்றபின்பு மூன்றாம் நாள் மகா பக்தி மனஸ்தாபத்தோடு இறந்தான் .
இவனுடைய ஆத்துமத்தைக் குறித்து மடத்திலே பூசை நடந்ததுமல்லாமல் வழக்கத்தின்படியே முப்பதுநாளும் இவனுடைய சாப்பாட்டைப் பிச்சைக்காரருக்குக் கொடுத்தார்கள். முப்பதாம் நாளில் செத்த காரியஸ்தனானவன் அவலகடினமான ரூபத்தோடு வெகு வருத்தப்படுகிற பிரகாரமாய் அதிசிரேஷ்டருக்குத் தரிசனையாகிச் சொன்னதாவது "என் தகப்பனாரே எனக்காக மடத்தில் செய்யப்பட்ட ஜெபதருமங்களினாலே எனக்குக் கொஞ்சம் ஆறுதல் வந்தது மெய்தான். ஆனால் என் கஞ்சத்தனத்தினாலே அந்த உத்தரிக்கிறஸ்தலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆத்துமாக்கள் யாவும் மோட்சத்துக்குப் போனபிற்பாடு மாத்திரமே நான் போவேன். அதற்குள்ளாக என்னைச் குறித்துச் செய்யப்படும் ஜெப தானதர்மம் தேவநீதியின் படியே அவர்களுக்கு உதவுகிறதேயொழிய எனக்கு
உதவுகிறதில்லை. எனக்கு அவ்வளவு பட்சங்காண்பித்த தகப்பனாரே , என்னைக் கைவிடாதேயும், அதிகமதிகமாய் என்னைக்குறித்துத் தர்மம் செய்யவேணும். இப்படிச் செய்வீ ரேயானால் என்னாலே நிறுத்தப்பட்ட ஆத்துமாக்களும் நானும் மீட்கப்படுவோம் " என்று சொல்லி மறைந்தான்.
அப்படியே சிரேஷ்டரானவர் மறுபடியும் முப்பது நாள் ஏராளமாய்த் தர்மம் கொடுக்கப்பண்ணினார். அப்போது காரியஸ்தனுடைய ஆத்துமம் அத்தியந்த சந்தோஷத்தோடும் மகா பிரதாபத்தோடும் சிரேஷ்டருக்குக் காணப்பட்டு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணி, " உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவோம்" என்று சொல்லி மோட்சத்துக்கு எழுந்தருளிப்போனான்.
கிறிஸ்துவர்களே ! இந்த சுகிர்த புதுமையை ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு அதிக ஞானப் பிரயோசனம் வருமே. முதலாவது: ஆத்துமாக்களைக் குறித்து செய்யவேண்டியதைச் செய்யாமலிருக்கிறது பெரிய பாவமென்று காணப்படுவதுமல்லாமல், அது ஆத்துமாக்களுக்கு பெரிய கொடுமையுமாயிருக்கிறது. இரண்டாவது ஆத்துமாக்களின் பேரில் இரக்கமில்லாதவன் தானும் இரக்கமடையாமல் தன் கடனெல்லாம் தீருமளவும் உத்தரிப்பான். மூன்றாவது: மேற்சொன்ன மடத்துச் சந்நியாசிமார்கள் ஆத்துமாக்களுக்கு ஆறுதலாக ஏராளமாய்த் தர்மம் செய்ததுபோல, நீங்களும் கஞ்சத்தனமின்றி உங்களாலே கூடியமட்டும் தர்மம் கொடுக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற இரண்டாம் வழி தர்மமாம்
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் வருவிக்கதக்கதாக தர்மம் செய்தல், எளிதான வழியும், உத்தமமான வகையும், தப்பாத உபாயமுமாம். தர்மஞ் செய்வது செய்தவனுக்கும் உதவும், செய்யப்பட்டவனுக்கும் உதவும். யாருக்காகச் செய்யப்படுமோ அவனுக்கும் உதவும்: தர்மஞ் செய்கிறவன் தான் கொடுத்த பிச்சையினால் பாவப் பொறுத்தலுக்கு வேண்டிய தேவ அநுக்கிரக்கத்தையும், தேவ கிருபையையும், மோட்ச பேரின்பத்தையும் அடைவான். பிச்சை வாங்குகிறவன் பிச்சையினாலே ஆறுதல் அடைந்து பிழைப்பான், சந்தோஷப்பட்டுச் சர்வேசுரனைத் தோத்தரிப்பான், நன்றியறிந்து வேண்டுவான். யாருக்காகச் செய்யப்படுமோ அவன் அதனாலே வருகிற ஆதாயத்தால் தன் கடனைச் செலுத்துவான், தேவ நீதிக்குப் பரிகரிப்பான். மோட்ச பாக்கியத்தை அடைவான் .
இது இப்படி இருக்க , வெகு ஆஸ்திகளைச் சம்பாதிப்பதிலும், தங்கள் காசைக் குவியலாகச் சேகரிக்கிறதிலும், பிச்சை இடுவது மெத்த நல்லது ஏனெனில் பிச்சையானது சாவிலிருந்து மீட்கும் .பாவங்களைத் தடுக்கும், தேவகிருபையை அடையப்பண்ணும். நித்திய ஜீவியத்தை வருவிக்கும் என்று அதிதூதரான அர்ச் இரபாயேல் இரு தோபியாசுக்கும் அறிவித்தார்.
மேலும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்து நாதர்சுவாமி, தரித்திரப்பட்டவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் தர்மத்தை செய்யவேணுமென்றும் தர்மத்தினால் எவ்வளவு பிரயோசனம் உண்டாகுமென்றும், தர்மஞ்செய்கிறவர்களுக்கு மோட்ச பாக்கியம் கொடுக்கப்படுமென்றும் , அநேகமுறை சுவிசேஷத்தில் நிச்சயமாய்ச்சொன்னாரென்று முன் விபரமாய்க் காண்பிக்கப்பட்டுள்ளது .ஆனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களைப் போல உதவி சகாயம் தேவை உள்ளவர்கள் ஒருவரும் இல்லை .
அதனாலே அவர்களைக் குறித்து பிச்சை தருமம் செய்வது எல்லா தர்மங்களிலும் நல்ல தர்மமாய் இருக்கிறதுமல்லாமல், தண்ணீர் நெருப்பை அவிக்குமாப்போலே இந்தத் தர்மத்தால் அவர்களுடைய வேதனை தணிந்து அவர்கள் தேவநீதிக்குச் செலுத்தவேண்டிய கடன் தீருமென்பது நிச்சயம். அது எப்படியாகுமென்றால் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் செலுத்தவேண்டிய பரிகாரக்கடன் ஒரு கடன்தான். நாம் பிச்சை கொடுக்கும்போது, சேசுகிறிஸ்துநாதர் அதைத் தமக்கே கடனாகக் கொடுத்தாற்போல ஏற்றுக்கொள்ளு கிறாரென்கிறதினாலே, அவர் மறுபடி நமக்குத் தீர்க்க வேண்டிய ஒரு கைம்மாறாயிருக்கும்.
இப்போது சுவாமி நமக்குக் கொடுக்க வேண்டிய இந்தக் கடனை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கைம்மாறாக நாம் ஒப்புக்கொடுப்போமேயானால், அம்மாத்திரத்துக்கு அந்த ஆத்துமாக்களுடய கடன் குறையுமென்று சொல்லவேண்டும். முன் காண்பித்த வண்ணமே எந்தப் புண்ணியத்திலும் எந்தத் தர்மத்திலும் மூன்று பலன் உண்டாயிருக்கிறது. அதாவது பேறுபலனும், மன்றாட்டுப் பலனும், பரிகாரப் பலனுமாம். பேறுபலனை யாருக்கும் கொடுக்கக்கூடாதென்றிருந்தாலும், மன்றாட்டுப்பலனையும் பரிகாரப் பலனையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கொடுக்கலாமென்பது நிச்சயமாகையால், தர்மம் செய்கிறவர்கள் இவ்விரண்டு பலனை அந்த ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் வருமென்றும், அவர்களுடைய வேதனை எவ்வளவு அமருமென்றும், அவர்களுடைய வருத்தங்கள் எவ்வளவு குறையுமென்றும் நன்றாய் நினைத்துக் கொள்ள வேணும்.
இது இப்படியிருக்க, நீங்கள் தர்மம் செய்கிறபோதெல்லாம் அந்தத் தர்மம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படும்படியாகவும் உங்களுக்கு அதிகமாய்ப் பிரயோசனப்படும்படியாகவும், அந்தத் தர்மங்களை உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யவேண்டியது தான். இப்போது அந்தப் பிச்சை தர்மம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதிகமதிகமாய் உதவும்பொருட்டு அவைகளைத் தகுந்தவிதமாய்ச் செய்யவேணும்.
முதலாவது முன் காண்பித்தவண்ணமே பிச்சை தர்மமும் மற்ற நற்கிரியைகளும் பலித்து நினைத்த பலனை அடைவதற்கு, இஷ்டப்பிரசாதத்தோடு அவைகளைச் செய்திருக்க வேணும். மனுஷனானவன் சாவான பாவத்தோடு செய்த தர்மத்துக்குப் பலன் இல்லாததினாலே , அந்த தர்மம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவ மாட்டாது . எத்தனையோபேர்கள் இந்தப் பரம சத்தியத்தை அறியாமல் தாங்கள் செய்யும் தர்மத்துக்கு யாதொரு பலனைத் தாங்கள் அடையாமல் போவதும் தவிர குறித்த உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவாமல் போகிறது .அதனாலே நீங்கள் யாதோர் தருமத்தைச் செய்ய நினைக்கும்போது செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டாவது செய்ய வேணும் .
இரண்டாவது :பிச்சை தர்மம் செய்கிற போதெல்லாம் வீண் ஆடம்பரத்தையும் வீண் பெருமையையும் தேடாமல் , சர்வேசுரனைக் குறித்து மாத்திரமே செய்யவேணும். அதேதென்றால்: "நீங்கள் மனிதர் காணும் பொருட்டு அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நற்கிரியைகளைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அல்லாவிட்டால் பரமண்டலங்களிலேயிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் அதற்குரிய வெகுமதியை அடையமாட்டீர்கள்.
ஆகையால் தர்மஞ் செய்கிறபோது கள்ள ஞானிகள் மனிதரால் புகழப்படுவதற்குத் தேவாலயங்களிலும் விதிகளிலும் செய்கிறது போல், உமக்கு முன்னே எக்காளம் ஊதுவிக்க வேண்டாம். அவர்கள் தங்கள் பிரதி பலனை அடைந்தாயிற்றென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோவெனில் தர்மஞ் செய்கையில் உன் தர்மம் மறைவாயிருக்கத்தக்கதாக, உன் வலது கை செய்வதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது. அப்போது மறைவிலே காண்கிற உன் பிதா உனக்கு வெகுமதி அளிப்பார்" என்று சேசு கிறிஸ்து நாதர் தமது திரு வாய் மலர்ந்து அருளிச்செய்தார்.
மூன்றாவது : ஒவ்வொருவன் தன்னுடைய அந்தஸ்துக்கும் ஸ்திதிக்கும் தக்கபடி தர்மஞ் செய்ய வேண்டியதுதான். இவ்விஷயத்திலே பெரிய தோபியாசென்கிறவர் தமது மகனுக்கு சொல்லுகிற சுகிர்த புத்திமதிகளைக் கேளுங்கள் " என் மகனே! உன்னாலே கூடுமான மட்டும் தர்மம் செய்வாயாக உனக்கு ஆஸ்தி மெத்த இருந்தால் அதிகமாகக் கொடுப்பாயாக; கொஞ்சம் ஆஸ்தியிருந்தால் கொஞ்சமாவது கொடுப்பாய், ஆனால் இந்தக் கொஞ்சத்தையும் சந்தோஷமாய்க் கொடுப்பாயாக "என்றார்.
நீங்களும் கிறிஸ்துவர்களே !ஆத்துமாக்களைக் குறித்து தர்மம் கொடுக்கும்போது அப்படித்தான் செய்யவேணும். உங்களுக்கு சர்வேசுரன் திரண்ட ஆஸ்திகளை கொடுத்திருப்பாரானால் அதிகமாய்க் கொடுக்கக் கடவீர்கள். ஆஸ்தி கொஞ்ச மாத்திரம் இருக்குமேயானால் நல்ல மனதோடே கொஞ்சமாவது கொடுக்க வேண்டியது. ஏழைகள் நல்ல மனதோடே கொடுக்கிற கொஞ்ச தர்மமானது ஆஸ்தியுள்ளவர்கள் கொடுக்கிற பெருந்தொகையைப் பார்க்கிலும் சர்வேசுரன் சந்நிதியிலே அதிகப் பிரியப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை.
நாலாவது : பிச்சைக்காரருக்கும், இல்லாதவருக்கும் செய்யப்பட்ட தர்மமுமல்லாமல், உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துக் கோவிலுக்கு எண்ணெய், மெழுகுத்திரி, சாம்பிராணி , காணிக்கை முதலானவை கொடுக்கிறது திருச்சபையில் வழங்கின வழக்கமும் ஆத்துமாக்களுக்குப் பிரயோசனமுள்ள நற்கிரியையுமாம்.
ஐந்தாவது: அநேகம் கிறிஸ்துவர்கள் பெண்பிள்ளைகளாவது ஆண்பிள்ளைகளாவது சாகுமுன்னே மரண சாசனத்தைச் செய்தானாலும், வாய்மொழியாய்த் தங்களுடைய சித்தத்தைக் காண்பித்தென்கிலும், தங்களுக்காக சில பூசைகளைப் பண்ணுவிக்கவும் அல்லது சில தர்மங்களைச் செய்யவும் தங்கள் சொந்த ஆஸ்திகளிலிருந்து இன்ன சொத்தை அல்லது இன்ன உடமையை அல்லது இன்ன காரியத்தை செய்யச் சொல்லுவார்களாம். மரித்தவர்களுடைய இந்த கருத்துகளை மகா எச்சரிக்கையோடு நிறைவேற்றவேணுமென்று தேவ கட்டளை உண்டு .
திருச்சபைக் கற்பனை உண்டு . இராஜாங்கத்தாருடைய சட்டமுமுண்டு, சர்வ நியாயமுமுண்டு. இந்த கருத்துக்களை நிறைவேற்றாதவர்கள் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பொருந்தாத பாவங்களைக் கட்டிக்கொள்ளுகிறதுமன்றியே, தங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் மட்டில் மகா கொடுமையைக் காண்பிக்கிறார்கள் என்பதாகும். அதெப்படியெனில், அப்படிச் செய்கிறவர்கள் மேற்சொன்ன பூசைகளினாலும் தர்மங்களினாலும் அந்த ஆத்துமாக்களுக்கு வரவேண்டிய உதவி சகாயத்தை நிறுத்துகிறார்களல்லவோ?
மீண்டும் இப்பேர்ப்பட்டவர்கள் இறந்தவர்களுடைய கருத்துக்கு விரோதமாய் பூசை தர்மங்களைச் செய்யாமற்போவதால் தங்களுக்குப் பிரயோசனமிருக்குமென்று நினைக்கவேண்டாம். அதனாலே அவர்களுக்கு பொல்லாப்பு, குறைவு, துன்பம் முதலான அநேக ஆக்கினைகள் வருகிறதென்று நிரூபிக்க பல திருஷ்டாந்தங்களும் சரித்திரங்களும் இருக்கின்றன. இது இப்படியிருக்க , நீங்கள் இறந்தவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா ! தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு எப்போதும் இரங்குவீரென்கிறதினாலே, எங்களுடைய தாழ்மையான மன்றாட்டுகளைக் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். உம்முடைய ஊழியரான எங்களுடைய பந்துஜனங்கள் உயிரோடிருக்கும்போது உம்மை விசுவசித்து நம்பி மரித்தார்களென்று நினைத்து அவர்கள் கட்டிக் கொண்ட குற்றமெல்லாம் பொறுத்து உமது பரம இராச்சியத்தில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
இருபத்து மூன்றாம் தேதி செய்ய வேண்டிய நற்கிரியையாவது
ஆத்துமாக்களைக் குறித்து பிச்சை கொடுக்கிறது
புதுமை
ஜெர்மானிய தேசத்தில் உள்ள வூல்தான்ற மடத்துக்கு ராபான்மோருஸ் என்கிறவர் அதிசிரேஷ்டராய் இருந்தார். அதற்கப்பால் மாயாஞ்சி பட்டணத்துக்கு அதிமேற்றிராணியார் ஆனார் . அவர் மடத்துக்கு சிரேஷ்டராய் இருக்கும்போது பிச்சைக்காரருக்கு ஏராளமாய் தர்மம் செய்ய வேணுமென்று மடத்து விசாரணைக் காரியக்காரனுக்கு கட்டளையிட்டிருந்தார். ஏதேலாரென்ற இந்த விசாரணைக்காரன் கஞ்சத்தனத்தினாலே கொடுக்க வேண்டிய தர்மங்களைக் குறைப்பான் .
மேலும், சிரேஷ்டரானவர் மடத்துச் சந்நியாசிகளில் யாதாமொருவர் சாகிறபோது முப்பது நாளளவும் செத்துப் போனவர் வழக்கமாய்ச் சாப்பிடும் சாப்பாடுகளைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்க கட்டளையிட்டிருந்தார். அதையும் விசாரணைக்காரன் நிறுத்துவான். 830-ம் ஆண்டில் ஒரு சந்நியாசியார் இறந்து போகவே சிரேஷ்டரானவர் அவருடைய ஆத்துமத்தைக் குறித்து வழக்கத்தின்படியே முப்பதுநாள் அவருடைய சாப்பாட்டைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்கவேணுமென்று கண்டிப்பாய் விசாரனைக்காரனுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படிச் சிரேஷ்டர் கற்பித்திருந்தாலும் கஞ்சத்தனமுள்ள காரியஸ்தன் ஒன்றும் செய்யவில்லை. இப்படி அவன் பிச்சைக்காரருக்குக் கொடுக்கவேண்டிய தர்மத்தையும், அந்த தர்மத்தால் ஆத்துமாக்களுக்கு வரவேண்டிய சகாயத்தையும் அநியாயமாய் நிறுத்திக்கொண்டிருந்தான்.
ஒரு இராத்திரி இந்த விசாரிப்புக்காரன் சந்நியாசிகள் கூடுகிற ஒரு பெரிய அறையிலே ஒரு லாந்தர் வெளிச்சத்தைக் கையிலே பிடித்துப்போகையில் அந்த அறையிலேயே புதிதாய் இறந்த சந்நியாசியாரும் அவருக்கு முன்னமே இறந்த வேறு சில சந்நியாசிமாரும் கூடி உட்கார்ந்து ஆலோசனை பண்ணிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். அதைக் கண்டு பயந்து வெருண்டு தலைமயிர் சிலுசிலுத்து யாதொன்றையும் பேசக்கூடாமல் நிற்கும்போது காணப்பட்ட சந்நியாசிகளில் சிலர் அவனருகே வந்து அவனுடைய மேல்வஸ்திரங்களைக் கழற்றி அவனைச் சாட்டைகளால் அகோரமாய் அடித்து, " கெட்டவனே, உன்னுடைய கஞ்சத்தனத்துக்கு இதுவே பரிசு. மூன்று நாள் கழித்து நீயும் செத்துப்போய் இதுக்கதிகமாய் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவாய். எங்களுக்கு வரவேண்டிய உதவி சகாயங்களை உன்னுடைய கஞ்சத்தனத்தினாலே நிறுத்தினாயே, உன்னுடைய ஆத்துமத்துக்கும் அப்படியே செய்யப்படும்" என்று சொல்லி காணப்பட்டவர்கள் மறைந்துபோனார்கள். விசாரணைக்காரனோவென்றால் பட்ட அடியினாலே கனகாயப்பட்டு, சர்வாங்கமும் நொந்து, மூர்ச்சையாய் விழுந்து கிடந்தான்
நடுச்சாமத்திலே , மற்ற சந்நியாசிமார்கள் தேவ சங்கீதங்கள் பாட அந்த அறையிலே தான் கூடுகிறபோது விசாரிப்புக்காரன் பிரேதம் போலக் கிடக்கிறது கண்டு மிகவும் அதிசயப்பட்டார்கள் . கொஞ்ச நேரத்துக்குப் பிற்பாடு அவனுக்கு புத்தி தெளிந்து பேச்சு திரும்பி வந்து சொன்னதாவது :" என் சரீர வேதனைக்கு பரிகாரம் வேண்டாம் என் ஆத்துமத்துக்குத்தான் பரிகாரம் வேணும். அதிசிரேஷ்டரைச் சீக்கிரமாய் வரப்பண்ணுங்கள் " என்றான். அதிசிரேஷ்டர் வந்தவுடனே காரியஸ்தனானவன் தான் கஞ்சத்தனத்தினாலே செய்த பாவம் எவ்வளவென்றும், தான் அடிப்பட்டது எப்படியென்றும், தான் மூன்று நாளுக்குள்ளாகச் சாகப்போகிறதையும் விவரித்த பிற்பாடு தனக்குப் பாவசங்கீர்த்தனமும், அவஸ்தைப்பூசுதலும் அவஸ்தை நன்மையும் தரவேணுமென்று கேட்டான். இவையெல்லாம் பெற்றபின்பு மூன்றாம் நாள் மகா பக்தி மனஸ்தாபத்தோடு இறந்தான் .
இவனுடைய ஆத்துமத்தைக் குறித்து மடத்திலே பூசை நடந்ததுமல்லாமல் வழக்கத்தின்படியே முப்பதுநாளும் இவனுடைய சாப்பாட்டைப் பிச்சைக்காரருக்குக் கொடுத்தார்கள். முப்பதாம் நாளில் செத்த காரியஸ்தனானவன் அவலகடினமான ரூபத்தோடு வெகு வருத்தப்படுகிற பிரகாரமாய் அதிசிரேஷ்டருக்குத் தரிசனையாகிச் சொன்னதாவது "என் தகப்பனாரே எனக்காக மடத்தில் செய்யப்பட்ட ஜெபதருமங்களினாலே எனக்குக் கொஞ்சம் ஆறுதல் வந்தது மெய்தான். ஆனால் என் கஞ்சத்தனத்தினாலே அந்த உத்தரிக்கிறஸ்தலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆத்துமாக்கள் யாவும் மோட்சத்துக்குப் போனபிற்பாடு மாத்திரமே நான் போவேன். அதற்குள்ளாக என்னைச் குறித்துச் செய்யப்படும் ஜெப தானதர்மம் தேவநீதியின் படியே அவர்களுக்கு உதவுகிறதேயொழிய எனக்கு
உதவுகிறதில்லை. எனக்கு அவ்வளவு பட்சங்காண்பித்த தகப்பனாரே , என்னைக் கைவிடாதேயும், அதிகமதிகமாய் என்னைக்குறித்துத் தர்மம் செய்யவேணும். இப்படிச் செய்வீ ரேயானால் என்னாலே நிறுத்தப்பட்ட ஆத்துமாக்களும் நானும் மீட்கப்படுவோம் " என்று சொல்லி மறைந்தான்.
அப்படியே சிரேஷ்டரானவர் மறுபடியும் முப்பது நாள் ஏராளமாய்த் தர்மம் கொடுக்கப்பண்ணினார். அப்போது காரியஸ்தனுடைய ஆத்துமம் அத்தியந்த சந்தோஷத்தோடும் மகா பிரதாபத்தோடும் சிரேஷ்டருக்குக் காணப்பட்டு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணி, " உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவோம்" என்று சொல்லி மோட்சத்துக்கு எழுந்தருளிப்போனான்.
கிறிஸ்துவர்களே ! இந்த சுகிர்த புதுமையை ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு அதிக ஞானப் பிரயோசனம் வருமே. முதலாவது: ஆத்துமாக்களைக் குறித்து செய்யவேண்டியதைச் செய்யாமலிருக்கிறது பெரிய பாவமென்று காணப்படுவதுமல்லாமல், அது ஆத்துமாக்களுக்கு பெரிய கொடுமையுமாயிருக்கிறது. இரண்டாவது ஆத்துமாக்களின் பேரில் இரக்கமில்லாதவன் தானும் இரக்கமடையாமல் தன் கடனெல்லாம் தீருமளவும் உத்தரிப்பான். மூன்றாவது: மேற்சொன்ன மடத்துச் சந்நியாசிமார்கள் ஆத்துமாக்களுக்கு ஆறுதலாக ஏராளமாய்த் தர்மம் செய்ததுபோல, நீங்களும் கஞ்சத்தனமின்றி உங்களாலே கூடியமட்டும் தர்மம் கொடுக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபத்துநான்காம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்
தியானம்
சர்வவல்லபமுள்ள சர்வேசுரனுடைய நீதியின்படியே எந்தப்பாவமும் பரிகாரமாக வேணும் . பாவத்துக்குச் செய்யத்தகும் பரிகாரம் இருவகை உண்டு. அதாவது: தவத்தினால் செய்யப்பட்ட பரிகாரமும், ஆக்கினையால் செய்யப்பட்ட பரிகாரமும் ஆகிய இவ்விருவகையாம். அதெப்படியெனில், மனுஷனானவன் மனந்திரும்பிதான் செய்த பாவத்துக்குத் தவத்தைப் பண்ணினால், அந்தத் தவமே அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாகும். தன்னுடைய பாவத்துக்குத் தவம் பண்ணாத பாவியானவன் நரகத்திலேயாவது, உத்தரிக்கிற ஸ்தலத்திலேயாவது ஆக்கினைப்பட தீர்வையிடப்படுவான்.
இந்த ஆக்கினையே அவன் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகும். தவமும் ஆக்கினையும் இணையாயிருக்கிறதென்று எண்ணத்தகும். அதெப்படியென்றால் ஆக்கினையாவும் வருத்தமுள்ளதாம் இருக்கிறது போலவே, தவக்கிரியையும் வருத்தமாயிருக்கும். இந்த வருத்தத்தினாலேதான் பாவத்துக்குப் பரிகாரம் உண்டாகிறதென்று சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். அதனால் பாவியானவன் தனக்கு வரப்போகும் ஆக்கினையைத் தவத்தினால் விலக்குவானென்று அநேகமுறை வேத புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறது.
அப்படியே முற்காலத்தில் மகாப்பாவிகளாயிருந்த நினிவென்ற பட்டணத்தார் தங்களுடைய பட்டணத்துக்கு வரவிருந்த சர்வ சங்காரத்தைத் தாங்கள் செய்த தவத்தினால் விலக்கினார்கள். அதனால் தான் நமது ஆண்டவரான சேசுக்கிறிஸ்து நாதர் கூடியிருந்த ஜனங்களை நோக்கி நீங்கள் செய்த பாவங்களுக்கு தபசு செய்யாவிட்டால் எல்லோரும் கெட்டுப்போவீர்கள் என்பார். உயிரோடிருக்கும்போதே தவம் செய்யவேணுமே தவிர செத்தபிற்பாடு தவத்துக்குக் காலமில்லை. செத்தபிறகு ஆக்கினைமாத்திரமிருக்கும்.
தவத்தால் பாவத்துக்குப் பரிகாரம் பண்ணுவது எளிது, ஆக்கினையினால் செய்யும் பரிகாரம் மிகவும் வருத்தக் கூடியதாகும். இதிப்படியிருக்கிறபடியினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ஆக்கினைப்பட்டுத்தான் தங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணுவர். ஆயினும் உயிரோடிருக்கிற மனுஷர் தவக்கிரியைகளைச் செய்து, அத்தவத்தால் உண்டாகும் பரிகாரத்தை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு மனம் பொருந்தி ஒப்புக்கொடுத்தால், அந்த பரிகாரம் அந்த ஆத்துமாக்களுக்கு உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் படுகிற தண்டனைகளை நம்முடைய தவத்தால் குறைக்கலாம். முடியப்பண்ணலாம். ஆகையினாலே உத்தரிக்கற
ஆத்துமாக்களின்பேரில் பக்தியுள்ளவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக நானாவித தவக்கிரியைகளைப் பண்ணுவார்கள்.
கிறிஸ்துவர்களே! உங்களுடையவர்களின்ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து சீக்கிரமாய் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகவேணுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்காகத் தவம் பண்ணுங்கள். தவமென்கிற பேரைக் கேட்டவுடனே அநேகம்பேர்கள் அது பெரிய வருத்தமென்றும், பெரிய ரிஷிகளுக்கும் சந்நியாசிமார்களுக்கும் மாத்திரமே செல்லுங்காரியமென்றும் பயந்து பின்வாங்குகிறார்கள். தவத்தைப்பற்றி உண்டாகும் இந்த அச்சமானது பசாசினாலே வருகிறதொழிய மற்றப்படியல்ல.
அதெப்படியென்றால், நல்ல மனதும் நல்ல கருத்தும் இருக்குமேயாகில் வெகு எளிதாய் தவம் பண்ணலாம் . அதாவது:
தவக்கிரியை பலவுண்டு. இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயாக ஒப்புக்கொடுக்கலாமென்பது நிச்சயம் .
முதலாவது பசாசினுடைய சோதனைகளை விலக்கி, பாவம் செய்யாதபடிக்கு படுகிற பிரயாசமும், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்கத்தக்கதாகப் படுகிற வருத்தமும் நல்ல தவக் கிரியைக்கு இணையாயிருக்கிறபடியினாலே இவையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கலாம்.
இரண்டாவது திருச்சபை கற்பிக்கிற கடன் சுத்தபோசனமும் கடனொருசந்தியும் இவை முதலான கடமையான காரியங்கள் மெய்யான தவக்கிரியைகளாயிருப்பதால், இவை யாவற்றையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களுக்கு உதவுமென்பதற்குச் சந்தேகமில்லை.
மூன்றாவது இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிற மனுஷனுக்கு இடைவிடாமல் பல துன்பங்களும் கஷ்டங்களும் வருகிறதென்பது எல்லோருக்குந் தெரிந்த காரியமல்லவா ?சரீரத்தை உபாதிக்கும் வியாதிகளுக்கும் நோக்காடுகளுக்கும் கணக்கில்லாததினாலே இந்தச் சரீரம் எப்போதும் நொந்து வருத்தப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை. மனசிலே வருகிற அச்சம் பயமும் கஷ்ட துயரமும் கிலேசு கவலையும் மனுஷனை இடைவிடாமல் வருத்தப்படுத்தும் புத்தியிலே உண்டாகும் இருளந்தகாரமும், அறியாமை சந்தேகமும் தங்களுக்குள்ளே ஒவ்வாத யோசனைகளும் எத்தனையென்று சொல்லுவாரில்லை.
ஆத்துமத்தில் கிளம்பும் பற்பல தந்திரங்களையும், தகாத விசாரங்களையும், ஏற்காத சோதனைகளையும் அறியாதவருண்டோ ? புறத்தி மனுவரால் வருகிற விரோதங்களும் விக்கினங்களும் பிராது
வியாச்சியங்களும் போர்ச்சண்டைகளும் அவதூறுகளும் ஆவலாதிகளும் துரோகங்களும் மனுஷனை மிகவும் காற்று பனி குளிர் மழையினாலும், பஞ்சம் முதலான பொல்லாப்புகளினாலும் யாவருக்கும் வருகிற துன்பம் எத்தனையென்று சொல்லி முடியாது. இவை யெல்லாம் மகா வருத்தமுள்ளதாகையால் இவைகளைப் பொறுமையோடு சகித்தால், உத்தம தவக்கிரியைகளைப்போலே மனுஷனுடைய பாவப் பரிகாரத்துக்கு உதவும். இவைகளையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் செய்யவேண்டிய பரிகாரத்துக்கு ஒப்புக்கொடுத்தால், அதனாலே அவர்களுடைய உத்தரிப்பு குறைவதுமன்றியே வெகு சீக்கிரமாய் முடியுமென்பது பெரிய நம்பிக்கைதான்.
ஆயினும் எத்தனையோ பேர் இவை எல்லாவற்றையும் பொறுமையின்றி, நல்ல கருத்தின்றி, முறையிட்டு, முறுமுறுத்து அநுபவித்துக்கொண்டு வருவதால் , யாதொரு பிரயோசனமும் பலனும் அடையாமல் போகிறார்கள் . உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதய் சகாயம் பண்ணுவதற்கு ஏற்ற அவ்வளவு நல்ல உபாயத்தை இத்தகையோர் விட்டு விடுகிறபடியினாலே ,அந்த ஆத்துமாக்களுக்கு யாதொரு ஆறுதலும் வருகிறதில்லை.தம்பிமார்களே ! நீங்கள் அப்படி அசட்டையாய் இருக்க வேண்டாம் . உங்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் பலனை அடைய இதுவே வருத்தமில்லாத வழியென்றறிந்து பொறுமையோடும் தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிதலோடும் இவையெல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து வருவீர்களாக.
நாலாவது ஒவ்வொருவன் மனம்பொருந்திச் செய்யும் நற்கிரியையுமுண்டு. அதாவது ஒருசந்தி சுத்தபோதனமும் முள்ளொட்டியாணம் கசையும், விழித்து ஜெபித்தலும் இதுமுதலான வருத்தமுள்ள முயற்சிகளுமே. இப்பேர்ப்பட்ட தவக்கிரியைகளைத் தபோதனரும், குருக்களும் சந்நியாசிகள்,கன்னியாஸ்திரிகளும் மாத்திரமே அநுசரித்துக்கொண்டு வருகிறார்களென்று நினைக்கவேண்டாம். இவ்வுலகத்துப் பல தொழிலைச் செய்கிறவர்களும், பல உத்தியோகங்களைச் செய்கிறவர்களும், உயர்ந்த கோத்திரத்திலே பிறந்தவர்களும் சேவகர் படைத்தலைவர்களும், பிரபுக்கள் இராஜாக்களும் மெல்லிய பெண்பிள்ளைகள் அநேகரும் மேற்சொன்ன தவக்கிரியைகளை அநுசரித்துக் கொண்டு வருகிறார்களென்பது நிச்சயம்.
இந்த தவக்கிரியைகளினால் அநேக ஞானப்பிரயோசனம் வருகிறதென்பதற்குச் சந்தேகமில்லை. இவைகளால் பசாசினுடைய சோதனைகளை எளிதாய் ஜெயிக்கலாம், தன் துர்க்குணங்களை அடக்கிக் கொள்ளலாம், தேவ வரங்களை அடையலாம், தன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யலாம். மோட்சத்திலே அதிக பரிசு பெறலாம் .
மீண்டும் இத்தகைய தவக்கிரியைகளை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அந்த ஆத்துமா களுக்கு எவ்வளவு உதவி சகாயம் உண்டாகுமென்று சொல்லத்தகும் தன்மையல்ல.
கிறிஸ்துவர்களே! இவ்வளவு தவக்கிரியை எல்லாம் அநுசரிக்கிறது உங்களால் கூடாத காரியமென்பது மெய்தான். ஆனாலும் இவைகளில் சிலதுகளையாவது தெரிந்து செய்தால் அதனாலே சாவீர்களென்று நினைக்காதேயுங்கள். எத்தனையோ பெரிய தபோதனர் கடினமான தவமெல்லாம் செய்து, எண்பதாம், தொண்ணுறாம் நூறாம் நூற்றிருபதாம் வயதிலே தான் செத்தார்கள். சிறு பிள்ளைகளும் மெல்லிய பெண்பிள்ளைகளும் அநுசரித்துக் கொண்டுவருகிறதைப் பெரிய ஆண் பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் அநுசரியாதிருப்போமோ என்று அர்ச் அகுஸ்தீன் சொல்லியிருக்கிறார். ஆகையால் தம்பிமார்களே பிரயாசமின்றி வருத்தமின்றி, ஒறுத்தலின்றி. மோட்சத்துக்குப் போவாரில்லையென்று அறிந்து எப்படியாகிலும் தபசு செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரா! தேவரீருடைய பிரதாபமுள்ள சமுகத்திலே நாங்கள் பொழியும் தாழ்மையுள்ள ஜெபங்களைக் கிருபாகடாக்ஷமாய்ப் பார்த்து அழுகிறவர்களுக்குத் தேற்றத்தையும் வருத்தப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும், கஸ்திப்படுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும், சாகிறவர்களுக்கு நன் மரணத்தையும் ,உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நித்திய இளைப்பாற்றியையும் கட்டளையிட வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்.
இருபத்து நான்காம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு தவக்கிரியையைச் செய்கிறது.
புதுமை
ஹங்கேரிய இராஜாவின் மகளான அர்ச் எலிசபெத்தம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் வெகு பக்தியாயிருந்ததுமல்லாமல் மரித்தவர்களுடைய பிரேதங்களை நல்லடக்கம் பண்ணுவிப்பாள் . இராஜாமகளாயிருந்தாலும் எளியவர்களுடைய பிரேதங்களுக்கு அவளே அநேகம் முறை செய்யவேண்டியவைகளைத் தம்முடைய கையினாலேயேச் செய்வாள்.
அவர்களுக்கு மரியாதை காண்பிக்கத்தக்கதாக தானும் கல்லறைக்குப் போவாள். அவர்களுடைய ஆத்துமத்துக்காக மகாப்பக்தியோடு வேண்டுவாள். ஹங்கேரிய ராணியான அவள் தாயானவள் இறந்தபிற்பாடு அர்ச் எலிசபெத்தம்மாள் அவளுடைய ஆத்துமத்தைக் குறித்து இரவும் பகலும் வேண்டிக்கொள்ளுவதுமல்லாமல் ஏராளமாய்ப் பிச்சை தர்மங் கொடுத்து, தினந்தோறும் கடின தவக்கிரியைகளை செய்து வந்தாள்.
அவள் இதெல்லாவற்றையும் செய்தாலும் வெகு நாளைக்குப் பிற்பாடு அவளுடைய தாயானவள் வெகு துயர முகத்தோடும் பொறுக்கப்படாத வேதனைப்படுகிற பிரகாரத்தோடும் அவளுக்குத் தரிசனையாகி, அவளண்டையில் முழந்தாளிட்டுப் பெருமூச்சுவிட்டுச் சொன்னதாவது " என் பிரியமுள்ள மகளே உன்னுடைய தாய் நான்தானே. நான் அநுபவிக்கிற வேதனை சகிக்கப்படாத வேதனையாகையால் என் பேரில் இரக்கமாயிரும். எனக்காக இடைவிடாமல் தேவ கிருபையை நீ மன்றாடவேணுமென்று உன்னிடத்தில் கேட்கவந்தேன். உன்னைப் பெற்று வளர்க்க நான் பட்ட பிரயாசங்களை நினைத்து, அகோரமாய் என்னைச் சுட்டெரிக்கும் இந்த நெருப்பிலிருந்து என்னை மீட்கப் பிரயாசைப்படு என் மகளே உன்னண்டையில் சாஷ்டாங்கமாய் விழுந்திருக்கிற உன்னுடைய தாயாகிய என் பேரில் இரக்கமாயிரும் " என்று சொல்லி மறைந்து போனாள்.
அர்ச் எலிசபெத்தம்மாளோவென்றால் மனம் இளகி வெகுவாய்த் துக்கித்து முன்னிலும் அதிக ஜெபமும் அதிக தர்மமும் அதிக தவக்கிரியையும் செய்து கொண்டு வந்தாள். உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் அகோரமாய் வருத்தப்படுகிற தமது தாயாரின் சாயல் தன்னண்டையிலே எப்போதும் இருக்கிறாற்போல கண்டு, யாதொரு இளைப்பாற்றியுமின்றி நித்திரையுமின்றி இரவும் பகலும் செபங்களைப் பொழிந்து வெகு தவம் பண்ணிக் கொண்டிருந்தாள் . அப்படியே அநேக நாள் செய்த பிற்பாடு தாயானவள் அவளுக்குக் காணப்பட்டு , தன் வேதனை முடிந்து ,தான் மோட்சத்துக்குப் போகிறதாக அவளுக்கு நன்றியறிதலுடன் அறிவித்து மகா சந்தோஷப் பிரதாத்தோடு பேரின்ப விட்டுக்குப் போனாள்.
கிறிஸ்துவர்களே! இந்தப் புதுமையை நினைத்து நீங்களும் இறந்துபோன உங்களுடைய தாய் தகப்பனைக் குறித்து ஜெபதபம் தருமம் முதலான நற்கிரியைகளை இடைவிடாமல் ஒப்புக்கொடுக்கவேணுமென்று அறியக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்
தியானம்
சர்வவல்லபமுள்ள சர்வேசுரனுடைய நீதியின்படியே எந்தப்பாவமும் பரிகாரமாக வேணும் . பாவத்துக்குச் செய்யத்தகும் பரிகாரம் இருவகை உண்டு. அதாவது: தவத்தினால் செய்யப்பட்ட பரிகாரமும், ஆக்கினையால் செய்யப்பட்ட பரிகாரமும் ஆகிய இவ்விருவகையாம். அதெப்படியெனில், மனுஷனானவன் மனந்திரும்பிதான் செய்த பாவத்துக்குத் தவத்தைப் பண்ணினால், அந்தத் தவமே அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாகும். தன்னுடைய பாவத்துக்குத் தவம் பண்ணாத பாவியானவன் நரகத்திலேயாவது, உத்தரிக்கிற ஸ்தலத்திலேயாவது ஆக்கினைப்பட தீர்வையிடப்படுவான்.
இந்த ஆக்கினையே அவன் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகும். தவமும் ஆக்கினையும் இணையாயிருக்கிறதென்று எண்ணத்தகும். அதெப்படியென்றால் ஆக்கினையாவும் வருத்தமுள்ளதாம் இருக்கிறது போலவே, தவக்கிரியையும் வருத்தமாயிருக்கும். இந்த வருத்தத்தினாலேதான் பாவத்துக்குப் பரிகாரம் உண்டாகிறதென்று சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். அதனால் பாவியானவன் தனக்கு வரப்போகும் ஆக்கினையைத் தவத்தினால் விலக்குவானென்று அநேகமுறை வேத புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறது.
அப்படியே முற்காலத்தில் மகாப்பாவிகளாயிருந்த நினிவென்ற பட்டணத்தார் தங்களுடைய பட்டணத்துக்கு வரவிருந்த சர்வ சங்காரத்தைத் தாங்கள் செய்த தவத்தினால் விலக்கினார்கள். அதனால் தான் நமது ஆண்டவரான சேசுக்கிறிஸ்து நாதர் கூடியிருந்த ஜனங்களை நோக்கி நீங்கள் செய்த பாவங்களுக்கு தபசு செய்யாவிட்டால் எல்லோரும் கெட்டுப்போவீர்கள் என்பார். உயிரோடிருக்கும்போதே தவம் செய்யவேணுமே தவிர செத்தபிற்பாடு தவத்துக்குக் காலமில்லை. செத்தபிறகு ஆக்கினைமாத்திரமிருக்கும்.
தவத்தால் பாவத்துக்குப் பரிகாரம் பண்ணுவது எளிது, ஆக்கினையினால் செய்யும் பரிகாரம் மிகவும் வருத்தக் கூடியதாகும். இதிப்படியிருக்கிறபடியினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ஆக்கினைப்பட்டுத்தான் தங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணுவர். ஆயினும் உயிரோடிருக்கிற மனுஷர் தவக்கிரியைகளைச் செய்து, அத்தவத்தால் உண்டாகும் பரிகாரத்தை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு மனம் பொருந்தி ஒப்புக்கொடுத்தால், அந்த பரிகாரம் அந்த ஆத்துமாக்களுக்கு உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் படுகிற தண்டனைகளை நம்முடைய தவத்தால் குறைக்கலாம். முடியப்பண்ணலாம். ஆகையினாலே உத்தரிக்கற
ஆத்துமாக்களின்பேரில் பக்தியுள்ளவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக நானாவித தவக்கிரியைகளைப் பண்ணுவார்கள்.
கிறிஸ்துவர்களே! உங்களுடையவர்களின்ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து சீக்கிரமாய் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகவேணுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்காகத் தவம் பண்ணுங்கள். தவமென்கிற பேரைக் கேட்டவுடனே அநேகம்பேர்கள் அது பெரிய வருத்தமென்றும், பெரிய ரிஷிகளுக்கும் சந்நியாசிமார்களுக்கும் மாத்திரமே செல்லுங்காரியமென்றும் பயந்து பின்வாங்குகிறார்கள். தவத்தைப்பற்றி உண்டாகும் இந்த அச்சமானது பசாசினாலே வருகிறதொழிய மற்றப்படியல்ல.
அதெப்படியென்றால், நல்ல மனதும் நல்ல கருத்தும் இருக்குமேயாகில் வெகு எளிதாய் தவம் பண்ணலாம் . அதாவது:
தவக்கிரியை பலவுண்டு. இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயாக ஒப்புக்கொடுக்கலாமென்பது நிச்சயம் .
முதலாவது பசாசினுடைய சோதனைகளை விலக்கி, பாவம் செய்யாதபடிக்கு படுகிற பிரயாசமும், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்கத்தக்கதாகப் படுகிற வருத்தமும் நல்ல தவக் கிரியைக்கு இணையாயிருக்கிறபடியினாலே இவையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கலாம்.
இரண்டாவது திருச்சபை கற்பிக்கிற கடன் சுத்தபோசனமும் கடனொருசந்தியும் இவை முதலான கடமையான காரியங்கள் மெய்யான தவக்கிரியைகளாயிருப்பதால், இவை யாவற்றையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களுக்கு உதவுமென்பதற்குச் சந்தேகமில்லை.
மூன்றாவது இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிற மனுஷனுக்கு இடைவிடாமல் பல துன்பங்களும் கஷ்டங்களும் வருகிறதென்பது எல்லோருக்குந் தெரிந்த காரியமல்லவா ?சரீரத்தை உபாதிக்கும் வியாதிகளுக்கும் நோக்காடுகளுக்கும் கணக்கில்லாததினாலே இந்தச் சரீரம் எப்போதும் நொந்து வருத்தப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை. மனசிலே வருகிற அச்சம் பயமும் கஷ்ட துயரமும் கிலேசு கவலையும் மனுஷனை இடைவிடாமல் வருத்தப்படுத்தும் புத்தியிலே உண்டாகும் இருளந்தகாரமும், அறியாமை சந்தேகமும் தங்களுக்குள்ளே ஒவ்வாத யோசனைகளும் எத்தனையென்று சொல்லுவாரில்லை.
ஆத்துமத்தில் கிளம்பும் பற்பல தந்திரங்களையும், தகாத விசாரங்களையும், ஏற்காத சோதனைகளையும் அறியாதவருண்டோ ? புறத்தி மனுவரால் வருகிற விரோதங்களும் விக்கினங்களும் பிராது
வியாச்சியங்களும் போர்ச்சண்டைகளும் அவதூறுகளும் ஆவலாதிகளும் துரோகங்களும் மனுஷனை மிகவும் காற்று பனி குளிர் மழையினாலும், பஞ்சம் முதலான பொல்லாப்புகளினாலும் யாவருக்கும் வருகிற துன்பம் எத்தனையென்று சொல்லி முடியாது. இவை யெல்லாம் மகா வருத்தமுள்ளதாகையால் இவைகளைப் பொறுமையோடு சகித்தால், உத்தம தவக்கிரியைகளைப்போலே மனுஷனுடைய பாவப் பரிகாரத்துக்கு உதவும். இவைகளையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் செய்யவேண்டிய பரிகாரத்துக்கு ஒப்புக்கொடுத்தால், அதனாலே அவர்களுடைய உத்தரிப்பு குறைவதுமன்றியே வெகு சீக்கிரமாய் முடியுமென்பது பெரிய நம்பிக்கைதான்.
ஆயினும் எத்தனையோ பேர் இவை எல்லாவற்றையும் பொறுமையின்றி, நல்ல கருத்தின்றி, முறையிட்டு, முறுமுறுத்து அநுபவித்துக்கொண்டு வருவதால் , யாதொரு பிரயோசனமும் பலனும் அடையாமல் போகிறார்கள் . உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதய் சகாயம் பண்ணுவதற்கு ஏற்ற அவ்வளவு நல்ல உபாயத்தை இத்தகையோர் விட்டு விடுகிறபடியினாலே ,அந்த ஆத்துமாக்களுக்கு யாதொரு ஆறுதலும் வருகிறதில்லை.தம்பிமார்களே ! நீங்கள் அப்படி அசட்டையாய் இருக்க வேண்டாம் . உங்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் பலனை அடைய இதுவே வருத்தமில்லாத வழியென்றறிந்து பொறுமையோடும் தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிதலோடும் இவையெல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து வருவீர்களாக.
நாலாவது ஒவ்வொருவன் மனம்பொருந்திச் செய்யும் நற்கிரியையுமுண்டு. அதாவது ஒருசந்தி சுத்தபோதனமும் முள்ளொட்டியாணம் கசையும், விழித்து ஜெபித்தலும் இதுமுதலான வருத்தமுள்ள முயற்சிகளுமே. இப்பேர்ப்பட்ட தவக்கிரியைகளைத் தபோதனரும், குருக்களும் சந்நியாசிகள்,கன்னியாஸ்திரிகளும் மாத்திரமே அநுசரித்துக்கொண்டு வருகிறார்களென்று நினைக்கவேண்டாம். இவ்வுலகத்துப் பல தொழிலைச் செய்கிறவர்களும், பல உத்தியோகங்களைச் செய்கிறவர்களும், உயர்ந்த கோத்திரத்திலே பிறந்தவர்களும் சேவகர் படைத்தலைவர்களும், பிரபுக்கள் இராஜாக்களும் மெல்லிய பெண்பிள்ளைகள் அநேகரும் மேற்சொன்ன தவக்கிரியைகளை அநுசரித்துக் கொண்டு வருகிறார்களென்பது நிச்சயம்.
இந்த தவக்கிரியைகளினால் அநேக ஞானப்பிரயோசனம் வருகிறதென்பதற்குச் சந்தேகமில்லை. இவைகளால் பசாசினுடைய சோதனைகளை எளிதாய் ஜெயிக்கலாம், தன் துர்க்குணங்களை அடக்கிக் கொள்ளலாம், தேவ வரங்களை அடையலாம், தன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யலாம். மோட்சத்திலே அதிக பரிசு பெறலாம் .
மீண்டும் இத்தகைய தவக்கிரியைகளை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அந்த ஆத்துமா களுக்கு எவ்வளவு உதவி சகாயம் உண்டாகுமென்று சொல்லத்தகும் தன்மையல்ல.
கிறிஸ்துவர்களே! இவ்வளவு தவக்கிரியை எல்லாம் அநுசரிக்கிறது உங்களால் கூடாத காரியமென்பது மெய்தான். ஆனாலும் இவைகளில் சிலதுகளையாவது தெரிந்து செய்தால் அதனாலே சாவீர்களென்று நினைக்காதேயுங்கள். எத்தனையோ பெரிய தபோதனர் கடினமான தவமெல்லாம் செய்து, எண்பதாம், தொண்ணுறாம் நூறாம் நூற்றிருபதாம் வயதிலே தான் செத்தார்கள். சிறு பிள்ளைகளும் மெல்லிய பெண்பிள்ளைகளும் அநுசரித்துக் கொண்டுவருகிறதைப் பெரிய ஆண் பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் அநுசரியாதிருப்போமோ என்று அர்ச் அகுஸ்தீன் சொல்லியிருக்கிறார். ஆகையால் தம்பிமார்களே பிரயாசமின்றி வருத்தமின்றி, ஒறுத்தலின்றி. மோட்சத்துக்குப் போவாரில்லையென்று அறிந்து எப்படியாகிலும் தபசு செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரா! தேவரீருடைய பிரதாபமுள்ள சமுகத்திலே நாங்கள் பொழியும் தாழ்மையுள்ள ஜெபங்களைக் கிருபாகடாக்ஷமாய்ப் பார்த்து அழுகிறவர்களுக்குத் தேற்றத்தையும் வருத்தப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும், கஸ்திப்படுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும், சாகிறவர்களுக்கு நன் மரணத்தையும் ,உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நித்திய இளைப்பாற்றியையும் கட்டளையிட வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்.
இருபத்து நான்காம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு தவக்கிரியையைச் செய்கிறது.
புதுமை
ஹங்கேரிய இராஜாவின் மகளான அர்ச் எலிசபெத்தம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் வெகு பக்தியாயிருந்ததுமல்லாமல் மரித்தவர்களுடைய பிரேதங்களை நல்லடக்கம் பண்ணுவிப்பாள் . இராஜாமகளாயிருந்தாலும் எளியவர்களுடைய பிரேதங்களுக்கு அவளே அநேகம் முறை செய்யவேண்டியவைகளைத் தம்முடைய கையினாலேயேச் செய்வாள்.
அவர்களுக்கு மரியாதை காண்பிக்கத்தக்கதாக தானும் கல்லறைக்குப் போவாள். அவர்களுடைய ஆத்துமத்துக்காக மகாப்பக்தியோடு வேண்டுவாள். ஹங்கேரிய ராணியான அவள் தாயானவள் இறந்தபிற்பாடு அர்ச் எலிசபெத்தம்மாள் அவளுடைய ஆத்துமத்தைக் குறித்து இரவும் பகலும் வேண்டிக்கொள்ளுவதுமல்லாமல் ஏராளமாய்ப் பிச்சை தர்மங் கொடுத்து, தினந்தோறும் கடின தவக்கிரியைகளை செய்து வந்தாள்.
அவள் இதெல்லாவற்றையும் செய்தாலும் வெகு நாளைக்குப் பிற்பாடு அவளுடைய தாயானவள் வெகு துயர முகத்தோடும் பொறுக்கப்படாத வேதனைப்படுகிற பிரகாரத்தோடும் அவளுக்குத் தரிசனையாகி, அவளண்டையில் முழந்தாளிட்டுப் பெருமூச்சுவிட்டுச் சொன்னதாவது " என் பிரியமுள்ள மகளே உன்னுடைய தாய் நான்தானே. நான் அநுபவிக்கிற வேதனை சகிக்கப்படாத வேதனையாகையால் என் பேரில் இரக்கமாயிரும். எனக்காக இடைவிடாமல் தேவ கிருபையை நீ மன்றாடவேணுமென்று உன்னிடத்தில் கேட்கவந்தேன். உன்னைப் பெற்று வளர்க்க நான் பட்ட பிரயாசங்களை நினைத்து, அகோரமாய் என்னைச் சுட்டெரிக்கும் இந்த நெருப்பிலிருந்து என்னை மீட்கப் பிரயாசைப்படு என் மகளே உன்னண்டையில் சாஷ்டாங்கமாய் விழுந்திருக்கிற உன்னுடைய தாயாகிய என் பேரில் இரக்கமாயிரும் " என்று சொல்லி மறைந்து போனாள்.
அர்ச் எலிசபெத்தம்மாளோவென்றால் மனம் இளகி வெகுவாய்த் துக்கித்து முன்னிலும் அதிக ஜெபமும் அதிக தர்மமும் அதிக தவக்கிரியையும் செய்து கொண்டு வந்தாள். உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் அகோரமாய் வருத்தப்படுகிற தமது தாயாரின் சாயல் தன்னண்டையிலே எப்போதும் இருக்கிறாற்போல கண்டு, யாதொரு இளைப்பாற்றியுமின்றி நித்திரையுமின்றி இரவும் பகலும் செபங்களைப் பொழிந்து வெகு தவம் பண்ணிக் கொண்டிருந்தாள் . அப்படியே அநேக நாள் செய்த பிற்பாடு தாயானவள் அவளுக்குக் காணப்பட்டு , தன் வேதனை முடிந்து ,தான் மோட்சத்துக்குப் போகிறதாக அவளுக்கு நன்றியறிதலுடன் அறிவித்து மகா சந்தோஷப் பிரதாத்தோடு பேரின்ப விட்டுக்குப் போனாள்.
கிறிஸ்துவர்களே! இந்தப் புதுமையை நினைத்து நீங்களும் இறந்துபோன உங்களுடைய தாய் தகப்பனைக் குறித்து ஜெபதபம் தருமம் முதலான நற்கிரியைகளை இடைவிடாமல் ஒப்புக்கொடுக்கவேணுமென்று அறியக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
இருபத்து ஐந்தாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்
தியானம்
கடன்பட்ட மனுஷனொருவன் தன் கடனைச்செலுத்த ஒரு தர்மவானுடைய பொக்கிஷத்திலேயிருந்து தேவையான பணங்களை எடுக்கக்கூடுமேயானால் தன் கடனைச் செலுத்தாமலிருப்பானோ? அவன் அப்போது தன் கடனைச் செலுத்தாதிருந்தால் அவனுக்கு மதியீனனென்றும், பைத்தியக்காரனென்றும் பேறுண்டாகுமல்லவோ? மனுஷனானவன் தான் செய்த பாவங்களினால் தேவ நீதிக்குக் கடனாளியாய்ப் போனானென்பது நிச்சயம். இந்தக் கடனைச் செலுத்துகிறது மகா கடினமும் பிரயாசமுமாயிருக்கிறதினாலே அது அநேகமாய் அவனால் தீர்க்கக்கூடாத காரியமாயிருக்கும். ஆயினும் இந்தக் கடனைச் செலுத்த திருச்சபையினுடைய பலன்களடங்கிய வற்றாத பொக்கிஷத்திலிருந்து நமக்கு வேண்டியமட்டும் எடுக்கக்கூடும். மீண்டும் குறையாத இந்த பொக்கிஷத்திலிருந்து உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாகத் தேவையான பலன்களை எடுத்துக் கொள்ளலாமென்பது விசுவாச சத்தியமாம்.
அதெப்படியாகுமென்றால், அர்ச் திருச்சபை, ஆண்டவர் தமக்குக் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு சேசுநாதருடைய அளவில்லாத புண்ணிய பலன்களையும். அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பலன்களையும் மனுஷருக்குக் கைம்மாறாகப் பரிமாறிக்கொடுக்கிறதாமே அதைக்கொண்டு மனுஷனானவன் தன் கடனைத் தீர்க்கலாம். உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணலாம் . மெய்யான சர்வேசுரனான சேசுக்கிறிஸ்து நாதர் சகல உலகங்களை மீட்டிரட்சிக்க தம்முடைய திவ்விய இரத்தத்தின் ஒரு துளி மாத்திரம் போதுமென்பது தப்பாத
சத்தியமாம்.
ஆனால் நம்முடைய பரமநாதர் படாத பாடுபட்டு, நிந்தை வதையெல்லாம் அனுபவித்து, தம்முடைய பிராணனையும் தந்து, தமது திவ்விய இரத்தமுழுமையும் சிந்தத் திருவுளமானதினாலே, இவ்வுலக இரட்சிப்பு சம்பூரணமாய் நிறைவேறினதுமல்லாமல் அவருடைய புண்ணியபலன்கள் அளவில்லாதவிதமாய் மிஞ்சிவிட்டதென்பது உண்மை. மேலும் மாசில்லாத தேவமாதாவானவள் செய்த புண்ணியங்களுக்குக் கணக்கில்லை. மீளவும் பிதாப்பிதாவாகிய அர்ச் சூசையப்பரும், அப்போஸ்தலர்களும், வேதசாட்சிகளும், தபோதனரும் முதலிய கணக்கில்லாத அர்ச்சியசிஷ்டவர்களும், தாங்கள் செய்த ஜெபதப தான் தர்மம் தவக்கிரியைகளினாலே தாங்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன்களைத் தீர்த்ததுமல்லாமல் இந்த நற்கிரியைகளினால் வந்த பலன்கள் மீதியாயினதென்றும் சொல்லவேண்டியது.
இப்படியே சேசுநாதருடைய விலைமதிப்பற்ற புண்ணிய பலன்களும், அர்ச். தேவமாதாவாவின் எண்ணிறந்த உத்தம புண்ணியங்களும், மற்ற சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பரிகாரப் பலன்களும், தேவ கிருபையினாலே திருச்சபைக்குச் சொந்தப் பொக்கிஷமாயிற்று. நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் தாம் ஸ்தாபித்த ஏழு தேவதிரவிய அநுமானங்கள் வழியாய்த் தம்முடைய அளவற்ற பலன்களை நமக்கு அளிக்குமாப்போல, திருச்சபையானது தனக்கு முன்சொன்ன பொக்கிஷத்தி லிருக்கும் ஞானத் திரவியங்களை நமக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறதாமே.
இந்த பலன்களின்மூலமாய்ச் சுகிர்த முறைமை எவ்வித பலத்த நியாயங்களிலும் ஊன்றியிருக்கிறபடியினாலும், இதற்கு விரோதமாய்ப் பதிதர் பிதற்றுகிற தூஷணங்கள் எல்லாம் முழு அநியாயமும் சுத்த அபத்தமுமாய் இருக்கிறதென்று எல்லாருக்கும் விளங்குமே பக்தியுள்ள கிறிஸ்துவர்களோவென்றால், ஆண்டவரான சுவாமி நமக்குச் செய்தருளிய உபகாரங்களுக்குள்ளே இது பெரிய உபகாரமென்றெண்ணி அதற்காக அவருக்குத் தோத்திரம் பண்ணுவார்களல்லாமல் பல பலன்களை அடையவும் விரும்புவார்களாமே.
கிறிஸ்துவர்களே ! திருச்சபை அளித்த பலன்களினாலே உங்களுக்கு ஞான பிரயோசனம் அதிகமதிகமாய் வரும்படியாகச் சொல்லப்போகிறதைக் கவனித்துக் கேளுங்கள்.
முதலாவது பரிபூரணப்பலன் தனிப்பலன் ஆகிய இவ்விரண்டு வகைப் பலனுண்டு . பரிபூரணப்பலன் ஏதென்றால், பாவத்தால் வருகிற அநித்திய ஆக்கினையை முழுவதும் நிவாரணமாக்குகிற பலனாம். எவனொருவன் அந்தப் பூரண பலனை முழுமையும் அடைவானேயானால், பரிசுத்தனாகி மோட்சத்தை அடைவதற்குப் பாத்திரவானாய் இருப்பான் . ஆனால் பரிபூரண பலனை அடைவது சிரமமும் அருமையுமாம். ஏனென்றால் அதற்குத் தக்க தேவசிநேகமும், உண்மையான மனஸ்தாபமும், சொற்ப பாவங்களின்மேலே முதலாய் முற்றும் வெறுப்பும் வேணுமென்கிறதினாலே இவையெல்லாம் கொண்டிருக்கிறது எளிதான காரியமல்ல. ஆனாலும் அதை முழுவதும் அடையாமற்போனாலும் அதில் ஒரு பங்காவது அடைவது தப்பாது.
தனிப்பலனோவென்றால் பாவத்துக்கு வரவேண்டிய அநித்திய ஆக்கினையில் சிலநாட்களை அல்லது சில காலத்தை மாத்திரம் நிவாரணமாக்குகிற பலனாம். ஆகையால் நாற்பதுநாள், நூறுநாள், ஏழுவருஷம், பத்துவருஷப் பலன்கள் முதலியவை தனிப்பலன்களெனப்படும். இந்தத் தனிப்பலன்களால் பூர்வீக திருச்சபையில் அந்தந்தப் பாவத் துக்கு வழங்கின ஆக்கினையில் அத்தனைநாள் அல்லது அத்தனை காலம் உத்தரிப்பு குறையும், அல்லது உத்தரிக்கிற ஸ்தலத்திலே செய்யவேண்டிய பரிகாரம் மாத்திரம் தணியும்.
இரண்டாவது பரிபூரண பலனையாவது தனிப்பலனையாவது தனக்கே பெறவேணுமானால் சாவான பாவமின்றி இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணுமென்கிறது நிச்சயம். பரிபூரண பலன்களை அடைந்து மற்றவர்களுக்கு ஒப்புக் கொடுக்கவேனுமானாலும் அப்போது கூட சாவான பாவமில்லாமல் இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணும். இவர்களுக்குத் தனிப்பலனை ஒப்புக்கொடுக்கிறதற்கு இஷ்டப்பிரசாதம் அவசரமில்லாதிருந்தாலும் அதுவும் இருந்தால் மெத்த நல்லது.
மூன்றாவது எந்தெந்தப் பலன்களை அடையவேணுமென்றாலும் அதற்கு கற்பிக்கப்பட்டதெல்லாம் தப்பாமல் அநுசரிக்கவேண்டியது. பரிபூரண பலனைப்பெறுவதற்குப் பாவசங்கீர்த்தனம் பண்ணவும், நன்மை வாங்கவும், அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்களைக் குறித்து வேண்டிக்கொள்ளவும் கற்பித்திருக்கிறதே வழக்கம்.
நாலாவது எந்தெந்தப் பலன்களையும் அடைய வேண்டுமானால் அதைப் பெற வேணுமென்கிற கருத்து வேண்டியதுமல்லாமல் , அதற்குக் கற்பித்த சுகிர்த முயற்சிகளையும் நிறைவேற்றுவது அவசியம் . கருத்து மட்டும் இருந்தால் , பக்தியுள்ள கிறிஸ்தவனானவன் தினந்தோறும் செய்யும் செபங்களினாலும் நற்கிரியைகளினாலும் அநேகம் பலன்களைப்பெற்றுக்கொள்ளலாமே. அநேகம்பேர் இவைகளையெல்லாம் நினைக்காதிருக்கிறதினாலே, தங்களுடைய கையில் வந்த அநேக ஞானப் பலன்களை இழந்துபோகிறார்கள் ஆனதினாலே இந்த ஜெபத்தை அல்லது நற்கிரியையைச் செய்யும் போது அவைகளுக்குக் குறிப்பிட்ட பலனைப் பெற வேணுமென்கிற கருத்தில்லாதிருந்தாலும், தினந்தோறும் காலையில் அந்தக் கருத்தை சற்றாகிலும் புதுப்பிக்கவேணும்.
அதெப்படி என்றால்: இன்றைக்குப் பெறக்கூடுமான பலன்களையெல்லாம் அடையவேணுமென்று விரும்புகிறேன்; இவையெல்லாம் என் பாவப்பரிகாரத்துக்காக அல்லது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுக்கிறேன் என்று வாயினாலேயாவது மனசிலேயாவது வேண்டிக் கொள்ளவேணும், அப்படிச் செய்வது பலன்களை அடையப் போதுமென்று சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.
ஐந்தாவது பொதுப்பட பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கலாமென்பது திருச்சபையினுடைய உத்தரவுதான். ஆயினும் அந்தந்தப் பலன்களைப் பொதுவிலே சகல ஆத்துமாக்களுக்கு அல்லது குறிப்பாக அந்தந்த ஆத்துமத்துக்குச் செலுத்தவேனுமானால் அந்த கருத்துத்தானிருக்கவேண்டியது.
ஆறாவது திருச்சபையில் எண்ணிக்கைக்குள்ளடங்காத பலன்கள் உண்டாயிருக்கிறதென்பது சத்தியந்தான். ஆயினும் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பக்திக்கும் அந்தஸ்துக்கும் தக்கப்படி சிலதுகளைத் தெரிந்துக் கொண்டு அவைகளைச் தாழ்ச்சியுடன் அடையப் பிரயாசைப்படக்கடவார்கள்.
அதிப்படியிருந்தாலும் தேவ கிருபையால் ஆத்தும ஈடேற்றத்துக்கும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் மீட்புக்கும் அவ்வளவு பெரியதும் எளியதுமான இந்த உதவியை அசட்டை பண்ணாமல் மகா சுறுசுறுப்போடு கூடுமான பலன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது. மகா மகிமையோடு பிரான்சு இராச்சியத்தை ஆண்டுக்கொண்டு வந்தவருமாய், அநேகம் போர்ச்சண்டைகளில் வெற்றி யடைந்தவருமாய், எவ்வித புண்ணியங்களையும் அனுசரித்துக் கொண்டு வந்தவருமாயிருந்த அர்ச், ஞானப்பிரகாச இராஜாவானவர் தம்முடைய மரண சாசனத்தில் தமக்குப் பதிலாய் இராச்சியபாரத்தைச் செய்யப்போகிற தமது மகனுக்கு சொன்னதாவது "என் மகனே திருச்சபையினுடைய பலன்களை அடைய நினைப்பாயாக " என்று எழுதினாராமே.
கிறிஸ்துவர்களே !நீங்களும் இந்தச் சுகிர்த வாக்கியத்தை நினைத்துத் திருச்சபையினுடைய பலன்களை ஆசையோடு பெற வேணுமென்று அறியக்கடவீர்களாக -
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
மதுரமான சேசுவே ! உத்தரிக்கிற ஸ்தலத்திலே உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களையும் மீட்டிரட்சிக்க தேவரீர் மனுஷனாகிப் படாத பாடெல்லாம் பட்டு கடினமான மரணத்தை அடைந்தீரென்று கிருபையாய் நினைத்தருளும் இனிய சேசுவே, அந்த ஆத்துமாக்களுடைய அபயக் குரலை கேட்டருளும். அவர்கள் சிந்துகிற கண்ணீரைப் பாரும். உம்முடைய திரு மரணத்தின் பலன்களைப் பார்த்து அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக் கடன்களைப் பொறுத்தருளும் . இன்பம் நிறைந்த சேசுவே ! தேவரீருடைய திரு ரத்தமானது அந்த ஆத்துமாக்கள் பேரில் விழுந்து அவர்களுடைய அகோர வேதனைகளை அமர்த்த வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
இருபத்தைந்தாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஏதேனும் ஒரு பலனுள்ள செபத்தை செபிக்கிறது
புதுமை
அர்ச். ஐந்துகாயப் பிரான்சிஸ்கு சபையைச் சேர்ந்த முத்திப்பேறு பெற்ற பேர்த்தோல்தூஸ் என்பவர் ஒரு சமயத்தில் தர்மம் செய்யவேணுமென்றும், அதற்கு வெகு பிரயோசனம் இருக்கிறதென்றும் ஒரு நல்ல பிரசங்கத்தைச் செய்திருக்கிறார். அர்ச் பாப்பானவர் தமக்கு அளித்த உத்தரவுப்படிக்கு இந்த பிரசங்கத்தைக் கேட்டவர்களுக்குப் பத்துநாட் பலன் கொடுத்திருந்தாராம். பிரசங்கத்துக்குப் பிற்பாடு தரித்திரப்பட்ட ஒரு பெண்மணி தன்னுடைய நிர்ப்பாக்கியத்தை அவருக்கு வெளிப்படுத்தி எனக்கு கொஞ்சம் தர்மம் கொடுக்கவேண்டும் என்று மன்றாடினாள்.
தரித்திரனாகச் சீவிப்பேனென்று வார்த்தைப் பாடு கொடுத்த குருசுவாமியினிடத்திலே பணமுமில்லை, காசுமில்லை. அதனாலே அவளைப்பார்த்து "தங்கையே என்னிடம் ஒன்றுமில்லையென்று உனக்குத் தெரியுமே. ஆனால் என் பிரசங்கத்தைக் கேட்டவர்களுக்குப் பத்துநாட் பலன் கொடுத்தேன். ஆஸ்திக்காரனான இன்னானிடத்திலே போய் நீ அடைந்த பத்துநாட்பலனை அவனுக்குக் கொடுத்துக் கைம்மாறாக பணம் பெற்றுக் கொள்" என்று அவளை அனுப்பினார்.
இந்த ஆஸ்திக்காரன் தேவ காரியங்களிலே வெகு அசட்டையுள்ளவனாயிருந்தாலும் தரித்திரப்பட்ட இந்தப் பெண்மணி துணிந்து அவனிடத்திலே போனாள். 'இந்த பத்து நாட் பலனுக்குப் பதிலாய் எனக்கு என்னத்தைக் கொடுப்பீர் 'என்று இவள் அவனிடத்திலே கேட்க ஆஸ்திக்காரன் 'உனக்கு என்ன வேணுமென்று ' விசாரித்தான்.
ஆண்டவரை நம்பி இந்தப் புண்ணியவதி மறுமொழியாக 'இந்த பத்துநாட் பலனையும் தாரசிலே வைத்து எவ்வளவு கனமாயிருக்குமோ அவ்வளவு பணம் எனக்கு கொடுப்பீராக 'என்றாள். இவன் அதற்குச் சிரித்து, 'அப்படியே ஆகட்டும். உன்னுடைய பத்து நாட் பலனை ஒரு சீட்டிலே எழுது' என்றான். அப்படி, அவள் எழுதினபின் தராசின் ஒரு தட்டிலே அந்தச் சீட்டை வைத்து வேறொரு தட்டிலே ஒரு வெள்ளிப் பணத்தை வைத்தான், அப்படி வைத்தாலும் இன்னும் சீட்டு அதிக பாரமாயிருந்ததினாலே, ஐந்து பணம் பத்துப்பணம், இருபதுபணம், ஐம்பது பணம் வரைக்கும் போட்டாலும், இன்னமும் அந்தச் சீட்டுக்குப் பற்றாததினாலே, வெகுவாய்ப் பிரமித்து ஆச்சரியப்பட்டான்.
அதனாலே அந்தப்பெண்மணிக்குத் தேவையானதெல்லாம் சந்தோஷமாய்க் கொடுத்ததுமல்லாமல், திருச்சபை அளிக்கிற பலன்களுடைய விலைமதிப்பை அவன் அறிந்து மனந்திரும்பி நல்ல கிறிஸ்துவனாக நடந்தான்.
அமெரிக்கா தேசத்திலுள்ள கீத்தோவென்ற பட்டணத்தில் அர்ச் மரியன்னம்மாள் வசித்து வந்தாள். அவள் எவ்வித புண் ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டுத் தூய கன்னியாஸ்திரியாய் நடந்ததினாலே, அவளுக்கு லிலி புஷ்பம் என்ற பேர் கொடுக்கப்பட்டது. அவள் ஒருநாள் தியானத்திலிருக்கும்போது பரவசமாகி, ஒரு பெரிய விஸ்தாரமான இடத்தில் அகலமான ஒரு மேசை ஸ்தாபித்திருக்கிறதையும், அதன்மேல் வெள்ளி தங்கத்தால் செய்த பல பொருட்களும் முத்து மாணிக்கங்களும் வயிரம் முதலான கற்களும் பரப்பியிருக்கிறதையும் கண்டாளாம். இவை எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் இவள் பார்க்கும்போது, யாவருக்கும் வைக்கப்பட்ட பொக்கிஷம் இதுவே தேவையுள்ளவர்கள் இதிலிருந்து மனதின்படியே எடுத்துக் கொள்ளலாம். இந்த திரவியங்கள் திருச்சபையினுடைய பற்பலபலன்களைக் காண்பிக்கின்றன என்ற சத்தம் அவளுக்குக் கேட்கப்பட்டது .
கிறிஸ்துவர்களே! உங்களுக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷங்களை வைத்திருக்க உங்களுக்கும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் தேவையானதெல்லாம் அதிலிருந்து எடுக்காமலிருப்பதெப்படி? நீங்கள் ஞானமற்றவராயிருந்து ஆத்துமாக்களுக்கு வேண்டிய உதவி சகாயம்பண்ணாதிருந்தால், அது உங்களுடைய குற்றமென்றே அறியக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்
தியானம்
கடன்பட்ட மனுஷனொருவன் தன் கடனைச்செலுத்த ஒரு தர்மவானுடைய பொக்கிஷத்திலேயிருந்து தேவையான பணங்களை எடுக்கக்கூடுமேயானால் தன் கடனைச் செலுத்தாமலிருப்பானோ? அவன் அப்போது தன் கடனைச் செலுத்தாதிருந்தால் அவனுக்கு மதியீனனென்றும், பைத்தியக்காரனென்றும் பேறுண்டாகுமல்லவோ? மனுஷனானவன் தான் செய்த பாவங்களினால் தேவ நீதிக்குக் கடனாளியாய்ப் போனானென்பது நிச்சயம். இந்தக் கடனைச் செலுத்துகிறது மகா கடினமும் பிரயாசமுமாயிருக்கிறதினாலே அது அநேகமாய் அவனால் தீர்க்கக்கூடாத காரியமாயிருக்கும். ஆயினும் இந்தக் கடனைச் செலுத்த திருச்சபையினுடைய பலன்களடங்கிய வற்றாத பொக்கிஷத்திலிருந்து நமக்கு வேண்டியமட்டும் எடுக்கக்கூடும். மீண்டும் குறையாத இந்த பொக்கிஷத்திலிருந்து உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாகத் தேவையான பலன்களை எடுத்துக் கொள்ளலாமென்பது விசுவாச சத்தியமாம்.
அதெப்படியாகுமென்றால், அர்ச் திருச்சபை, ஆண்டவர் தமக்குக் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு சேசுநாதருடைய அளவில்லாத புண்ணிய பலன்களையும். அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பலன்களையும் மனுஷருக்குக் கைம்மாறாகப் பரிமாறிக்கொடுக்கிறதாமே அதைக்கொண்டு மனுஷனானவன் தன் கடனைத் தீர்க்கலாம். உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணலாம் . மெய்யான சர்வேசுரனான சேசுக்கிறிஸ்து நாதர் சகல உலகங்களை மீட்டிரட்சிக்க தம்முடைய திவ்விய இரத்தத்தின் ஒரு துளி மாத்திரம் போதுமென்பது தப்பாத
சத்தியமாம்.
ஆனால் நம்முடைய பரமநாதர் படாத பாடுபட்டு, நிந்தை வதையெல்லாம் அனுபவித்து, தம்முடைய பிராணனையும் தந்து, தமது திவ்விய இரத்தமுழுமையும் சிந்தத் திருவுளமானதினாலே, இவ்வுலக இரட்சிப்பு சம்பூரணமாய் நிறைவேறினதுமல்லாமல் அவருடைய புண்ணியபலன்கள் அளவில்லாதவிதமாய் மிஞ்சிவிட்டதென்பது உண்மை. மேலும் மாசில்லாத தேவமாதாவானவள் செய்த புண்ணியங்களுக்குக் கணக்கில்லை. மீளவும் பிதாப்பிதாவாகிய அர்ச் சூசையப்பரும், அப்போஸ்தலர்களும், வேதசாட்சிகளும், தபோதனரும் முதலிய கணக்கில்லாத அர்ச்சியசிஷ்டவர்களும், தாங்கள் செய்த ஜெபதப தான் தர்மம் தவக்கிரியைகளினாலே தாங்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன்களைத் தீர்த்ததுமல்லாமல் இந்த நற்கிரியைகளினால் வந்த பலன்கள் மீதியாயினதென்றும் சொல்லவேண்டியது.
இப்படியே சேசுநாதருடைய விலைமதிப்பற்ற புண்ணிய பலன்களும், அர்ச். தேவமாதாவாவின் எண்ணிறந்த உத்தம புண்ணியங்களும், மற்ற சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பரிகாரப் பலன்களும், தேவ கிருபையினாலே திருச்சபைக்குச் சொந்தப் பொக்கிஷமாயிற்று. நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் தாம் ஸ்தாபித்த ஏழு தேவதிரவிய அநுமானங்கள் வழியாய்த் தம்முடைய அளவற்ற பலன்களை நமக்கு அளிக்குமாப்போல, திருச்சபையானது தனக்கு முன்சொன்ன பொக்கிஷத்தி லிருக்கும் ஞானத் திரவியங்களை நமக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறதாமே.
இந்த பலன்களின்மூலமாய்ச் சுகிர்த முறைமை எவ்வித பலத்த நியாயங்களிலும் ஊன்றியிருக்கிறபடியினாலும், இதற்கு விரோதமாய்ப் பதிதர் பிதற்றுகிற தூஷணங்கள் எல்லாம் முழு அநியாயமும் சுத்த அபத்தமுமாய் இருக்கிறதென்று எல்லாருக்கும் விளங்குமே பக்தியுள்ள கிறிஸ்துவர்களோவென்றால், ஆண்டவரான சுவாமி நமக்குச் செய்தருளிய உபகாரங்களுக்குள்ளே இது பெரிய உபகாரமென்றெண்ணி அதற்காக அவருக்குத் தோத்திரம் பண்ணுவார்களல்லாமல் பல பலன்களை அடையவும் விரும்புவார்களாமே.
கிறிஸ்துவர்களே ! திருச்சபை அளித்த பலன்களினாலே உங்களுக்கு ஞான பிரயோசனம் அதிகமதிகமாய் வரும்படியாகச் சொல்லப்போகிறதைக் கவனித்துக் கேளுங்கள்.
முதலாவது பரிபூரணப்பலன் தனிப்பலன் ஆகிய இவ்விரண்டு வகைப் பலனுண்டு . பரிபூரணப்பலன் ஏதென்றால், பாவத்தால் வருகிற அநித்திய ஆக்கினையை முழுவதும் நிவாரணமாக்குகிற பலனாம். எவனொருவன் அந்தப் பூரண பலனை முழுமையும் அடைவானேயானால், பரிசுத்தனாகி மோட்சத்தை அடைவதற்குப் பாத்திரவானாய் இருப்பான் . ஆனால் பரிபூரண பலனை அடைவது சிரமமும் அருமையுமாம். ஏனென்றால் அதற்குத் தக்க தேவசிநேகமும், உண்மையான மனஸ்தாபமும், சொற்ப பாவங்களின்மேலே முதலாய் முற்றும் வெறுப்பும் வேணுமென்கிறதினாலே இவையெல்லாம் கொண்டிருக்கிறது எளிதான காரியமல்ல. ஆனாலும் அதை முழுவதும் அடையாமற்போனாலும் அதில் ஒரு பங்காவது அடைவது தப்பாது.
தனிப்பலனோவென்றால் பாவத்துக்கு வரவேண்டிய அநித்திய ஆக்கினையில் சிலநாட்களை அல்லது சில காலத்தை மாத்திரம் நிவாரணமாக்குகிற பலனாம். ஆகையால் நாற்பதுநாள், நூறுநாள், ஏழுவருஷம், பத்துவருஷப் பலன்கள் முதலியவை தனிப்பலன்களெனப்படும். இந்தத் தனிப்பலன்களால் பூர்வீக திருச்சபையில் அந்தந்தப் பாவத் துக்கு வழங்கின ஆக்கினையில் அத்தனைநாள் அல்லது அத்தனை காலம் உத்தரிப்பு குறையும், அல்லது உத்தரிக்கிற ஸ்தலத்திலே செய்யவேண்டிய பரிகாரம் மாத்திரம் தணியும்.
இரண்டாவது பரிபூரண பலனையாவது தனிப்பலனையாவது தனக்கே பெறவேணுமானால் சாவான பாவமின்றி இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணுமென்கிறது நிச்சயம். பரிபூரண பலன்களை அடைந்து மற்றவர்களுக்கு ஒப்புக் கொடுக்கவேனுமானாலும் அப்போது கூட சாவான பாவமில்லாமல் இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணும். இவர்களுக்குத் தனிப்பலனை ஒப்புக்கொடுக்கிறதற்கு இஷ்டப்பிரசாதம் அவசரமில்லாதிருந்தாலும் அதுவும் இருந்தால் மெத்த நல்லது.
மூன்றாவது எந்தெந்தப் பலன்களை அடையவேணுமென்றாலும் அதற்கு கற்பிக்கப்பட்டதெல்லாம் தப்பாமல் அநுசரிக்கவேண்டியது. பரிபூரண பலனைப்பெறுவதற்குப் பாவசங்கீர்த்தனம் பண்ணவும், நன்மை வாங்கவும், அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்களைக் குறித்து வேண்டிக்கொள்ளவும் கற்பித்திருக்கிறதே வழக்கம்.
நாலாவது எந்தெந்தப் பலன்களையும் அடைய வேண்டுமானால் அதைப் பெற வேணுமென்கிற கருத்து வேண்டியதுமல்லாமல் , அதற்குக் கற்பித்த சுகிர்த முயற்சிகளையும் நிறைவேற்றுவது அவசியம் . கருத்து மட்டும் இருந்தால் , பக்தியுள்ள கிறிஸ்தவனானவன் தினந்தோறும் செய்யும் செபங்களினாலும் நற்கிரியைகளினாலும் அநேகம் பலன்களைப்பெற்றுக்கொள்ளலாமே. அநேகம்பேர் இவைகளையெல்லாம் நினைக்காதிருக்கிறதினாலே, தங்களுடைய கையில் வந்த அநேக ஞானப் பலன்களை இழந்துபோகிறார்கள் ஆனதினாலே இந்த ஜெபத்தை அல்லது நற்கிரியையைச் செய்யும் போது அவைகளுக்குக் குறிப்பிட்ட பலனைப் பெற வேணுமென்கிற கருத்தில்லாதிருந்தாலும், தினந்தோறும் காலையில் அந்தக் கருத்தை சற்றாகிலும் புதுப்பிக்கவேணும்.
அதெப்படி என்றால்: இன்றைக்குப் பெறக்கூடுமான பலன்களையெல்லாம் அடையவேணுமென்று விரும்புகிறேன்; இவையெல்லாம் என் பாவப்பரிகாரத்துக்காக அல்லது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுக்கிறேன் என்று வாயினாலேயாவது மனசிலேயாவது வேண்டிக் கொள்ளவேணும், அப்படிச் செய்வது பலன்களை அடையப் போதுமென்று சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.
ஐந்தாவது பொதுப்பட பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கலாமென்பது திருச்சபையினுடைய உத்தரவுதான். ஆயினும் அந்தந்தப் பலன்களைப் பொதுவிலே சகல ஆத்துமாக்களுக்கு அல்லது குறிப்பாக அந்தந்த ஆத்துமத்துக்குச் செலுத்தவேனுமானால் அந்த கருத்துத்தானிருக்கவேண்டியது.
ஆறாவது திருச்சபையில் எண்ணிக்கைக்குள்ளடங்காத பலன்கள் உண்டாயிருக்கிறதென்பது சத்தியந்தான். ஆயினும் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பக்திக்கும் அந்தஸ்துக்கும் தக்கப்படி சிலதுகளைத் தெரிந்துக் கொண்டு அவைகளைச் தாழ்ச்சியுடன் அடையப் பிரயாசைப்படக்கடவார்கள்.
அதிப்படியிருந்தாலும் தேவ கிருபையால் ஆத்தும ஈடேற்றத்துக்கும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் மீட்புக்கும் அவ்வளவு பெரியதும் எளியதுமான இந்த உதவியை அசட்டை பண்ணாமல் மகா சுறுசுறுப்போடு கூடுமான பலன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது. மகா மகிமையோடு பிரான்சு இராச்சியத்தை ஆண்டுக்கொண்டு வந்தவருமாய், அநேகம் போர்ச்சண்டைகளில் வெற்றி யடைந்தவருமாய், எவ்வித புண்ணியங்களையும் அனுசரித்துக் கொண்டு வந்தவருமாயிருந்த அர்ச், ஞானப்பிரகாச இராஜாவானவர் தம்முடைய மரண சாசனத்தில் தமக்குப் பதிலாய் இராச்சியபாரத்தைச் செய்யப்போகிற தமது மகனுக்கு சொன்னதாவது "என் மகனே திருச்சபையினுடைய பலன்களை அடைய நினைப்பாயாக " என்று எழுதினாராமே.
கிறிஸ்துவர்களே !நீங்களும் இந்தச் சுகிர்த வாக்கியத்தை நினைத்துத் திருச்சபையினுடைய பலன்களை ஆசையோடு பெற வேணுமென்று அறியக்கடவீர்களாக -
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
மதுரமான சேசுவே ! உத்தரிக்கிற ஸ்தலத்திலே உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களையும் மீட்டிரட்சிக்க தேவரீர் மனுஷனாகிப் படாத பாடெல்லாம் பட்டு கடினமான மரணத்தை அடைந்தீரென்று கிருபையாய் நினைத்தருளும் இனிய சேசுவே, அந்த ஆத்துமாக்களுடைய அபயக் குரலை கேட்டருளும். அவர்கள் சிந்துகிற கண்ணீரைப் பாரும். உம்முடைய திரு மரணத்தின் பலன்களைப் பார்த்து அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக் கடன்களைப் பொறுத்தருளும் . இன்பம் நிறைந்த சேசுவே ! தேவரீருடைய திரு ரத்தமானது அந்த ஆத்துமாக்கள் பேரில் விழுந்து அவர்களுடைய அகோர வேதனைகளை அமர்த்த வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
இருபத்தைந்தாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஏதேனும் ஒரு பலனுள்ள செபத்தை செபிக்கிறது
புதுமை
அர்ச். ஐந்துகாயப் பிரான்சிஸ்கு சபையைச் சேர்ந்த முத்திப்பேறு பெற்ற பேர்த்தோல்தூஸ் என்பவர் ஒரு சமயத்தில் தர்மம் செய்யவேணுமென்றும், அதற்கு வெகு பிரயோசனம் இருக்கிறதென்றும் ஒரு நல்ல பிரசங்கத்தைச் செய்திருக்கிறார். அர்ச் பாப்பானவர் தமக்கு அளித்த உத்தரவுப்படிக்கு இந்த பிரசங்கத்தைக் கேட்டவர்களுக்குப் பத்துநாட் பலன் கொடுத்திருந்தாராம். பிரசங்கத்துக்குப் பிற்பாடு தரித்திரப்பட்ட ஒரு பெண்மணி தன்னுடைய நிர்ப்பாக்கியத்தை அவருக்கு வெளிப்படுத்தி எனக்கு கொஞ்சம் தர்மம் கொடுக்கவேண்டும் என்று மன்றாடினாள்.
தரித்திரனாகச் சீவிப்பேனென்று வார்த்தைப் பாடு கொடுத்த குருசுவாமியினிடத்திலே பணமுமில்லை, காசுமில்லை. அதனாலே அவளைப்பார்த்து "தங்கையே என்னிடம் ஒன்றுமில்லையென்று உனக்குத் தெரியுமே. ஆனால் என் பிரசங்கத்தைக் கேட்டவர்களுக்குப் பத்துநாட் பலன் கொடுத்தேன். ஆஸ்திக்காரனான இன்னானிடத்திலே போய் நீ அடைந்த பத்துநாட்பலனை அவனுக்குக் கொடுத்துக் கைம்மாறாக பணம் பெற்றுக் கொள்" என்று அவளை அனுப்பினார்.
இந்த ஆஸ்திக்காரன் தேவ காரியங்களிலே வெகு அசட்டையுள்ளவனாயிருந்தாலும் தரித்திரப்பட்ட இந்தப் பெண்மணி துணிந்து அவனிடத்திலே போனாள். 'இந்த பத்து நாட் பலனுக்குப் பதிலாய் எனக்கு என்னத்தைக் கொடுப்பீர் 'என்று இவள் அவனிடத்திலே கேட்க ஆஸ்திக்காரன் 'உனக்கு என்ன வேணுமென்று ' விசாரித்தான்.
ஆண்டவரை நம்பி இந்தப் புண்ணியவதி மறுமொழியாக 'இந்த பத்துநாட் பலனையும் தாரசிலே வைத்து எவ்வளவு கனமாயிருக்குமோ அவ்வளவு பணம் எனக்கு கொடுப்பீராக 'என்றாள். இவன் அதற்குச் சிரித்து, 'அப்படியே ஆகட்டும். உன்னுடைய பத்து நாட் பலனை ஒரு சீட்டிலே எழுது' என்றான். அப்படி, அவள் எழுதினபின் தராசின் ஒரு தட்டிலே அந்தச் சீட்டை வைத்து வேறொரு தட்டிலே ஒரு வெள்ளிப் பணத்தை வைத்தான், அப்படி வைத்தாலும் இன்னும் சீட்டு அதிக பாரமாயிருந்ததினாலே, ஐந்து பணம் பத்துப்பணம், இருபதுபணம், ஐம்பது பணம் வரைக்கும் போட்டாலும், இன்னமும் அந்தச் சீட்டுக்குப் பற்றாததினாலே, வெகுவாய்ப் பிரமித்து ஆச்சரியப்பட்டான்.
அதனாலே அந்தப்பெண்மணிக்குத் தேவையானதெல்லாம் சந்தோஷமாய்க் கொடுத்ததுமல்லாமல், திருச்சபை அளிக்கிற பலன்களுடைய விலைமதிப்பை அவன் அறிந்து மனந்திரும்பி நல்ல கிறிஸ்துவனாக நடந்தான்.
அமெரிக்கா தேசத்திலுள்ள கீத்தோவென்ற பட்டணத்தில் அர்ச் மரியன்னம்மாள் வசித்து வந்தாள். அவள் எவ்வித புண் ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டுத் தூய கன்னியாஸ்திரியாய் நடந்ததினாலே, அவளுக்கு லிலி புஷ்பம் என்ற பேர் கொடுக்கப்பட்டது. அவள் ஒருநாள் தியானத்திலிருக்கும்போது பரவசமாகி, ஒரு பெரிய விஸ்தாரமான இடத்தில் அகலமான ஒரு மேசை ஸ்தாபித்திருக்கிறதையும், அதன்மேல் வெள்ளி தங்கத்தால் செய்த பல பொருட்களும் முத்து மாணிக்கங்களும் வயிரம் முதலான கற்களும் பரப்பியிருக்கிறதையும் கண்டாளாம். இவை எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் இவள் பார்க்கும்போது, யாவருக்கும் வைக்கப்பட்ட பொக்கிஷம் இதுவே தேவையுள்ளவர்கள் இதிலிருந்து மனதின்படியே எடுத்துக் கொள்ளலாம். இந்த திரவியங்கள் திருச்சபையினுடைய பற்பலபலன்களைக் காண்பிக்கின்றன என்ற சத்தம் அவளுக்குக் கேட்கப்பட்டது .
கிறிஸ்துவர்களே! உங்களுக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷங்களை வைத்திருக்க உங்களுக்கும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் தேவையானதெல்லாம் அதிலிருந்து எடுக்காமலிருப்பதெப்படி? நீங்கள் ஞானமற்றவராயிருந்து ஆத்துமாக்களுக்கு வேண்டிய உதவி சகாயம்பண்ணாதிருந்தால், அது உங்களுடைய குற்றமென்றே அறியக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்