- தேவன்னை
- அயர்லாந்தின் அரசி
OUR LADY OF KNOCK, QUEEN OF IRELAND
WebSite :http://www.knockshrine.ie/
வரலாறு
அயர்லாந்து தேசத்தின் மேயோ பகுதியின் ஒரு சிற்றூர் நோக் . ஆகஸ்ட் 21 ம் தேதி மாலை, 1879,கடும் மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாளில் , மேரி மெக்லோலின் என்னும் (நோக் பங்குப் பணியாளரின் ) பணிப்பெண், தேவாலயத்தின் வெளியே தெற்கு சுவர் ஒரு வினோதமான ஒளிவெள்ளத்தில் மூழ்கி இருக்கக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுவர் முன் மூன்று நபர்களின் உருவங்கள் இருந்தன. அது புயலின் போது இடம் பெயர்ந்த கற்கள் என்று முதலில் அவர் தவறாக எண்ணினார். இதைக் கூற , அவர் தன் தோழி மார்கரெட் பைரன் வீட்டிற்கு மழையினூடே விரைந்தார்.
அரை மணி நேரத்திற்கு பிறகு மேரி மெக்லோலினும் மற்றும் மார்கரெட் சகோதரி மேரியும் மெக்லோலின் வீட்டிற்கு வந்தனர் . அவர்கள் தேவாலயத்தை கடந்து வந்தபோது அவர்கள் பார்த்தது மிகவும் தெளிவான அற்புதமான காட்சி. சுவற்றுக்கு மேற்கே வெளியே தூய கன்னி மரியாள் , புனித சூசையப்பர் மற்றும் புனித யோவான் தோன்றினர். மரியின் உருவம் ஒரு ஆள் அளவுக்கு உயரமாகவும் மற்ற இருவரின் உயரம் கிட்டத்தட்ட மரியின் உயரத்துடனும் இருந்தனர். அவர்கள் தரையில் இருந்து இரண்டு அடி உயரே , சுவருக்கு சற்று தள்ளி நின்றார்கள். மரியின் கண்கள் வானத்தை நோக்கி இருந்தன, அவர் முழு மடிப்புகள் தொங்கும் ஒரு பெரிய வெள்ளை ஆடையை உடுத்திக் இருந்தார் ; அவரது தலையில் ஒரு பெரிய கிரீடம் இருந்தது.அவர்களுக்கு அருகில் ஒரு ஆட்டுக்குட்டியும் ஒரு சிலுவையும் காணப்பட்டது . பெய்து கொண்டிருந்த மழையில் அனைவரும் தெப்பலாக நனைந்திருந்தனர் .ஆனால் காட்சியிலே காணப்பட்ட புனிதர் எவரும் நனையவே இல்லை.
மேரி பைரன் இதைத் தன் குடும்பத்தினருக்கு அறிவிக்கச் செல்ல , மேரி மெக்லோலின் அங்கயே நின்றார் . விரைவில் கூட்டமாக திரண்டுவந்து அனைவரும் அக்காட்சியைக் கண்டனர் .காட்சி தெரிந்த முழு நேரமும் மக்கள் செபமாலை செபித்தனர் . எனினும் பங்குக்குரு காவானாக் வெளியே வரவில்லை, அது பக்தியுள்ள கிராமவாசிகளுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. காட்சி கண்டவர்களில் இருந்த பேட்ரிக் ஹில் மற்றும் ஜான் கறி பின்னர் காட்சியை விவரித்தனர் : பேட்ரிக் சொன்னதாவது : 'அவர்கள் உயிரும் உடலும் கொண்ட மனிதர்களின் உருவங்களைப் போல இருந்தனர் . நாம் நெருங்கியவுடன், அவர்கள் சுவர் நோக்கி பின்வாங்கினர் , ஆனால் பேசவில்லை '. பேட்ரிக் , புனித யோவான் கையில் இருந்த புத்தகங்களின் வார்த்தைகள் தன் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தன என்றார்
பிரிட்ஜெட் என்ற ஒரு வயது முதிர்ந்த பெண் கன்னி மரியாளின் அடி தழுவ நெருங்கியபோது அவரால் தொட முடியாமல் போனது . தூரம் உள்ள மற்றவர்கள் தேவாலயத்தில் சுற்றி ஒரு விசித்திரமான ஒளியைக் கண்டனர் . காட்சி சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது பின்னர் மறைந்தது .
அடுத்த நாள் கிராம மக்கள் ஒரு குழுவாகச் சென்று தாங்கள் கண்டதை குருவானவரிடம் கூறினார் . அதை உண்மையானவையாக ஏற்றுக்கொண்ட குருவானவர் , மறைமாவட்ட ஆயருக்கு இக்காட்சி குறித்து எழுதினார்; காட்சி கண்டவர்களை விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது மறைமாவட்ட குழுவிற்கு திருப்தி இல்லை. கமிஷனின் சில உறுப்பினர்கள் ,ஊர்மக்கள் உள்ளூர் பிரிவினை சபை நபர் உருவாக்கிய ஒரு புரளியால் பாதிக்கப்பட்டவர்கள் என குற்றம் சாட்டியது, ஏளனம் செய்தது ! ஆனால் சாதாரண மக்கள் பின்வாங்கவில்லை . 1880 முதல் புனித யாத்திரை , நோக் ஊருக்கு துவங்கப்பட்டது . பின்னர் 1882 இல் டொராண்டோ பேராயர் ஜான் ஜோசப் லிஞ்ச், நோக் திருச்சபைக்கு விஜயம் செய்தார் . நோக் அன்னை மூலம் குணம் பெற்றதாகக் கூறினார்.
காலப்போக்கில் சாட்சிகள் பல இறந்தனர். ஆனால் பைரன், திருமணம் செய்து தன் ஆறு பிள்ளைகளோடு நோக்கிலேயே வாழ்ந்தார் . எண்பத்து ஆறு வயதில் 1936 ல் மீண்டும் பேட்டி கண்டபோது, அவர் 1879 ல் கொடுத்த முதல் அறிக்கைக்கு சற்றும் மாறுபடாத கருத்துக்களைக் கூறினார்.
நாக் கிராமம் ஆயிரக்கணக்கான மக்களால் மாற்றமடைந்தது. உள்ளூர் தேவாலயத்தில் கூட்டத்தை நிர்வகிக்க முடியாமல் போனது. இடம் மிகவும் சிறியதாக இருந்தது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய தேவாலயம், மரியன்னை , அயர்லாந்தின் அரசி என்ற பெயரில் எழுப்பப்பட்டது. அது இரண்டு ஆயிரம் மக்கள் அமரும் வண்ணம் உள்ளது . அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தூய மரியன்னையை வணங்கி தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர் .
1971 இல் இந்த காட்சிகள் திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் மேலோட்டமான செய்திகளைக் கொண்டு அங்கீகரிக்கப்பட்டது . 1994 ஆம் ஆண்டில் மூன்று ஆளுயர சுரூபங்கள் அன்னைக்கும் , புனித சூசையப்பர் மற்றும் புனித யோவானுக்கும் எழுப்பப்பட்டன.
புகழ்மாலை ஆங்கிலத்தில் காண இங்கே சொடுக்கவும்