- தேவன்னை
- மழை மலை மாதா
காஞ்சி மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பசுமையான மலைக்குன்றில் அமைந்துள்ளது மழை மலைத் தாயின் புனித அருள் தலம். இத் திருமலை நல்லாயன் குன்று என்றும் அழைக்கப்படுகிறது.
1960 க்கும் 70க்கும் இடையிலான காலம் தமிழகத்தில் புயல், வறட்சி போன்ற இயற்கை அழிவுகள் நிகழ்ந்தது.
1966 ம் ஆண்டு நவம்பரில் ஒரு புயல் சென்னையில் பெரும் சேதம் ஏற்படுத்தியது.
ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தை புயல்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் 1967 முதல் 1969 வரை தமிழகத்தை கடும் வறட்சி பாதித்தது.
அப்போது அருட்தந்தை புஷ்பம் அடிகளார் மரி அன்னையின் திருஉருவத்தை ஒரு தேரில் வைத்து அச்சிறுபாக்கம் பங்கு ஆலயமான புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து 65 கி.மீ. தொலைவு வரை மழை வேண்டி ஜெபித்துக்கொண்டு பொதுமக்கள் புடைசூழ எடுத்துச் சென்றார்.
தேர் புறப்பட்ட 9-ம் நாள் மறுபடியும் ஆலயத்தை வந்தடைந்தவுடன் மக்களின் மனம் குளிரும் வண்ணம் பெருமழை பெய்தது.
இதைக் கண்ட மக்கள் திரளாகக் கூடி நின்று மழையைக் கொடுத்த "மழை மாதாவே" என்று குரலெழுப்பி மகிழ்ந்தனர்.
மலையில் வீற்றிருந்து மழையைத் தந்த அன்னைக்கு "மழை மலை மாதா" என்று பெயரிட்டு மக்கள் அன்றிலிருந்து வழிபட ஆரம்பித்தனர்.
செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் துணைப் பாதுகாவலியாக மழை மலை அன்னை கொண்டாடப்படுகிறார்.
ஆண்டுத் திருவிழா - அக்டோபர் மாத முதல் சனிக்கிழமை
வரம் தரும் ஜெபம்
அற்புத ஆரோக்கிய மழை மலைத் தாயே !
அச்சிறுபாக்கம் நல்லாயன் குன்றில் வீற்றிருக்கும் அம்மா /
உமது குழந்தைகள் நாங்கள் உம்மை வணங்குகிறோம்
கடவுளின் அன்னையே தாயே , உம்மையே நாங்கள் பின்பற்றி நம்பிக்கையோடு
உம்மைப் பற்றிக் கொண்டு வாழ்வில் இறையருள் பெற்றிட நிறையாசீர் தாரும் அம்மா .
பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் அன்னையே ,
பரம தந்தையிடம் எமக்காய் பரிந்து பேசும் அம்மா ,
தீராத நோய்களை எல்லாம் தீர்ப்பவர் நீரே ,
நம்பிக்கையோடு வருபவர்க்கு ஆறுதல் நீரே ,
நன்றியால் உம் பாதம் பணிகின்றோம் .
அம்மா ஆரோக்கியத் தாயே ,
ஆரோக்கியத்தை மழையாய்ப் பொழிபவரே,
நற்சுகத்தையும் , மன அமைதியையும் நிறைவாய்த் தாரும் அம்மா /
ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்திட,
வேலைவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் பெற்றிட ,
திருமகன் இயேசுவிடம் மன்றாடும் தாயே /
எங்கள் உழைப்பையும் தொழிலையும் ஆசீர்வதியும் தாயே /
எங்களுக்குப் போதிய மழையைத் தந்து விளைச்சலைப் பெருக்கும் அம்மா /
சுப நிகழ்ச்சிகளும் , குழந்தை பாக்கியம் கிடைத்திடவும் தயை புரியும் தாயே /
அன்பின் நிறைவே அன்னையே /
சமுதாயத்தில் நீதி நேர்மை நிலைத்திடவும் ,
எம்மில் மனித நேயம் வளர்ந்திடவும் அருள் தாரும் /
உம் வழியாய்ப் பெற்றுக்கொள்ளும் நன்மைகளுக்கு ஈடாக /
எம் அயலாரின் துன்பத்தில் துணை நிற்க / நல்ல மனதைத் தாரும் /
உம் திருமகன் இயேசுவைப் போல் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவர்களாய் வாழ வரமருளும் ஆமென்
வல்லமையின் ஜெபம்
அருள் நிறைந்த மழை மலைத் தாயே வாழ்க !
கடவுளின் அருள் இரக்கத்தை நானும் கண்டடைய ,
பரிசுத்த ஆவியின் வல்லமை என் மேல் நிழலிட ,
அவரது திருவுளப்படி அனைத்தும் எனக்கு நிகழ்ந்திட ,
ஆசீர் பெற்ற வாழ்க்கை எனக்கு அமைந்திட ,
அரும் பெரும் செயல்கள் என் வாழ்விலும் நடந்திட ,
அவர் எனக்குச் சொல்வதை நான் எப்பொழுதும் செய்திட
மன்றாடி அருளும் அம்மா ஆமென்
மழை மலை மாதாவின் மன்றாட்டு மாலை
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!
புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனின் தாயே
அச்சிறுபாக்கத்தின் அன்னையே
ஆரோக்கிய மழை மலை மாதாவே
நல்லாயன் குன்றின் நாயகியே
நோயாளிகளுக்கு நற்சுகமே
அன்டிவந்தோரின் அடைக்கலமே
அற்புதங்களை மழையாய்ப் பொழியும் தாயே
பெண்களுக்குள் பேறு பெற்ற தாயே
பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் தாயே
இயேசுவை உதரத்தில் தாங்கிய தாயே
இறைவனிடம் பரிந்து பேசும் தாயே
வார்த்தைக்குச் செவிமடுத்த தாயே
வார்த்தைக்கு அடிமை என்று தாழ்த்திய தாயே
ஆகட்டும் என்று அடிபணிந்த தாயே
அருள் நிறைந்த தாயே
எலிசபெத்துக்கு உதவி செய்த தாயே
பிறரது துன்பத்தைப் பகிர்ந்து கொண்ட தாயே
கானாவூர் குறை தீர்த்த தாயே
இயேசுவின் சொல்படி செய்யப் பணித்த தாயே
தாய்மையின் உதாரணமே தாயே
உள்ளத்தில் இருத்தி தியானித்த தாயே
இயேசுவுடன் தோள் கொடுத்துச் சென்ற தாயே
சீடர்களுடன் சேர்ந்து செபித்த தாயே
சீடர்களை உறுதிப்படுத்திய தாயே
திருக்குடும்பத் திருவிளக்கே தாயே
திருச்சபையின் தாயே
புரட்சியால் புனிதம் கண்ட தாயே
புதுமைகள் புரியும் தாயே
பாவத்தை வெறுக்கும் தாயே
பாவியை அரவணைக்கும் தாயே
ஆவியால் வழிநடத்தப்பட்ட தாயே
ஆண்டவரை ஏற்றிப் போற்றிய தாயே
விடுதலை கீதம் இசைத்த தாயே
விடியலுக்காய் மகனைக் கையளித்த தாயே
தாழ்ந்தோரை உயர்த்த ஆசித்த தாயே
பசித்தோருக்கு நலன் தர துடித்த தாயே
செல்வரை வெறுமையாகக வேகம் கொண்ட தாயே
செருக்குற்றோர் சிதறிட சிந்தை கொண்ட தாயே
வலியோரை வீழ்த்த ஆவல் கொண்ட தாயே
தாழ்த்தப்பட்டவர்களின் தாயே
ஒடுக்கப்பட்டவர்களின் ஓங்கிய குரலே தாயே
நசுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையே தாயே
மதங்களைக் கடந்த தாயே
மனிதம் மலர அருள் புரியும் தாயே
சமத்துவம் மலர ஜெபிக்கும் தாயே
சமாதானத்தை விரும்பும் தாயே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
எங்கள் அன்பு அன்னையே
உம்மீது நம்பிக்கையோடு நாடி வந்திருக்கின்ற
எங்களது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து
நாங்களும் உம்மைப் போல் மாற அருள் தாரும்
முதல் : இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பேறுபெற்றவர்களாக இருக்கத் தக்கதாக.
துணை : சர்வேசுரனுடைய புனித அன்னையே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1960 க்கும் 70க்கும் இடையிலான காலம் தமிழகத்தில் புயல், வறட்சி போன்ற இயற்கை அழிவுகள் நிகழ்ந்தது.
1966 ம் ஆண்டு நவம்பரில் ஒரு புயல் சென்னையில் பெரும் சேதம் ஏற்படுத்தியது.
ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தை புயல்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் 1967 முதல் 1969 வரை தமிழகத்தை கடும் வறட்சி பாதித்தது.
அப்போது அருட்தந்தை புஷ்பம் அடிகளார் மரி அன்னையின் திருஉருவத்தை ஒரு தேரில் வைத்து அச்சிறுபாக்கம் பங்கு ஆலயமான புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து 65 கி.மீ. தொலைவு வரை மழை வேண்டி ஜெபித்துக்கொண்டு பொதுமக்கள் புடைசூழ எடுத்துச் சென்றார்.
தேர் புறப்பட்ட 9-ம் நாள் மறுபடியும் ஆலயத்தை வந்தடைந்தவுடன் மக்களின் மனம் குளிரும் வண்ணம் பெருமழை பெய்தது.
இதைக் கண்ட மக்கள் திரளாகக் கூடி நின்று மழையைக் கொடுத்த "மழை மாதாவே" என்று குரலெழுப்பி மகிழ்ந்தனர்.
மலையில் வீற்றிருந்து மழையைத் தந்த அன்னைக்கு "மழை மலை மாதா" என்று பெயரிட்டு மக்கள் அன்றிலிருந்து வழிபட ஆரம்பித்தனர்.
செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் துணைப் பாதுகாவலியாக மழை மலை அன்னை கொண்டாடப்படுகிறார்.
ஆண்டுத் திருவிழா - அக்டோபர் மாத முதல் சனிக்கிழமை
வரம் தரும் ஜெபம்
அற்புத ஆரோக்கிய மழை மலைத் தாயே !
அச்சிறுபாக்கம் நல்லாயன் குன்றில் வீற்றிருக்கும் அம்மா /
உமது குழந்தைகள் நாங்கள் உம்மை வணங்குகிறோம்
கடவுளின் அன்னையே தாயே , உம்மையே நாங்கள் பின்பற்றி நம்பிக்கையோடு
உம்மைப் பற்றிக் கொண்டு வாழ்வில் இறையருள் பெற்றிட நிறையாசீர் தாரும் அம்மா .
பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் அன்னையே ,
பரம தந்தையிடம் எமக்காய் பரிந்து பேசும் அம்மா ,
தீராத நோய்களை எல்லாம் தீர்ப்பவர் நீரே ,
நம்பிக்கையோடு வருபவர்க்கு ஆறுதல் நீரே ,
நன்றியால் உம் பாதம் பணிகின்றோம் .
அம்மா ஆரோக்கியத் தாயே ,
ஆரோக்கியத்தை மழையாய்ப் பொழிபவரே,
நற்சுகத்தையும் , மன அமைதியையும் நிறைவாய்த் தாரும் அம்மா /
ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்திட,
வேலைவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் பெற்றிட ,
திருமகன் இயேசுவிடம் மன்றாடும் தாயே /
எங்கள் உழைப்பையும் தொழிலையும் ஆசீர்வதியும் தாயே /
எங்களுக்குப் போதிய மழையைத் தந்து விளைச்சலைப் பெருக்கும் அம்மா /
சுப நிகழ்ச்சிகளும் , குழந்தை பாக்கியம் கிடைத்திடவும் தயை புரியும் தாயே /
அன்பின் நிறைவே அன்னையே /
சமுதாயத்தில் நீதி நேர்மை நிலைத்திடவும் ,
எம்மில் மனித நேயம் வளர்ந்திடவும் அருள் தாரும் /
உம் வழியாய்ப் பெற்றுக்கொள்ளும் நன்மைகளுக்கு ஈடாக /
எம் அயலாரின் துன்பத்தில் துணை நிற்க / நல்ல மனதைத் தாரும் /
உம் திருமகன் இயேசுவைப் போல் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவர்களாய் வாழ வரமருளும் ஆமென்
வல்லமையின் ஜெபம்
அருள் நிறைந்த மழை மலைத் தாயே வாழ்க !
கடவுளின் அருள் இரக்கத்தை நானும் கண்டடைய ,
பரிசுத்த ஆவியின் வல்லமை என் மேல் நிழலிட ,
அவரது திருவுளப்படி அனைத்தும் எனக்கு நிகழ்ந்திட ,
ஆசீர் பெற்ற வாழ்க்கை எனக்கு அமைந்திட ,
அரும் பெரும் செயல்கள் என் வாழ்விலும் நடந்திட ,
அவர் எனக்குச் சொல்வதை நான் எப்பொழுதும் செய்திட
மன்றாடி அருளும் அம்மா ஆமென்
மழை மலை மாதாவின் மன்றாட்டு மாலை
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!
புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனின் தாயே
அச்சிறுபாக்கத்தின் அன்னையே
ஆரோக்கிய மழை மலை மாதாவே
நல்லாயன் குன்றின் நாயகியே
நோயாளிகளுக்கு நற்சுகமே
அன்டிவந்தோரின் அடைக்கலமே
அற்புதங்களை மழையாய்ப் பொழியும் தாயே
பெண்களுக்குள் பேறு பெற்ற தாயே
பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் தாயே
இயேசுவை உதரத்தில் தாங்கிய தாயே
இறைவனிடம் பரிந்து பேசும் தாயே
வார்த்தைக்குச் செவிமடுத்த தாயே
வார்த்தைக்கு அடிமை என்று தாழ்த்திய தாயே
ஆகட்டும் என்று அடிபணிந்த தாயே
அருள் நிறைந்த தாயே
எலிசபெத்துக்கு உதவி செய்த தாயே
பிறரது துன்பத்தைப் பகிர்ந்து கொண்ட தாயே
கானாவூர் குறை தீர்த்த தாயே
இயேசுவின் சொல்படி செய்யப் பணித்த தாயே
தாய்மையின் உதாரணமே தாயே
உள்ளத்தில் இருத்தி தியானித்த தாயே
இயேசுவுடன் தோள் கொடுத்துச் சென்ற தாயே
சீடர்களுடன் சேர்ந்து செபித்த தாயே
சீடர்களை உறுதிப்படுத்திய தாயே
திருக்குடும்பத் திருவிளக்கே தாயே
திருச்சபையின் தாயே
புரட்சியால் புனிதம் கண்ட தாயே
புதுமைகள் புரியும் தாயே
பாவத்தை வெறுக்கும் தாயே
பாவியை அரவணைக்கும் தாயே
ஆவியால் வழிநடத்தப்பட்ட தாயே
ஆண்டவரை ஏற்றிப் போற்றிய தாயே
விடுதலை கீதம் இசைத்த தாயே
விடியலுக்காய் மகனைக் கையளித்த தாயே
தாழ்ந்தோரை உயர்த்த ஆசித்த தாயே
பசித்தோருக்கு நலன் தர துடித்த தாயே
செல்வரை வெறுமையாகக வேகம் கொண்ட தாயே
செருக்குற்றோர் சிதறிட சிந்தை கொண்ட தாயே
வலியோரை வீழ்த்த ஆவல் கொண்ட தாயே
தாழ்த்தப்பட்டவர்களின் தாயே
ஒடுக்கப்பட்டவர்களின் ஓங்கிய குரலே தாயே
நசுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையே தாயே
மதங்களைக் கடந்த தாயே
மனிதம் மலர அருள் புரியும் தாயே
சமத்துவம் மலர ஜெபிக்கும் தாயே
சமாதானத்தை விரும்பும் தாயே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
எங்கள் அன்பு அன்னையே
உம்மீது நம்பிக்கையோடு நாடி வந்திருக்கின்ற
எங்களது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து
நாங்களும் உம்மைப் போல் மாற அருள் தாரும்
முதல் : இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பேறுபெற்றவர்களாக இருக்கத் தக்கதாக.
துணை : சர்வேசுரனுடைய புனித அன்னையே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.