- வணக்க மாதம்
- உத்தரிக்கிற ஆத்துமாக்கள்
- நாள் 11-15
பதினோராம் நாள்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி பண்ண வேணுமென்கிற காரணங்களைக் காண்பிக்கிற பொது விளக்கமாவது
தியானம்
முன் சொன்ன தியானங்களில் உத்தரிக்கிறஸ்தலம் உண்டென்றும், அதில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் மனோவாக்குக்கெட்டாத வருத்தங்களை அநுபவிக்கிறார் களென்றும் எடுத்துக்காட்டினோம். இப்போது அந்த ஆத்துமாக்களுக்கு உதவி ஒத்தாசை பண்னவேணுமென்கிற விசேஷ காரணங்களை விவரித்துச் சொல்லுவோம். ஆயினும் முதலில் நாம் எந்தப்பிரகாரமாய் இந்த உதவி ஒத்தாசை செய்யலாமென்று கொஞ்ச நேரம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம் மனுஷனானவன் இரு வகை திரவியங்களைச் சம்பாதித்துக் கொள்ளலாம் . அதாவது , ஆத்துமத்தைச் சேர்ந்த திரவியங்களும் சரீரத்துக்கடுத்த திரவியங்களுமாம் . பணம் ,காசு, உடமை, காணி ,வீடு, வாசல், இது முதலானவைகள் சரீரத்துக்கடுத்த ஆஸ்தி திரவியங்கள் தான். ஜெபத்தினாலும் தபத்தினாலும் தர்மத்தினாலும் மற்ற எந்தப் புண்ணியங்களினாலும் வரும் பேறுபலன்களாகிய மோட்சத்துக்குச் சுதந்திரமும் மற்ற ஞான வரங்களும், ஆத்துமத்தைச் சேர்ந்த ஞான திரவியங்களாம்.
இப்போது சொன்ன உலக திரவியங்கள் மனுஷனுக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, அவன் அவைகளைத் தன் மனதின்படியே செலவழிக்கச் சுதந்திரவானாயிருகிறானென்று யாரும் சொல்லுவார்களல்லவோ ?அதைப்போல அவன் அடைந்த ஞானத் திரவியங்கள் அவனுக்குச் சொந்த ஆஸ்தியாயிருந்தாலும் அவைகளைச் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு கீழ்படிந்து செலவழிக்க சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறானென்று சொல்லவேனுமல்லவோ? இவ்வுலக ஆஸ்தியுள்ளவன் தன்னுடைய திரவியங்களைத் தன் சொந்த அவசரங்களுக்குச் செலவு பண்ணலாமென்றிருக்கிற பிரகாரமே, அவைகளைப் புறத்தியாருடைய அவசரங்களுக்காகவும் செலவழிக்கலாமல்லவோ?
அப்படித்தானே ஞானத் திரவியங்களுக்கு உடையவன் அவைகளையெல்லாம் தனக்கு வைத்துக்கொள்ளலாமென்கிறதுபோலே, அவைகளைச் சர்வேசுரன் கட்டளையிட்ட பிரகாரமாய் மற்றவர்களுக்கும் கொடுக்கலாமன்றோ?
அதெப்படியென்றால், இராஜாவுக்கு ஒரு மனுஷன் ஒரு பெரிய சகாயத்தைச் செய்தான் .அதனாலே அவன் பேரில் இராஜா சந்தோசப்பட்டு அவனுக்கு யாதோர் பெரிய வெகுமதி கொடுக்கப் போகிற சமயத்தில் இந்த மனுஷன் இராஜாவைப் பார்த்து நான் பெற்றுக் கொண்ட இந்த வெகுமதியை எனக்குக் கொடுக்காமல் எனது சிநேகிதனான இன்னானுக்கு அளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறேன் என்றால் அவனுடைய மன்றாட்டுக்கு இராஜா இரங்கி அவன் கேட்டது போல செய்வான் அன்றோ ? அப்படியே ஜெப தான தர்மங்களினாலும் மற்ற புண்ணியங்களினாலும் மனுஷன் சுதந்தரித்த ஞான திரவியங்களை சர்வேசுரனை மன்றாடி உயிரோடு இருக்கிறவர்களுக்காவது செத்தவர்க களுக்காவது வரப்பண்ணக்கூடுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.
இவ்விஷயத்தில் ஒரு நியாயம் அறியவேண்டியது. அதாவது: எந்தப் புண்ணியத்திலும் மூன்று காரியம் அடங்கியிருக்கிறதாய் வேத சாஸ்திரிகள் நிச்சயிக்கிறார்கள். அதேதென்றால், பேறுபலனும், மன்றாட்டுப் பலனும் பரிகாரப்பலனும் ஆகிய இம்மூன்றுமாம். புண்ணியத்தைச் செய்தவன் பேறுபலனால் சர்வேசுரனுக்குப் பிரியப்படுகிறான்.
மன்றாட்டுப்பலனால் தனக்காவது மற்றவனுக்காவது யாதோர் சகாயத்தைப் பெற்றுக்கொள்ளுகிறான், பரிகாரப்பலனால் தன் பாவங்களுக்காவது தான் குறிக்கிற வேறு மனுஷனுடைய பாவங்களுக்காவது பரிகாரம் பண்ணுவான். அதெப்படி ஆகுமென்று ஓர் உவமையினால் காண்பிக்கலாம். அதேதெனில், ஒருவன் சுத்தக் கருத்தோடு ஒருசந்தியாய் இருக்கிறான். அது புண்ணியமும் தவமுமாய் இருக்கிறதினாலே தனக்கு வருகிற பேறுபலனால் சர்வேசுரனுக்குப் பிரியப்பட்டு வெகுமதி அடைவான். இந்த ஒரு சந்தியினிமித்தம் தன்னுடைய வியாதியாவது தன் சினேகிதனுடைய வியாதியாவது நீங்கவேணுமென்று கேட்டால், இந்த மன்றாட்டுப் பலனால் அது பெற்றுக் கொள்ளத்தக்கதாயிருக்கும்.
ஒருசந்தியாயிருக்கிறது கடினமும் வருத்தமுமாய் இருக்கிறபடியினாலே இந்த வருத்தத்தைத் தன் பாவங்களுக்காவது புறத்தியாருடைய பாவங்களுக் காவது ஒப்புக்கொடுத்தால் அது பரிகாரப் பலனால் பரிகாரமாகும். இதிப்படியாயினும் பேறுபலன் மனுஷனுக்கு: சுய தீர்மானமாயிருக்கிறபடியினாலே, அவனுக்கு செல்லுமேயல்லாமல் மற்ற யாருக்கும் கொடுக்கப்படுகிற தில்லை என்பது மெய்தான். ஆனால் மன்றாட்டுப் பலனையும் பரிகாரப் பலனையும் யாருக்கும் கொடுக்கலாமென்கிறதினாலே, அவைகளை உத்தரிக்கிற ஆத்துமாக் களுக்கு ஒப்புக்கொடுத்தால், சர்வேசுரனுடைய மட்டற்ற கிருபையினாலே அந்த ஆத்துமாக்கள் செய்ய வேண்டிய பரிகாரமும் படவேண்டிய உத்தரிப்பு வேதனையும்
குறையுமென்கிறது குன்றாத சத்தியமாம். இதெல்லாம் அதிக தெளிவாகும்படிக்கு இன்னும் ஓர்
உவமையினால் வெளியாக்குவோம்.
அதென்ன வென்றால் ஒரு மனுஷன் வெகு கடன்பட்டு அடைக்க வகையில்லாமல் நடுவனால் சிறையில் வைக்கப்பட்டு அதிக வருத்தப்படுகிறான் . அதில் வேலை செய்யக்கூடாததினாலும் , பிச்சை இரக்கக் கூடாததினாலும் ஒன்றும் சம்பாதிக்கமாட்டாமல் தனக்கு விதித்த காலமுடியுமட்டும் இந்த நிர்ப்பாக்கியத்தில் இருப்பானல்லவோ? அவனுடைய அவதியை அறிந்த தர்மிஷ்டனொருவன் கொடுக்கவேண்டிய கடனை செலுத்தி அவனைச் சிறையிலிருந்து மீட்டிரட்சிக்கிறான். உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்கள் மட்டிலும் அப்படித்தான் ஆகிறதென்று யாவருக்கும் புலப்படும். முன் சொன்னபிரகாரமாய் நாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி ஒத்தாசை பண்ணக்கூடும் என்கிறதே சர்வேசுரனு டைய பெரிய கிருபையும் மட்டற்ற சகாயமுமாய் இருக்கிறதல்லாமல் மற்றபடியல்ல.
இப்போது காண்பித்த வண்ணமே கிறிஸ்தவர்கள் சர்வேசுரனை மன்றாடி உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு சகாயம் பண்ணக் கூடுமென்பது சத்திய விசுவாசமாகையால் அப்படிச் செய்வது எவ்வளவு நல்லதென்றும் அவசரமுள்ளதென்றும் இனி சொல்லப் போகிற தியானங்களில் தேவ கிருபையைக் கொண்டு காண்பிக்க முற்படுவோம்
. கிறிஸ்துவர்களே! நீங்கள் ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யும் ஜெபங்களினாலும் தர்மங்களினாலும் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகள் முடியும் அல்லது குறையும் என்று அர்ச் அகுஸ்தீனூஸ் நிச்சயமாய் வசனித்தார் அதனாலே நீங்கள் தக்க பிரகாரமாய் ஆத்துமங்களுக்குச்
செய்கிறதெல்லாம் வீணாய்ப் போகாமல் பலிக்குமென்கிறதைப்பற்றி மகா சுறுசுறுப்போடே ஆத்துமாக்களுக்கு உதவி பண்ண முன்வரக்கடவீர்கள்.
மேலும் இராஜாவுக்குத் துரோகியாய் இருக்கிறவன், தான் அவனிடத்தில் கேட்கும் மன்றாட்டை அடைவானோவென்ன ? சொல்லுங்கள். அவனடையமாட்டானென்றால் நீங்கள் ஆத்துமாக்களைக் குறித்து வேண்டிக் கொள்ளும்போது பாவத்தால் உங்கள் ஆண்டவருக்குத் துரோகிகளே இல்லையோவென்று பார்க்கவேண்டாமோ? சாவான பாவத்தோடு இருப்பீர்களானால் முதலாவதாக உத்தம மனஸ்தாபப்படவேண்டும்.
கடைசியிலே மனுஷர் செய்யும் புண்ணியங்களில் கருத்தும் கவனமும் பக்தியும் இல்லாததினாலே அந்தப் புண்ணயங்களுக்குச் செல்லும் பலன்களை அடையாமல்
போகிறார்களாம். அதனாலே நீங்கள் ஆத்துமாக்களுக்கு செய்யும் செபங்களையும் தர்மங்களையும் வேண்டிய கருத்தோடும் பக்தியோடும் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக,
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திவ்விய இருதயமே ! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
நித்திய ஜீவியமுள்ள கடவுளின் குமாரனாகிய சேசுக்கிறிஸ்துநாதரே சுவாமீ, தேவரீர் உலகத்தின் இரட்சணியத்துக்காக மத்தியான வேளையில் சிலுவை பரத்தில் அறையுண்டு உயர்த்தப்பட்டு எங்கள் பாவங்களுக்கு விமோசனமாக உம்முடைய விலைமதியா திரு இரத்தத்தைச் சிந்தினீரே, அடியோர்கள் மோட்ச இராச்சியத்தில் பிரவேசித்து நித்திய ஆனந்த மகிமைப் பிரதாபத்தை அடையத்தக்கதாக அநுக்கிரகம் செய்தருள வேணுமென்று தேவாரைத் தாழ்ச்சி வணக்கத்துடனே மன்றாடுகிறோம் சுவாமீ, ஆமென்.
பதினோராம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் சிலுவை பாதை செபிக்கிறது. கூடாதுபோனால் சேசுக்கிறிஸ்து நாதருடைய திருப்பாடுகளைக் குறித்து 14-பரமன்_ மந்திரமும் 14-பிரியதத்த மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறது.
புதுமை
கர்த்தூசியான் சபையில் உட்பட்ட பெரிய சாஸ்திரியான சூரியூஸ் என்பவர் அர்ச் கிறிஸ்தீனம்மாளுடைய சரித்திரத்தை எழுதினார். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் இந்த அர்ச்சியசிஷ்டவள் மிகவும் பக்தியாய் இருந்ததினாலே ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாக, சொல்லிலும் நினைவிலும் அடங்காத தவக்கிரியைகளை நடத்திக்கொண்டு வருவாள். ஒருநாள் ஒர் அதிசயமான காட்சியைக் கண்டாள். அதாவது: அவளுடைய ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்து
சம்மனசுக்களால் தூக்கப்பட்டு உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய் அதில் ஆத்துமாக்கள் அநுபவிக்கும் கொடிதான வேதனைகளைப் பற்றும்பற்றாய்த் தரிசித்துக் கண்டாள்.
அதிலிருந்து மோட்ச பேரின்ப விட்டுக்குப்போய் அப்பரம இராச்சியத்தில் மோட்சவாசிகளுக்கு உண்டான மனோ வாக்குக்கெட்டாத சந்தோஷங்களையும் மகிமைகளையும் தெளிவாய்ப்பார்த்து அறிந்தாள். இதெல்லாவற்றையும் தரிசித்த பிறகு சர்வேசுரன் அவளுக்குச் சொன்னதாவது கிறிஸ்தீனம்மாளே. இப்போது முடியாத பாக்கிமுள்ள பரம ஸ்தலத்துக்கு வந்தாய். இதிலே தங்கியிருக்க வேனுமோ அல்லது திரும்பப் பூமியிலே இறங்கி உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிப் பேறு பலன்களை அடையவும் அருந்தவத்தைச் செய்யவும் போகவும் வேண்டுமோ ? இவ்விரண்டில் எது உனக்கு அதிக விருப்பமாக இருக்கிறதென்று சொல்லுவாயாக என்றார் . அதற்கு அவள் விடையாக
நிர்பாக்கியமான ஆத்துமாக்களுக்காக வருத்தப்படவும் தகனப்பலியாகவும் இருக்கத்தக்கதாக உம்முடைய சித்தமிருந்தால் திரும்பப் பூமியிலே இருக்கத் தெரிந்து கொள்ளுகிறேன் " என்றாள்
இந்தக் காட்சி யைத் கண்ட பிற்பாடு அர்ச். கிறிஸ்தீனம்மாள் ஆத்துமாக்களைக் குறித்து முன்னிலும் நூறுபங்கு அதிக அருந்தவக்கிரியைகளைச் செய்துகொண்டு வருவாள். அநேக நாள் யாதோர் ஆகாரம் புசிக்காமலிருப் பாள், தன்னுடைய மிருதுவான சரீரத்தை இரத்தம் திரளாய் ஒடுமட்டும் அகோரமாய் அடிப்பாள், கூர்மையான முட்செடிகளுக்குள்ளே புரளுவாள் . எவ்வகையிலும் தன்னை உபாதிக்கத் தேடுவாள் . அவள் தன்னைப் படுத்துகிற கொடிய வேதனைகளைக் கண்டு மற்றவர்கள் அதிசயப்பட்டு கிரிஸ்தீனம்மாள் இப்படி உயிர் பிழைக்கிறது பெரிய புதுமை என்பார்கள் . அப்படி அவள் யாதொன்றையும் அநேக வருஷம் குறையாமல் அருந்தவத்தைச் செய்து வந்ததினால் திரளான ஆத்துமாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து மீட்டு மோட்ச பேரின்பத்துக்குச் சேர்த்தாள் என்பது அதிசயமல்ல . அவள் அப்படி மீட்டு இரட்சித்த ஆத்துமாக்கள் அவளுக்குக் காணப்பட்டு அவளை வாழ்த்தி தோத்திரம் பண்ணுவார்கள் . கடைசியிலே அவளும் அந்த எண்ணிக்கையில்லா ஆத்துமாக்களால் சூழப்பட்டு பாக்கியமாய் மரித்து மோட்ச பேரின்பத்திலே சேர்ந்தாள்
கிறிஸ்தவர்களே ! உயர்ந்த கோத்திரத்தில் பிறந்தவளுமாய் மெல்லிய சரீரமுள்ளவளுமாய் இருந்த கிரிஸ்தீனம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அவ்வளவு அருந்தவக் கிருத்திரியங்களை நடப்பித்தாள் என்று கண்டு , நீங்கள் இந்த ஆத்துமங்களைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருக்கக் கூடுமோ ? எல்லா நன்மைகளும் நிறைந்த மோட்சத்தை அடைவதற்கு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியாய் இருக்கிறது நல்ல வழி என்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
பன்னிரெண்டாம் தேதி
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சர்வேசுரனுக்கு உகந்த புண்ணியமாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
மனுஷனானவன் தேவ கிருபையினாலே செய்யக் கூடுமான புண்ணியங்களுக்குள்ளே தன்னுடைய ஜெப தப தர்மத்தினாலும் நற்கிரியையினாலும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களை மீட்டிரட்சித்து மோட்ச பேரின்பத்துக்குச்
இணை த்துக்கொள்ளுகிறதே சர்வேசுரனுக்கு மிகவும் உகந்த பண்ணியமாமென்கிறதுக்குச் சற்றாகிலும் சந்தேகமில்லை. அதெப்படியென்றால், உண்டுபண்ணப்பட்ட சகலத்தையும். விசேஷமாய்ப் புத்தியுடைத்தான சமஸ்த வஸ்துக்களைத் தமக்காகப் படைத்தாரென்கிறதுக்கு அர்த்தமேதெனில், புத்தியுள்ள இந்த வஸ்துக்கள் யாவும் தம்மை இவ்வுலகத்தில் அறிந்து நேசித்துச் சேவித்து மகிமைப்படுத்தின.
பிற்பாடு தம்மை என்றென்றைக்கும் மோட்சத்தில் முகமுகமாய்க் கண்டு ஏகமாய் நேசித்து ஸ்துதித்துத் தம்மிடத்திலிருக்கவும் வாழவுமே சர்வேசுரன் புத்தியுள்ள வஸ்துக்களைப் படைத்தாரென்று அர்த்தமாகும். ஆனால் சர்வேசுரன் அவர்களுக்காக விரும்பித் தேடின இந்த மகிமையை மேற்சொன்ன புத்தியுள்ள வஸ்துக்கள் மோட்சத்தை அடைந்த பிற்பாடு மாத்திரமே சரிவரச் செலுத்துவார்கள் என்கிறதினாலே, அந்த ஆத்துமாக்கள் தேவ மகிமையில் சேராதிருக்கும் வரையில் அந்தத் தேவ மகிமைக்கு ஒரு குறைவுபோல் இருக்குமல்லவோ? அதனால் இன்னும் மோட்சத்தை அடையாத உத்தரிக்கிற ஆத்துமாக்களை கட்டு மோட்சத்துக்குச் சேர்ப்பிக்கிறதே சர்வேசுரனை உத்தம பிரகாரமாய் மகிமைப்படுத்துவதாய் இருக்கிறது. இந்தப் புண்ணியம் அவருக்கு மிகவும் உகந்த புண்ணியமா. இருக்கிறதென்பது தப்பாது.
உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கிறபடியினாலே சர்வேசுரனுக்கு அதிக பிரியமுள்ள ஆத்துமாக்களாம். அவர் அந்த ஆத்துமாக்களை விசேஷ பட்சத்துடனே நேசித்துக்கொண்டு வருகிறாரென்கிறதைப் பற்றி, அவர்கள் படும் வேதனைகள் சீக்கிரமாய் முடிவேணுமென்றும் விரும்பிக்கொண்டிருப்பாரல்லவோ?ஆனால் அந்த ஆத்துமாக்கள் நீதிக்கு பரிகாரம் செய்ய வேண்டி இருக்கிறதினால் இந்தப் பரிகாரம் முடியும் மட்டும் அவை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்க வேணும் . ஆயினும் மனுஷனானவன் சர்வேசுரன் நியமித்த வண்ணமே அந்த ஆத்துமாக்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை நிறைவேற்றினால் அவர்கள் உடனே மோட்சத்துக்கு சேருவார்கள் அல்லவோ ? அன்றியும் சர்வேசுரன் தமக்கு ஒரு உபகாரத்தைச் செய்தது போல எண்ணி ,அப்படிப் பண்ணின மனுஷனுக்கு வேண்டிய நன்மைகளைத் தந்தருள்வார் என்பது அங்கீகரிக்கத்தக்க சத்தியமாகும்.
கடவுளான சர்வேசுரன் எல்லா இலட்சணங்களைக் கொண்டிருந்தாலும் அவருடைய தயவு எல்லாவற்றிற்கும் மேற்பட்டதாய் இருக்கிறதென்கிறதினாலே, யாவருக்கும் நன்மையைச் செய்வது அவருடைய சுபாவக் குணமல்லாமல் தண்டனை யிடுகிறது அவருக்கு வருத்தம் போல் காணப்படுகிறது. அதனாலே பழைய தீர்க்கதரிசியான எசெக்கியேலென்பவருடைய வாயினாலே அவர் முறைப்படுகிறாற்போல, "நாம் பூமியைச் சிதைக்காதபடிக்கு நம்மை எதிர்த்துப்பேசித் தடுக்கும்படியாக ஒரு மனுஷனை நாம் தேடியிருந்தாலும், இந்த மனுஷன் அகப்படவில்லை" என்று சர்வேசுரன் தாமே திருவுளம்பற்றினார். அவ்வாறே சர்வேசுரன் தம்முடைய நீதியைச் செலுத்தி உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கடின வேதனைகளைக் கட்டளை பிட்டுக் கொண்டு வந்தாலும், தம்முடைய கோபத்தை அமர்த்தவும், தாம் இடுகிற தண்டனைகளைத் தடுத்து நிறுத்தவும், அந்த ஆத்துமாக்களை மீட்கவும், மனுஷர் பிரயாசைப்படவேணுமென்று மிகவும் ஆசையாயிருக்கிறார். அவருடைய ஆசை அப்படியிருக்க, நாம் முடிந்தவரை உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப் படாதிருக்கக்கூடுமோ?
மேலும், யாதொரு பாவி பாவ வழியை விட்டு நன்னெறிக்குத் திரும்பினால் அதனால் மோட்சத்தில் வெகு சந்தோஷம் உண்டாகுமென்று சேசு கிறிஸ்துநாதர் சுவாமிதாமே திருவுளம் பற்றினார். மனந்திருந்தியபின் இந்தப் பாவியானவன் இன்னும் பூமியிலே இருக்கிறதினாலே மறுபடி கெட்டுப்போவானே, புண்ணியத்திலே நிலையாய் நிற்பானோவென்று சந்தேகமிருந்தாலும், அவனைக் குறித்து மோட்சத்தில் அவ்வளவு கொண்டாட்டம் இருக்கிறபோது, இஷ்டப்பிரசாதத்தில் நிலைக்கொண்ட உத்தரிக்கிற ஸ்தலத்தின் யாதோர் ஆத்துமம் உங்களாலே மீட்கப்பட்டுப் பரமகதியைச் சேர்ந்தால், சர்வேசுரனுக்கும் மோட்சவாசி களுக்கும் சம்மனசுகளுக்கும் எவ்வளவு அதிக சந்தோஷம் இருக்குமென்று சொல்லத்தகும் தன்மையல்ல.
பிதாப்பிதாவாகிற அபிரகாமென்பவர் தம்முடைய குமாரனான ஈசாக்கைச் சர்வேசுரனுக்குப் பலியாக வெட்டப்போகிற சமயத்திலேதானே ஒரு சம்மனசு வந்து "நில், நில், உன் பிள்ளையை மோசஞ்செய்யாதே"Dஎன்று தடுக்கிறபோது தகப்பனான அபிரகாமுக்கு எம்மாத்திரம் சந்தோஷம் உண்டானதென்று சொல்லக்கூடுமோ? அதைப்போல சர்வேசுரன் தம்முடைய நீதியின்படியே தாம் நேசிக்கிற ஆத்துமாக்களை உத்தரிப்பு ஸ்தலத்து வேதனை
களால் தண்டிக்கையில் மனுஷர் வந்து அவரைக் கெஞ்சி இரந்து அந்த ஆத்துமாக்களுக்காகப் பரிகாரத்தை ஒப்புக்கொடுத்து, "ஆண்டவரே நில்லும், நில்லும், இனி அந்த ஆத்துமாக்களின் பேரில் கோபமாயிராதேயும். தாமதமின்றி அவர்களை உம்மிடத்தில் சேர்த்தருளும் சுவாமி, சுவாமீ" என்று சொன்னால், சர்வேசுரனுக்கு மனோவாக்குக்கெட்டாத சந்தோஷம் உண்டாகுமல்லவோ?
மேலும் தகப்பனொருவன் தான் மிகவும் நேசிக்கிற தன்னுடைய ஏக குமாரனை ஒரு குற்றத்தைப்பற்றித் தண்டிக்கிறபோது தாயானவள் வந்து 'பொறுத்துக் கொள்ளும், பொறுத்துக்கொள்ளும், உம்முடைய மகனை அடிக்காதேயும்' என்று அவனுடைய கையை நிறுத்தினால் தகப்பனுக்கு சந்தோஷமாய் இருக்குமல்லவா? சர்வேசுரன் உத்தரிக்கிற ஆத்துமாக்களை எந்தத் தகப்பனும் தன் பிள்ளைகளை நேசிக்கிறதைவிட மிகவும் அதிகமாய் நேசிக்கிறாரென்கிறதுக்குச் சந்தேகமில்லையே. ஆனதினாலே அவர் நீதியின்படியே அந்த ஆத்துமாக்களுக்கு ஆக்கினை இடுகிறபோது, நாம் அவருடைய பாதத்திலே விழுந்து "பொறுத்துக்கொள்ளும், ஆண்டவரே பொறுத்துக் கொள்ளும், கோபமாய்த் தண்டிக்காதேயும் சுவாமீ, சுவாமி "என்று நாம் பிரார்த்தித்துக்கொண்டால், அவருக்கு அந்த ஆத்துமாக்களின்பேரில் இரக்கம் வருகிறதுமல்லாமல் நமது பேரில் சந்தோஷப்படுவார்.
இவ்விஷயத்தில் சொல்லத்தகும் இன்னும் அநேக நியாயங்களிருந்தாலும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருத்தல் சர்வேசுரனுக்கு உகந்த புண்ணியமென்றும், உத்தம தேவ சிநேகமென்றும் தெளிவாய்க் காண்பிக்கிறதுக்காக இப்போது விவரித்தது போதுமென்றெண்ணுகிறோம்.
உங்களுக்குக் கதியும், சகல நன்மையுமாயிருக்கிற சர்வேசுரனுடைய மகிமையைப் பிரபலியப்படுத்த விரும்புகிற புண்ணியாத்துமாக்களே! உத்தரிக்கிற ஆத்துமாக்களின்
பேரில் பக்தியாயிருப்பதே அதற்கு உத்தம வழியென்று அறிந்து, அந்த ஆத்துமாக்களை மீட்க நீங்கள் செய்யும் தவ தான தர்மமெல்லாவற்றையும் ஒப்புக்கொடுப்பீர்களாக.
அனந்த தயைச் சுருபியுமாய் உங்களுக்கு உயிரை முதலாய்த் தந்தருளினவருமாய் உங்களை மட்டற்ற அன்போடு நேசிக்கிறவருமாயிருக்கிற சர்வேசுரனுக்கு உங்களுடைய பட்சாதாபத்தைக் காண்பிக்க விரும்புகிற புண்ணியாத்துமாக்களே , உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்கிறதே அதற்கு உத்தம வழியென்று அறிந்து, அந்த ஆத்துமாக்களுக்காக வேண்டி உங்களாலே முடிந்த மட்டும் பிரயாசைப்படுவீர்களாக.
ஞான சத்துருக்களுக்குள்ளே கிடந்து இந்தக் கண்ணீர் கனவாயிலே நின்று பிரலாபித்து உங்கள் பேரிலே தேவ
உதவியும் தேவாநுக்கிரகமும் வர வேணுமென்கிற புண்ணியாத்துமாக்களே , உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்கிறதே அதற்கு உத்தம வழியென்று அறிந்து, உங்களுடைய நாக்கு பேச்சில்லாமற்போனாலும், உங்களுடைய கை அசைவில்லாமற்போனாலும், வேதனைப் படுகிற அந்த ஆத்துமாக்களை ஒருபோதும் மறவாமல் இருப்பீர்களாக. -
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திவ்விய இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
ஆண்டவரான சர்வேசுரா சகலமான மரித்தோர்களுக்கு உம்முடைய இராச்சியத்தின் நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்தருளும். இந்த மரித்தோர்கள் உம்முடைய திரு நாமத்தை விசுவ சித்து நேசித்து நம்பியிருக்கிறதினாலே, மனுஷனுடைய கண் காணாததுமாய், அவனுடைய செவி கேளாததுமாய், அவனுடைய மனம் அறியாததுமாய் இருக்கிற பேரின்ப வீட்டின் நன்மைகளை அவர்களுக்குக் கிருபையாய்க் கொடுத்தருளவேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமீ. ஆமென்.
பன்னிரண்டாந்தேதியில் செய்யவேண்டிய நற்கிரியை
உத்திரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு தவக்கிரியையைச் செய்கிறது.
புதுமை
ஸ்பெய்ன் இராச்சியத்தில் உயர்ந்த செல்வந்தர்களான தாய் தகப்பனிடத்திலிருந்து பிறந்த கோர்தோனென்ற அர்ச்.கத்திரினம்மாள் மகிமையான பேரை அடைந்து
வாழ்ந்துகொண்டிருந்தாள். மற்ற சிறு பிள்ளைகள் விளையாட்டுக்களை மாத்திரமே தேடுகிற வயதில் அவள் புண் ணியத்தின் பேரில் அதிக கவலையைாயிருந்த படியினாலே அவளைச் சம்மனசு என்பார்கள். அவளுக்கு எட்டுப் பிராயமாகிறபோது அவளுடைய தகப்பன் இறந்துபோனான்.
சில நாட்களுக்குப் பிற்பாடு அவனுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்புக்குள்ளே கொடிதாய் உபாதைப்படுகிறாற்போல அவளுக்குக் காண்பித்துச் சொன்னதாவது என் பிரியமுள்ள மகளே! நீ என் ஆத்துமத்துக்காக வேண்டிய தபசைப் பண்ணு மட்டும் இந்த அகோர நெருப்பிலே கிடப்பேன் என்றது. இதைக்கேட்டு அவளுடைய இருதயம் அம்பினால் ஊடுருவப்பட்டாற்போலே அவள் அதிக துக்கப்பட்டதுமல்லாமல், கொஞ்ச வயசுள்ளவளாயிருந்தாலும், மெல்லிய சரீரமுள்ளவளாய் இருந்தாலும், அப்போதுதானே பெரிய தபோதனர்கள் முதலாய்ச் செய்யாத தவக்கிரியைகளைச் செய்யத் தொடங்கினாள். கசை முள்ளொட்டியானம் அவள் கையில் இல்லாததினாலே குதிரைச் சவுக்கைக் கொண்டு தன்னை அடித்துக்குதிரை முள்ளைக்கொண்டு தன்னுடைய உடலைக் கீறி இரத்தம் ஏராளமாய் ஒடப்பண்ணுவாள். அவள் சொரிந்த கண்ணிரினாலும் பொழிந்த ஜெபங்களினாலும் சிந்தின இரத்தத்தினாலும் அவளுடைய தகப்பன் தேவ நீதிக்குச் செலுத்தவேண்டிய பரிகாரக்கடன் தீர்ந்து தேவ கோபமும் அமர்ந்தது.
அப்போது தகப்பனானவன் மோட்ச வாசிகளுடைய மகிமையால் சூழப்பட்டுத் தன் மகளுக்குத் தரிசனையாகி,
என் மகளே! சர்வேசுரன் உன்னுடைய தவத்தைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டார். அதனாலே உத்தரிக்கிற ஸ்தலத்தைவிட்டு நான் மோட்ச பேரின்ப வீட்டுக்குப் போகிறேன். உன்னுடைய தவமானது சேசு கிறிஸ்து நாதருக்கு மிகவும் பிரியமுள்ளதானதினாலே அவர் உன்னைத் தமக்கு நேசமுள்ள மகளாகத் தெரிந்து கொண்டார். நீ உன்னை ஆத்துமாக்களுக்குப் பலியாய் ஒப்புக்கொடுத்து அப்படியே நீ சாகுமளவும் தபசுப் பண்ணுவது தேவ சித்தம் என்று சொல்லி மறைந்துப் போனான். மிக்க தைரியமுள்ள இந்தக் கன்னியாஸ்திரியானவள் அது தேவசித்தமென்று அறிந்து, தன்னுடைய ஆயுசுக் காலமெல்லாம் ஆத்துமாக்களைக் குறித்துப் பயங்கரமான தவத்தைச் செய்துக்கொண்டுவந்தாள்.
அத்துவான வனாந்தரத்திலே வனவாசியாய் ஒரு கெபியிலே வசித்து முள்ளொட்டி யானத்தைத் தரித்து, அவ்விடத்தில் விளையும் கீரைகளைச் சாப்பிட்டுத் தினந்தினம் ஒரு சந்தியாய் இருப்பாள். சில வருஷத்திற்குப்பிற்பாடு ஒர் அலுவலைப்பற்றி அர்ச். தெரெசம்மா உண்டுபண்ணின தொல்லேது நகரத்துக் கர்மேல் மடத்துக்கு வந்த சமயத்தில், தன்னை ஒருநாள் மூன்று மனநேரம் கசையால் அகோரமாய் அடித்துக்கொண்டாள். அதையும் அவள் பண்ணின மற்றத் தவங்களையும் அம்மடத்துக் கன்னியாஸ்திரிகள் கண்டு அப்படிச் செய்வது மகாக் கொடுமையாகையால், இந்த அருந்தவத்தைக் குறைக்கவேணுமென்று அவளை மன்றாடி னார்கள்.
அதற்கு அதிசயமான இந்தக் கன்னியாஸ்திரியானவள் "அவியாதெரியும் நரகில் பாவிகள் உபாதிக்கப் படுகிறதையும், அகோரமாய் எரியும் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் ஆத்துமாக்கள் தண்டிக்கப்படுகிறதையும் கண்டேனே. இவையெல்லாம் கண்ட பிற்பாடு, பாவிகள் நரகத்திலே விழாதபடிக்கு அவர்களை நிறுத்தவும், ஆத்து மாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்கவும் என்னாலான தவமெல்லாம் செய்யாதிருக்கக் கூடுமோ ? அதற்காகவே தேவ நீதிக்கு என்னைப் பலியாக ஒப்புக் கொடுத்தேன் ' என்றாள்.
கிறிஸ்துவர்களே! இந்தச் சுகிர்த புதுமையைக் கேட்டபிற்பாடு அதிசயப்படவேண்டியதுமல்லாமல், உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து நீங்கள் செய்கிற தவக்கிரியைகள் மிகவும் கொஞ்மென்று அறிந்து, இனிமேல் என்னத்தைச் செய்யப்போகிறீர்களென்று ஆராய்ந்து பார்க்கக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
.பதின்மூன்றாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சேசுநாதருக்கு மிகவும் உகந்த புண்ணியம் என்று காண்பிக்கிற வகையாவது
சேசுகிறிஸ்துநாதர் சுவாமி மெய்யான சர்வேசுரனாகையால் போன தியானத்திலே சொன்ன நியாயங்களெல்லாம் அவருக்குச் செல்லுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. மீண்டும் வேறே சில காரணங்களைக் கொண்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது அவருக்கு எவ்வளவு பிரியமுள்ள புண்ணியமென்று சற்றுநேரம் தியானித்துப் பார்க்க வேணும்.
முதலாவது சேசுகிரிஸ்துநாதர்சுவாமி கெட்டுப்போன மனுஷரை மீட்டிரட்சிக்க என்ன செய்தாரென்று சற்றே நினைத்துப்பாருங்கள். சர்வத்துக்கும் வல்ல சுவாமிதாமே மனுஷனாகத் திருவுளமாகி, விடுவாசலின்றி, உதவி செய்வாரின்றி, ஒரு கெபியிலே பிறந்து ,எவ்வித துன்ப வருத்தங்களிலும் வளர்ந்து, நிந்தையும் அவமானமும்பட்டு. அரிதான வறுமையிலே முப்பது வருஷம் செலவழித்தபின்பு மகாப் பிரயாசையோடு எங்கும் சென்று, கணக்கற்ற புதுமைகளைச் செய்து, தம்முடைய உபதேசத்தை யாவருக்கும் கற்பித்தபிற்பாடு, வலிய மனதோடு தம்மைத்தாமே சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுத்து, சொல்லிலும் நினைவிலுமடங்காத அவமானங்களையும் பாடுகளையும் பட்டு, உயர்ந்த சிலுவையிலே அறையுண்டு, கடின மரணத்தையடைந்து தம்முடைய திவ்விய இரத்தத்தை சிந்தினாரல்லோ? இவையெல்லாம் செய்வதிலும் அநுபவிப்பதிலும் சேசுநாதர் நினைத்துத் தேடின பலன் என்ன ?
ஆத்துமாக்களை பாவத்தினின்றும் நித்திய நரகத்தினின்றும் மீட்டிரட்சித்து மோட்ச பேரின்பத்துக்குக் இட்டுக் கொள்ள வேணுமென்பதே அவர் நினைத்து தேடின பலனல்லாமல் வேறல்ல. அது இப்படியிருக்க , அந்த ஆத்துமாக்கள் மோட்சத்தை அடைந்தபிற்பாடு மாத்திரமே சேசு கிறிஸ்துநாதர்சுவாமி நினைத்துத் தேடின பலன் சம்பூரணமாய் நிறைவேறுமென்பது நிச்சயம்.
ஆனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மோட்சத்துக்குக்குப் போவதற்கு அவர்கள் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டிய பரிகார நிபந்தனை ஒரு விக்கினம்போலிருக்கிறதினால் இந்த விக்கினம் நீங்கிப்போகுமளவும் சுவாமி நினைத்த பலனைச் சரியாய் அடைகிறதில்லை.
அதனாலே அவர் தேடும் இரட்சிப்புக்கு ஒரு குறை இருந்தாற்போலே மனம் வருந்துவாரென்று சொல்லத்தகும். அது இப்படியிருக்க, சேசுகிறிஸ்துநாதர் பேரில் பக்தியுள்ளவர்கள் வேண்டிய பரிகாரக் கடனைத் தீர்த்து அவர்களை மோட்சத்துக்கு சேரப்பண்ணினால், சுவாமி தேடிய இரட்சிப்பும் அவர் நினைத்துத் தேடின பலனும் நிறைவேறுமென்று சொல்லக்கடவோம்.
இவ்விஷயம் அதிகமாய்த் தெளிவாகும்படிக்கு அப்போஸ்தலரான அர்ச் சின்னப்பர் சொல்லுகிறதைக் கேளுங்கள். அதாவது சேசுகிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறவைகளை அவருக்கு ஞான உடலாகிய திருச்சபையைக் குறித்து என் சரீரத்தில் நிறைவேற்றுகிறேன் என்றார்.
அப்படி சேசுகிறிஸ்து நாதருடைய ஞான உறுப்புகளாகிய இந்த உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுகிறவர்கள், சுவாமி பட்ட பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறதைத் தீர்த்துக் கொள்ளுகிறாற்போலே இருக்கிறார்களென்று சொல்ல வேனுமல்லவோ?
இரண்டாவது : சகல உலகங்களுக்கும் ஆண்டவராகிய _கிறிஸ்துநாதர் இவ்வுலக கடைசி நாட்களிலே எல்லா
பலுவுரையும் நடுத்தீர்க்க வந்து நல்லவர்களைத் தமது வலது பக்கத்திலும், பொல்லாதவர்களைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவாரே. அப்போது அவர் தமது வலதுபக்கத்திலிருக்கிற நல்லவர்களை நோக்கி வசனிப்பதாவது நமது பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள். உலகம் உண்டான நாள் முதற்கொண்டு உங்களுக்கு நியமித்த இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள். ஏனெனில்: பசியாயிருந் தோம், அப்போது போசனம் கொடுத்தீர்கள். தாகமாயிருந் தோம், அப்போது பானங் கொடுத்தீர்கள். பரதேசியாயிருந் தோம், அப்போது நம்மை ஆதரித்தீர்கள். வஸ்திரமில்லாத வராய் இருந்தோம், அப்போது நமக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள். நோயாளியாய் இருந்தோம், அப்போது நம்மைச் சந்தித்தீர்கள். சிறைச்சாலையில் அடைப்பட்டிருந் தோம் அப்போது நம்மிடத்தில் வந்தீர்கள் என்பார்.
அப்போது நல்லவர்கள் அவருக்கு மறுமொழியாகச் சொல்லுவதாவது : ஆண்டவரே ! நீர் பசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்குப் போஜனம் அளித்ததும் , தாகமாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு பானம் அளித்ததும் எப்போது ? மேலும் நீர் பரதேசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு வஸ்திரங் கொடுத்ததும் எப்போது? நீர் நோயாளியாய், அல்லது சிறைச்சாலையில் இருக்கக்கண்டு நாங்கள் உம்மிடத்திலே வந்தது எப்போது " என்பார்கள்.
அதற்கு ஆண்டவரான சேசுகிறிஸ்துநாதர் சுவாமி மறுமொழியாக "மிகவும் சிறியவர்களாகிய என் சகோதரரானவர்களில் ஒருவனுக்கு நீங்கள் அப்படிச் செய்தபோதெல்லாம் நமக்கே செய்தீர்களென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறோம்" என்பார்.
கிறிஸ்துவர்களே, சேசுகிறிஸ்துநாதரைக் குறித்து செய்யப்பட்ட உதவி சகாயம் எல்லாவற்றையும் சுவாமி
அவ்வளவு வாழ்த்தி, அவைகள் தமக்கே செய்திருக்கிறார் போல பாராட்டி, அவைகளுக்கு வெகுமதியாக மோட்ச
இராச்சியத்தைக் கொடுக்கிறாரே. அது இப்படியிருக்கையில் ,அழிந்துபோகிற சரீரத்துக்குச் செய்த சகாயங்களுக்கு அவர்
அப்படி செய்யும் போது, அழியாத ஆத்துமாக்களுக்கு அவரைக் குறித்துச் செய்யப்பட்ட உதவி ஒத்தாசைகளுக்கு அதிகமாய்ச் சந்தோஷப்பட்டு மேலான வெகுமதி கொடுப்பாரென்கிறதற்குச் சந்தேகப்படுவாருண்டோ? ஆனதினால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்களுக்காகச் செய்யப்படுகிறதெல்லாம் சுவாமிக்கு அதிகப் பிரியப்பட்டு மனுஷனுக்கு அதிக வெகுமதி பெறுவிக்குமென்பது நிச்சயந்தான்.
ஆனாலும் சரீரத்துக்கடுத்த முன்சொன்ன நற்கிரியையெல்லாம் சர்வேசுரனைக் குறித்துச் செய்து அவைகளை உத்திரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுத்தால் அதிக பலனும் அதிக பிரயோஜனமுமாய் இருக்கும். இதெல்லாவற்றையும் தக்க கவனத்தோடு ஆராய்ந்துப் பாத்தால், உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் உங்களுக்கு அதிக பக்தி வரும் என்கிறதற்குச் சந்தேகமில்லை
மீண்டும் சேசுகிறிஸ்துநாதர் சுவாமி முன் சொன்ன பிரகாரமே நல்லவர்களை வாழ்த்தி அவர்களுக்கு மோட்ச இராச்சியத்தைக் கட்டளையிட்ட பிற்பாடு பொல்லாதவர்களை நோக்கி நீங்கள் முன் சொன்ன நற்கிரியைகளைச் செய்யாதிருந்ததைப்பற்றிச் சபிக்கப்பட்டு நித்திய நரகத்துக்குப் போங்கள் என்பார் சரீரத்துக்கடுத்த நற்கிரியைகளைச் செய்யாதவர்களைச் சுவாமி நித்திய நரகத்துக்குத் தள்ளும் போது ஆத்துமத்தைச் சேர்ந்த நற்கிரியைகளைச் செய்யாதவர்களுக்கு என்னத்தைக் கட்டளையிடுவார்? இது இப்படி யிருக்க, நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக்
குறித்து ஒன்றும் செய்யாதிருப்பீர்களேயானால் சுவாமிக்கு என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்?
மூன்றவது: பரம கடவுளான சேசுகிறீஸ்துநாதர் சுவாமி சகலமான ஆத்துமாக்களை மீட்டிரட்சிக்கச் சிலுவையிலே அறையுண்டு படாத பாடுபட்டுத் தம்முடைய திவ்விய பிராணனைக் கொடுக்கப்போகிற சமயத்தில்தானே தாகமாயிருக்கிறேன் என்றார். சுவாமி அநுபவித்த இந்த தாகம் தண்ணீர்தாகமோ ?வேறே தாகமோ ?அவர் அநுபவித்த தாகம் அவர் ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் படுகிற மட்டற்ற ஆசையைக் காண்பிக்கிறதென்று வேதசாஸ்திரிகள் எல்லோரும் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள். சேசு கிறிஸ்துநாதர் சுவாமியுடைய திரு இருதயத்தில் பற்றி எரியும் இந்தப் பெரிய ஆசையானது, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்ப வீட்டில் தம்மிடமாக வரவேண்டுமென்கிற ஆசையாம் என்று சொல்லத்தகும். அந்த ஆத்துமாக்கள் தம்மிடம் சேருமளவும் அவருடைய ஆசை தீராது .
உங்களுக்கு அறிமுகமில்லாத பிச்சைக்காரன் ஒருவன் தாகமாயிருக்கிறேன் என்று கொஞ்சம் தண்ணீர் கேட்டால் கொடுப்பீர்கள் அல்லவோ ? உங்களுடைய இரட்சருமாய் உங்களை அத்தியந்த பட்சத்தோடு நேசிக்கிறவருமாய் உங்களை நடுத்தீர்ப்பவருமாயிருக்கிற உங்களுடைய சுவாமி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் தாகமாயிருக்கிறேனென்று உங்களிடத்தில் சொல்லும் போது நீங்கள் அவருடைய இந்தத் தாகம் தீரும்படிக்கு ஒன்றும் செய்யாதிருப்பீர்களோ? செய்யவேணுமென்றால் உங்களுடைய ஜெபதப தான தர்மங்களினாலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவீர்களாக.
கிறிஸ்துவர்களே ஒரு தோட்டத்தில் நல்ல மழை பெய்தபிற்பாடு பயிர் வகைகளெல்லாம் செழிப்பாய் வளருமல்லவோ? இப்போது சொன்ன நியாயங்கள் ஒரு அதிர்ஷ்டமான மழை போல் உங்கள் மனதிலே விழுந்து அதில் சுகிர்த பயிர்களாகிய உத்தம முயற்சிகளை விளையப்பண்ன வேண்டும்.
முதலாவது- உங்களைப் படைத்து இரட்சித்த சேசுநாதர் பேரில் விசேஷ பக்தி பட்சம் உங்களுக்கு உண்டானால், அவர் விரும்பினாற்போல உத்தரிக்கிற
த்துமாக்களை உங்களுடைய ஜெபங்களினாலும் தர்மங்களினாலும் மீட்டிரட்சிக்கப் பிரயாசைப்படுவீர்கள். அதை செய்யாமலும் அதன்பேரில் ஆசையில்லாமலும் இருக்கிறவன் சுவாமி பேரிலே பட்சமுள்ளவனென்றும், அவருடைய சீடனென்றும் பிள்ளையென்றும் சொல்லக் கூடுமோ ?சொல்லக்கூடாது.
இரண்டாவது- எத்தனையோ பேர்கள் தாங்கள் ஈடேறுவோமோ இல்லையோவென்று சந்தேகப்பட்டு அங்கலாய்த்து வருந்துகிறார்கள். மோட்சத்தை அடைவோமென்கிற உறுதியான விசுவாசத்தையும், தளராத நம்பிக்கையையும் உண்டாக்குகிறதற்குத் தர்மம் செய்வது உத்தம வழியாம். ஆயினும் செய்யக்கூடுமான தர்மங்களுக்குள்ளே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண் ணுவது மேலான தர்மமாகையால் அந்த ஆத்துமாக்களின் பேரிலுள்ள பக்தியானது மோட்சத்துக்குப் போவதற்கு ஒரு தப்பாத அடையாளமாம்.
மூன்றாவது- சுவாமி சிலுவை சுமந்து கபாலமலைக்குப் போகையில் அவருக்கு சிரேன் என்கிற சீமோன் உதவி செய்தாரே மீண்டும் பக்தியுள்ள ஸ்திரியான வெரோனிக் கம்மாள் அவருடைய திரு முகத்தைத் துடைத்தாரே. அவர்களைப் பாக்கியவான்களென்று வாழ்த்துவீர்களல்லவோ? ஆனால் நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு வேண்டிய உதவி சகாயம் பண்ணுவீர்களேயாகில், அவர்களிலும் நீங்கள் பாக்கியவான்களென்று சொல்ல வேண்டியதுதான். ஆகையினால் சேசுகிறிஸ்துநாதர் பேரில் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருப்பார்களோ அவ்வளவு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்களாயிருக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே ! எங்கள் பேரில் இரக்கமாயிரும் .
செபம்
உயர்ந்த சிலுவையிலே உம்மை நித்திய பிதாவுக்கு உகந்த பலியாக ஒப்புக்கொடுத்த சற்குருவான சேசுவே, மரித்த மேற்றிராணிமார்களுடையவும் குருக்களுடையவும் ஆத்துமாக்களைக் கிருபையாய்ப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவர்களை மீட்டுச் சகல பாக்கிங்களையும் அநுபவிக்க உம்மிடத்திலே சேர்த்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பதிமூன்றாந் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்க வேணுமென்று சிலபேர்களுக்குச் சொல்லுகிறது.
புதுமை
தியோப்பிலு சென்கிறவர் மூர்க்கப் பதிதனாயிருந்து சுருப வணக்கம் ஆகாதென்று சுரூபங்களை வணங்குகிற கிறிஸ்துவர்களை வெகு இடைஞ்சல் பண்ணின பிற்பாடு மரண வேளையில் மனந்திரும்பித் தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்து மரண த்தை அடைந்தார். ஆனால் தான் செய்த பாவங்களுக்கு தவத்தினால் வேண்டிய பரிகாரத்தைப் பண்ணக்கூடாததைப் பற்றி இந்தப் பரிகாரக் கடனை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனைப்பட்டுச் சொல்லவேண்டியதாயிற்று.
அவருடைய மனைவியான தெயோதோறாவென்னும் ராணியானவள் சத்தியவேதத்திலே கொஞ்சமாவது பிசகாமல் நிரம்பப் பக்தியுள்ளவளாயிருந்ததினாலே தம் புருஷன் மனந்திரும்பத்தக்கதாக மிகவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாள். அரசன் செத்தப்பிற்பாடு அவர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே பொறுக்கப்படாத ஆக்கினைகளை அனுபவிக்கிறாரென்று அறிந்து அவருக்கு ஆறுதல் வருவிக்கத்தக்கதாக தான் திரளான கண்ணீர் விட்டு செபங்களைப் பண்ணினதுமல்லாமல் அரண்மனையில் இருக்கிறவர்கள் எல்லோரும் அரசன் ஆத்துமத்துக்காக செபிக்கப் பண்ணினாள் . மீளவும் கொன்ஸ்டாண்டிநோபிள் என்ற மகா நகரில் உள்ள சகல மடங்களிலும் செபங்களையும் பூசைகளையும் மற்ற வேண்டுதல்களையும் செய்யக் கற்பித்தாள் . அதல்லாமல் அப்பட்டணத்தில் உள்ள அதி மேற்றிராணியாரான அர்ச் மேத்தொதியுஸ் என்கிறவர் எல்லாக் கோயில்களிலும் பொது செப பிரார்த்தனை நடக்கும்படி செய்தார் . மேலும் ராணியானவள் இந்த
ஆத்துமத்துக்காகப் பிச்சைக்காரருக்கு கொடுத்த தர்மம் எவ்வளவென்று சொல்லத்தகுந்தன்மையல்ல.
இவ்வளவு ஜெபங்களுக்கும் தர்மக்கிரியைகளுக்கும் திவிய பூசைகளுக்கும் சர்வேசுரன் இரங்கி அவருடைய கோபம் அமர்ந்து அரசனுடைய பரிகாரத்துடன் தீர்ந்து அவருடைய ஆத்துமம் மோட்சத்துக்குப் போனது என்றார். அக் கணத்திலேதானே அதிமேற்றிராணியாரானவர் பெரிய கோவிலிலே சமஸ்த ஜனங்களுடன் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒரு தேவதூதன் வந்து அவருக்குச் சொன்னதாவது : அதிமேற்றிரானியாரே! நீர் செய்த செபங்கள் கேட்கப்பட்டன . அரசனுடைய ஆத்துமம் மன்னிப்பை அடைந்து மோட்சத்துக்குப் போனது ' என்றார் . அதே நேரத்திலே ராணியார் ஒரு காட்சியைக் கண்டு தான் செய்த செபங்களினாலும் குருக்கள் பண்ணின பூசையினாலும் அரசனுடைய உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதாக அறிந்தாள்.
இந்த சந்தோசமான சேதியினால் மனந்தேறி ராணியானவளும் மேற்றிராணியாரும், அப்பெரிய பட்டனத்துக்குடிகள் எல்லோரும் சர்வேசுரனுக்குத் தோத்திரம்பண்ணி வெகு கொண்டாட்டம் செய்தார்கள்.
கிறிஸ்தவர்களே ! இப்போது சொன்ன ராணியானவள் தன் புருஷனான அரசனுடைய ஆத்துமத்துக்காக அவ்வளவு செபங்களைப் பண்ணி தர்மங்களைப் பொழிந்து அத்தனை திவ்விய பூசைகளை ஒப்புக்கொடுக்கச் செய்தாளே, நீங்கள் உங்களுடையவர்களின் ஆத்துமாக்களைக் குறித்து அவ்வளவு செய்ய முடியாதென்பது மெய்தான் . ஆயினும் அந்த ஆத்துமாக்களையும் மறவாமல் அவர்களுக்காகத் தினந்தோறும் ஜெபம் பண்ணி உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்க பிச்சைக் கொடுத்து, வருஷத்திலே இரண்டு மூன்று தடவையாகிலும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்யவேணுமென் று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சேசுநாதருக்கு மிகவும் உகந்த புண்ணியம் என்று காண்பிக்கிற வகையாவது
சேசுகிறிஸ்துநாதர் சுவாமி மெய்யான சர்வேசுரனாகையால் போன தியானத்திலே சொன்ன நியாயங்களெல்லாம் அவருக்குச் செல்லுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. மீண்டும் வேறே சில காரணங்களைக் கொண்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது அவருக்கு எவ்வளவு பிரியமுள்ள புண்ணியமென்று சற்றுநேரம் தியானித்துப் பார்க்க வேணும்.
முதலாவது சேசுகிரிஸ்துநாதர்சுவாமி கெட்டுப்போன மனுஷரை மீட்டிரட்சிக்க என்ன செய்தாரென்று சற்றே நினைத்துப்பாருங்கள். சர்வத்துக்கும் வல்ல சுவாமிதாமே மனுஷனாகத் திருவுளமாகி, விடுவாசலின்றி, உதவி செய்வாரின்றி, ஒரு கெபியிலே பிறந்து ,எவ்வித துன்ப வருத்தங்களிலும் வளர்ந்து, நிந்தையும் அவமானமும்பட்டு. அரிதான வறுமையிலே முப்பது வருஷம் செலவழித்தபின்பு மகாப் பிரயாசையோடு எங்கும் சென்று, கணக்கற்ற புதுமைகளைச் செய்து, தம்முடைய உபதேசத்தை யாவருக்கும் கற்பித்தபிற்பாடு, வலிய மனதோடு தம்மைத்தாமே சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுத்து, சொல்லிலும் நினைவிலுமடங்காத அவமானங்களையும் பாடுகளையும் பட்டு, உயர்ந்த சிலுவையிலே அறையுண்டு, கடின மரணத்தையடைந்து தம்முடைய திவ்விய இரத்தத்தை சிந்தினாரல்லோ? இவையெல்லாம் செய்வதிலும் அநுபவிப்பதிலும் சேசுநாதர் நினைத்துத் தேடின பலன் என்ன ?
ஆத்துமாக்களை பாவத்தினின்றும் நித்திய நரகத்தினின்றும் மீட்டிரட்சித்து மோட்ச பேரின்பத்துக்குக் இட்டுக் கொள்ள வேணுமென்பதே அவர் நினைத்து தேடின பலனல்லாமல் வேறல்ல. அது இப்படியிருக்க , அந்த ஆத்துமாக்கள் மோட்சத்தை அடைந்தபிற்பாடு மாத்திரமே சேசு கிறிஸ்துநாதர்சுவாமி நினைத்துத் தேடின பலன் சம்பூரணமாய் நிறைவேறுமென்பது நிச்சயம்.
ஆனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மோட்சத்துக்குக்குப் போவதற்கு அவர்கள் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டிய பரிகார நிபந்தனை ஒரு விக்கினம்போலிருக்கிறதினால் இந்த விக்கினம் நீங்கிப்போகுமளவும் சுவாமி நினைத்த பலனைச் சரியாய் அடைகிறதில்லை.
அதனாலே அவர் தேடும் இரட்சிப்புக்கு ஒரு குறை இருந்தாற்போலே மனம் வருந்துவாரென்று சொல்லத்தகும். அது இப்படியிருக்க, சேசுகிறிஸ்துநாதர் பேரில் பக்தியுள்ளவர்கள் வேண்டிய பரிகாரக் கடனைத் தீர்த்து அவர்களை மோட்சத்துக்கு சேரப்பண்ணினால், சுவாமி தேடிய இரட்சிப்பும் அவர் நினைத்துத் தேடின பலனும் நிறைவேறுமென்று சொல்லக்கடவோம்.
இவ்விஷயம் அதிகமாய்த் தெளிவாகும்படிக்கு அப்போஸ்தலரான அர்ச் சின்னப்பர் சொல்லுகிறதைக் கேளுங்கள். அதாவது சேசுகிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறவைகளை அவருக்கு ஞான உடலாகிய திருச்சபையைக் குறித்து என் சரீரத்தில் நிறைவேற்றுகிறேன் என்றார்.
அப்படி சேசுகிறிஸ்து நாதருடைய ஞான உறுப்புகளாகிய இந்த உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுகிறவர்கள், சுவாமி பட்ட பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறதைத் தீர்த்துக் கொள்ளுகிறாற்போலே இருக்கிறார்களென்று சொல்ல வேனுமல்லவோ?
இரண்டாவது : சகல உலகங்களுக்கும் ஆண்டவராகிய _கிறிஸ்துநாதர் இவ்வுலக கடைசி நாட்களிலே எல்லா
பலுவுரையும் நடுத்தீர்க்க வந்து நல்லவர்களைத் தமது வலது பக்கத்திலும், பொல்லாதவர்களைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவாரே. அப்போது அவர் தமது வலதுபக்கத்திலிருக்கிற நல்லவர்களை நோக்கி வசனிப்பதாவது நமது பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள். உலகம் உண்டான நாள் முதற்கொண்டு உங்களுக்கு நியமித்த இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள். ஏனெனில்: பசியாயிருந் தோம், அப்போது போசனம் கொடுத்தீர்கள். தாகமாயிருந் தோம், அப்போது பானங் கொடுத்தீர்கள். பரதேசியாயிருந் தோம், அப்போது நம்மை ஆதரித்தீர்கள். வஸ்திரமில்லாத வராய் இருந்தோம், அப்போது நமக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள். நோயாளியாய் இருந்தோம், அப்போது நம்மைச் சந்தித்தீர்கள். சிறைச்சாலையில் அடைப்பட்டிருந் தோம் அப்போது நம்மிடத்தில் வந்தீர்கள் என்பார்.
அப்போது நல்லவர்கள் அவருக்கு மறுமொழியாகச் சொல்லுவதாவது : ஆண்டவரே ! நீர் பசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்குப் போஜனம் அளித்ததும் , தாகமாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு பானம் அளித்ததும் எப்போது ? மேலும் நீர் பரதேசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு வஸ்திரங் கொடுத்ததும் எப்போது? நீர் நோயாளியாய், அல்லது சிறைச்சாலையில் இருக்கக்கண்டு நாங்கள் உம்மிடத்திலே வந்தது எப்போது " என்பார்கள்.
அதற்கு ஆண்டவரான சேசுகிறிஸ்துநாதர் சுவாமி மறுமொழியாக "மிகவும் சிறியவர்களாகிய என் சகோதரரானவர்களில் ஒருவனுக்கு நீங்கள் அப்படிச் செய்தபோதெல்லாம் நமக்கே செய்தீர்களென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறோம்" என்பார்.
கிறிஸ்துவர்களே, சேசுகிறிஸ்துநாதரைக் குறித்து செய்யப்பட்ட உதவி சகாயம் எல்லாவற்றையும் சுவாமி
அவ்வளவு வாழ்த்தி, அவைகள் தமக்கே செய்திருக்கிறார் போல பாராட்டி, அவைகளுக்கு வெகுமதியாக மோட்ச
இராச்சியத்தைக் கொடுக்கிறாரே. அது இப்படியிருக்கையில் ,அழிந்துபோகிற சரீரத்துக்குச் செய்த சகாயங்களுக்கு அவர்
அப்படி செய்யும் போது, அழியாத ஆத்துமாக்களுக்கு அவரைக் குறித்துச் செய்யப்பட்ட உதவி ஒத்தாசைகளுக்கு அதிகமாய்ச் சந்தோஷப்பட்டு மேலான வெகுமதி கொடுப்பாரென்கிறதற்குச் சந்தேகப்படுவாருண்டோ? ஆனதினால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்களுக்காகச் செய்யப்படுகிறதெல்லாம் சுவாமிக்கு அதிகப் பிரியப்பட்டு மனுஷனுக்கு அதிக வெகுமதி பெறுவிக்குமென்பது நிச்சயந்தான்.
ஆனாலும் சரீரத்துக்கடுத்த முன்சொன்ன நற்கிரியையெல்லாம் சர்வேசுரனைக் குறித்துச் செய்து அவைகளை உத்திரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுத்தால் அதிக பலனும் அதிக பிரயோஜனமுமாய் இருக்கும். இதெல்லாவற்றையும் தக்க கவனத்தோடு ஆராய்ந்துப் பாத்தால், உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் உங்களுக்கு அதிக பக்தி வரும் என்கிறதற்குச் சந்தேகமில்லை
மீண்டும் சேசுகிறிஸ்துநாதர் சுவாமி முன் சொன்ன பிரகாரமே நல்லவர்களை வாழ்த்தி அவர்களுக்கு மோட்ச இராச்சியத்தைக் கட்டளையிட்ட பிற்பாடு பொல்லாதவர்களை நோக்கி நீங்கள் முன் சொன்ன நற்கிரியைகளைச் செய்யாதிருந்ததைப்பற்றிச் சபிக்கப்பட்டு நித்திய நரகத்துக்குப் போங்கள் என்பார் சரீரத்துக்கடுத்த நற்கிரியைகளைச் செய்யாதவர்களைச் சுவாமி நித்திய நரகத்துக்குத் தள்ளும் போது ஆத்துமத்தைச் சேர்ந்த நற்கிரியைகளைச் செய்யாதவர்களுக்கு என்னத்தைக் கட்டளையிடுவார்? இது இப்படி யிருக்க, நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக்
குறித்து ஒன்றும் செய்யாதிருப்பீர்களேயானால் சுவாமிக்கு என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்?
மூன்றவது: பரம கடவுளான சேசுகிறீஸ்துநாதர் சுவாமி சகலமான ஆத்துமாக்களை மீட்டிரட்சிக்கச் சிலுவையிலே அறையுண்டு படாத பாடுபட்டுத் தம்முடைய திவ்விய பிராணனைக் கொடுக்கப்போகிற சமயத்தில்தானே தாகமாயிருக்கிறேன் என்றார். சுவாமி அநுபவித்த இந்த தாகம் தண்ணீர்தாகமோ ?வேறே தாகமோ ?அவர் அநுபவித்த தாகம் அவர் ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் படுகிற மட்டற்ற ஆசையைக் காண்பிக்கிறதென்று வேதசாஸ்திரிகள் எல்லோரும் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள். சேசு கிறிஸ்துநாதர் சுவாமியுடைய திரு இருதயத்தில் பற்றி எரியும் இந்தப் பெரிய ஆசையானது, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்ப வீட்டில் தம்மிடமாக வரவேண்டுமென்கிற ஆசையாம் என்று சொல்லத்தகும். அந்த ஆத்துமாக்கள் தம்மிடம் சேருமளவும் அவருடைய ஆசை தீராது .
உங்களுக்கு அறிமுகமில்லாத பிச்சைக்காரன் ஒருவன் தாகமாயிருக்கிறேன் என்று கொஞ்சம் தண்ணீர் கேட்டால் கொடுப்பீர்கள் அல்லவோ ? உங்களுடைய இரட்சருமாய் உங்களை அத்தியந்த பட்சத்தோடு நேசிக்கிறவருமாய் உங்களை நடுத்தீர்ப்பவருமாயிருக்கிற உங்களுடைய சுவாமி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் தாகமாயிருக்கிறேனென்று உங்களிடத்தில் சொல்லும் போது நீங்கள் அவருடைய இந்தத் தாகம் தீரும்படிக்கு ஒன்றும் செய்யாதிருப்பீர்களோ? செய்யவேணுமென்றால் உங்களுடைய ஜெபதப தான தர்மங்களினாலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவீர்களாக.
கிறிஸ்துவர்களே ஒரு தோட்டத்தில் நல்ல மழை பெய்தபிற்பாடு பயிர் வகைகளெல்லாம் செழிப்பாய் வளருமல்லவோ? இப்போது சொன்ன நியாயங்கள் ஒரு அதிர்ஷ்டமான மழை போல் உங்கள் மனதிலே விழுந்து அதில் சுகிர்த பயிர்களாகிய உத்தம முயற்சிகளை விளையப்பண்ன வேண்டும்.
முதலாவது- உங்களைப் படைத்து இரட்சித்த சேசுநாதர் பேரில் விசேஷ பக்தி பட்சம் உங்களுக்கு உண்டானால், அவர் விரும்பினாற்போல உத்தரிக்கிற
த்துமாக்களை உங்களுடைய ஜெபங்களினாலும் தர்மங்களினாலும் மீட்டிரட்சிக்கப் பிரயாசைப்படுவீர்கள். அதை செய்யாமலும் அதன்பேரில் ஆசையில்லாமலும் இருக்கிறவன் சுவாமி பேரிலே பட்சமுள்ளவனென்றும், அவருடைய சீடனென்றும் பிள்ளையென்றும் சொல்லக் கூடுமோ ?சொல்லக்கூடாது.
இரண்டாவது- எத்தனையோ பேர்கள் தாங்கள் ஈடேறுவோமோ இல்லையோவென்று சந்தேகப்பட்டு அங்கலாய்த்து வருந்துகிறார்கள். மோட்சத்தை அடைவோமென்கிற உறுதியான விசுவாசத்தையும், தளராத நம்பிக்கையையும் உண்டாக்குகிறதற்குத் தர்மம் செய்வது உத்தம வழியாம். ஆயினும் செய்யக்கூடுமான தர்மங்களுக்குள்ளே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண் ணுவது மேலான தர்மமாகையால் அந்த ஆத்துமாக்களின் பேரிலுள்ள பக்தியானது மோட்சத்துக்குப் போவதற்கு ஒரு தப்பாத அடையாளமாம்.
மூன்றாவது- சுவாமி சிலுவை சுமந்து கபாலமலைக்குப் போகையில் அவருக்கு சிரேன் என்கிற சீமோன் உதவி செய்தாரே மீண்டும் பக்தியுள்ள ஸ்திரியான வெரோனிக் கம்மாள் அவருடைய திரு முகத்தைத் துடைத்தாரே. அவர்களைப் பாக்கியவான்களென்று வாழ்த்துவீர்களல்லவோ? ஆனால் நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு வேண்டிய உதவி சகாயம் பண்ணுவீர்களேயாகில், அவர்களிலும் நீங்கள் பாக்கியவான்களென்று சொல்ல வேண்டியதுதான். ஆகையினால் சேசுகிறிஸ்துநாதர் பேரில் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருப்பார்களோ அவ்வளவு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்களாயிருக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே ! எங்கள் பேரில் இரக்கமாயிரும் .
செபம்
உயர்ந்த சிலுவையிலே உம்மை நித்திய பிதாவுக்கு உகந்த பலியாக ஒப்புக்கொடுத்த சற்குருவான சேசுவே, மரித்த மேற்றிராணிமார்களுடையவும் குருக்களுடையவும் ஆத்துமாக்களைக் கிருபையாய்ப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவர்களை மீட்டுச் சகல பாக்கிங்களையும் அநுபவிக்க உம்மிடத்திலே சேர்த்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பதிமூன்றாந் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்க வேணுமென்று சிலபேர்களுக்குச் சொல்லுகிறது.
புதுமை
தியோப்பிலு சென்கிறவர் மூர்க்கப் பதிதனாயிருந்து சுருப வணக்கம் ஆகாதென்று சுரூபங்களை வணங்குகிற கிறிஸ்துவர்களை வெகு இடைஞ்சல் பண்ணின பிற்பாடு மரண வேளையில் மனந்திரும்பித் தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்து மரண த்தை அடைந்தார். ஆனால் தான் செய்த பாவங்களுக்கு தவத்தினால் வேண்டிய பரிகாரத்தைப் பண்ணக்கூடாததைப் பற்றி இந்தப் பரிகாரக் கடனை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனைப்பட்டுச் சொல்லவேண்டியதாயிற்று.
அவருடைய மனைவியான தெயோதோறாவென்னும் ராணியானவள் சத்தியவேதத்திலே கொஞ்சமாவது பிசகாமல் நிரம்பப் பக்தியுள்ளவளாயிருந்ததினாலே தம் புருஷன் மனந்திரும்பத்தக்கதாக மிகவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாள். அரசன் செத்தப்பிற்பாடு அவர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே பொறுக்கப்படாத ஆக்கினைகளை அனுபவிக்கிறாரென்று அறிந்து அவருக்கு ஆறுதல் வருவிக்கத்தக்கதாக தான் திரளான கண்ணீர் விட்டு செபங்களைப் பண்ணினதுமல்லாமல் அரண்மனையில் இருக்கிறவர்கள் எல்லோரும் அரசன் ஆத்துமத்துக்காக செபிக்கப் பண்ணினாள் . மீளவும் கொன்ஸ்டாண்டிநோபிள் என்ற மகா நகரில் உள்ள சகல மடங்களிலும் செபங்களையும் பூசைகளையும் மற்ற வேண்டுதல்களையும் செய்யக் கற்பித்தாள் . அதல்லாமல் அப்பட்டணத்தில் உள்ள அதி மேற்றிராணியாரான அர்ச் மேத்தொதியுஸ் என்கிறவர் எல்லாக் கோயில்களிலும் பொது செப பிரார்த்தனை நடக்கும்படி செய்தார் . மேலும் ராணியானவள் இந்த
ஆத்துமத்துக்காகப் பிச்சைக்காரருக்கு கொடுத்த தர்மம் எவ்வளவென்று சொல்லத்தகுந்தன்மையல்ல.
இவ்வளவு ஜெபங்களுக்கும் தர்மக்கிரியைகளுக்கும் திவிய பூசைகளுக்கும் சர்வேசுரன் இரங்கி அவருடைய கோபம் அமர்ந்து அரசனுடைய பரிகாரத்துடன் தீர்ந்து அவருடைய ஆத்துமம் மோட்சத்துக்குப் போனது என்றார். அக் கணத்திலேதானே அதிமேற்றிராணியாரானவர் பெரிய கோவிலிலே சமஸ்த ஜனங்களுடன் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒரு தேவதூதன் வந்து அவருக்குச் சொன்னதாவது : அதிமேற்றிரானியாரே! நீர் செய்த செபங்கள் கேட்கப்பட்டன . அரசனுடைய ஆத்துமம் மன்னிப்பை அடைந்து மோட்சத்துக்குப் போனது ' என்றார் . அதே நேரத்திலே ராணியார் ஒரு காட்சியைக் கண்டு தான் செய்த செபங்களினாலும் குருக்கள் பண்ணின பூசையினாலும் அரசனுடைய உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதாக அறிந்தாள்.
இந்த சந்தோசமான சேதியினால் மனந்தேறி ராணியானவளும் மேற்றிராணியாரும், அப்பெரிய பட்டனத்துக்குடிகள் எல்லோரும் சர்வேசுரனுக்குத் தோத்திரம்பண்ணி வெகு கொண்டாட்டம் செய்தார்கள்.
கிறிஸ்தவர்களே ! இப்போது சொன்ன ராணியானவள் தன் புருஷனான அரசனுடைய ஆத்துமத்துக்காக அவ்வளவு செபங்களைப் பண்ணி தர்மங்களைப் பொழிந்து அத்தனை திவ்விய பூசைகளை ஒப்புக்கொடுக்கச் செய்தாளே, நீங்கள் உங்களுடையவர்களின் ஆத்துமாக்களைக் குறித்து அவ்வளவு செய்ய முடியாதென்பது மெய்தான் . ஆயினும் அந்த ஆத்துமாக்களையும் மறவாமல் அவர்களுக்காகத் தினந்தோறும் ஜெபம் பண்ணி உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்க பிச்சைக் கொடுத்து, வருஷத்திலே இரண்டு மூன்று தடவையாகிலும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்யவேணுமென் று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
பதினான்காம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவது தேவமாதாவுக்கும் மற்ற மோட்சவாசிகளுக்கும் பிரியமுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
நமது ஆண்டவரான சேசுக் கிறிஸ்துநாதர் சுவாமி நமக்காகப் பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு சாகிற தருணத்தில் தம்முடைய திவ்விய மாதாவை மனுஷருக்குத் தாயாராகக் கொடுத்தாரென்றும், மனுஷரை அவளுக்குப் பிள்ளைகளாகக் கட்டளையிட்டாரென்றும், யாவரும் அறிந்த பரம சத்தியமாமல்லவோ? அப்போது மரிக்கப்போகிற சர்வவல்லபமுள்ள சுவாமி தமது திவ்விய மாதாவின் இருதயத்தில் மனுஷர்பேரில் மட்டற்ற அன்பையும் பட்சத்தையும் வைத்தாரென்கிறதற்குச் சந்தேகமில்லை.
ஆனதினாலே எக்காலமும் எந்நாடும் எச்சாதியும் வயதுமுள்ள கிறிஸ்துவர்கள் எல்லோரும் ஏகோபித்து ஒரே மனப்பட்டு , தேவ மாதா தங்களுக்குத் தாயார் என்று அவளைக் கொண்டாடிப் புகழ்ந்து வணங்கி நேசித்துக் கொண்டு வருகிறார்கள். அவளோவெனில், மனுஷரெல்லோரும் தமக்குப் பிள்ளைகள் என்று அவர்களை நேசித்து , பேணித் தாபரித்து அவர்களுக்கு எவ்வித உபகார சகாயங்களையும் பண்ணிக் கொண்டு வருகிறாள் என்பது உச்சிப் பகலிலும் தெளிந்த சத்தியமாம் . தாயானவள் தாம் பெற்ற குழந்தையை மறப்பாளோ என்ன ? இவ்வுலகத் தாய் தன் குழந்தையை மறந்து போனாலும் தேவமாதாவானவள் தமது பிள்ளைகளாகிய மனுஷரை ஒரு போதும் மறக்கவுமாட்டாள். அவர்களுக்கு நன்மை செய்யாதிருக்கவுமாட்டாள்.
எல்லா மனுஷருக்கும் தேவமாதா தாயாரென்றால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு விசேஷமாய் அவளே தாயாரென்று எண்ணவும் வேனும், சொல்லவும் வேணும். அதெப்படியென்றால், அந்த ஆத்துமாக்கள் சர்வேசுரனுக்கும் சேசுகிறீஸ்துநாதருக்கும் மிகவும் பிரியப்பட்டு இஷ்டப்பட்டு இஷ்டப்பிரசாதத்தால் நிறையவும்பட்ட ஆத்துமாக்களாகையால், அவர்களைத் தேவமாதாவானவள் மிகவும் நேசிப்பாளென்கிறது தப்பாது. மேலும், தாயானவள் வருத்தப்பட்டு நோகிற தன் குழந்தைக்கு அதிக பட்சம் காண்பிப்பாளல்லவோ? அதிப்படியிருக்கையில் எவ்வித வேதனைகளையும் அனுபவிக்கிற உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு தேவமாதாவானவள் அதிக தயவையும் பட்சத்தையும் காட்டுவாளென்று சொல்ல வேண்டும் அல்லவோ ?
அந்த ஆத்துமாக்களோவென்றால் தாங்கள் படுகிற கடின
வாதைகளிலிருந்து தங்களுடைய தாயாரான தேவமாதாவினிடத்தில் அபய சத்தமிட்டு மகா பக்தி நம்பிக்கையோடு தங்களுக்கு உதவியாயிருக்கிவேணுமென்று கெஞ்சிக் கொண்டு வருவார்களாம். அவர்கள் தேவமாதா வினுடைய பிரதாபமுள்ள நாமதேயத்தைச் சொல்லும் போது அவர் களுடைய வருத்தங்கள் அமரும், வேதனைகள் குறையும், ஆக்கினைகள் தணியும், மோட்ச பேரின்பம் துவக்கும்.
தேவமாதாவானவள் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் வைத்த பட்சம் வீணான பட்சமல்ல. இந்த பட்சத்தினிமித்தம் தமது வல்லபமுள்ள மன்றாட்டால், சர்வேசுரன் அறிந்தபிரகாரமாய்க் கணக்கில்லாத ஆத்துமாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவள் புறப்படப்பண்ணு வாளென்று வேத சாஸ்திரிகள் நிச்சயித்துச் சொல்லு கிறார்கள். ஆயினும் மற்ற எண்ணிறந்த ஆத்துமாக்கள் தேவ நீதிக்கு விசேஷபரிகாரக் கடனைச் செலுத்த வேணுமென் கிறதினாலே இந்த பரிகாரக் கடன் தீர்ந்த பிற்பாடு மாத்திரமே உத்தரிக்கிற ஸ்தலத்தைவிட்டு ஈடேறுவார்கள்.
மனுஷர் இந்தக் கடனுக்கு உத்தரவாதம் பண்ணக் கூடுமாகையால் அதுக்குத்தக்க தங்களுடைய ஜெபதய தானதர்மங்களை ஒப்புக்கொடுப்பார்களேயாகில், அது தேவமாதாவுக்கு எவ்வளவு பிரியமாயிருக்கும். அது எவ்வளவென்றால், வியாதியாய்க்கிடந்து வருத்தப்படுகிற குழந்தைக்கு எவராவது மருந்து கொடுத்து அக்குழந்தையைச் குணமாக்கினால், அதனுடைய தாய்க்கு எவ்வளவு பிரியமிருக்குமோ அவ்வளவு ஆத்துமாக்களுடைய பரிகாரக் கடனைத் தீர்க்கவேண்டியவைகளைச் செய்வோமாகில் தேவமாதாவுக்கு சந்தோஷம் உண்டாகும் ஆனதால் உத்தரிக்கிற ஆத்துமாக்கள்பேரில் எவ்வளவு அதிகமாய்ப் பக்தி வைப்போமோ அவ்வளவு அதிகமாய்த் தேவ மாதாவானவள் நமது பேரில் தயவாய் இருப்பாளென் கிறதுக்குச் சந்தேகமில்லை.
பரலோகத்துக்கும், பூலோகத்துக்கும் ஆண்டவளாயிருக்கிற தேவமாதாவானவள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கும் இராக்கினியாய் இருக்கிறாளென்று சொல்ல வேண்டிய தாகும். ஆனால் அவள் அந்த வேதனை நிறைந்த இராச்சியத்தில் செலுத்திக் கொண்டிருக்கிற செங்கோன்மை தண்டனை இடுவதற்கல்ல. கிருபை பொழியும் செங் கோன்மைதான். கொடும் காய்ச்சலோடு வருத்தப்படுகிறவர் களுக்குக் குளுமையான தண்ணிர் எவ்வளவு ஆறுதல் கொடுக்குமோ, வருத்தப்படுகிற அந்த ஆத்துமாக் களுக்குத் தேவமாதாவினுடைய தயவு அவ்வளவு ஆறுதல் தரும்.
தம்முடைய பிரதாபமான திருநாட்களில் அவளே உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி அநேக ஆத்துமாக்களைத் தம்முடைய மன்றாட்டினாலும் பேறுபலன்களினாலும் சுகிர்த உதவியினாலும் மீட்டு மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போவாளென்று பேர்பெற்ற சாஸ்திரியான ஜேர்சோனியூ சென்பவர் சொல்லியிருக்கிறார். தமது பேரில் அதிக பக்தியும் நம்பிக்கையும் வைத்துத் தமது உத்தரீயத்தைத் தரித்து அதோடு செத்தவர்களுடைய ஆத்துமாக்களை விசேஷமாய்த் தாமதமின்றி உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்படப்பண்ணுவாளென்று மூன்றாம் இன்னோசென்சியூ சென்ற அர்ச் பாப்பானவர் எழுதிவைத்தார்.
பழைய வேதத்திலே ராணியான எஸ்தேர் என்கிறவள் கொடிய தீர்வைக்குட்பட்டிருந்த தம்முடைய ஜனங்களுக்கு மீட்பை அடையத்தக்கதாக பெரிய இராஜாவாயிருந்த அசுவெருஸ் என்பவரிடத்தில் மனுப் பேச வந்தாளாம். அவளைக்கண்டு இராஜாவானவர் சந்தோஷப்பட்டு சொன்னதாவது ராணியான எஸ்தேரே! உமக்கு என்ன வேண்டியது? நீ கேட்கிறது ஏதென்று சொல்லு. என்னத்தைக் கேட்பாயோ உனக்கு அளிக்கப்படும் என்றார். அப்போது ராணியான எஸ்தேரென்பவள் தன்னுடைய ஜனங்களுக்கு விதித்த ஆக்கினையிலிருந்து அவர்களைத் தாபரித்து இரட்சிக்கவேணுமென்று மன்றாடினாளாம். அவளுடைய மன்றாட்டுக்கு இராஜா இரங்கி அந்த ஜனங்களை மீட்டுக்காப்பாற்றினாரென்று வேத புத்தகங் களிலே எழுதியிருக்கின்றது. இந்தப் பிரகாரமாய் இராக்கினியான தேவமாதாவானவள் இராஜாதி இராஜனாகிய தம்முடைய திவ்விய குமாரனை மன்றாடி தமது பிரஜையான உத்தரிக்கிற ஆத்துமாக்களை அவர்களுக்கு விதித்த ஆக்கினையிலிருந்து மீட்டு இரட்சிக்கிறாளென்று சொல்ல வேண்டியதாகும்.
மேலும் தேவமாதாவை துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே! என்று தினந்தினம் பிரார்த்தனையிலே எல்லோரும் வாழ்த்திக்கொண்டு வருகிறார்களே. அப்படியிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்கள் துன்பப்படுகிறதைப் போல இவ்வுலகத்தில் துன்பப்படுவாருண்டோ? இல்லை யென்றால் தேவமாதாவானவள் அந்த ஆத்துமாக்களுக்கு விசேஷ தேற்றரவாயிருந்து ஆறுதல் வருவிப்பாளென்று கூறக்கடவோமல்லவோ ?ஆனதால் அவளை நோக்கி:
"ஆண்டவளே இராக்கினியே தாயாரே! நாங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடக்கும் போது எங்களுக்குத் தேற்றர
வராயிருப்பீரென்று நம்பிக்கையாயிருக்கிறோம்" என்பீர்களாக.
கடைசியிலே மோட்சவாசிகளும் காவலான சிம்மனசுகளும் மற்ற சமஸ்த சம்மனசுகளும் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மிகவும் நேசிக்கிறார்களென்பதும் அவர்களுடைய வேதனைகள் முடிய வெகுவாய் விரும்பு கிறார்களென்பதும் நிச்சயமாகையால், தங்களாலே ஆனமட்டும் அந்த ஆத்துமாக்களுக்கு உதவி பண்ணுவார்கள். அதனால் இன்னும் இவ்வுலகத்திலே சஞ்சரிக்கிற நாம் அந்த ஆத்துமாக்களின் பரிகாரக்கடனை நம்முடைய பிரயாசத்தால் தீர்த்து அவர்களை மோட்சத்துக்கு சேர்ப்பிக்க விரும்புவோமாகில், அந்த மோட்சவாசிகளெல்லோரும் எவ்வளவு சந்தோஷப்படுவார்களென்றும், நமது பேரிலே எவ்வளவு பட்சமாயிருப்பார்களென்றும், அதனாலே நமக்கு எவ்வளவு சகாயம் பண்ணுவார்களென்றும் சொல்லக்கூடும் தன்மை அல்லவே . ஆனதால் அந்த ஆத்துமாக்களுக்காக நாம் செய்கிறதெல்லாம் தேவமாதாவுக்கும் அர்சிஷ்டவர்களுக்கும் பிரியப்படுவதுமல்லாமல் அவர்களுடைய விசேச ஆதரவை நமக்கு பெறுவிக்கும் என்றும் அறியக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே , எங்கள் பேரில் இரக்கமாயிரும்
செபம்
எங்கள் சர்வேசுரனான ஏசுவே ! நித்திய சீவியத்தைத் தரும் திருச்சிலுவையின் வல்லமையினாலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவின் மன்றாட்டாலும் சகலமான மோட்சவாசிகளுடைய வேண்டுதலாலும் எங்கள் பேரில் இரக்கமாயிரும் .எங்களை தாபரித்துக் கொள்ளும் சுவாமி . நித்திய ஜீவியத்தின் நம்பிக்கையோடு செத்தவர்களின் ஆத்துமங்களை கிருபையாய் நினைத்துக் கொண்டு அவர்களை உம்மிடத்திலே சேர்த்தருள வேண்டுமென்று உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
பதினான்காம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கிருபை தாபத்து மந்திரம் சொல்லுகிறது
புதுமை
உரோமை என்னும் மாநகரில் பத்திரிச்சி அருளப்பர் எனப்பட்ட ஒரு பிரபு இருந்தார். அவர் வெகு தர்மவானாயிருந்தபடியால் பிச்சைக்காரர்களுக்கு ஏராள மான பிச்சைக்களைக் கொடுத்துக்கொண்டு வந்தார். பிற்பாடு நல்ல வயதிலே பாக்கியமான மரணத்தை அடைந்தார். ஆயினும் அவரிடத்திலே சில சொற்பக் குற்றங்கள் இருந்ததினாலே அவருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு அனுப்பப்பட்டது.
அப்போது குருசுவாமியார் ஒருவர் அர்ச் செசீலியம்மாள் கோயிலிலே ஒரு தரிசனத்தைக் கண்டார். மோட்ச இராக்கினியான தேவமாதாவானவள் எண்ணிக்கையில்லாத சம்மனசுகளால் சூழப்பட்டு வாக்குக்கெட்டாத பிரதாபத் தோடு ஒர் உயர்ந்த சிம்மாசனத்திலே உட்கார்ந்திருந்தாள். பரம நாயகியினுடைய மகிமையைக்கண்டு எல்லோரும் வணங்கி மெளனமாயிருக்கையில், ஒரு பிச்சைக்காரி வந்து தேவமாதாவுக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்தாள். அவளுடைய வஸ்திரமெல்லாம் பீற்றலாய் இருந்தாலும், அவளுடைய தோளின்மேல் ஒரு விலையுயர்ந்த நேர்த்தியான போர்வை இருந்தது.
அந்தப் பிச்சைக்காரி மோட்ச இராக்கினியை நோக்கித் திரளான கண்ணீர் சொரிந்து செய்துகொண்ட விண்ணப்பமாவது ஆண்டவளே இராக்கினியே தாயாரே இப்போது இறந்துபோன பத்திரிச்சி அருளப்பரைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளும் அவர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அநுபவிக்கிற வேதனைகளிலிருந்து அவரை மீட்டுக் கொள்ளும். நான் வைத்திருக்கிற இந்த நேர்த்தியான போர்வையை உம்மைக் குறித்து ஆண்டவளே அவரே எனக்குக் கொடுத்தார். நான் அப்போது குளிரினாலே வெகு வருத்தப்பட்டிருந்ததினால் அந்தப் போர்வை எனக்குப் பெரிய சகாயமானது. உம்மைக் குறித்துச் செய்யப்பட்ட சகாயத்தால் அவருக்குப் பிரயோசன மில்லாமல் போகுமோ? ஆதலால் கிருபை நிறைந்த மாதாவே அவர் இப்போது உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு வேதனைப்படுகிறார் என்கிறதினாலே அவருக்கு ஒத்தாசை யாயிரும். அவர் எனக்கு உம்முடைய பேரைச் சொல்லி இந்த நேர்த்தியான போர்வையைக் கொடுத்தாற்போலே அவருக்கு நித்திய மகிமையைக் கட்டளையிடவேணுமென்று மன்றாடு கின்றேன் என்றாள்.
அந்தப் பிச்சைக்காரி மூன்று முறை இந்த விண்ணப்பத்தைச் சொல்லவே, கூட நின்ற சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் மோட்சராக்கினியைப் பார்த்து ஆண்டவளே இந்த விண்ணப்பத்தை அங்கீகரித்து அவள் கேட்டாற்போலே உத்தரவாகவேனும் என்று மன்றாடினார்கள். அப்போது தேவ மாதாவானவள் பத்திரிச்சி அருளப்பரைக் கூட்டிக் கொண்டு வரக் கற்பித்தாள். அவர் கனமுள்ள சங்கிலியினால் கட்டுண்டு அதிக வேதனைப் பட்ட பிரகாரமாய்த் தேவமாதாவினுடைய சிம்மாசனத் தண்டையில் கூட்டிக்கொண்டு வரப்பட்டு அங்கலாய்த்து நின்றார். தாமதமின்றித் தேவமாதாவானவள் பிச்சைக்காரி கேட்டாற்போல் ஆகட்டுமென்று கையினால் சைகை காட்டினவுடனே அருளப்பருடைய கைகளிலே பூட்டப்பட்டிருந்த சங்கிலிகள் விழுந்து அவருடைய துக்கம் மகிமையாக மாறி மோட்சவாசிகளுடைய பிரதாபத்தோடு காணப்பட்டார்.
அவரை மோட்ச இராக்கினி மகனைப் போலே அணைத்து அர்ச்சியசிஷ்டவர்கள் அவரைத் தங்களுக்குத் துணையாகவும் சகோதரராகவும் கொண்டாடி எல்லாரும் மகிமையோடு மோட்ச பேரின்ப இராச்சியத்துக்கு எழுந்தருளிப்போனார்கள். இவையெல்லாம் மேற்சொன்ன குருசுவாமியார் கண்டபிற்பாடு காட்சி மறைந்துபோனதாம்.
கிறிஸ்துவர்களே , தேவமாதாவைக் குறித்துச் செய்த தர்மம் அவ்வளவு பலனுள்ளதென்று கண்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பரிசுத்த கன்னிகையின் பேரைச் சொல்லி அடிக்கடி பிச்சைக் கொடுங்கள்.
உங்களை நித்திய கூடாரங்களிலே ஏற்றுக்கொள்ளும்படியாய் இவ்வுலக திரவியங்களைக் கொண்டு உங்களுக்குச் சிநேகிதரைத் தேடுங்கள் என்று சுவாமி தாமே சொல்லியிருக்கிறாரே. மோட்ச பேரின்பத்தை விரும்புகிற நீங்கள் தர்மங்களை ஏராளமாய்ச் செய்வீர்களாக .தேவ மாதாவானவள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு இராக்கினி யாகையால், உத்திரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவதே அவளுக்கு மிகவும் பிரியமாயிருக்கிறதென்று அறிந்து முன்னே செய்ததைவிட அதிகமாய்ச் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவது தேவமாதாவுக்கும் மற்ற மோட்சவாசிகளுக்கும் பிரியமுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது
தியானம்
நமது ஆண்டவரான சேசுக் கிறிஸ்துநாதர் சுவாமி நமக்காகப் பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு சாகிற தருணத்தில் தம்முடைய திவ்விய மாதாவை மனுஷருக்குத் தாயாராகக் கொடுத்தாரென்றும், மனுஷரை அவளுக்குப் பிள்ளைகளாகக் கட்டளையிட்டாரென்றும், யாவரும் அறிந்த பரம சத்தியமாமல்லவோ? அப்போது மரிக்கப்போகிற சர்வவல்லபமுள்ள சுவாமி தமது திவ்விய மாதாவின் இருதயத்தில் மனுஷர்பேரில் மட்டற்ற அன்பையும் பட்சத்தையும் வைத்தாரென்கிறதற்குச் சந்தேகமில்லை.
ஆனதினாலே எக்காலமும் எந்நாடும் எச்சாதியும் வயதுமுள்ள கிறிஸ்துவர்கள் எல்லோரும் ஏகோபித்து ஒரே மனப்பட்டு , தேவ மாதா தங்களுக்குத் தாயார் என்று அவளைக் கொண்டாடிப் புகழ்ந்து வணங்கி நேசித்துக் கொண்டு வருகிறார்கள். அவளோவெனில், மனுஷரெல்லோரும் தமக்குப் பிள்ளைகள் என்று அவர்களை நேசித்து , பேணித் தாபரித்து அவர்களுக்கு எவ்வித உபகார சகாயங்களையும் பண்ணிக் கொண்டு வருகிறாள் என்பது உச்சிப் பகலிலும் தெளிந்த சத்தியமாம் . தாயானவள் தாம் பெற்ற குழந்தையை மறப்பாளோ என்ன ? இவ்வுலகத் தாய் தன் குழந்தையை மறந்து போனாலும் தேவமாதாவானவள் தமது பிள்ளைகளாகிய மனுஷரை ஒரு போதும் மறக்கவுமாட்டாள். அவர்களுக்கு நன்மை செய்யாதிருக்கவுமாட்டாள்.
எல்லா மனுஷருக்கும் தேவமாதா தாயாரென்றால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு விசேஷமாய் அவளே தாயாரென்று எண்ணவும் வேனும், சொல்லவும் வேணும். அதெப்படியென்றால், அந்த ஆத்துமாக்கள் சர்வேசுரனுக்கும் சேசுகிறீஸ்துநாதருக்கும் மிகவும் பிரியப்பட்டு இஷ்டப்பட்டு இஷ்டப்பிரசாதத்தால் நிறையவும்பட்ட ஆத்துமாக்களாகையால், அவர்களைத் தேவமாதாவானவள் மிகவும் நேசிப்பாளென்கிறது தப்பாது. மேலும், தாயானவள் வருத்தப்பட்டு நோகிற தன் குழந்தைக்கு அதிக பட்சம் காண்பிப்பாளல்லவோ? அதிப்படியிருக்கையில் எவ்வித வேதனைகளையும் அனுபவிக்கிற உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு தேவமாதாவானவள் அதிக தயவையும் பட்சத்தையும் காட்டுவாளென்று சொல்ல வேண்டும் அல்லவோ ?
அந்த ஆத்துமாக்களோவென்றால் தாங்கள் படுகிற கடின
வாதைகளிலிருந்து தங்களுடைய தாயாரான தேவமாதாவினிடத்தில் அபய சத்தமிட்டு மகா பக்தி நம்பிக்கையோடு தங்களுக்கு உதவியாயிருக்கிவேணுமென்று கெஞ்சிக் கொண்டு வருவார்களாம். அவர்கள் தேவமாதா வினுடைய பிரதாபமுள்ள நாமதேயத்தைச் சொல்லும் போது அவர் களுடைய வருத்தங்கள் அமரும், வேதனைகள் குறையும், ஆக்கினைகள் தணியும், மோட்ச பேரின்பம் துவக்கும்.
தேவமாதாவானவள் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் வைத்த பட்சம் வீணான பட்சமல்ல. இந்த பட்சத்தினிமித்தம் தமது வல்லபமுள்ள மன்றாட்டால், சர்வேசுரன் அறிந்தபிரகாரமாய்க் கணக்கில்லாத ஆத்துமாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவள் புறப்படப்பண்ணு வாளென்று வேத சாஸ்திரிகள் நிச்சயித்துச் சொல்லு கிறார்கள். ஆயினும் மற்ற எண்ணிறந்த ஆத்துமாக்கள் தேவ நீதிக்கு விசேஷபரிகாரக் கடனைச் செலுத்த வேணுமென் கிறதினாலே இந்த பரிகாரக் கடன் தீர்ந்த பிற்பாடு மாத்திரமே உத்தரிக்கிற ஸ்தலத்தைவிட்டு ஈடேறுவார்கள்.
மனுஷர் இந்தக் கடனுக்கு உத்தரவாதம் பண்ணக் கூடுமாகையால் அதுக்குத்தக்க தங்களுடைய ஜெபதய தானதர்மங்களை ஒப்புக்கொடுப்பார்களேயாகில், அது தேவமாதாவுக்கு எவ்வளவு பிரியமாயிருக்கும். அது எவ்வளவென்றால், வியாதியாய்க்கிடந்து வருத்தப்படுகிற குழந்தைக்கு எவராவது மருந்து கொடுத்து அக்குழந்தையைச் குணமாக்கினால், அதனுடைய தாய்க்கு எவ்வளவு பிரியமிருக்குமோ அவ்வளவு ஆத்துமாக்களுடைய பரிகாரக் கடனைத் தீர்க்கவேண்டியவைகளைச் செய்வோமாகில் தேவமாதாவுக்கு சந்தோஷம் உண்டாகும் ஆனதால் உத்தரிக்கிற ஆத்துமாக்கள்பேரில் எவ்வளவு அதிகமாய்ப் பக்தி வைப்போமோ அவ்வளவு அதிகமாய்த் தேவ மாதாவானவள் நமது பேரில் தயவாய் இருப்பாளென் கிறதுக்குச் சந்தேகமில்லை.
பரலோகத்துக்கும், பூலோகத்துக்கும் ஆண்டவளாயிருக்கிற தேவமாதாவானவள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கும் இராக்கினியாய் இருக்கிறாளென்று சொல்ல வேண்டிய தாகும். ஆனால் அவள் அந்த வேதனை நிறைந்த இராச்சியத்தில் செலுத்திக் கொண்டிருக்கிற செங்கோன்மை தண்டனை இடுவதற்கல்ல. கிருபை பொழியும் செங் கோன்மைதான். கொடும் காய்ச்சலோடு வருத்தப்படுகிறவர் களுக்குக் குளுமையான தண்ணிர் எவ்வளவு ஆறுதல் கொடுக்குமோ, வருத்தப்படுகிற அந்த ஆத்துமாக் களுக்குத் தேவமாதாவினுடைய தயவு அவ்வளவு ஆறுதல் தரும்.
தம்முடைய பிரதாபமான திருநாட்களில் அவளே உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி அநேக ஆத்துமாக்களைத் தம்முடைய மன்றாட்டினாலும் பேறுபலன்களினாலும் சுகிர்த உதவியினாலும் மீட்டு மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போவாளென்று பேர்பெற்ற சாஸ்திரியான ஜேர்சோனியூ சென்பவர் சொல்லியிருக்கிறார். தமது பேரில் அதிக பக்தியும் நம்பிக்கையும் வைத்துத் தமது உத்தரீயத்தைத் தரித்து அதோடு செத்தவர்களுடைய ஆத்துமாக்களை விசேஷமாய்த் தாமதமின்றி உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்படப்பண்ணுவாளென்று மூன்றாம் இன்னோசென்சியூ சென்ற அர்ச் பாப்பானவர் எழுதிவைத்தார்.
பழைய வேதத்திலே ராணியான எஸ்தேர் என்கிறவள் கொடிய தீர்வைக்குட்பட்டிருந்த தம்முடைய ஜனங்களுக்கு மீட்பை அடையத்தக்கதாக பெரிய இராஜாவாயிருந்த அசுவெருஸ் என்பவரிடத்தில் மனுப் பேச வந்தாளாம். அவளைக்கண்டு இராஜாவானவர் சந்தோஷப்பட்டு சொன்னதாவது ராணியான எஸ்தேரே! உமக்கு என்ன வேண்டியது? நீ கேட்கிறது ஏதென்று சொல்லு. என்னத்தைக் கேட்பாயோ உனக்கு அளிக்கப்படும் என்றார். அப்போது ராணியான எஸ்தேரென்பவள் தன்னுடைய ஜனங்களுக்கு விதித்த ஆக்கினையிலிருந்து அவர்களைத் தாபரித்து இரட்சிக்கவேணுமென்று மன்றாடினாளாம். அவளுடைய மன்றாட்டுக்கு இராஜா இரங்கி அந்த ஜனங்களை மீட்டுக்காப்பாற்றினாரென்று வேத புத்தகங் களிலே எழுதியிருக்கின்றது. இந்தப் பிரகாரமாய் இராக்கினியான தேவமாதாவானவள் இராஜாதி இராஜனாகிய தம்முடைய திவ்விய குமாரனை மன்றாடி தமது பிரஜையான உத்தரிக்கிற ஆத்துமாக்களை அவர்களுக்கு விதித்த ஆக்கினையிலிருந்து மீட்டு இரட்சிக்கிறாளென்று சொல்ல வேண்டியதாகும்.
மேலும் தேவமாதாவை துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே! என்று தினந்தினம் பிரார்த்தனையிலே எல்லோரும் வாழ்த்திக்கொண்டு வருகிறார்களே. அப்படியிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்கள் துன்பப்படுகிறதைப் போல இவ்வுலகத்தில் துன்பப்படுவாருண்டோ? இல்லை யென்றால் தேவமாதாவானவள் அந்த ஆத்துமாக்களுக்கு விசேஷ தேற்றரவாயிருந்து ஆறுதல் வருவிப்பாளென்று கூறக்கடவோமல்லவோ ?ஆனதால் அவளை நோக்கி:
"ஆண்டவளே இராக்கினியே தாயாரே! நாங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடக்கும் போது எங்களுக்குத் தேற்றர
வராயிருப்பீரென்று நம்பிக்கையாயிருக்கிறோம்" என்பீர்களாக.
கடைசியிலே மோட்சவாசிகளும் காவலான சிம்மனசுகளும் மற்ற சமஸ்த சம்மனசுகளும் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மிகவும் நேசிக்கிறார்களென்பதும் அவர்களுடைய வேதனைகள் முடிய வெகுவாய் விரும்பு கிறார்களென்பதும் நிச்சயமாகையால், தங்களாலே ஆனமட்டும் அந்த ஆத்துமாக்களுக்கு உதவி பண்ணுவார்கள். அதனால் இன்னும் இவ்வுலகத்திலே சஞ்சரிக்கிற நாம் அந்த ஆத்துமாக்களின் பரிகாரக்கடனை நம்முடைய பிரயாசத்தால் தீர்த்து அவர்களை மோட்சத்துக்கு சேர்ப்பிக்க விரும்புவோமாகில், அந்த மோட்சவாசிகளெல்லோரும் எவ்வளவு சந்தோஷப்படுவார்களென்றும், நமது பேரிலே எவ்வளவு பட்சமாயிருப்பார்களென்றும், அதனாலே நமக்கு எவ்வளவு சகாயம் பண்ணுவார்களென்றும் சொல்லக்கூடும் தன்மை அல்லவே . ஆனதால் அந்த ஆத்துமாக்களுக்காக நாம் செய்கிறதெல்லாம் தேவமாதாவுக்கும் அர்சிஷ்டவர்களுக்கும் பிரியப்படுவதுமல்லாமல் அவர்களுடைய விசேச ஆதரவை நமக்கு பெறுவிக்கும் என்றும் அறியக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவின் திரு இருதயமே , எங்கள் பேரில் இரக்கமாயிரும்
செபம்
எங்கள் சர்வேசுரனான ஏசுவே ! நித்திய சீவியத்தைத் தரும் திருச்சிலுவையின் வல்லமையினாலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவின் மன்றாட்டாலும் சகலமான மோட்சவாசிகளுடைய வேண்டுதலாலும் எங்கள் பேரில் இரக்கமாயிரும் .எங்களை தாபரித்துக் கொள்ளும் சுவாமி . நித்திய ஜீவியத்தின் நம்பிக்கையோடு செத்தவர்களின் ஆத்துமங்களை கிருபையாய் நினைத்துக் கொண்டு அவர்களை உம்மிடத்திலே சேர்த்தருள வேண்டுமென்று உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
பதினான்காம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கிருபை தாபத்து மந்திரம் சொல்லுகிறது
புதுமை
உரோமை என்னும் மாநகரில் பத்திரிச்சி அருளப்பர் எனப்பட்ட ஒரு பிரபு இருந்தார். அவர் வெகு தர்மவானாயிருந்தபடியால் பிச்சைக்காரர்களுக்கு ஏராள மான பிச்சைக்களைக் கொடுத்துக்கொண்டு வந்தார். பிற்பாடு நல்ல வயதிலே பாக்கியமான மரணத்தை அடைந்தார். ஆயினும் அவரிடத்திலே சில சொற்பக் குற்றங்கள் இருந்ததினாலே அவருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு அனுப்பப்பட்டது.
அப்போது குருசுவாமியார் ஒருவர் அர்ச் செசீலியம்மாள் கோயிலிலே ஒரு தரிசனத்தைக் கண்டார். மோட்ச இராக்கினியான தேவமாதாவானவள் எண்ணிக்கையில்லாத சம்மனசுகளால் சூழப்பட்டு வாக்குக்கெட்டாத பிரதாபத் தோடு ஒர் உயர்ந்த சிம்மாசனத்திலே உட்கார்ந்திருந்தாள். பரம நாயகியினுடைய மகிமையைக்கண்டு எல்லோரும் வணங்கி மெளனமாயிருக்கையில், ஒரு பிச்சைக்காரி வந்து தேவமாதாவுக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்தாள். அவளுடைய வஸ்திரமெல்லாம் பீற்றலாய் இருந்தாலும், அவளுடைய தோளின்மேல் ஒரு விலையுயர்ந்த நேர்த்தியான போர்வை இருந்தது.
அந்தப் பிச்சைக்காரி மோட்ச இராக்கினியை நோக்கித் திரளான கண்ணீர் சொரிந்து செய்துகொண்ட விண்ணப்பமாவது ஆண்டவளே இராக்கினியே தாயாரே இப்போது இறந்துபோன பத்திரிச்சி அருளப்பரைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளும் அவர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அநுபவிக்கிற வேதனைகளிலிருந்து அவரை மீட்டுக் கொள்ளும். நான் வைத்திருக்கிற இந்த நேர்த்தியான போர்வையை உம்மைக் குறித்து ஆண்டவளே அவரே எனக்குக் கொடுத்தார். நான் அப்போது குளிரினாலே வெகு வருத்தப்பட்டிருந்ததினால் அந்தப் போர்வை எனக்குப் பெரிய சகாயமானது. உம்மைக் குறித்துச் செய்யப்பட்ட சகாயத்தால் அவருக்குப் பிரயோசன மில்லாமல் போகுமோ? ஆதலால் கிருபை நிறைந்த மாதாவே அவர் இப்போது உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு வேதனைப்படுகிறார் என்கிறதினாலே அவருக்கு ஒத்தாசை யாயிரும். அவர் எனக்கு உம்முடைய பேரைச் சொல்லி இந்த நேர்த்தியான போர்வையைக் கொடுத்தாற்போலே அவருக்கு நித்திய மகிமையைக் கட்டளையிடவேணுமென்று மன்றாடு கின்றேன் என்றாள்.
அந்தப் பிச்சைக்காரி மூன்று முறை இந்த விண்ணப்பத்தைச் சொல்லவே, கூட நின்ற சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் மோட்சராக்கினியைப் பார்த்து ஆண்டவளே இந்த விண்ணப்பத்தை அங்கீகரித்து அவள் கேட்டாற்போலே உத்தரவாகவேனும் என்று மன்றாடினார்கள். அப்போது தேவ மாதாவானவள் பத்திரிச்சி அருளப்பரைக் கூட்டிக் கொண்டு வரக் கற்பித்தாள். அவர் கனமுள்ள சங்கிலியினால் கட்டுண்டு அதிக வேதனைப் பட்ட பிரகாரமாய்த் தேவமாதாவினுடைய சிம்மாசனத் தண்டையில் கூட்டிக்கொண்டு வரப்பட்டு அங்கலாய்த்து நின்றார். தாமதமின்றித் தேவமாதாவானவள் பிச்சைக்காரி கேட்டாற்போல் ஆகட்டுமென்று கையினால் சைகை காட்டினவுடனே அருளப்பருடைய கைகளிலே பூட்டப்பட்டிருந்த சங்கிலிகள் விழுந்து அவருடைய துக்கம் மகிமையாக மாறி மோட்சவாசிகளுடைய பிரதாபத்தோடு காணப்பட்டார்.
அவரை மோட்ச இராக்கினி மகனைப் போலே அணைத்து அர்ச்சியசிஷ்டவர்கள் அவரைத் தங்களுக்குத் துணையாகவும் சகோதரராகவும் கொண்டாடி எல்லாரும் மகிமையோடு மோட்ச பேரின்ப இராச்சியத்துக்கு எழுந்தருளிப்போனார்கள். இவையெல்லாம் மேற்சொன்ன குருசுவாமியார் கண்டபிற்பாடு காட்சி மறைந்துபோனதாம்.
கிறிஸ்துவர்களே , தேவமாதாவைக் குறித்துச் செய்த தர்மம் அவ்வளவு பலனுள்ளதென்று கண்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பரிசுத்த கன்னிகையின் பேரைச் சொல்லி அடிக்கடி பிச்சைக் கொடுங்கள்.
உங்களை நித்திய கூடாரங்களிலே ஏற்றுக்கொள்ளும்படியாய் இவ்வுலக திரவியங்களைக் கொண்டு உங்களுக்குச் சிநேகிதரைத் தேடுங்கள் என்று சுவாமி தாமே சொல்லியிருக்கிறாரே. மோட்ச பேரின்பத்தை விரும்புகிற நீங்கள் தர்மங்களை ஏராளமாய்ச் செய்வீர்களாக .தேவ மாதாவானவள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு இராக்கினி யாகையால், உத்திரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவதே அவளுக்கு மிகவும் பிரியமாயிருக்கிறதென்று அறிந்து முன்னே செய்ததைவிட அதிகமாய்ச் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
பதினைந்தாம் தேதி
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசைப்படுவது மகிமையுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்கு மேன்மேலும் பக்தி வரத்தக்கதாக அந்த ஆத்துமாக்களுடைய மகிமை எவ்வளவென்று கொஞ்சமாகிலும் காண்பிக்கவேணும். இந்த மகிமையை அறிவதற்கு முதலில் மனுஷருடைய ஆத்தும்ம் எதுவென்று அறியவேணும்.சகல உலகங்களை உண்டுபண்ணினவருமாய்ச் சகலத்தையும் அழிக்க வல்லவருமாயிருக்கிற சர்வேசுரன் அந்த ஆத்துமத்தை தமது சாயலாக படைத்ததன்றியே அந்த ஆத்துமம் தமக்குண்டான சகல நன்மைகளையும் அளவின்றி முடிவின்றித் தம்மிடத்திலே அநுபவிக்கும்படியாய் உண்டு பண்ணினார்.
சூரியன் சந்திரன் நவக்கிரகங்கள் முதலான சகல நட்சத்திரங்களையும் பூமண்டலத்திலுள்ள சகலத்தையும் மனுஷனுக்காகத்தானே சர்வேசுரன் படைத்தாரென்கிற தினாலே எல்லாவற்றுக்கும் மேலான மகிமையை மனுஷன் கொண்டிருக்கிறானென்று சொல்லக் கடவோமல்லவோ? மேலும் மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமையை அதிகமாய் அறியத்தக்கதாக அந்த ஆத்துமத்தை மீட்க சேசுநாதர் சுவாமி செய்ததையும் பட்டதையும் இன்னும் சற்றுநேரம் யோசிக்கவேணும். சத்தியமாகவே அந்த ஆத்துமத்தை இரட்சிக்க அவர் மெய்யான கடவுளாயிருந்து மனிதனாய்ப் பிறந்து அளவில்லாத பலனுள்ளதாகிய தாம் பட்ட நிந்தை அவமானங்களையும், வாதை வேதனைகளையெல்லா, துேம் அதற்கு விலையாகத் தந்தருளினாரல்லவோ?
மயக்கமுமின்றி, இருளுமின்றி, தெளிந்த காட்சி ஞானமுடையவராகிய சுவாமி இந்தப்படி ஆத்துமத்தை மதித்தபின்பு நாம் அதன் மாட்சிமையைக் காட்ட வேறொரு நியாயம் தேடவேணுமோ? ஆதலால் அளவில்லாத பலனுள்ள தமது பாடுகளை ஓர் ஆத்துமத்துக்கு விலையாக ஆண்டவர் வலிய மனதோடு கொடுத்திருக்க, நாம் அதை மதிக்கத்தக்கதாக அதிகமாய்ச் சொல்லமுடியாது.
மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமை பொதுப்பிரகாரமாய் அப்படியிருக்க, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பெருமை அதற்குமேற்பட்டதென்றே சொல்ல வேண்டிய தாகும். அதெப்படியென்றால், ஆத்துமத்தில் இருக்கக் கூடுமான வரங்களுக்குள்ளே இஷ்டப்பிரசாதமானது எல்லாவற்றிலும் உயர்ந்த வரமென்பது நிச்சயம். அந்த ஆத்துமாக்களெல்லாம் இஷ்டப்பிரசாதத்தோடே உயிர்விட்டு, தேவசிநேகத்தில் பிசகக்கூடாமல் நிலைமையைக் கொண்டிருக்கிறார்களல்லவோ? அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன் தீர்ந்தவுடனே சர்வேசுரனுடனே பிரத்தியகூடிமான தரிசனத்தை அடைந்து, மோட்ச பேரின்ப இராச்சியத்தில் செஞ்சுடைரைப் போல் பிரகாசித்து, இராஜாக்களைப் போல் பிரதாபக் கீரிடம் சூட்டப்பட்டு, சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து என்றென்றைக்கும் வாழ்வார்களென்பது தப்பாத சத்தியமாம்.
இப்படியாகையில் இப்பேர்ப்பட்ட ஆத்துமாக்களுக்காக வேண்டிப் பிரயாசைப்படுவது மகா மகிமையென்றும் சொல்லவேணுமல்லவோ?
மனுஷர் இவ்வுலகத்தில் செய்யத்தகும் தொழில்களுக்குள்ளே குருக்கள் செய்யும் தொழிலே மேலான தொழிலென்று அர்ச் கிறகோரியூசென்னும் பாப்பானவர் சொல்லியிருக்கிறார். அதேதெனில், மற்றத் தொழில்களெல்லாம் அழிந்துபோகிற சரீரத்தைச் சார்ந்த தொழில்களாயிருக்கையில், அழியாத ஆத்துமாக்களை விசாரிக்கும் தொழில் குருக்களுடைய தொழிலாம். சேசுநாதர் சுவாமி செய்த தொழிலும் இந்தத் தொழில்தான். குருக்கள் எல்லோருக்கும் புத்திமதிகளைச் சொல்லி, ஆத்துமம் கெட்டுப்போகாதப்படி பாவத்தை விலக்கவும், புண்ணியத் தைச் செய்யவும் போதித்துக் கொண்டு வருகிறார்கள். மீண்டும் ஆத்துமத்தின் பல அவசரங்களுக்கு ஆண்டவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஏழு தேவதிரவிய அநுமானங்களையும் அளிக்கிறார்களல்லவோ?
மேலும் சேசுநாதர் சுவாமி அடைந்த மட்டில்லாத பலனுள்ள திவ்விய மரணத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் மோசம் போகாதபடிக்கு, குருக்கள் பலரும் வீடுவாசல் காணிபூமியை விட்டு, சகலத்தையும் துறந்து வருத்தங்களுக்கும் சாவுக்கும் முதலாய் அஞ்சாமல், அன்னிய தேசங்களுக்குப் போய்மிக்க பிரயாசையும் படுகிறார்களன்றோ? ஆயினும் அவர்கள் நினைத்த பலன் சரிவரக் கிடைக்குமோ கிடைக்காதோ சந்தேகம். அதெப்படியென்றல், மனுஷனானவன் இவ்வுலகத்தில் இருக்கும் வரையில் வேண்டும் வேண்டாமென்கிற மனச்சுதந்திரத்தைக் கைக் கொண்டிருக்கிறான் என்கிறதினால், நன்னெறியில் உறுதியாய் நிலைக்கொண்டு மோட்சத்தை அடைவானோ, அல்லது மனங் கெட்டுப் புத்தி மயங்கிப் புண்ணிய வழியைவிட்டு அவலமாய்ச் சாவானோவென்பது தெரியாத காரியமாயிருக்கும்.
அதனால் இவ்வுலகத்திலுள்ள ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவது நல்லதாயினும், நமக்கு இந்தப் பிரயாசை பலனுள்ளதாயினும், அது அவ்வாத்துமாக்களுக்கு உதவுமோ உதவாதிருக்குமோ தெரியாது. ஆனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவது அப்படியல்லவே. அந்த ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்திலும் தேவ சிநேகத்திலும் ஸ்திரப்பட்ட நிலைமையென்கிற பரம வரத்தைக் கொண்டிருக்கிறார்களன்கிறதினாலே ஒருபோதும் பாவத்தைச் செய்யவுமாட்டார்கள், ஒருபோதும் கெட்டுப் போகவுமாட்டார்கள். என்றென்றைக்கும் மோட்சத்தில் வாழ்வார்களென்பது நிச்சயமாகையால், அவர்களைக் குறித்துச் செய்வதெல்லாம் செய்பவர்களுக்கும் பலிக்குமல்லாது அந்த ஆத்துமாக்களுக்கும் உதவுமென்கிறது தப்பாத சத்தியமாம்.
மேலும் சுவிசேஷச்திலே எழுதின பிரகாரம் நமது இரட்சகரான சேசுநாதர்சுவாமி தம்முடைய சிநேகிதனான இறந்துபோன லாசரென்பவருக்காக அழுதார். பின்பு இவர் அவரை அடக்கம்பண்ணப்பட்ட கல்லறைக்குப் போய் அதை மூடியிருந்த கல்லை எடுக்கச்சொல்லி, லாசரே, வெளியே வா என்று சத்தமாய்க் கூப்பிட்டார். அக்கணமே இறந்தவர் உயிர்த்துக் கல்லறையைவிட்டுப் புறப்பட்டு வந்தார். சுவாமி அப்படிச் செய்தது பெரிய புதுமை என்றாலும், நாம் உத்தரிக்கிறிஸ்தலத்திலுள்ளோருக்கு பண்ணும் சகாயம் அதற்கு மேற்பட்டாற்போலே காணப்படும். அதேதெனில் இந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருக்கிறவன், அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக் கடனைத் தன்னுடைய பிரயாசையால் தீர்த்து, அவர்களைக் கூப்பிட்டு நீங்கள் சிறைப்பட்டிருக்கிற இந்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு மெய்யான ஜிவியமாகிய நித்திய பேரின் பத்துக்குப் போங்கள் என்கிறாற்போல அவன் யோசிக்கத்தக்கதாயிருக்கிறது.
அந்த ஆத்துமாக்களோவென்றால் உத்தரிக்கிற ஸ்தலத்தை விட்டு மிகுந்த சந்தோஷத்தோடும் மகா பிரதாபத்தோடும் மோட்சத்துக்குப் போகையில், தங்களை மீட்டவனை வாழ்த்திக் கொண்டாடி ஆசீர்வதித்து அவனுக்காக ஆண்டவரை மன்றாடுவார்களல்லவோ ?லாசரென்பவர் சேசுகிறிஸ்துநாதர் சுவாமியால் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அவர் சில வருஷத்துக்குப் பிற்பாடு மரணத்தை அடைந்தார். மீட்கப்பட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில், அநவரதகாலம் குறையுமின்றி முடிவுமின்றி வாழ்ந்து, திருப்தியடைந்து செல்வ பாக்கிய மெல்லாவற்றையும் அனுபவித்துச் சர்வேசுரனிடத்தில் ஜீவித்துக் கொண்டிருப்பார்கள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களே ! நீங்கள் செய்வது எவ்வளவு பெரிதென்று இதனாலே அறிந்துக் கொள்ளுங்கள்.
கடைசியிலே சேசுகிறிஸ்துநாதர் சுவாமி சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே அவருடைய பிரதாபமுள்ள திரு ஆத்துமம் பாதாளங்களில் இறங்கி, அங்கே இருந்த புண் ணியாத்துமாக்களுக்குத் தம்மைக் காண்பித்து, அவ்விடத்திலேயிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு தம்முடனே மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டுப் போனாரல்லவோ? இதை நாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மீட்கும்போது செய்யுந் தொழிலும் அதுவே, இதற்கு மேற்பட்ட தொழிலுண்டோவென்று சொல்லுங்கள். ஆனால் அதுக்கும் இதுக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டென்பது மெய்தான். நம்மாலே மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் பேரின்ப வீட்டுக்குப் போகும்போது நாம் இந்தக் கண்ணிர் நிறைந்த கணவாயிலே கொடிய சத்துருக் களுக்குள்ளே கிடக்கிறோமே.
ஆயினும் பிரதாபம் நிறைந்த அந்த ஆத்துமாக்கள் பேரின்பமாய் வாழும்போது தங்களை மீட்டவர்களை மறப்பார்களோ? மறதியானது இப்பூமியிலே இருக்கிறதல்லாமல் பரலோகத்திலே இல்லை. ஆனதினாலே மோட்சவாசிகளான அந்த ஆத்துமாக்கள் நம்மை நினைத்துத் தாபரித்துக் கை தூக்கித் தங்களிடத்தில் சேர்ப்பார்ளென்பது உறுதியாய் நம்பத்தகும் விஷயமாம். ஆகையால் அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிகதிகமாய்ப் பக்திவைக்க வேணுமென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
ஜீவியர்களுக்குயிரும் மரித்தோர்களுக்கு நம்பிக்கையும் உம்மை விசுவசிக்கிறவர்களுக்கு ஈடேற்றமுமாயிருக்கிற சர்வேசுரா! ஸ்திரி பூமான்களான விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பை அடைந்து தேவமாதாவினுடைய உதவியினாலும், சகலமான மோட்சவாசிகளுடைய வேண்டுதலினாலும் நித்திய பிரகாசத்தையும், நித்திய சமாதானத்தையும் கைக்கொள்ளச் செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென். -
பதினைந்தாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து முப்பத்து மூன்று மணிச் செபம் செய்கிறது.
புதுமை
அர்ச். தெரேசம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியுள்ளவளாயிருந்ததினாலே அந்த ஆத்துமாக்களுக்கு இளைப்பாற்றியை வருவிக்கத்தக்கதாக அநேக ஜெபங்களையும், தவங்களையும் பண்ணிக்கொண்டு வந்ததுமல்லாமல், தாம் உண்டுபண்ணின சபையிலே உட்பட்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் அந்த ஆத்துமாக்களுக்காகப் பிரயாசைப்பட வேணுமென்று கற்பித்தாள்.
ஒரு வருஷம் உத்தரிகின்ற ஆத்துமாக்கள் திருநாளில் அந்த ஆத்துமாக்களைக் குறித்துச் செபம் பண்ணும் போது, மனுஷருக்கும் சர்வேசுரனுக்கும் சத்துராதியாயிருக்கின்ற துர்மனப் பசாசு அவளுக்குப் பல பராக்குகளை வருவிக்க முயன்றது. ஆனால் அந்தப் புண்ணியாத்துமாவான கன்னியாஸ்திரியானவள் தேவ கிருபையைக் கொண்டு
துஷ்டப் பசாசைத் துரத்திச் செபத்தைக் குறைவின்றி முடித்துவிட்டாள். ஜெபம் முடிந்தவுடனே அந்த செபங்களுக்கு. பலனாக அநேக ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரச்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதைக் கண்டாள்.
மன்ரசாவென்னும் ஒரு பிரபுவான வர் வல்ல தொலித்தென்ற பட்டணத்தில் தேவமாதாவின் பேராலே அர்ச். தெரேசம்மாள் தம்முடைய சபையைச் சேர்ந்த மடமொன்று ஸ்தாபிக்கும்படியாக, அவளுக்கு ஒரு நல்ல வீட்டையும், நேர்த்தியான தோட்டத்தையும் கொடுத்தார். மீண்டும் தமக்கு யாதொரு பொல்லாப்பு சம்பவிக்குமோவென்று பயந்து அந்த மடத்தைச் சீக்கிரமாய் முடிக்கவேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்தப் பயம் சர்வேசுரனாலே அவருக்கு வந்ததென்று நினைக்கத்தக்கதாயிருக்கின்றது. ஏனென்றால், சில நாட்களுக்குப் பிற்பாடு தூரமாயிருக்கையில் குருக்கள் இல்லாத இடத்திலே பாவசங்கீர்த்தனமில்லாமல் திடீரெனச் செத்தார். அவர் அதிக ஆஸ்தியுள்ளவருமாய் மகிமை சிலாக்கியமுள்ளவருமாய் இவ்வுலக செல்வ பாக்கியத்தைத் தேடுகிறவருமாயிருந்ததுமல்லாமல், அவருடைய நடத்தை நல்ல கிறிஸ்துவனுடைய நடத்தையல்ல. ஆகையினாலே அர்ச் தெரேசம்மாள் அவர் செத்த சேதியைக் கேட்டு அவருக்கு சர்வேசுரன் நல்ல தீர்வையிட்டிருப்பாரோ இல்லையோவென்று அறியாததினாலே வெகு கவலைப்பட்டு அவருடைய ஆத்துமத்துக்காக திரளான கண்ணிர் சிந்திச் செபித்துக் கொண்டாள். அவள் செபம் பண்ணுகையில் சேசுகிறிஸ்துநாதர் அவளுக்குத் தோன்றி, அந்த துரை தேவமாதாவின் பேராலே ஒரு மடத்தை உண்டாக்க வேண்டியவைகளைக் கொடுத்திருக்கிறபடியினாலேயும் தேவமாதா அவனுக்காக வேண்டிக்கொண்டிருக்கிற படியினாலேயும் அவன் சாகிற வேளையில் உத்தமமனஸ்தாபப்பட்டு நித்தியநரகத்துக்குத் தப்பினானென்றும், ஆனால் அம்மடத்தில் முதல் பூசை செய்யப்படும்வரையில் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவன் வெகு வேதனைப்படத் தீர்வையிடப்பட்டானென்றும் அறிவித்தார்.
அதை அர்ச். தெரேசம்மாள் கேட்டு அந்த மடம் சீக்கிரமாய் முடியவும், அதில் திவ்விய பூசை தாமதமில்லாமல் செய்யப்படவும் வெகு பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாள் . அவள் எந்தளவு பிரயாசைப்பட்டாலும் வேலை சீக்கிரமாய் முடிந்தபாடில்லை .அப்போது சேசுநாதர் அவளுக்கு தரிசனமாகி அந்த ஆத்துமம் வெகுவாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப் படுகிறதினாலே நாம் கற்பித்ததைச் சீக்கிரமாய்ச் செய்யவேணுமென்றார்.
அப்போது கன்னியாஸ்திரியானவள் மடத்துக் கோவில் இன்னம் முடியாதிருந்தாலும் ஓர் அறையிலே வேண்டிய முஸ்திப்புப் பண்ணி அதில் திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கப்பண்ணினாள். அவள் திவ்விய நற்கருனை வாங்குகிற நேரத்தில் மேற்சொன்ன துரையினுடைய ஆத்துமம் மிகுந்த மகிமைச் சந்தோஷத்தோடு அவளுக்குக் காண்பித்து, நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணி, தாம் மோட்சத்துக்குப் போகிறதாக அவளுக்கு அறிவித்தது . அதைக் கண்டு அந்த அற்சிஷ்டவள் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து அவ்வளவு தயை பண்ணின சர்வேசுரனை வாழ்த்தினாள்.
கிறிஸ்துவர்களே, அர்ச்சியசிஷ்டவர்கள் எல்லோரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களாய் இருந்தார்களே. நீங்களும் அப்படித்தானே இருக்கவேணும்.
தேவமாதாவைக் குறித்துச் செய்த தர்மத்தினால் மேற் சொன்ன துரையானவர் நித்திய நரகத்துக்குத் தப்பினாரென்று கேட்டீர்களே, நீங்களும் நித்திய நரகத்துக்குத் தப்பத்தக்கதாக தேவமாதாவின் பேரில் பக்தியாயிருக்கிறது மல்லாமல் அவளைக் குறித்துச் சில தர்மங்களைச் செய்யவேணும்.
மேற்சொன்ன துரையினுடைய ஆத்துமம் திவ்விய பூசை நடந்த பிற்பாடு மாத்திரமே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்கப்பட்டு நித்திய பேரின்ப விட்டுக்குப் போனது. இதனால் ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யக்கூடுமான எல்லா நற்கிரியைகளுக்குள்ளே திவ்விய பூசையே சிறந்ததாயிருக்கிறபடியினாலே, உங்களால் கூடினமட்டும் அடிக்கடி திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்க வேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசைப்படுவது மகிமையுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற வகையாவது
தியானம்
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்கு மேன்மேலும் பக்தி வரத்தக்கதாக அந்த ஆத்துமாக்களுடைய மகிமை எவ்வளவென்று கொஞ்சமாகிலும் காண்பிக்கவேணும். இந்த மகிமையை அறிவதற்கு முதலில் மனுஷருடைய ஆத்தும்ம் எதுவென்று அறியவேணும்.சகல உலகங்களை உண்டுபண்ணினவருமாய்ச் சகலத்தையும் அழிக்க வல்லவருமாயிருக்கிற சர்வேசுரன் அந்த ஆத்துமத்தை தமது சாயலாக படைத்ததன்றியே அந்த ஆத்துமம் தமக்குண்டான சகல நன்மைகளையும் அளவின்றி முடிவின்றித் தம்மிடத்திலே அநுபவிக்கும்படியாய் உண்டு பண்ணினார்.
சூரியன் சந்திரன் நவக்கிரகங்கள் முதலான சகல நட்சத்திரங்களையும் பூமண்டலத்திலுள்ள சகலத்தையும் மனுஷனுக்காகத்தானே சர்வேசுரன் படைத்தாரென்கிற தினாலே எல்லாவற்றுக்கும் மேலான மகிமையை மனுஷன் கொண்டிருக்கிறானென்று சொல்லக் கடவோமல்லவோ? மேலும் மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமையை அதிகமாய் அறியத்தக்கதாக அந்த ஆத்துமத்தை மீட்க சேசுநாதர் சுவாமி செய்ததையும் பட்டதையும் இன்னும் சற்றுநேரம் யோசிக்கவேணும். சத்தியமாகவே அந்த ஆத்துமத்தை இரட்சிக்க அவர் மெய்யான கடவுளாயிருந்து மனிதனாய்ப் பிறந்து அளவில்லாத பலனுள்ளதாகிய தாம் பட்ட நிந்தை அவமானங்களையும், வாதை வேதனைகளையெல்லா, துேம் அதற்கு விலையாகத் தந்தருளினாரல்லவோ?
மயக்கமுமின்றி, இருளுமின்றி, தெளிந்த காட்சி ஞானமுடையவராகிய சுவாமி இந்தப்படி ஆத்துமத்தை மதித்தபின்பு நாம் அதன் மாட்சிமையைக் காட்ட வேறொரு நியாயம் தேடவேணுமோ? ஆதலால் அளவில்லாத பலனுள்ள தமது பாடுகளை ஓர் ஆத்துமத்துக்கு விலையாக ஆண்டவர் வலிய மனதோடு கொடுத்திருக்க, நாம் அதை மதிக்கத்தக்கதாக அதிகமாய்ச் சொல்லமுடியாது.
மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமை பொதுப்பிரகாரமாய் அப்படியிருக்க, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பெருமை அதற்குமேற்பட்டதென்றே சொல்ல வேண்டிய தாகும். அதெப்படியென்றால், ஆத்துமத்தில் இருக்கக் கூடுமான வரங்களுக்குள்ளே இஷ்டப்பிரசாதமானது எல்லாவற்றிலும் உயர்ந்த வரமென்பது நிச்சயம். அந்த ஆத்துமாக்களெல்லாம் இஷ்டப்பிரசாதத்தோடே உயிர்விட்டு, தேவசிநேகத்தில் பிசகக்கூடாமல் நிலைமையைக் கொண்டிருக்கிறார்களல்லவோ? அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன் தீர்ந்தவுடனே சர்வேசுரனுடனே பிரத்தியகூடிமான தரிசனத்தை அடைந்து, மோட்ச பேரின்ப இராச்சியத்தில் செஞ்சுடைரைப் போல் பிரகாசித்து, இராஜாக்களைப் போல் பிரதாபக் கீரிடம் சூட்டப்பட்டு, சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து என்றென்றைக்கும் வாழ்வார்களென்பது தப்பாத சத்தியமாம்.
இப்படியாகையில் இப்பேர்ப்பட்ட ஆத்துமாக்களுக்காக வேண்டிப் பிரயாசைப்படுவது மகா மகிமையென்றும் சொல்லவேணுமல்லவோ?
மனுஷர் இவ்வுலகத்தில் செய்யத்தகும் தொழில்களுக்குள்ளே குருக்கள் செய்யும் தொழிலே மேலான தொழிலென்று அர்ச் கிறகோரியூசென்னும் பாப்பானவர் சொல்லியிருக்கிறார். அதேதெனில், மற்றத் தொழில்களெல்லாம் அழிந்துபோகிற சரீரத்தைச் சார்ந்த தொழில்களாயிருக்கையில், அழியாத ஆத்துமாக்களை விசாரிக்கும் தொழில் குருக்களுடைய தொழிலாம். சேசுநாதர் சுவாமி செய்த தொழிலும் இந்தத் தொழில்தான். குருக்கள் எல்லோருக்கும் புத்திமதிகளைச் சொல்லி, ஆத்துமம் கெட்டுப்போகாதப்படி பாவத்தை விலக்கவும், புண்ணியத் தைச் செய்யவும் போதித்துக் கொண்டு வருகிறார்கள். மீண்டும் ஆத்துமத்தின் பல அவசரங்களுக்கு ஆண்டவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஏழு தேவதிரவிய அநுமானங்களையும் அளிக்கிறார்களல்லவோ?
மேலும் சேசுநாதர் சுவாமி அடைந்த மட்டில்லாத பலனுள்ள திவ்விய மரணத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் மோசம் போகாதபடிக்கு, குருக்கள் பலரும் வீடுவாசல் காணிபூமியை விட்டு, சகலத்தையும் துறந்து வருத்தங்களுக்கும் சாவுக்கும் முதலாய் அஞ்சாமல், அன்னிய தேசங்களுக்குப் போய்மிக்க பிரயாசையும் படுகிறார்களன்றோ? ஆயினும் அவர்கள் நினைத்த பலன் சரிவரக் கிடைக்குமோ கிடைக்காதோ சந்தேகம். அதெப்படியென்றல், மனுஷனானவன் இவ்வுலகத்தில் இருக்கும் வரையில் வேண்டும் வேண்டாமென்கிற மனச்சுதந்திரத்தைக் கைக் கொண்டிருக்கிறான் என்கிறதினால், நன்னெறியில் உறுதியாய் நிலைக்கொண்டு மோட்சத்தை அடைவானோ, அல்லது மனங் கெட்டுப் புத்தி மயங்கிப் புண்ணிய வழியைவிட்டு அவலமாய்ச் சாவானோவென்பது தெரியாத காரியமாயிருக்கும்.
அதனால் இவ்வுலகத்திலுள்ள ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவது நல்லதாயினும், நமக்கு இந்தப் பிரயாசை பலனுள்ளதாயினும், அது அவ்வாத்துமாக்களுக்கு உதவுமோ உதவாதிருக்குமோ தெரியாது. ஆனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவது அப்படியல்லவே. அந்த ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்திலும் தேவ சிநேகத்திலும் ஸ்திரப்பட்ட நிலைமையென்கிற பரம வரத்தைக் கொண்டிருக்கிறார்களன்கிறதினாலே ஒருபோதும் பாவத்தைச் செய்யவுமாட்டார்கள், ஒருபோதும் கெட்டுப் போகவுமாட்டார்கள். என்றென்றைக்கும் மோட்சத்தில் வாழ்வார்களென்பது நிச்சயமாகையால், அவர்களைக் குறித்துச் செய்வதெல்லாம் செய்பவர்களுக்கும் பலிக்குமல்லாது அந்த ஆத்துமாக்களுக்கும் உதவுமென்கிறது தப்பாத சத்தியமாம்.
மேலும் சுவிசேஷச்திலே எழுதின பிரகாரம் நமது இரட்சகரான சேசுநாதர்சுவாமி தம்முடைய சிநேகிதனான இறந்துபோன லாசரென்பவருக்காக அழுதார். பின்பு இவர் அவரை அடக்கம்பண்ணப்பட்ட கல்லறைக்குப் போய் அதை மூடியிருந்த கல்லை எடுக்கச்சொல்லி, லாசரே, வெளியே வா என்று சத்தமாய்க் கூப்பிட்டார். அக்கணமே இறந்தவர் உயிர்த்துக் கல்லறையைவிட்டுப் புறப்பட்டு வந்தார். சுவாமி அப்படிச் செய்தது பெரிய புதுமை என்றாலும், நாம் உத்தரிக்கிறிஸ்தலத்திலுள்ளோருக்கு பண்ணும் சகாயம் அதற்கு மேற்பட்டாற்போலே காணப்படும். அதேதெனில் இந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருக்கிறவன், அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக் கடனைத் தன்னுடைய பிரயாசையால் தீர்த்து, அவர்களைக் கூப்பிட்டு நீங்கள் சிறைப்பட்டிருக்கிற இந்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு மெய்யான ஜிவியமாகிய நித்திய பேரின் பத்துக்குப் போங்கள் என்கிறாற்போல அவன் யோசிக்கத்தக்கதாயிருக்கிறது.
அந்த ஆத்துமாக்களோவென்றால் உத்தரிக்கிற ஸ்தலத்தை விட்டு மிகுந்த சந்தோஷத்தோடும் மகா பிரதாபத்தோடும் மோட்சத்துக்குப் போகையில், தங்களை மீட்டவனை வாழ்த்திக் கொண்டாடி ஆசீர்வதித்து அவனுக்காக ஆண்டவரை மன்றாடுவார்களல்லவோ ?லாசரென்பவர் சேசுகிறிஸ்துநாதர் சுவாமியால் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அவர் சில வருஷத்துக்குப் பிற்பாடு மரணத்தை அடைந்தார். மீட்கப்பட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில், அநவரதகாலம் குறையுமின்றி முடிவுமின்றி வாழ்ந்து, திருப்தியடைந்து செல்வ பாக்கிய மெல்லாவற்றையும் அனுபவித்துச் சர்வேசுரனிடத்தில் ஜீவித்துக் கொண்டிருப்பார்கள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களே ! நீங்கள் செய்வது எவ்வளவு பெரிதென்று இதனாலே அறிந்துக் கொள்ளுங்கள்.
கடைசியிலே சேசுகிறிஸ்துநாதர் சுவாமி சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே அவருடைய பிரதாபமுள்ள திரு ஆத்துமம் பாதாளங்களில் இறங்கி, அங்கே இருந்த புண் ணியாத்துமாக்களுக்குத் தம்மைக் காண்பித்து, அவ்விடத்திலேயிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு தம்முடனே மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டுப் போனாரல்லவோ? இதை நாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மீட்கும்போது செய்யுந் தொழிலும் அதுவே, இதற்கு மேற்பட்ட தொழிலுண்டோவென்று சொல்லுங்கள். ஆனால் அதுக்கும் இதுக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டென்பது மெய்தான். நம்மாலே மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் பேரின்ப வீட்டுக்குப் போகும்போது நாம் இந்தக் கண்ணிர் நிறைந்த கணவாயிலே கொடிய சத்துருக் களுக்குள்ளே கிடக்கிறோமே.
ஆயினும் பிரதாபம் நிறைந்த அந்த ஆத்துமாக்கள் பேரின்பமாய் வாழும்போது தங்களை மீட்டவர்களை மறப்பார்களோ? மறதியானது இப்பூமியிலே இருக்கிறதல்லாமல் பரலோகத்திலே இல்லை. ஆனதினாலே மோட்சவாசிகளான அந்த ஆத்துமாக்கள் நம்மை நினைத்துத் தாபரித்துக் கை தூக்கித் தங்களிடத்தில் சேர்ப்பார்ளென்பது உறுதியாய் நம்பத்தகும் விஷயமாம். ஆகையால் அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிகதிகமாய்ப் பக்திவைக்க வேணுமென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
ஜீவியர்களுக்குயிரும் மரித்தோர்களுக்கு நம்பிக்கையும் உம்மை விசுவசிக்கிறவர்களுக்கு ஈடேற்றமுமாயிருக்கிற சர்வேசுரா! ஸ்திரி பூமான்களான விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பை அடைந்து தேவமாதாவினுடைய உதவியினாலும், சகலமான மோட்சவாசிகளுடைய வேண்டுதலினாலும் நித்திய பிரகாசத்தையும், நித்திய சமாதானத்தையும் கைக்கொள்ளச் செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென். -
பதினைந்தாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து முப்பத்து மூன்று மணிச் செபம் செய்கிறது.
புதுமை
அர்ச். தெரேசம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியுள்ளவளாயிருந்ததினாலே அந்த ஆத்துமாக்களுக்கு இளைப்பாற்றியை வருவிக்கத்தக்கதாக அநேக ஜெபங்களையும், தவங்களையும் பண்ணிக்கொண்டு வந்ததுமல்லாமல், தாம் உண்டுபண்ணின சபையிலே உட்பட்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் அந்த ஆத்துமாக்களுக்காகப் பிரயாசைப்பட வேணுமென்று கற்பித்தாள்.
ஒரு வருஷம் உத்தரிகின்ற ஆத்துமாக்கள் திருநாளில் அந்த ஆத்துமாக்களைக் குறித்துச் செபம் பண்ணும் போது, மனுஷருக்கும் சர்வேசுரனுக்கும் சத்துராதியாயிருக்கின்ற துர்மனப் பசாசு அவளுக்குப் பல பராக்குகளை வருவிக்க முயன்றது. ஆனால் அந்தப் புண்ணியாத்துமாவான கன்னியாஸ்திரியானவள் தேவ கிருபையைக் கொண்டு
துஷ்டப் பசாசைத் துரத்திச் செபத்தைக் குறைவின்றி முடித்துவிட்டாள். ஜெபம் முடிந்தவுடனே அந்த செபங்களுக்கு. பலனாக அநேக ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரச்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதைக் கண்டாள்.
மன்ரசாவென்னும் ஒரு பிரபுவான வர் வல்ல தொலித்தென்ற பட்டணத்தில் தேவமாதாவின் பேராலே அர்ச். தெரேசம்மாள் தம்முடைய சபையைச் சேர்ந்த மடமொன்று ஸ்தாபிக்கும்படியாக, அவளுக்கு ஒரு நல்ல வீட்டையும், நேர்த்தியான தோட்டத்தையும் கொடுத்தார். மீண்டும் தமக்கு யாதொரு பொல்லாப்பு சம்பவிக்குமோவென்று பயந்து அந்த மடத்தைச் சீக்கிரமாய் முடிக்கவேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்தப் பயம் சர்வேசுரனாலே அவருக்கு வந்ததென்று நினைக்கத்தக்கதாயிருக்கின்றது. ஏனென்றால், சில நாட்களுக்குப் பிற்பாடு தூரமாயிருக்கையில் குருக்கள் இல்லாத இடத்திலே பாவசங்கீர்த்தனமில்லாமல் திடீரெனச் செத்தார். அவர் அதிக ஆஸ்தியுள்ளவருமாய் மகிமை சிலாக்கியமுள்ளவருமாய் இவ்வுலக செல்வ பாக்கியத்தைத் தேடுகிறவருமாயிருந்ததுமல்லாமல், அவருடைய நடத்தை நல்ல கிறிஸ்துவனுடைய நடத்தையல்ல. ஆகையினாலே அர்ச் தெரேசம்மாள் அவர் செத்த சேதியைக் கேட்டு அவருக்கு சர்வேசுரன் நல்ல தீர்வையிட்டிருப்பாரோ இல்லையோவென்று அறியாததினாலே வெகு கவலைப்பட்டு அவருடைய ஆத்துமத்துக்காக திரளான கண்ணிர் சிந்திச் செபித்துக் கொண்டாள். அவள் செபம் பண்ணுகையில் சேசுகிறிஸ்துநாதர் அவளுக்குத் தோன்றி, அந்த துரை தேவமாதாவின் பேராலே ஒரு மடத்தை உண்டாக்க வேண்டியவைகளைக் கொடுத்திருக்கிறபடியினாலேயும் தேவமாதா அவனுக்காக வேண்டிக்கொண்டிருக்கிற படியினாலேயும் அவன் சாகிற வேளையில் உத்தமமனஸ்தாபப்பட்டு நித்தியநரகத்துக்குத் தப்பினானென்றும், ஆனால் அம்மடத்தில் முதல் பூசை செய்யப்படும்வரையில் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவன் வெகு வேதனைப்படத் தீர்வையிடப்பட்டானென்றும் அறிவித்தார்.
அதை அர்ச். தெரேசம்மாள் கேட்டு அந்த மடம் சீக்கிரமாய் முடியவும், அதில் திவ்விய பூசை தாமதமில்லாமல் செய்யப்படவும் வெகு பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாள் . அவள் எந்தளவு பிரயாசைப்பட்டாலும் வேலை சீக்கிரமாய் முடிந்தபாடில்லை .அப்போது சேசுநாதர் அவளுக்கு தரிசனமாகி அந்த ஆத்துமம் வெகுவாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப் படுகிறதினாலே நாம் கற்பித்ததைச் சீக்கிரமாய்ச் செய்யவேணுமென்றார்.
அப்போது கன்னியாஸ்திரியானவள் மடத்துக் கோவில் இன்னம் முடியாதிருந்தாலும் ஓர் அறையிலே வேண்டிய முஸ்திப்புப் பண்ணி அதில் திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கப்பண்ணினாள். அவள் திவ்விய நற்கருனை வாங்குகிற நேரத்தில் மேற்சொன்ன துரையினுடைய ஆத்துமம் மிகுந்த மகிமைச் சந்தோஷத்தோடு அவளுக்குக் காண்பித்து, நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணி, தாம் மோட்சத்துக்குப் போகிறதாக அவளுக்கு அறிவித்தது . அதைக் கண்டு அந்த அற்சிஷ்டவள் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து அவ்வளவு தயை பண்ணின சர்வேசுரனை வாழ்த்தினாள்.
கிறிஸ்துவர்களே, அர்ச்சியசிஷ்டவர்கள் எல்லோரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களாய் இருந்தார்களே. நீங்களும் அப்படித்தானே இருக்கவேணும்.
தேவமாதாவைக் குறித்துச் செய்த தர்மத்தினால் மேற் சொன்ன துரையானவர் நித்திய நரகத்துக்குத் தப்பினாரென்று கேட்டீர்களே, நீங்களும் நித்திய நரகத்துக்குத் தப்பத்தக்கதாக தேவமாதாவின் பேரில் பக்தியாயிருக்கிறது மல்லாமல் அவளைக் குறித்துச் சில தர்மங்களைச் செய்யவேணும்.
மேற்சொன்ன துரையினுடைய ஆத்துமம் திவ்விய பூசை நடந்த பிற்பாடு மாத்திரமே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்கப்பட்டு நித்திய பேரின்ப விட்டுக்குப் போனது. இதனால் ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யக்கூடுமான எல்லா நற்கிரியைகளுக்குள்ளே திவ்விய பூசையே சிறந்ததாயிருக்கிறபடியினாலே, உங்களால் கூடினமட்டும் அடிக்கடி திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்க வேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்