மே மாதப் புனிதர்கள்
1. மே 1
2. மே 2
3. மே 3
4. மே 4
5. மே 5
6. மே 6
7. மே 7
8. மே 8
9. மே 9
10. மே 10
11. மே 11
12. மே 12
13. மே 13
14. மே 14
15. மே 15
16. மே 16
17. மே 17
18. மே 18
19. மே 19
20. மே 20
21. மே 21
22. மே 22
23. மே 23
24. மே 24
25. மே 25
26. மே 26
27. மே 27
28. மே 28
29. மே 29
30. மே 30
31. மே 31
2. மே 2
3. மே 3
4. மே 4
5. மே 5
6. மே 6
7. மே 7
8. மே 8
9. மே 9
10. மே 10
11. மே 11
12. மே 12
13. மே 13
14. மே 14
15. மே 15
16. மே 16
17. மே 17
18. மே 18
19. மே 19
20. மே 20
21. மே 21
22. மே 22
23. மே 23
24. மே 24
25. மே 25
26. மே 26
27. மே 27
28. மே 28
29. மே 29
30. மே 30
31. மே 31
மே 10
புனித.அவிலா அருளப்பர் (St.John of Avila)
அண்டலூசியா திருத்தூதர்(Apostle of Andalusien)
பிறப்பு
1500
ஸ்பெயின்
இறப்பு
10 மே 1569
மோண்டில்லா (Montilla), ஸ்பெயின்
31 மே 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
இவரின் தந்தை ஓர் யூத குலத்தை சேர்ந்தவர். இதனால் யூதரான அருளப்பர் பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்டார். மாணவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் மிஷினரியாக பணியாற்ற விரும்பி இறையியலை முறைப்படி கற்றார். ஆனால் இவரால் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போகவே, ஸ்பெயினில் இத்திட்டத்தை நிறைவேற்றினார்.
ஏறக்குறைய 1530 லிருந்து அருளப்பர் செவிலா நகர் (Sevilla) ஆயருடன் இணைந்து மறைபரப்பு பணியாளராக அண்டலூசியாவில் பணியாற்றினார். இவரது மறைபரப்பு பணியால் கவரப்பட்ட பலர் அவரை பின் தொடர்ந்தனர். பலரும் இவர் உரைத்த இறைவாக்குகளை கேட்டு தங்களின் தாறுமாறான வாழ்வை மாற்றிக் கொண்டனர். இவரின் எளிமையான வாழ்வும், போதனையும் எல்லோரையும் தன்னிடத்தில் ஈர்த்தது. இக்னேசியஸ் லயோலா தொடங்கிய இயேசு சபைக்கு அருளப்பர் பல விதங்களில் உதவி செய்தார். ஆனால் அருளப்பரிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொண்ட இயேசு சபை சகோதரர்கள், மத அடிப்படையில் அவருக்கு பல தொந்தரவுகளை கொடுத்தனர். அருளப்பரை மிகவும் துன்புறுத்தினர். இறை இயேசுவின் மறைபோதனை பணியை திறம்பட ஆற்றிய அருளப்பர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தீராத நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறந்த இவரின் உடலை இயேசு சபையினர் அவர்களின் மடத்திலிருந்த கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால் மாண்டிலாவில் இருந்த இயேசு சபைக்கு சொந்தமான ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
இவர் எழுதிய பல கடிதங்களும், புத்தகங்களும் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திருவருட்சாதனங்களைப் பற்றியும், அன்னை மரியாவைப் பற்றியும் இவர் எழுதிய 18 நூல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நூல்களை வாசிக்கும்போதே அவிலா அருளப்பரின் மிக எளிமையான வாழ்வையும், அவரின் போதனைகளையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இவர் ஸ்பெயின் நாடு முழுவதிலும் சென்று மிஷினரியாக பணியாற்றினார். சிறப்பாக இவர் அண்டலூசியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார்.
செபம்:
எங்களோடு இருந்து எம்மை நாளும் வழிநடத்திவரும் எல்லாம் வல்ல இறைவா! புனித அவிலா அருளப்பரின் மறைபோதனையின் வழியாக ஏராளமான மக்களை உம்பால் ஈர்த்தீர். இப்புனிதரின் வழியாக நீர் உம் மக்களோடு பேசினீர். உமக்கு எதிராக செயல்படும் ஒவ்வொருவரையும் நீர் மனந்திருப்பி, உமது சாட்சிகளாக வாழ வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி கோம்கால் Comgall
பிறப்பு: 516 வட அயர்லாந்து Nordirland
இறப்பு: 600 உல்ஸ்டர், அயர்லாந்து
புனித.அவிலா அருளப்பர் (St.John of Avila)
அண்டலூசியா திருத்தூதர்(Apostle of Andalusien)
பிறப்பு
1500
ஸ்பெயின்
இறப்பு
10 மே 1569
மோண்டில்லா (Montilla), ஸ்பெயின்
31 மே 1970
திருத்தந்தை ஆறாம் பவுல்
இவரின் தந்தை ஓர் யூத குலத்தை சேர்ந்தவர். இதனால் யூதரான அருளப்பர் பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்டார். மாணவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் மிஷினரியாக பணியாற்ற விரும்பி இறையியலை முறைப்படி கற்றார். ஆனால் இவரால் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போகவே, ஸ்பெயினில் இத்திட்டத்தை நிறைவேற்றினார்.
ஏறக்குறைய 1530 லிருந்து அருளப்பர் செவிலா நகர் (Sevilla) ஆயருடன் இணைந்து மறைபரப்பு பணியாளராக அண்டலூசியாவில் பணியாற்றினார். இவரது மறைபரப்பு பணியால் கவரப்பட்ட பலர் அவரை பின் தொடர்ந்தனர். பலரும் இவர் உரைத்த இறைவாக்குகளை கேட்டு தங்களின் தாறுமாறான வாழ்வை மாற்றிக் கொண்டனர். இவரின் எளிமையான வாழ்வும், போதனையும் எல்லோரையும் தன்னிடத்தில் ஈர்த்தது. இக்னேசியஸ் லயோலா தொடங்கிய இயேசு சபைக்கு அருளப்பர் பல விதங்களில் உதவி செய்தார். ஆனால் அருளப்பரிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொண்ட இயேசு சபை சகோதரர்கள், மத அடிப்படையில் அவருக்கு பல தொந்தரவுகளை கொடுத்தனர். அருளப்பரை மிகவும் துன்புறுத்தினர். இறை இயேசுவின் மறைபோதனை பணியை திறம்பட ஆற்றிய அருளப்பர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தீராத நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறந்த இவரின் உடலை இயேசு சபையினர் அவர்களின் மடத்திலிருந்த கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால் மாண்டிலாவில் இருந்த இயேசு சபைக்கு சொந்தமான ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
இவர் எழுதிய பல கடிதங்களும், புத்தகங்களும் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திருவருட்சாதனங்களைப் பற்றியும், அன்னை மரியாவைப் பற்றியும் இவர் எழுதிய 18 நூல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நூல்களை வாசிக்கும்போதே அவிலா அருளப்பரின் மிக எளிமையான வாழ்வையும், அவரின் போதனைகளையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இவர் ஸ்பெயின் நாடு முழுவதிலும் சென்று மிஷினரியாக பணியாற்றினார். சிறப்பாக இவர் அண்டலூசியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார்.
செபம்:
எங்களோடு இருந்து எம்மை நாளும் வழிநடத்திவரும் எல்லாம் வல்ல இறைவா! புனித அவிலா அருளப்பரின் மறைபோதனையின் வழியாக ஏராளமான மக்களை உம்பால் ஈர்த்தீர். இப்புனிதரின் வழியாக நீர் உம் மக்களோடு பேசினீர். உமக்கு எதிராக செயல்படும் ஒவ்வொருவரையும் நீர் மனந்திருப்பி, உமது சாட்சிகளாக வாழ வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி கோம்கால் Comgall
பிறப்பு: 516 வட அயர்லாந்து Nordirland
இறப்பு: 600 உல்ஸ்டர், அயர்லாந்து
மே 11
புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi)
கப்புச்சின் சகோதரர்
பிறப்பு
1701
சார்டினியன்(Sardinien), இத்தாலி
இறப்பு
1785
சார்டினியன், இத்தாலி
21 அக்டோபர் 1952
திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்
இவர் இளமையாக இருக்கும்போதே தனது தந்தைக்கும், மாமாவிற்கும் வயலில் வேலை செய்வதற்கு உதவி செய்து வந்தார். தனது 18 ஆம் வயதில் நோயால் தாக்கப்பட்டு, மிகவும் வேதனை அடைந்தார். அப்போது தன் நோய் குணமானால் தான் ஓர் துறவியாகிறேன் என்று இறைவனிடம் சத்தியம் செய்து குணம் பெற வேண்டி தொடர்ந்து செபித்தார். இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இரண்டு ஆண்டுகள் கழித்து பூரண குணமடைந்தார். குணமடைந்த உடன் இவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டார். அதன்பிறகு ஒருநாள் குதிரையில் சவாரி செய்தார். அப்போது குதிரையின் மீதிருந்து வ்ழுக்கி கீழே விழுந்ததில் பலமாக அடிப்பட்டார். அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார். மீண்டும் இறைவனிடம் இறைவேண்டல் செய்தார். ஆனால் தன் நோயை கண்டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். அப்போது தனது 20 ஆம் வயதில் கப்புச்சின் துறவற மடத்திற்கு சென்றார். பின்னர் 1736 ஆம் ஆண்டிலிருந்து கப்புச்சின் துறவறமடத்தில் உறுப்பினரானார்.
இக்னேஷியஸ் தன்னுடன் இருந்த மற்ற சகோதரர்களுடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். தனது 45 ஆம் வயதுவரை தனது குழுமத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பணிவிடை செய்து வந்தார். ஆனால் அவர் மற்றவர்களை பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவில்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதுகூட மற்றவர்களிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப்பார். தனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார்.
இவரை தாக்கிய பல நோய்கள் இயேசுவின் அற்புதத்தால் குணமாவதை பார்த்த பலரும் பரவசமடைந்தனர். இறுதியாக இக்னேஷியஸ் தனது 84 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.
செபம்:
கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! மருத்துவராய் இருந்து பல அற்புதங்களை செய்து புனித லாக்கோனி இக்னேஷியசை குணப்படுத்தி வாழ்வழ்ளித்தீர். அவரைப்போலவே நாங்களும் எங்களது சிறு, சிறு நோயிலும் உம்மீது நம்பிக்கை வைத்து, உமது ஆசீரால் குணம்பெற உமதருளை தந்து எம்மை காத்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
மறைபோதகர், குரு பிரான்சு டே ஹிரோனிமோ
பிறப்பு: 17 டிசம்பர் 1642 குரோட்டாக்லி, இத்தாலி
இறப்பு: 11 மே 1716 நேயாப்பல், இத்தாலி
மறைசாட்சி லூசினா அனிசியா
பிறப்பு: 210 உரோம், இத்தாலி
இறப்பு: 304 உரோம்
குளுனி நகர் துறவி மயோலுஸ்
பிறப்பு: 910 அவிக்னோன், பிரான்சு
இறப்பு: 11 மே 994 சோவிக்னி, பிரான்ச
மே 12
புனித பங்கிராஸ்
மறைசாட்சி
பிறப்பு
289
சின்னாடா(Synnada), பிரிஜியா(Phrygia)
இறப்பு
304
அவுரேலியா(Aurelia), ரோம்(Rome)
கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்கிராஸ் தனது 14 ஆம் வயதிலேயே டயக்ளீசியன் காலத்தில் கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார். கிறிஸ்துவை நெருங்கி பின்பற்றிய பங்கிராசின் மாமா டெனிஸ் இவரை வளர்த்தார். நாளடைவில் டெனிஸ் கிறிஸ்துவுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். புனித பங்கிராஸ் உரோமையில் மறைசாட்சியாக இறந்தார். அவர் இறந்தபோது து508 ஆம் ஆண்டு திருத்தந்தை சிக்மாக்கஸ் இவரது கல்லறைமீது ஒரு பேராலயம் எழுப்பினார். இப்புனிதரின் கல்லறை உரோமில் அவுரேலியா சாலையில் உள்ளது. உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் அழகாக காட்சியளிக்கிறது.
இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப்பெற்றவரெனில், லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்றபோது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரை சூட்டினார்.
கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழுதிய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதினார். பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! உமது திருச்சபையைக் காக்க மறைசாட்சியாக மரித்த பங்கிராசுக்காக, இன்று நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். விண்ணகத்திலிருந்து அவர் புரியும் மன்றாட்டின் உதவியினால் திருச்சபையை வளர்க்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி இமெல்டா லாம்பெர்டினி
பிறப்பு: 1321 போலோஞ்யா, இத்தாலி
இறப்பு: 12 மே 1333, போலோஞ்யா, இத்தாலி
அரசர்மகள், துறவி, போர்த்துகல் நாட்டு யோஹன்னா
பிறப்பு: 6 பிப்ரவரி 1452 லிசாபோன், போர்த்துகல்
இறப்பு: 12 மே 1490 அவைரோ, போர்த்துக்கல்
மறைசாட்சி டொமிடிலா
பிறப்பு: 1 ஆம் நூற்றாண்டு, உரோம்
இறப்பு: 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டு
மே 13
புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)
சபை நிறுவனர்
பிறப்பு
6 டிசம்பர், 1752
வியன்னா (Wien)
இறப்பு
13 மே 1834
லா பூய் (La Puye)
புனிதர் பட்டம்: 4 ஜூன் 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்
அந்திரேயா ஹூபர்ட் தன் குழந்தை பருவத்தையும் இளமை பருவத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்துவந்தார். இதனால் அவரால் சரியான விதத்தில் கல்வி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் முதன்மைகுரு அந்திரேயாவின் ஊருக்கு, பங்கு ஆலயத்தை பார்வையிடவந்தார். அச்சமயத்தில் முதன்மைகுரு திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிக்கு அந்திரேயா பூசைஉதவி செய்தார். திருப்பலி முடிந்தபிறகு வீடு செல்வதற்காக ஆலயத்திலிருந்து அந்திரேயா வெளியே வந்தார். அப்போது ஆலயத்தின் முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெரிய பணக்காரரிடம் பிச்சை போடும்படி கெஞ்சினார். ஆனால் உதவிசெய்ய அப்பணக்காரர் மறுத்துவிட்டார். இதனை கவனித்த அந்திரேயா அப்பிச்சைக்காரரை தன் வீட்டிற்கு அழைத்துஸ் சென்று தன்னிடம் உள்ளதையெல்லாம் அவருக்கு கொடுத்தார். இதனை கவனித்த முதன்மைகுரு தன் உடைகள் மற்றும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அப்பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்திரேயாவை தன்னுடன் வரும்படியாக அழைப்பு விடுத்து, அவரின் விருப்பத்திற்கிணங்க குருக்களின் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.
அந்திரேயா தான் ஓர் குருவாக வேண்டுமென்று தனது விருப்பத்தை முதன்மை குருவிடம் தெரிவித்தார். பின்னர் அவர் குரு மடத்தில் சேர்ந்து முறைப்படி கற்று குருவானார். அந்திரேயா ஓர் உயர்ந்த, பலனளிக்கும் நல்ல இறை ஊழியரானார். இவர் ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தார். அப்போது ஏழை மக்களுக்கு பணிசெய்ய பிரான்சு நாட்டிற்கு சென்றார். அங்கு பல ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தியபின் 1792 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்குஸ் சென்றார். அப்போது யோகன்னா எலிசபெத்து என்பவரின் உதவியுடன் ஏழைக்காக ஓர் சபையை தொடங்கினார். இச்சபைக்கு "அந்திரேயாவின் சகோதரிகள்" (Sisters of Andreas) என்று பெயர் சூட்டினார். இச்சபையை அந்திரேயா அவர்களே 1820- 1832 வரை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, இச்சபையானது பிரான்சு, இத்தாலி,ஸ்பெயின், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இச்சபையானது ஒரு சில ஆண்டுகளில் ஏழைகளுக்கென்று ஓர் மருத்துவமனையை கட்டியது. அதனைத் தொடர்ந்து நோயாளர்களை கவனிப்பதற்கென்று ஒரு செவிலிய பள்ளியையும் நிறுவியது. இப்பள்ளியையும், மருத்துவமனையையும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
செபம்:
குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி ஜெரார்டு Gerhard von Villamagna
பிறப்பு: 1175 புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 13 மே 1245 வில்லாமாக்னா, புளோரன்ஸ்
திருக்காட்சியாளர், துறவி மக்தலேனா அல்பிரிசி Magdalena Albrici
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு, கோமோ Como, இத்தாலி
இறப்பு: 13 மே 1465, கோமோ, இத்தாலி
புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet)
சபை நிறுவனர்
பிறப்பு
6 டிசம்பர், 1752
வியன்னா (Wien)
இறப்பு
13 மே 1834
லா பூய் (La Puye)
புனிதர் பட்டம்: 4 ஜூன் 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்
அந்திரேயா ஹூபர்ட் தன் குழந்தை பருவத்தையும் இளமை பருவத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்துவந்தார். இதனால் அவரால் சரியான விதத்தில் கல்வி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் முதன்மைகுரு அந்திரேயாவின் ஊருக்கு, பங்கு ஆலயத்தை பார்வையிடவந்தார். அச்சமயத்தில் முதன்மைகுரு திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிக்கு அந்திரேயா பூசைஉதவி செய்தார். திருப்பலி முடிந்தபிறகு வீடு செல்வதற்காக ஆலயத்திலிருந்து அந்திரேயா வெளியே வந்தார். அப்போது ஆலயத்தின் முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெரிய பணக்காரரிடம் பிச்சை போடும்படி கெஞ்சினார். ஆனால் உதவிசெய்ய அப்பணக்காரர் மறுத்துவிட்டார். இதனை கவனித்த அந்திரேயா அப்பிச்சைக்காரரை தன் வீட்டிற்கு அழைத்துஸ் சென்று தன்னிடம் உள்ளதையெல்லாம் அவருக்கு கொடுத்தார். இதனை கவனித்த முதன்மைகுரு தன் உடைகள் மற்றும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அப்பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்திரேயாவை தன்னுடன் வரும்படியாக அழைப்பு விடுத்து, அவரின் விருப்பத்திற்கிணங்க குருக்களின் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.
அந்திரேயா தான் ஓர் குருவாக வேண்டுமென்று தனது விருப்பத்தை முதன்மை குருவிடம் தெரிவித்தார். பின்னர் அவர் குரு மடத்தில் சேர்ந்து முறைப்படி கற்று குருவானார். அந்திரேயா ஓர் உயர்ந்த, பலனளிக்கும் நல்ல இறை ஊழியரானார். இவர் ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தார். அப்போது ஏழை மக்களுக்கு பணிசெய்ய பிரான்சு நாட்டிற்கு சென்றார். அங்கு பல ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தியபின் 1792 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்குஸ் சென்றார். அப்போது யோகன்னா எலிசபெத்து என்பவரின் உதவியுடன் ஏழைக்காக ஓர் சபையை தொடங்கினார். இச்சபைக்கு "அந்திரேயாவின் சகோதரிகள்" (Sisters of Andreas) என்று பெயர் சூட்டினார். இச்சபையை அந்திரேயா அவர்களே 1820- 1832 வரை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, இச்சபையானது பிரான்சு, இத்தாலி,ஸ்பெயின், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இச்சபையானது ஒரு சில ஆண்டுகளில் ஏழைகளுக்கென்று ஓர் மருத்துவமனையை கட்டியது. அதனைத் தொடர்ந்து நோயாளர்களை கவனிப்பதற்கென்று ஒரு செவிலிய பள்ளியையும் நிறுவியது. இப்பள்ளியையும், மருத்துவமனையையும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
செபம்:
குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி ஜெரார்டு Gerhard von Villamagna
பிறப்பு: 1175 புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 13 மே 1245 வில்லாமாக்னா, புளோரன்ஸ்
திருக்காட்சியாளர், துறவி மக்தலேனா அல்பிரிசி Magdalena Albrici
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு, கோமோ Como, இத்தாலி
இறப்பு: 13 மே 1465, கோமோ, இத்தாலி
மே 14
புனித மத்தியா
திருத்தூதர் :
பிறப்பு : 1ம் நூற்றாண்டு
யூதேயா (இன்றய இசுரேல்)
இறப்பு : சுமார். 80 கி.பி யெரூசலம் அல்லது சியார்சியா
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்க திருச்சபை கிழக்கு மரபுவழி திருச்சபை ஆங்கிலிக்க ஒன்றியம் லூதரனியம்
நினைவுத் திருநாள் : கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் : மே 14 கிழக்கு மரபுவழி திருச்சபை : ஆகஸ்ட் 9
சித்தரிக்கப்படும் வகை : கோடரி
பாதுகாவல் : குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்; தச்சர்கள்; மொன்டானா; பெரியம்மை; தையற்கலைஞர்
புனித மத்தியா, அப்போஸ்தலர் பணிகளின் படி, யூதாசின் இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தேர்வு செய்யப்பட்டவர். இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது. வரலாறு : ஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டபின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில் எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்தலராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவராகவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு மனதாக ஆண்டவரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்களை அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண்பியும் என்று மன்றாடினர். அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என்னும் மற்றொரு பெயரும் இருந்தது. சீடர்கள் இருவரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு சேர்த்துக்கொண்டனர். (தி.பணி 1:15-26) அதன்பிறகு மத்தியா, யூதேயா, எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும்போது, யெருசலேம் நகரில் தலைவெட்டப்பட்டு, மறைசாட்சியாக இறந்தார். ஜெர்மனி நாட்டின் ட்ரீயர் என்ற நகரில், பழமைவாய்ந்த ஆசீர்வாதப்பர் துறவற மடத்தில் மத்தியாவின் புனித பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளது. செபம் : மனிதர்களின் மனங்களை அறியும் இறைவா! திருத்தூதர் மத்தியா எவ்வாறு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டு, உம்மைப் பற்றி சான்று பகர்ந்தாரோ, அதேபோல உம் பணிக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொரு துறவிகளும், குருக்களும் வாழ உதவி செய்தருளும். ஆமென்
மே 15
புனித.சோபியா
மறைசாட்சி
பிறப்பு
இத்தாலி
இறப்பு
137
ரோம்
இவர் ஓர் திருமணமான பெண். இவருக்கு 3 பெண் குழந்தை பிறந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் Faith. வயது 12, இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை Hope. வயது 10. மூன்றாவது குழந்தையின் பெயர் அன்பு love. வயது 9. 1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெயராக வைத்தார். சோபியா. இறைவனை இவர்கள் தங்களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள். இதனால் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள்.
குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன்றார்கள். அதன்பின் தாய் சோபியாவையும் கொன்றார்கள். சோபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைகளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோபியாவை குழந்தைகளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார்கள். இவர்கள் அனைவரும் 117- லிருந்து 138 ஆண்டிற்குள் மறைசாட்சிகளாக இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
778 ஆம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace)உள்ள எசாவ் (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவறமடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனிதரின் பெயர் கொண்டு சோபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகின்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவா! உம் பொருட்டு இன்னல்கள் அடையும் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். மறைசாட்சியாக மரிக்கின்ற இன்னும் துன்பப்பட்டுகொண்டிருக்கின்றவர்களை நீர் ஆசீர்வதித்து எதையும் உமக்காக தாங்கும் இதயத்தை தந்திட வேண்டுமாய் இறைஞ்சுகிறோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பிங்கன் நகர் பெர்த்தா Berta von BIngen
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, பிங்கன், ஜெர்மனி
மறைசாட்சி ஹால்வார்ட் Halvard
பிறப்பு: 1010, நார்வே
இறப்பு: 1043, நார்வே
பாதுகாவல்: ஒஸ்லோ நகர்
எப்ராண்ட்ஸ்ஹவ்சன் நகர் துறவி ஹென்றி Heinrich von Ebrantshausen
பிறப்பு: 1120 ரேகன்ஸ்பூர்க், பவேரியா
இறப்பு: 1185, எப்ராண்ட்ஸ்ஹவுசன் Ebrantshausen, பவேரியா
பாதுகாவல்: காதுகேளாதோர், வீட்டு விலங்குகள்
புனித.சோபியா
மறைசாட்சி
பிறப்பு
இத்தாலி
இறப்பு
137
ரோம்
இவர் ஓர் திருமணமான பெண். இவருக்கு 3 பெண் குழந்தை பிறந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் Faith. வயது 12, இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை Hope. வயது 10. மூன்றாவது குழந்தையின் பெயர் அன்பு love. வயது 9. 1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெயராக வைத்தார். சோபியா. இறைவனை இவர்கள் தங்களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள். இதனால் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள்.
குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன்றார்கள். அதன்பின் தாய் சோபியாவையும் கொன்றார்கள். சோபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைகளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோபியாவை குழந்தைகளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார்கள். இவர்கள் அனைவரும் 117- லிருந்து 138 ஆண்டிற்குள் மறைசாட்சிகளாக இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
778 ஆம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace)உள்ள எசாவ் (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவறமடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனிதரின் பெயர் கொண்டு சோபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகின்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவா! உம் பொருட்டு இன்னல்கள் அடையும் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். மறைசாட்சியாக மரிக்கின்ற இன்னும் துன்பப்பட்டுகொண்டிருக்கின்றவர்களை நீர் ஆசீர்வதித்து எதையும் உமக்காக தாங்கும் இதயத்தை தந்திட வேண்டுமாய் இறைஞ்சுகிறோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பிங்கன் நகர் பெர்த்தா Berta von BIngen
பிறப்பு: 7 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 8 ஆம் நூற்றாண்டு, பிங்கன், ஜெர்மனி
மறைசாட்சி ஹால்வார்ட் Halvard
பிறப்பு: 1010, நார்வே
இறப்பு: 1043, நார்வே
பாதுகாவல்: ஒஸ்லோ நகர்
எப்ராண்ட்ஸ்ஹவ்சன் நகர் துறவி ஹென்றி Heinrich von Ebrantshausen
பிறப்பு: 1120 ரேகன்ஸ்பூர்க், பவேரியா
இறப்பு: 1185, எப்ராண்ட்ஸ்ஹவுசன் Ebrantshausen, பவேரியா
பாதுகாவல்: காதுகேளாதோர், வீட்டு விலங்குகள்
மே 16
புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo)
குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்
பிறப்பு
1591
சண்டோமிர் பாலாடைன்(Sandomir Palatine), போலந்து
இறப்பு
16 மே 1657
ஜானாவ் (Janow), போலந்து
முத்திபேறுபட்டம்: 30 அக்டோபர் 1853 திருத்தந்தை 9ஆம் பயஸ்
புனிதர்பட்டம்: 17, ஏப்ரல் 1938 திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்
புனித ஆண்ட்ரூ தான் குருவானபிறகு போலந்து நாட்டிலுள்ள லித்துவேனியாவில்(Lithuvenia) பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. கிரேக்க பிரிவினையைச் சேர்ந்தவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல நடந்தனர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், மன நெகிழ்வோடு, அஞ்சா நெஞ்சத்தோடு மறைபணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டபோது, எல்லோர்க்கும் எல்லாமுமாய் இருந்து பணியாற்றினார்.
கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டிலிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார். அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம் நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசுவாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவுக்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், " நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற்களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பைவிட பல மடங்கு தண்டனையை கொடுத்தார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவில்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.
இவரின் நம்பிக்கையை பார்த்த அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூவின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண்களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்தபோதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து அடித்தனர். இறுதியாக இரக்கமற்றவர்களின் அடிகளை தாங்கமுடியாமல், புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.
புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் இவைகளை குறிப்பிட்டுள்ளார்.
செபம்:
மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! புனித ஆண்ட்ரூ தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடினார். நாங்களும் அவரைப்போல, எங்களை துன்புறுத்தியவர்களை மன்னித்து வாழ எமக்கு உமது அருளையும், ஆசீரையும் தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
குபியோ நகர் ஆயர் உபால்டு Ubald von Gubbio
பிறப்பு: 1080 குபியோ, இத்தாலி
இறப்பு: 16 மே 1160
புனிதர்பட்டம்: 1192
பாதுகாவல்: குழந்தைகள், நரம்பு நோய்கள்
சபைத்தலைவர் சைமன் ஸ்டோக் Simon Stock
பிறப்பு: 1200, அலெஸ்போர்டு, இங்கிலாந்து
இறப்பு: 16 மே 1265 போர்டேக்ஸ் Bordeaux, பிரான்சு
பாதுகாவல்: கார்மேல் மடங்கள்
மே 17
புனித பாஸ்காலீஸ் பேலோன் (St.Paschalis Baylon)
குரு
பிறப்பு
16 மே 1540
டோரேஹெர்மோசா (Torrehermosa), அரகோனியா(Aragonien)
இறப்பு
17 மே 1592
வாலென்சியா(Valencia)
புனிதர்பட்டம்: 1690 திருத்தந்தை எட்டாம் அலெக்ஸாண்டர்
இவர் பிறந்து வளர்ந்த உடன் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். இதனால் ஆடுகளை பராமரிக்கும் ஆயனாக கூலி வேலைக்கு சேர்ந்தார். இவர் ஒருபோதும் பள்ளிக்கூடம் போனதே இல்லை. ஆனால் இவர் தானாகவே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டார். ஆடு, மாடுகளை வயலில் மேய்க்கும் போது கடவுளின் படைப்பை கண்டுரசித்து, அதன்வழியாக கடவுளை வழிபட்டு அவரோடு தொடர்புகொண்டார்.
தனக்கு 17 வயது நடக்கும்போது பிரான்சிஸ்கன் சபையில் ஆடு, மாடுகளை பராமரிக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டார். அப்போதுதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள்விப்பட்டு, அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டார். இதனால் இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இவரது ஆழமான விசுவாசத்தை கண்ட அச்சகோதரர்கள் இவரை தங்கள் சபையில் சேர அனுமதித்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள் அச்சகோதரர்களையும், பாஸ்காலிஸ்சையும் தவறாக பேசினர். இதனால் பாஸ்காலிஸ் மிகவும் வேதனைப்பட்டார். இருப்பினும் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் அவரை ஊக்கமூட்டி, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றனர். பின்னர் அச்சபை தலைமை சகோதரர் அவர்களின் அறிவுரைப்படி, இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரராக வாழ முழுமனதுடன் விருப்பம் தெரிவித்தார்.
அதன்பிறகு 1564 ஆம் ஆண்டு மான்போர்ட் சபை சகோதரர்கள் பாஸ்காசிசை தங்கள் சபைக்கு கடனாக தர வேண்டி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் வற்புறுத்தலால் சில வருடங்களுக்கு கடனாக மான்போர்ட் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் ஏழ்மையில் வாழ்ந்து, எளிமையான வாழ்வை மேற்கொண்டு சில துறவற மடங்களை ஏற்படுத்தினார். அவர் ஏற்படுத்திய துறவற மடங்களில், சிறிய சிறிய பணிகளில் அமர்த்தப்பட்டு, அவற்றை திறம்பட இறைவனின் மகிமைக்காக செய்தார். அவர் மான்போர்ட் சபையில் இருந்தாலும் கூட, பிரான்சிஸ் சபையின் ஒழுங்குகளை தவறாமல் கடைபிடித்து வந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். அவர் திவ்விய நற்கருணை பேழையின் முன் மணிக்கணக்காக அமர்ந்து செபிப்பார். அதிலிருந்துதான் அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ்வில்லத்திலுருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொடர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலங்கா அற்புதங்கள் இன்று வரை நடந்து வருகின்றது.
இவர் ஸ்பெயின் நாட்டு புனிதர்களில் மிக உயர்ந்த புனிதராக அழைக்கப்படுகின்றார். 1897 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் பலிபீட திருவருட்சாதனத்தின் பாதுகாவலர் என்றழைக்கப்பட்டார். இவர் இறந்த 100 வருடங்களுக்குப்பிறகு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! திவ்விய நற்கருணையின் மீது அளவில்லா நம்பிக்கைக்கொண்டு, வாழ்விற்குத் தேவையான சக்தியை புனித பாஸ்காலிஸ் பெற்றுக்கொண்டார். நாங்களும் அவரைப் போல திவ்விய நன்மை உட்கொண்ட பிறகு உம்மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு வாழ எமக்கு உமது ஆசீர்வாதங்களைத் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி டீட்மர் Dietmar von Neumünster
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 17 அல்லது 18 மே 1152 நியூ முன்ஸ்டர்
மோண்ட்சே நகர் துறவி வால்டர் Walter von Mondsee
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 17 மே 1158 மோண்ட்சே, ஆஸ்திரியா
மே 18
புனித முதலாம் யோவான் (St. John I)
திருத்தந்தை, மறைசாட்சி (Pope, Martyr)
பிறப்பு
டோஸ்கானா(Tuscany), இத்தாலி
இறப்பு
18 மே 526
ராவென்னா(Ravenna)
இவர் ஹார்மிஸ்தாஸ்(Hormisdas) என்ற திருத்தந்தைக்கு அடுத்தப்படியாக 523 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாள் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கான்ஸ்டாண்டினோபிள் என்ற நகரில், ஒரு தூதவராக காலடி எடுத்து வைத்த முதல் திருத்தந்தை. இவர் திருத்தந்தையாக இருந்தபோது, ஆரியமதத்தை சேர்ந்த சேர்ந்த அரசர் முதல் தியோடரிக்(Theoderich) உரோம் நகரை ஆட்சி செய்து வந்தான். அப்போது கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த மன்னர் ஜஸ்டினோஸ்(Justinos) அந்நகரிலிருந்த ஆரிய மதத்தை சார்ந்த முதலாம் ஜஸ்டினோஸ் என்பவரை கொடுமைப்படுத்துகிறான் என்பதைப்பற்றி கேள்விப்பட்டான். இதனால் மன்னர் ஜஸ்டினோஸிடம் இப்பிரச்சனைகளைப்பற்றி பேசவும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தவும் வேண்டி, அரசர் தியோடரிக், திருத்தந்தையை தூதுவராக கான்ஸ்டாண்டினோபிளுக்கு அனுப்பி வைத்தார். திருத்தந்தையை அன்புடன் நடத்துமாறு அந்நாட்டு மன்னருக்கு தூதுவிட்டான்.
அப்போது திருத்தந்தை, மன்னர் ஜஸ்டினோஸிடம் மிகவும் அன்பாகவும், ஞானத்தோடும், பேசி எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவைத்து, நல்லதோர் உறவை ஏற்படுத்தி, சமாதான உடன்படிக்கை செய்து வைத்துவிட்டு, மீண்டும் திருத்தந்தை இத்தாலி நாட்டிற்கு திரும்பினார். நடந்தவைகள் அனைத்தையும் அரசர் தியோடரிடம் எடுத்து கூறினார் திருத்தந்தை. திருத்தந்தை ரோம் திரும்பிய சில மாதங்களிலேயே கான்ஸ்டாண்டினோபிள் மன்னன், அவரை சந்தித்து பேச உரோம் வந்தான். இவர்கள் இருவருக்கும் நல்லதோர் உறவு ஏற்பட்டது. திருச்சபையையும், நாட்டையும் நல்வழியில் வழிநடத்த ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்தனர். இவர்களின் நல்லுறவை கண்ட அரசர் தியோடரிக், பொறாமைக்கொண்டு பயமுற்றான். அவர்கள் இவனுக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணினான். இதனால் தியோடரிக் ஆத்திரம்கொண்டு மன்னன் ஜஸ்டினின் ஆட்களில் ஒருவரான பொயித்தியஸ்(Poithias) என்பவரைக் கொன்றான். அதன்பின் திருச்சபைக்கெதிராக பல அநியாயங்களை செய்தான். பிறகு ராவென்னா நகரில் திருத்தந்தையைச் சிறையிலிட்டான். அங்கு அவர் சொல்லொண்ணாத் துயரங்களை அடைந்தார். கொடிய வேதனைக்குப்பின் உயிர்நீத்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப்பின் தியோடரிக்கும் இறந்தார். ஆனால் அவன் இறப்பதற்கு முன் தனக்குப்பிடித்த ஒருவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்துவிட்டு இறந்தான்.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! நீர் சிலுவைச் சாவை சுமந்து, உயிர் நீத்ததைப்போல, கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப பல ஆயர்களும், குருக்களும், கன்னியரும், பொதுநிலையினரும் உயிர் துறந்துள்ளனர். இவர்களின் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, எம்மை முழுவதும் அர்ப்பணித்து உமக்காக வாழ்ந்திட உம் அருளைப் பொழிந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி பிளண்டீனே மேர்டென் Blandine Merten
பிறப்பு: 10 ஜூலை 1883 துப்பன்வைலர் Düppenweiler, சார்லாண்ட் Saarland
இறப்பு: 18 மே 1918 டிரியர் Trier, ஜெர்மனி
முத்திபேறுபட்டம்: 1 நவம்பர் 1987
பைன்வைல் நகர் குரு பூர்க்கார்ட் Burkard von Beinweil
பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டு, சுவிஸ்
இறப்பு: 18 மே 1192, பைன்வைல், சுவிஸ்
கண்டாலிஸ் நகர் சகோதரர் பெலிக்ஸ் Felix von Cantalice OFM cap
பிறப்பு: 1515, கண்டாலிஸ், இத்தாலி
இறப்பு: 18 மே 1587 உரோம்
புனிதர்பட்டம்: 22 மே 1712, திருத்தந்தை 11 ஆம் கிளமெண்ட்
பாதுகாவல்: கப்புச்சின் சபை சகோதரர்கள், தாய்மார்கள், குழந்தைகள்
ஹாஸ்னோன் நகர் துறவி ரோலாண்ட் Roland von Hasnon
பிறப்பு: 1000
இறப்பு: 1070 ஹாஸ்னோன், பெல்ஜியம்
மறைசாட்சி டெகூசா Tekusa
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 311 அன்காரா Ankara, துருக்கி
மே 19
புனித இவோ ஹேலோரி (St.Ivo Helory)
குரு
பிறப்பு
1253
ரேகையர் (Treguier)
இறப்பு
19 மே 1303
இவர் சட்டவிரோதமாக குற்றம் புரியவர்களை திருத்தும் பணியையும், ஒருங்கிணைக்கும் பணியையும் செய்தார். இவர் இறையியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறையும் பற்றி படித்தார். தனது 31 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்று குருவானார். மிகச்சிறிய சிறிய ஊர்களில் குருவாக பணியாற்றினார். குருவான 14 ஆம் வருடத்தில் ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்பணியில் அவர் முழுதிருப்தி அடையவில்லை. இதனால் அடுத்த 5 வருடங்களிலிருந்து இறக்கும்வரை ஏழைகளுக்கு உதவிசெய்து சட்டங்களால் துன்புறுத்தப்பட்டவர்களையும், கைவிடப்பட்டவர்களையும் அன்பு செய்து, அவர்களை வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்தார். வாழ்வில் சுகமே இல்லாமல், எப்போதுமே துன்பத்தில் மட்டுமே வாழ்ந்தவர்களுக்கு, எல்லா நலன்களை செய்து கொடுத்து, மறுவாழ்வை அளித்து மகிழ்ச்சியூட்டினார். அவரது வாழ்வு மற்றவர்களுக்கு ஓர் முன்மாதிரியான வாழ்வாக இருந்தது. இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து "இவோவின் சகோதரர்கள்" என்று பெயர் கொண்ட ஓர் சபையைத் தொடங்கி, தங்களது இறுதிமூச்சுவரை மக்களுக்காக பல இன்னல்கள் அடைந்து, தொடர்ந்து பணியாற்றினார்.
செபம்:
அன்பான இறைவா! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல, யாருமில்லாமல், வாழ்க்கையே சோகம் என வாழ்ந்தவர்களுக்கு புனித இவோ வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தனது நாட்டைவிட்டு, சட்டங்களால் புறக்கணிக்கப்பட்டு, உறவை இழந்து வாழும் மக்களை நீர் கண்ணோக்கியருளும், உமது அன்பின் திருக்கரம் கொண்டு அவர்களை வழிநடத்தியருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி அல்குயின் Alkuin OSB
பிறப்பு: 735, யோர்க் York, இங்கிலாந்து
இறப்பு: 19 மே 804, தூர்ஸ் Tours, பிரான்சு
விட்டெர்போ நகர் துறவி கிறிஸ்பினுஸ் Crispinus von Viterbo
பிறப்பு: 13 நவம்பர் 1668, விட்டெர்போ, இத்தாலி
இறப்பு: 19 மே 1750 உரோம்
புனிதர்பட்டம்: 20 ஜூன் 1982
இறையியல் வல்லுநர், மறைப்பணியாளர் தெயோபிலூஸ் Theophilus von Corte OFM
பிறப்பு: 30 அக்டோபர் 1676, கோர்டே Corte, பிரான்சு
இறப்பு: 19 மே 1740, புச்சேக்கியோ Fucecchio, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1895
புனிதர்பட்டம்: 29 ஜூன் 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
மே 20
புனித சியென்னா பெர்னார்டின் (St. Bernardine of Siena)
குரு
பிறப்பு
1380
சியென்னா
இறப்பு
20 மே 1444
இத்தாலி
புனிதர்பட்டம்: 24 மே 1450
திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலாஸ்
இவர் ஓர் பிரான்சிஸ்கன் துறவற சபையை சார்ந்த குரு. இவர் அச்சபையில் இருக்கும்போது பலவற்றை சீர்திருத்தி அமைந்தார். இவர் தன்னுடைய 20 ஆம் வயதிலேயே தன்னுடன் ஏராளமான இளைஞர்களை நண்பர்களாக வைத்திருந்தார். இவர்களின் ஒத்துழைப்பினால், சியென்னா நகரில் ஒரு மருத்துவமனையில் சமூகசேவை செய்ய முழு பொறுப்பையும் ஏற்றார். அங்கு நாள்தோறும் குறைந்தது 20 பேர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு பலியானார்கள். ஆனால் பெர்னார்டின் இந்நோயைக் கண்டு பயப்படாமல் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் முழு நேரத்தையும் செலவழித்து தொண்டு புரிந்தார்.
பின்னர் 2 ஆண்டுகளுக்குப்பின் பிரான்சிஸ்கன் சபையில் குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 12 ஆண்டுகள் தனிமையாக ஜெபிப்பதில் தன் நாட்களைக் கழித்தார். பின்னர் பல இடங்களுக்கும், கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரை ஆற்றினார். பிறகு பிரான்சிஸ்கன் சபைக்கு தலைவரானார். நாளடைவில் திருத்தந்தையின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மக்களிடையே மறையுரையாற்றத் தொடங்கினார். உத்தம மனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது காலத்தில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லும்போது புண்ணியம் அடைகிறோம் என்றும், அன்னை மரியாளைப் பற்றியும், தூய வளனாரைப்பற்றியும் ஏராளமாக எடுத்துரைத்து மறையுரையாற்றினார். IHS என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுருக்கம் என்றுணர்ந்து, இந்த 3 எழுத்துக்களையும் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து, அதை மக்கள் மீது வைத்து அவர்களை மந்திரித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இவரது அர்த்தமுள்ள, உருக்கமான மறையுரையைக் கேட்க, சில வேளைகளில் 50,000 பேருக்கும் மேலாக ஆலயத்திலும், வெளியிலும் காத்திருப்பார்கள். குருக்களைப் பற்றியும், கன்னியர்களைப் பற்றியும் பொதுநிலையினர் எப்போதும் தவறாக பேசாமல், மிகவும் கண்ணியமாகப் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களைப் பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித்திரியக்கூடாது என்றும் இவர் எப்போதும் அறிவுரை கூறி வந்துள்ளார். இவர் IHS என்ற இயேசுவின் பெயருக்கு காட்டிய சிறப்பு பக்தி விளக்கம், விரைவில் மக்களிடையே பரவியது. இச்சின்னம் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. இதனால் இவர்மேல் பொறாமைக் கொண்ட சிலர் இவரைப்பற்றி மூன்று முறை திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம், இக்குற்றச்சாட்டுகளின் நடுவே, முந்தைய நிலையைவிட மிகவும் அதிகமாகவே கூடியது. இவர் இத்தாலி நாட்டிலேயே மிகச்சிறந்த மறைபோதகப் பேச்சாளராக திகழ்ந்தார்.
இவர் சபைத்தலைவராக இருக்கும்போது வெறும் 300 பேர் மட்டுமே இச்சபையில் இருந்தனர். பல சீர்திருத்தம் பெற்றதன்பின், இச்சபை ஆல்போல் தழைத்து, இவரது இறுதி நாட்களில் ஏறக்குறைய 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. தன் மறைபோதக பணியால் பலரை இறைவன் பால் ஈர்த்த பெர்னார்டின் இறைமகன் இயேசு விண்ணேற்பு அடைந்த நாளன்று இறைவாழ்விற்கு விண்ணகம் சென்றார்.
செபம்:
மறைபோதகரின் தலைவரே எம் இறைவா! உம்மைப்பற்றி போதிக்க இப்புனிதர்க்கு உமது ஞானத்தையும், வல்லமையும் பொழிந்துள்ளீர். அப்புனிதரின் வாழ்வைப் பின்பற்றி, நாங்களும் இவ்வுலகில் உம்மை பறைசாற்ற எமக்கு உமது அருள் வரங்களைத் தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
இங்கிலாந்து நாட்டு அரசி, எல்பிரீடே Elfriede von England
பிறப்பு: 730, பிர்மிங்ஹாம், இங்கிலாந்து
இறப்பு: 795, இங்கிலாந்து
துறவி உல்ரிக் Ulrich OSB
பிறப்பு: 10 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 1000, ஐன்சீடல்ன் Einsiedeln, சுவிஸ்
மே 21
புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)
குரு
பிறப்பு
பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில்
இறப்பு
இறப்பு: 7 ஏப்ரல் 1241
ஹோப்பன்(Hopen), ஐப்பல்(Eifel), ஜெர்மனி
இவர் ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுபிள்ளையாக இருக்கும்போதே கொலோனில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அப்போது செபிக்க சென்றபோது ஒருநாள் கொலோன் ஊரில் இருந்த ஓர் ஆலயத்தில், அன்னைமரியாள், கையில் குழந்தை இயேசுவை வைத்திருக்கும் ஒரு படத்தை பார்த்து, அப்படத்தின் முன் மண்டியிட்டு செபித்தார். அப்போது ஹெர்மான் தன் கையில் ஆப்பிள் பழம் வைத்திருந்தார். அதை எடுத்து அன்னைமரியிடம் கொடுக்க, குழந்தை இயேசு தன் கையை நீட்டி சிறுவன் ஹெர்மான் கொடுத்த அப்பழத்தை வாங்கிக் கொண்டார். இதைப் பார்த்து திகைத்துப் போன அவர், தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவு செய்தார். அதன்பிறகு அவர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். எப்போதும் செபிக்க வேண்டும், விவிலியம் வாசிக்கவேண்டும். திருப்பலியில் பங்கெடுக்கவேண்டும் என்று நினைத்து, இதுதான் துறவற வாழ்வு என்றுணர்ந்து அவ்வாழ்வை தேர்வை செய்தார். ஆனால் அங்கு அனைத்தும் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அவரை அந்த துறவற மடத்தில், உணவு சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள சொன்னார்கள். அவரும் அப்பொறுப்பை ஏற்று தினமும் கடைக்குச் சென்று, தன்னிடம் ஒப்படைத்த வேலைகளை செய்து வந்தார். இதனால் கோவிலில் அமர்ந்து செபிப்பதற்கென தனியாக அவருக்கு நேரம் கிடைக்காததால், ஒருநாள் அன்னைமரியிடமும், தந்தை சூசையிடமும், தனது கவலைகளை செபத்தில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அன்னையானவள், அவரிடம் உன் உடனுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நீ புரியும் உன் வேலைகளே உன்னிடமிருந்து வருகின்ற உண்மையான ஜெபம் என்றுணர்த்தினார்.
அதன்பிறகு ஹெர்மான் தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு தனக்கு குறிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மகிழ்வோடு செய்து வந்தார். அவ்வேலைகள் அனைத்தையும் ஜெபமாக மாற்றினார். அதன்வழியாக உடனிருந்த அனைவரின் அன்பையும் பெற்றார். அதிலிருந்து ஹெர்மான் அன்னைமரியின் பாடல் ஒன்றை எப்போதும் பாடிக் கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக நோன்பிருந்து ஜெபித்தார். இதனால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சுல்பிக் (Zulpich) என்ற ஊரில் இருந்த சிஸ்டர்சீசியன்(Zisterzienserinn) துறவற இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆன்மீக குருவாக பணியாற்றினார். அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் ஆசீரை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். ஹெர்மான் அத்துறவற இல்லத்திற்குள் நுழைந்தவுடனே, "இங்குள்ள கல்லறையில்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும், நான் இங்குதான் இறப்பேன்" என்று கூறினார். அவர் கூறியபடியே, ஒருநாள் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, கண்களைமூடி அமைதியாக இறைவனிடம் சேர்ந்தார்.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித ஹெர்மான் அன்னைமரியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரது அன்பையும், பாசத்தையும் பெற்று நாங்கள் என்றும், அன்னைமரியின் பிள்ளைகளாக வாழ உம் அருளை எமக்கு பொழிந்தருளும். ஆமென்
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
மாசேனோட் நகர் ஆயர், சபைநிறுவுநர் கார்ல் ஹாய்கன் Karl Eugen von Mazenod OMI
பிறப்பு: 1 ஆகஸ்ட், 1782 எயிக்ஸ் Aix, பிரான்சு
இறப்பு: 21 மே 1861 மர்செய்லே Marseille, பிரான்சு
அபோ நகர் ஆயர் ஹெம்மிங் Hemming von Abo
பிறப்பு: 1300, ஸ்வீடன்
இறப்பு: 21 மே 1366, அபோ Abo, ஸ்வீடன்
போலந்து நாட்டு அரசி ரிக்கேசா Richeza von Polen
பிறப்பு: 1000 ரைன் Rhein
இறப்பு: 1063, சால்பெல்டு Saalfeld, தூரிங்கன் Thüringen
மறைசாட்சி, குரு அலெக்சாண்டிரியா நகர் செக்குண்டூஸ் Secundus von Alexandria
பிறப்பு: 300 ஆப்ரிக்கா
இறப்பு: 356, வட ஆப்ரிக்கா
மே 22
புனித ரீட்டா.(St.Rita)
குடும்பத்தலைவி, துறவி(Widow, nun)
பிறப்பு
1381
உம்பிரியா(Umbria), இத்தாலி
இறப்பு
22 மே 1457
காசியா(Cascia), இத்தாலி
முத்திபேறுபட்டம்: 1626 திருத்தந்தை எட்டாம் ஊர்பான் (Pope Urban VIII)
புனிதர்பட்டம்: 24 மே 1900 திருத்தந்தை 13 ஆம் லியோ
ரீட்டா கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்பிரியா என்ற மலைப்பகுதியில் வாழ்ந்துவந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள். ரீட்டாவின் பிறப்பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக்கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்துகொள்ள விரும்பினார். ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்கவேண்டுமென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமணத்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றினார் ரீட்டா. உடனே பெற்றோர் பவுலோ பெர்டினாண்டோ என்பவருக்கு ரீட்டாவைத் திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் அய்யோ பாவம் ரீட்டா! கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூரக்குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சாநெஞ்சத்துடன் அனைத்து துன்பக்கலனையும் ஏற்றுக்கொண்டார். கணவர் மனம்மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.
பின்னர் இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தியில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழித்தவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார். இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இதனால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன்றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இதனால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனமாறவில்லையென்றால் இறைவனை அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண்டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.
ரீட்டா இவர்களின் இறப்பிற்குப்பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ அறமுயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத்தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர்ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார். ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது. அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற்குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார்கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவிடம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டார்கள். அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார். அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித்துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்துக்கொண்டிருந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் இவரிடமிருந்து அருள்பொழியப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ணமாய் இருந்தது. 76ஆம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்டபிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.
ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது. இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர்பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத்தணிக்கையில் இடம்பெற்றுள்ளது.
செபம்:
தந்தையே நீர் விரும்பினால் இத்துன்பக்கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும் என்று ஜெபித்த இயேசுவே! உம் பெயரை இவ்வுலகில் நிலைநாட்ட மறைசாட்சிகளாய் மரித்தவர்களை நீர் கருணை கண்கொண்டு நோக்கியருளும். மரித்த ஒவ்வொரு ஆன்மாக்களும் இம்மண்ணில் வெற்றியடைய உம் வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பிஸ்டோய்யா நகர் ஆயர் அட்டோ Atto von Pistoia OSB
பிறப்பு: 1070 இத்தாலி
இறப்பு: 22 மே 1155 பிஸ்டோய்யா Pistoia, இத்தாலி
துறவி, சபைநிறுவுநர் வலம்ரோசா நகர் ஹூமிலிட்டாஸ் Humilitas von Vallombrosa
பிறப்பு: 1225, பாயென்சா Faenza, இத்தாலி
இறப்பு: 22 மே 1310, புளோரன்ஸ் Florenz, இத்தாலி
மே 23
புனித ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி (St.John Baptista de Rossi)
குரு
பிறப்பு
1698
வோல்ஜியோ(Voltgio), இத்தாலி
இறப்பு
23 மே 1764
உரோம்
புனிதர்பட்டம்: 1881, திருத்தந்தை 13 ஆம் லியோ
இவர் ரோமில் டொமினிக்கன் சபையில் படித்தவர். படிக்கும்போது இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இறக்கும் வரை இவர் இந்நோயால் அவதிப்பட்டார்.. 1721 ஆம் ஆண்டு ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி குருவானார். இவர் குருவான நாளிலிருந்து ஏழைமக்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஏழை மக்களுக்கென்று, எதிர்கால வாழ்வில் முன்னேறுவதற்காக ஒரு குழுவை அமைத்தார். இதன்வழியாக மக்களுக்கு தன் நம்பிக்கையும், தைரியத்தையும், அவர் அவர்களுக்குரிய உரிமையோடு பேசுவதற்கும், நோன்பிருந்து செபிப்பதற்கும், தவத்தின் வழியாக பல நற்பலன்களை அடைவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தார். 1737 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை, தீயவர்களை எதிர்த்து போராடி ஏழை மக்களின் உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். கானானிய மக்களின் நண்பராக வாழ்ந்து அவர்களின் ஆன்மகுருவாகவே இறந்தார். இவர் இறந்தபிறகு ஜாதி, மதம் என்று பாராமல் அனைத்து மக்களும் இவரின் கல்லறைக்கு வந்து, இவரை வழிபட்டு, நற்பலன்கள் பலவற்றை பெற்று சென்றனர்.
செபம்:
இரக்கத்தின் ஊற்றே இறைவா! இன்று புனிதர்களாக போற்றப்படுகின்றவர்களில் பெரும்பாலானோர், ஏழை, எளிய மக்களுக்காக உழைத்தவர்களாக உள்ளனர். இவர்களின் முன்மாதிரிகையான வாழ்வைப் பின்பற்றி, இன்றைய உலகில் உள்ள ஒவ்வொரு இறையடியார்களும் ஏழை எளியவரை அன்பு செய்து வாழ உமது அருள் வரங்களை தந்து காத்திட வேண்டுமாய் உம்மை இறைஞ்சுறோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
லாங்கர்ஸ் நகர் ஆயர், மறைசாட்சி டெசிடேரியுஸ் Desiderius von Langres
பிறப்பு: 315, பிரான்ஸ்
இறப்பு: 407 அல்லது 411, லாங்கர்ஸ் langers, பிரான்ஸ்
பாதுகாவல்: விபத்துகளிலிருந்து, கர்ப்பிணிப்பெண்கள், லாங்கர்ஸ் நகர்
மே 24
சாலையோர மாதா
இத்தாலி மொழியில் "மடோநாடெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம். இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங்களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன்றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.
கி.பி. 1538 ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத்தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற்றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதிப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது. அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற்றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது 1538 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1539 மே வரை உரோமையிலும், சுற்றுவட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது. புனித இனிகோ தம் சகோதரர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.
இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா(Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார். இவ்வாலயம் உரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு குருக்கள் உரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.
செபம்:
புனித.கன்னி மரியாளே எமக்காக இயேசுவை மன்றாடும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
மறைப்பணியாளர், துறவி, சபைநிறுவுநர் பிரான்சு ப்ஃபானர் Franz Pfanner
பிறப்பு: 21 செப்டம்பர் 1825, லாங்கன் Langen, ஆஸ்திரியா
இறப்பு: 24 மே 1909, எம்மாவுஸ், தென் ஆப்ரிக்கா
பிராடோ நகர், மாநிலத்தலைவர், மறைசாட்சி யோஹானஸ் Johannes von Prado OFM
பிறப்பு: 1563, மோர்கோவேஜோ Morgovejo, ஸ்பெயின்
இறப்பு: 24 மே 1631 மராக்கேஷ் Marraksesch, மொராக்கோ Marokko
முத்திபேறுபட்டம்: 1728
மே 25
புனித வணக்கத்துக்குரிய பேதா (St.Beda, the Reverend)
பிறப்பு
இங்கிலாந்து
இறப்பு
735
இங்கிலாந்து
இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். இவர் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர் இவருக்கு 7 வயது நடக்கும்போது நார்த்தம்பிரியாவில்(Narthampriya) இருந்த துறவற மடத்தில், புனித பெனடிக்ட் பிஸ்கோப்(Benedict Piskop) என்பவரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்தார். அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுதேர்வதில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பதுதான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம்.
இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொடங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலாந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூலை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழியாமல் பதிந்துவிடும்.
அவரது இறுதி நாளன்று, அவர் அவரது மாணவர்களில் ஒருவராகிய வில்பெர்ட் (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர். அப்போது வில்பெர்ட், பேதாவை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதி கொண்டிருந்தோம். அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ்சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பேதா, "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். அப்போது பேதா, அம்மாணவரிடம் நல்லது பிள்ளாய்! இப்போது எனது தலையை உனது கைகளால் தாங்கிப்பிடி. இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போகிறேன் என்று கூறினார். வில்பெர்டும் அவர் சொன்னப்படியே செய்தார். அப்போது பேதா "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே உயிர் நீத்தார்.
செபம்:
வாழ்வின் ஊற்றே எம் இறைவா! ஆழமான ஆன்மீகத்தின் வழியாகவும், உம்மை தன் கற்று கொடுக்கும் பணியின் வழியாகவும் புனித பேதா இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தார். சாவு என்பது வாழ்வின் எதிரொலி என்பதை கற்பித்து வாழ்ந்தார். இப்புனிதரைபோல ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பக்தியில் வளரவும், வாழவும், உம் அருள் தந்து காத்திடும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி, திருக்காட்சியாளர் மரிய மக்தலேனா Maria Magdalena von Pazzi
பிறப்பு: 2 ஏப்ரல் 1566, புளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 25 மே 1607, புளோரன்ஸ்
புனிதர்பட்டம்: 1669, திருத்தந்தை 9 ஆம் கிளமெண்ட்
மே 26
புனித பிலிப்புநேரி(St. Philip Neri)
குரு, ஆரட்டரி போதகர் சபை நிறுவுனர் (Priest, Founder of the folk preacher Aratorimus)
பிறப்பு
21 ஜூலை 1515
புளோரன்ஸ் (Florence), Italy
இறப்பு
25 மே 1595
உரோம்
முத்திபேறுபட்டம்: 11 மே 1615 திருத்தந்தை ஐந்தாம் பவுல்
புனிதர்பட்டம்: 12 மார்ச் 1622 திருத்தந்தை 15ஆம் கிரகோரி
இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர், தனது 26 ஆம் வயதில் வணிகத் தொழிலைவிட்டுவிட்டு, தமது ஆன்மீக நலனைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோம் நகர் சென்றார். அங்கு இவர் வேதக்கலை, தத்துவக்கலையைப் பயின்றார். அவற்றோடு ஜெபத்திலும், தவ முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது உரோம் நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங்களையும், தினமும் மாலை பொழுதில் நடந்தே சென்று சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இரவில் புனித செபஸ்தியாரின் புதைக்குழி வளாகத்தில் தங்கினார். அதோடு நலிவுற்ற, ஏழை மக்களின் நலன்களை கருதி மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். அவர் தெரு வழியாக நடந்துசெல்லும்போது, ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இனங்கண்டு, தமது திறமையான பேச்சியினாலும், அணுகுமுறைகளினாலும் அவர்களை இறைவன் பால் ஈர்த்து மனம்மாற செய்தார்.
பிறகு 1548 ஆம் ஆண்டு தமது குறிக்கோளை ஏற்றுக்கொண்டவர்களை ஒருங்கிணைத்து, திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து, பல பக்திமுயற்சிகளை பரப்பி மக்களை இறைவன்பால் ஈர்த்ததோடு, இறைவனைப்பற்றி ஊர்களில் எடுத்துரைக்கவும் வழிவகுத்தார். இவ்வாறு இப்பணியில் 10 ஆண்டுகளை கழித்தார். அப்போது இவரின் ஆன்ம குரு, இவரிடம் குருத்துவதை நாட பணித்தார். பின்னர் இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 33 ஆண்டுகள் ஆரட்டரி(Aratery) என்று அழைக்கப்பட்ட ஜெபக்குழுவை உருவாக்கி, பல குருக்களின் துணையோடு அச்செபக்குழுவை தொடர்ந்து நடத்தினார். இதன்வழியாக ஏராளமான ஞானப்பலன் கிடைத்ததை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். அதன்பிறகு இக்குழுவை உயர்த்தி "ஆரட்டோரியன்ஸ் செபக்குழுவினர்" என்று பெயரிட்டு, அக்குழுவை தொடர்ந்து வழிநடத்தினார். இன்றுவரை இக்குழு செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் தொழிலாளர் பலர் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், ஆன்மீக ஆலோசனை பெறவும் வந்த வண்ணமாய் இருந்தனர். பல குருக்களும், கர்தினால்களும் இவரது ஆலோசனையை நாடி வந்தனர். இவர் எப்போது திருப்பலி நிறைவேற்றினாலும், தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்குக்கொண்டு சேர்த்தார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், ஆழமான இறை அனுபவம் பெறவும், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளை கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தை பெறுதல் ஆகியவற்றால் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தம் அலுவலகத்திற்கு விரைந்து ஓடி போய்விடுவார். பூசையின் இறுதிவரை இருக்கமாட்டார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும்முறையில், பூசை உதவி செய்யும் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளைக் கொடுத்து, அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள் என்றார். இளைஞரும் தன் தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு, அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். இன்னொரு முறை, பிறரைப் பழி தூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்க சொன்னார். பறித்து முடித்தபின் அவற்றைக் காற்றில் பறக்கவிட சொன்னார். இதன்பின் அப்பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டார். பறித்த இறகுகளை ஒன்று சேர்த்து அவற்றைப் பறக்கவிட சொன்னார். பின்னர் பறக்கவிட்ட இறகுகளை ஒன்று சேர்த்து, தன்னிடம் கொண்டுவரச்சொன்னார். அப்போது அப்பெண் அவரிடம், அது என்னால் முடியாதே என்றார். "அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாமல் என்பதை புரிந்துக்கொள், திருத்திக்கொள்" என்று கூறினார். அப்பெண்ணும் தன் தவற்றை உணர்ந்து திருந்தினார்.
இவர் உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பெயருக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நாள்தோறும் பிலிப்பு, வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு, ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக்கொடுத்து விடுவான், என்று நாள்தோறும் மறவாமல் ஜெபிப்பார்.
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! திவ்விய நற்கருணை பக்தியை வளர்த்து, உம்மீது பற்றுகொள்ளசெய்த புனித பிலிப்புநேரி போல, நாள்தோறும் திவ்விய நற்கருணையின் வழியாக உம்மைப்பற்றி, எல்லோர்க்கும் எல்லாமுமாக வாழ்ந்து, உம்மை எங்கள் வாழ்வில் பிரதிபலிக்க எமக்கு உமதருளை தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பிஸ்டோயா நகர் ஆயர் அந்திரேயாஸ் பிரான்சி andreas Franchi OP
பிறப்பு: 1335, பிஸ்டோய்யா Pistoia, இத்தாலி
இறப்பு: 26 மே 1401, இத்தாலி
ஒயே நகர் துறவி கோடோ Godo von Oye OSB
பிறப்பு: 620, பிரான்சு
இறப்பு: 26 மே 690 ஓயே Oye, பிரான்சு
பாதுகாவல்: கயிறு மற்றும் கையுறை தயாரிப்போர்
மே 27
புனித அகஸ்டின் (St. Augustine)
காண்டர்பரி ஆயர்(Archbishop of Canterbury)
பிறப்பு
ஆறாம் நூற்றாண்டு
ரோம், இத்தாலி
இறப்பு
26 மே 605
கெண்ட், காண்டர்பரி, இங்கிலாந்து
இவர் காண்டர்பரி நகரின் முதல் ஆயர். இவர் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர். உரோமைத் துறவற மடத்திலிருந்து, இவரது தலைமையில்தான், திருத்தந்தை பெரிய கிரகோரியார் 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார். அப்போது அவர்கள் பிரான்சு நாட்டு வழியே சென்றார்கள். அச்சமயத்தில் இங்கிலாந்து நாட்டு மக்களின் சூழ்ச்சியைக் கண்டு அச்சமுற்றார்கள். அவர்கள் திருத்தந்தையின் ஆலோசனை என்ன என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள, தங்கள் தலைவரை உரோமுக்கு அனுப்பினர். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு சாக்சென் மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.
இதற்கு திருத்தந்தை வதந்திகளையும், பயமுறுத்தல்களையும் பார்த்து அஞ்சவேண்டாம். இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுங்கள். பல தியாகங்களை செய்யுங்கள். என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, இயேசுவின் பணியை செய்யத் தயாரானார்கள். இதனைத் தொடர்ந்து 597 ல் தானெட் (Thanet) என்ற தீவை அடைந்து பணியைத் தொடர்ந்தார்கள். இந்தத் துறவிகளின் அயராது உழைப்பும், அஞ்சா நெஞ்சமும் எந்த அளவுக்கு வெற்றியை கொணர்ந்தது என்பதைப்பற்றி புனித பேதா அவரின் வரலாற்றில் புகழ்ச்சியோடு எழுதியுள்ளார்.
இவர்கள் தானெட் தீவில் பணி செய்தபோது, புனித மார்ட்டின் பெயரால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று அங்கு இருந்தது. இவ்வாலயம் மிகவும் பாழடைந்து கிடந்தது. இதை இத்துறவிகளிடம் ஒப்படைத்தனர். அத்துறவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அக்கோவிலில் செபித்தனர். பண் இசைத்தனர். திருப்பலி நிறைவேற்றினர், போதித்தனர். திருமுழுக்கு கொடுத்து வந்தனர். இவர்களது எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த ஜெப வாழ்வும் அந்நாட்டு அரசனை பெரிதும் கவர்ந்தது. அரசன் எதெல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவன்று மனந்திரும்பி புதிய ஞானஸ்நானம் பெற்றனர். நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத்தகு முறையில் வளர்ச்சியடைந்தது. இதையறிந்த திருத்தந்தை அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால் இவர்களுக்கும், திருத்தந்தைக்கும் இருந்த உறவு மேலும் வலுப்பெற்றது. இவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்த புனித அகஸ்டீன், இங்கிலாந்து நாட்டில் காலடி எடுத்துவைக்கும்போதே காட்சியாகக் கண்டு இவையனைத்தும் நடக்கும் என்று சொன்னார். அவர் இச்சகோதரிகளை ஏஞ்சல்ஸ்(தேவ தூதர்கள்) என்றே கூறி வந்தாராம். மிக மேலான காரியங்களையும் இறைவனின் மேல் சுமத்திவிட்டு, இறைவன் பெயரால் செய்து இக்கன்னியர்களை கொண்டு மறையுரையாற்றி வெற்றி கண்டாராம் இப்புனிதர்.
செபம்:
நல்ல நண்பனே என் இறைவா! தீயவர்களின் நடுவில் மறைபரப்பாற்றி, வெற்றி பெற்று, உமது நாமத்தை நிலைநாட்டி, கொடியவர்களையும் தம் அன்பு செயல்களால் மனந்திருப்பினார். இன்றைய புனிதர் அகஸ்டின் இன்னும் உம் பணியை தைரியத்துடன் செய்து, எதிரிகளை அன்பால் ஈர்த்து உம்மை இவ்வுலகில் பரப்ப ஒவ்வொரு துறவறத்தாருக்கும் உம் அருள் தாரும்.
மே 27
புனித அகஸ்டின் (St. Augustine)
காண்டர்பரி ஆயர்(Archbishop of Canterbury)
பிறப்பு
ஆறாம் நூற்றாண்டு
ரோம், இத்தாலி
இறப்பு
26 மே 605
கெண்ட், காண்டர்பரி, இங்கிலாந்து
இவர் காண்டர்பரி நகரின் முதல் ஆயர். இவர் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர். உரோமைத் துறவற மடத்திலிருந்து, இவரது தலைமையில்தான், திருத்தந்தை பெரிய கிரகோரியார் 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார். அப்போது அவர்கள் பிரான்சு நாட்டு வழியே சென்றார்கள். அச்சமயத்தில் இங்கிலாந்து நாட்டு மக்களின் சூழ்ச்சியைக் கண்டு அச்சமுற்றார்கள். அவர்கள் திருத்தந்தையின் ஆலோசனை என்ன என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள, தங்கள் தலைவரை உரோமுக்கு அனுப்பினர். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு சாக்சென் மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.
இதற்கு திருத்தந்தை வதந்திகளையும், பயமுறுத்தல்களையும் பார்த்து அஞ்சவேண்டாம். இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுங்கள். பல தியாகங்களை செய்யுங்கள். என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, இயேசுவின் பணியை செய்யத் தயாரானார்கள். இதனைத் தொடர்ந்து 597 ல் தானெட் (Thanet) என்ற தீவை அடைந்து பணியைத் தொடர்ந்தார்கள். இந்தத் துறவிகளின் அயராது உழைப்பும், அஞ்சா நெஞ்சமும் எந்த அளவுக்கு வெற்றியை கொணர்ந்தது என்பதைப்பற்றி புனித பேதா அவரின் வரலாற்றில் புகழ்ச்சியோடு எழுதியுள்ளார்.
இவர்கள் தானெட் தீவில் பணி செய்தபோது, புனித மார்ட்டின் பெயரால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று அங்கு இருந்தது. இவ்வாலயம் மிகவும் பாழடைந்து கிடந்தது. இதை இத்துறவிகளிடம் ஒப்படைத்தனர். அத்துறவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அக்கோவிலில் செபித்தனர். பண் இசைத்தனர். திருப்பலி நிறைவேற்றினர், போதித்தனர். திருமுழுக்கு கொடுத்து வந்தனர். இவர்களது எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த ஜெப வாழ்வும் அந்நாட்டு அரசனை பெரிதும் கவர்ந்தது. அரசன் எதெல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவன்று மனந்திரும்பி புதிய ஞானஸ்நானம் பெற்றனர். நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத்தகு முறையில் வளர்ச்சியடைந்தது. இதையறிந்த திருத்தந்தை அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால் இவர்களுக்கும், திருத்தந்தைக்கும் இருந்த உறவு மேலும் வலுப்பெற்றது. இவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்த புனித அகஸ்டீன், இங்கிலாந்து நாட்டில் காலடி எடுத்துவைக்கும்போதே காட்சியாகக் கண்டு இவையனைத்தும் நடக்கும் என்று சொன்னார். அவர் இச்சகோதரிகளை ஏஞ்சல்ஸ்(தேவ தூதர்கள்) என்றே கூறி வந்தாராம். மிக மேலான காரியங்களையும் இறைவனின் மேல் சுமத்திவிட்டு, இறைவன் பெயரால் செய்து இக்கன்னியர்களை கொண்டு மறையுரையாற்றி வெற்றி கண்டாராம் இப்புனிதர்.
செபம்:
நல்ல நண்பனே என் இறைவா! தீயவர்களின் நடுவில் மறைபரப்பாற்றி, வெற்றி பெற்று, உமது நாமத்தை நிலைநாட்டி, கொடியவர்களையும் தம் அன்பு செயல்களால் மனந்திருப்பினார். இன்றைய புனிதர் அகஸ்டின் இன்னும் உம் பணியை தைரியத்துடன் செய்து, எதிரிகளை அன்பால் ஈர்த்து உம்மை இவ்வுலகில் பரப்ப ஒவ்வொரு துறவறத்தாருக்கும் உம் அருள் தாரும்.
மே 28
புனித கெர்மானூஸ் (St.Germanus)
ஆயர் (Bishop)
பிறப்பு
496
அவுடன்(Autun), பிரான்சு
இறப்பு
28 மே 576
தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார். தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது. இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார். அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார். அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.
இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.
இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.
செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இயேசுவே! செப, தவ முயற்சியினால் புனித கெர்மானூஸ், ஏழை மக்களுக்கு உதவினார். ஆனால் பல சமயங்களில் நாங்கள் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து, ஏழைகளுக்கு உதவி செய்ய மனம் இல்லாமல் இருந்திருக்கின்றோம். இப்புனிதரின் வழியாக நாங்கள் எங்களின் தவற்றை உணர உதவியிருக்கின்றீர். உமது உதவியினால் ஏழைமக்களை நாங்கள் நண்பர்களாக ஏற்று, உதவி செய்து, வாழ உமதருளை தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
காண்டர்பரி பேராயர் லான்பிரான்சு Lanfranc von Canterbury
பிறப்பு: 1005, பவியா Pavia, இத்தாலி
இறப்பு: 28 மே 1089, காண்டர்பரி, இங்கிலாந்து
புனித கெர்மானூஸ் (St.Germanus)
ஆயர் (Bishop)
பிறப்பு
496
அவுடன்(Autun), பிரான்சு
இறப்பு
28 மே 576
தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரிந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதிலும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும்பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண்ணீரைத் துடைத்தார். தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது. இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார். அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார். அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.
இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.
இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.
செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இயேசுவே! செப, தவ முயற்சியினால் புனித கெர்மானூஸ், ஏழை மக்களுக்கு உதவினார். ஆனால் பல சமயங்களில் நாங்கள் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து, ஏழைகளுக்கு உதவி செய்ய மனம் இல்லாமல் இருந்திருக்கின்றோம். இப்புனிதரின் வழியாக நாங்கள் எங்களின் தவற்றை உணர உதவியிருக்கின்றீர். உமது உதவியினால் ஏழைமக்களை நாங்கள் நண்பர்களாக ஏற்று, உதவி செய்து, வாழ உமதருளை தந்தருளும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
காண்டர்பரி பேராயர் லான்பிரான்சு Lanfranc von Canterbury
பிறப்பு: 1005, பவியா Pavia, இத்தாலி
இறப்பு: 28 மே 1089, காண்டர்பரி, இங்கிலாந்து
மே 29
புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் (St.Sicinnius, St.Alexander)
மறைசாட்சிகள் (Martyrius)
இறப்பு
29 மே 397
தென் டிரோல்(Südtirol), இத்தாலி
இவர்கள் மூவரும் தென் டிரோலிலுள்ள பேராலயத்தில் மறைசாட்சிகளானார்கள். இவர்கள் மூவருமே மிலான் பேராயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு, தமத்திருத்துவர்கள் என்றழைக்கப்பட்டார்கள். பிறகு ஆயர் விஜிலியஸ்(Vigilius) அவர்களால் மிஷினரியாக அனுப்பப்பட்டார்கள். மூன்று பேரும் இறைவனின் வார்த்தைகளை இடைவிடாமல் பரப்பினார்கள். கடவுளுக்கென்று நோனிஸ்பெர்க்(Nonsberg) என்ற ஊரில் ஓர் ஆலயம் எழுப்பினார்கள். இவர்களின் மறைபரப்பு பணிகளை பார்த்தவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஏராளமானோர் மனந்திரும்பி இறைவனை நம்பினர். அவ்வாறு அவர்கள் தொடர்ந்து போதிக்கும்போது ஒருநாள், மூவரும் அறுவடை திருநாளை சிறப்பிக்கும்விதமாக ஆலயத்தில் கூடி ஜெபிக்கும் வேளையில், கடவுளை நம்பாதவர்களில் சிலர், அதிரடியாக ஆலயத்திற்குள் நுழைந்து மூவரையும் தாக்கினார்கள். அதில் அலெக்சாண்டர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருடன் எரித்த அலெக்சாண்டரின் சாம்பலை கொண்டுவந்து சிசினியுஸ், மார்டீரியசின் மேல் தூவி ஏளனம் செய்து, அவர்கள் இருவரையும் கொலை செய்தார்கள். இவ்வாறு மூவருமே கொடியவர்களின் அகோர செயல்களால், மறைசாட்சிகளாக அவ்வாலயத்திலேயே இறந்தார்கள்.
செபம்:
அன்புத் தந்தையே இறைவா! அன்று இன்றைய புனிதர்கள் மூவரும் மறைசாட்சிகளாக மரித்தார்கள். அவர்களைப்போல இன்றும் எத்தனையோ மக்கள், தங்கள் அன்றாட வாழ்வில் மறைசாட்சிகளாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இம்மண்ணில் செய்த பாவங்களை மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
பீசா நகர் திருக்காட்சியாளர் போனா Bona von Pisa
பிறப்பு: 1156, பீசா Pisa, இத்தாலி
இறப்பு: 1208, பீசா, இத்தாலி
பாதுகாவல்: பீசா நகர்
கோர்ன்வால் நகர் அரசி எர்பின் Erbin von Cornwall
பிறப்பு: 410, இங்கிலாந்து
இறப்பு: 480 கோர்ன்வால், இங்கிலாந்து
பியோரே நகர் சபைநிறுவுநர் யோவாக்கிம் Joachim von Fiore
பிறப்பு: 1130, செலிகோ Celico, இத்தாலி
இறப்பு: 30 மார்ச் 1202, பியோரே Fiore, இத்தாலி
புனிதர்பட்டம்: 1346
மே 31
புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல் (The visitation of the blessed virgin Mary)
பிறப்பு
--
இறப்பு
--
இத்திருநாள், தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டுதலால் பிரான்சிஸ்கன் சபையில் 1263 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்களவார்த்தை சொன்னபிறகு, சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தம்மாளை சந்தித்த நேரத்தில்தான், கன்னிமரி "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்ற தமது ஒப்பற்ற புகழ்ப்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு வரையிலும், 3 வாரங்கள் தங்கி எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்து வந்தார். அன்னை மரியாள் அன்று பாடிய பாடல் ஓர் நன்றியின் பாடல். இறைவன் தன்னைத் தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்துகிறார் மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும், நன்றி மனப்பான்மையுடன் பாடுகின்றார்.
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத், மரியாவை பார்த்துக் கேட்டார். "என் ஆண்டவரின் தாய்" என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே, மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத்திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருள் அடையாளத்தைஸ் செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக்குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகு மரியன்னையைப் பாராட்டுகின்றார். "ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறுவதன் வழியாக, மரியாவின் ஆன்மீகம் அடித்தளமாக அமைவது, அவரது ஆழமான விசுவாசம் என்பதை எலிசபெத் சுட்டிக்காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் "வாக்குறுதியின் பெட்டகமே" என்று மரியாவை திருச்சபை அழைக்கின்றது, வாழ்த்துகின்றது.
"வாக்குறுதியின் பெட்டகம்" யூதர்களிடம் இருந்த நாள் வரை, யூதர்கள் இறைப்பிரசன்னத்தையும் யாவேவின் வழி நடத்துதலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான், மரியன்னை உலக முடிவுவரை, இறை இயேசுவின் பிரசன்னத்தை மக்களிடையே கொண்டுவந்தார். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க, யூத மக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழையின் முன் ஆடி மகிழ்ந்தார். அதேபோன்றுதான் எலிசபெத்தின் வயிற்றினுள் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த திருமுழுக்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார். இறுதியாக திருப்பேழை 12 யூத கோத்திரத்தாரையும், யெருசலேம் நகரில் தாவீதின் அரியணை முன் ஒன்றாகக் கூட்டி சேர்த்தது. அதேபோன்று எல்லோருக்கும் முதல்வராக, நற்செய்தி மறைபரப்பாளராக, எலிசபெத்திடம் தமக்கு தேவதூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை அறிவிக்க சென்றதன் வழியாக, உலக முடிவு வரை, வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதை அறியப்படுகின்றது.
மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறுபெற்றிருந்தார். கடவுளின் திட்டத்தை அறிந்தார். தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும், இறைவனின் தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் தன்னை முழுவதும் அர்ப்பணித்தார்.
செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான அன்பான இறைவா! இதோ உமது அடிமை என்று கூறி, தன்னை முழுவதும் உம்மிடம் அர்ப்பணித்தார். அன்னை மரியாள் நாங்களும் அன்னையின் பக்தர்களாக வாழ்ந்து, அன்னையைப்போல பிறருக்கு உதவி செய்து, நாங்கள் என்றும் உம் திட்டத்திற்கு ஆம் என்று கூறி, உமது அடிமைகளாக வாழ வரம் தாரும்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
நிக்கோசியா நகர் துறவி, திருக்காட்சியாளர் பெலிக்ஸ் Felix von Nicosia OFM cap
பிறப்பு: 5 நவம்பர் 1715 நிக்கோசியா Nicosia, இத்தாலி
இறப்பு: 31 நவம்பர் 1787, நிக்கோசியா, இத்தாலி
முத்திபேறுபட்டம்: 12 பிப்ரவரி 1888
துறவி ஹில்ரூட் Hiltrud
பிறப்பு: 900, நொயன் ஹெர்சே Neuenhersee, ஜெர்மனி
இறப்பு: 950, நொயன்ஹெர்சே
பாசாவ் நகர் ஆயர் பில்லேக்ரினுஸ் Pilegrinus von Passau
பிறப்பு: 920 ஆஸ்திரியா
இறப்பு: 991 பாசாவ், ஜெர்மனி
கொலோன் நகர் பேராயர் சீகேவின் Siegewin
பிறப்பு: 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 31 மே 1089, கொலோன், ஜெர்மனி