கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதர்களுக்குத் தனி இடம் உண்டு . நமக்கு முன் வாழ்ந்த இவர்கள் தங்கள் வாழ்வில் இறைச் சித்தத்திற்கு முழுதும் கையளித்து வாழ்ந்தவர்கள். இவர்களது முன்மாதிரியைப் பின்பற்றி வாழ திருச்சபை பணிக்கிறது. புனிதர்களிடம் மன்றாட்டுக்களும் , நவநாள் ஜெபங்களும் , நமக்கு வேண்டிய ஆசீர்வாதங்களை அவர்கள் மூலம் இறைவனிடம் இருந்து பெற்றுக் கொள்ள வழி வகுக்கிறது. தகப்பன் தன் செல்லப் பிள்ளைக்கு இரங்குகிறது போல் இறைவன் புனிதர்களின் மன்றாட்டுக்களுக்கு இரங்குகிறார். ஒன்றுக்கு மேற்ப்பட்டோர் மன்றாடினால் ஜெபம் இன்னும் வல்லமை பெறுமே, எனவே அவர்களைத் துணைக்கு அழைப்போம்
புனிதர்களை நோக்கி நவநாள் ஜெபங்கள் , மன்றாட்டுக்கள் & பிரார்த்தனை |